Jump to content

சஹ்ரானால் ஈர்க்கப்பட்டவர்கள் உட்பட ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் கைது


Recommended Posts

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி 'ஈஸ்டர் ஞாயிறு' தினத் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் அமைப்புடன் தொடர்புடைய 127 பேர் இந்தியாவில் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார்.

Tamil_News_large_2388942.jpg

இந்திய தேசிய புலனாய்வு முகமையின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இக் கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தேசிய புலனாய்வு முகமை இயக்குநர் யோகேஷ் சந்தர் மோடி உட்பட பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண் டனர். 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரி அலோக் மிட்டல்,

சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தோம். 

இந்நிலையில், இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. 

இதில் 250 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் இந்தியாவில் இருந்து செயல்பட்டதை தேசிய புலனாய்வு முகமை கண்டுபிடித்தது. 

அதையடுத்து கேரளாவிலும், தமிழகத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி, பலரை கைது செய்தனர். அதுமாத்திரமன்றி நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசாரணையின் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இதுவரை 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தில் 19 பேரும், கேரளாவில் 17 பேரும், தெலுங்கானாவில் 14 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம், கேரளாவில் கைதுசெய்யப்பட்ட தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள், சஹ்ரான் என்பவரின் காணொளி உரைகளைக் கேட்டு தாங்கள் தீவிர வாத எண்ணத்துக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர் என்றார். 

https://www.virakesari.lk/article/66897

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.