Jump to content

விலகுகிறார் சிவாஜிலிங்கம்


Recommended Posts

விலகுகிறார் சிவாஜிலிங்கம்

 

65dbb9f677c55ab90e585834c3283107_XL

டெலோ கட்சி தொடர்ந்து தன்மீது முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தான் தயாரில்லை என்பதனால் கட்சியிலிருந்து விலகி சுயேட்சை உறுப்பினராக அரசியலில் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் செயலாளரை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தான் அரசியலுக்கு பிரவேசித்தது தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கே அன்றி பணம் சம்பாதிப்பதற்கு அல்ல என தெரிவித்த அவர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக கட்சி தேவை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது வரைக்கும் வடகிழக்கு தமிழர்களுக்காக பேசுவதற்கு எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் இல்லாததன் காரணமாக எதிர்வரும் தினங்களில் தான் அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இனத்தவர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக உள்ளமை தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் மகிழ்ச்சியடைய வேண்டும் எனவும் ஆனால் தற்போது அனைவருமே தன்னை குற்றஞ்சாட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலாபத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் முயற்சிக்கும் வேளையில் தனது அரசியல் செயற்பாடு அவர்களுக்கு பெரிதும் தடையாக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

http://www.dailyceylon.com/190858/

Link to comment
Share on other sites

அரசியல் இலாபத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காகவும் முயற்சிக்கும் வேளையில் தனது அரசியல் செயற்பாடு அவர்களுக்கு பெரிதும் தடையாக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மக்களை கோமாளிகாக எண்ணுவதும் அவர்களை ஏமாற்றுவதும் இன்றைய தமிழ் முதன்மை அரசியல் தலைவர்களின் கடமை 😞 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.