Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

மதமாற்றத்தால், மக்களுக்கிடையில் தேவையில்லாத பிரச்சினைகளும், மதம்மாறிச் சென்றவர்கள், ஏற்கெனவே, கடைபிடித்த மதத்தை நிந்திப்பதனால், வேண்டாத கசப்புணர்வுகள் ஏற்படுவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதவழிப்பாட்டிடங்கள் இல்லாத போதிலும், சுனாமி வீட்டுத்திட்டத்தில் வீடொன்றில் வைத்தே, வழிபாடுகள் இடம்பெறுகின்றன. யுத்தம், சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு, வறுமையின் கீழ் வாடுகின்ற மக்களை மிக இலாவகமாக, ஏமாற்றி மதத்தை மாற்றிவிடுவதாகவும், ஒரு சிறு குழுவினரே, இந்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

யாருக்கும் எந்த மதத்தையும் பின்பற்றுவதற்கு உரிமையுள்ளது. எனினும், அற்பசொற்ப ஆசைகளைக் கூறியும், பலவந்தமாகவும் மதத்தை மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை நிறுத்தவேண்டுமென, அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மதமறறததககத-தணடம-சயலகள-நறததவம/73-240035

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.

Link to comment
Share on other sites

மதமாற்றத்தை திணிக்கும் விஷமிகளின் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கது. ஈழப்பிரியன் குறிப்பிட்டதுபோல இது காலங்காலமாக நடந்து வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

 

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மதமறறததககத-தணடம-சயலகள-நறததவம/73-240035

இதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்!

ஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை! அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்!

Link to comment
Share on other sites

7 minutes ago, Justin said:

இதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்!

ஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை! அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்!

http://globaltamilnews.net/2019/127747/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Lara said:

நான் சொன்னதை உறுதி செய்திருக்கிறீர்கள்: "..கிளை நிலையங்களை நடத்துவதாயின், இடத்திற்கு அனுமதி வேண்டும்" என்று இருக்கிறது! இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்!

இல்லை அதற்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையென்றால் சாயி பஜனைக்கும் கூட அனுமதி பெற வேண்டும்! ஒத்துக் கொள்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறுவது அவரவர் சொந்தவிடயம். ஆனால் அரிசி பருப்புக்கும், சொத்து சுகங்களுக்காகவும் மதம் மாறுவது கேவலம்.  அது மட்டுமில்லாமல் ஒரு மனிதனின் பலவீனத்தை சாதகமாக்கி மதம் மாற்றுவது சுத்த கேணைத்தனம்.

Link to comment
Share on other sites

16 minutes ago, Justin said:

நான் சொன்னதை உறுதி செய்திருக்கிறீர்கள்: "..கிளை நிலையங்களை நடத்துவதாயின், இடத்திற்கு அனுமதி வேண்டும்" என்று இருக்கிறது! இது வீட்டின் உரிமையாளர் கிளை நிறுவனம் என்று பெயர் பலகை போடாமல் தனது நண்பர்களை, வர விரும்புவோரை வைத்து கூட்டம் நடத்தினால் அனுமதி தேவையில்லை என்பது தான் அர்த்தம்!

இல்லை அதற்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு அனுமதி தேவையென்றால் சாயி பஜனைக்கும் கூட அனுமதி பெற வேண்டும்! ஒத்துக் கொள்கிறீர்களா? 

“பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.”

இங்கு நடந்ததும் வீட்டில். “கிளை நிறுவனம்” என பெயர் பலகை போடாமல் தான் நடந்தது.

விசாரணையின் போது வெளியிலிருந்து வந்து மதபோதனை நடத்தினார்கள் என்பதால் சபைக்குரிய அனுமதி இருந்தாலும் பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்த அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீடொன்றில் வைத்து மதவழிபாடு செய்வது வேறு. மதமாற்றும் நோக்கில் மதபோதனை செய்வது வேறு. இத்திரி இரண்டாவதை குறிப்பதால் மதச்செயற்பாட்டிற்கு அனுமதி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீள் குடியேற்றப்பட்ட பிரதேசங்களில், மதத்தை மாற்றுவதற்கான செயற்பாடுகள் மிக விரைவாக இடம்பெறுவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும், அப்பிரதேசத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, கிழக்கில், மட்டக்களப்பு - பாசிக்குடா பகுதியிலேயே மதத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, பிரதேசவாசிகள் எமக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அடிப்படையில், வறுமையில் உள்ள மக்களிடம் பண, வேலைவாய்ப்பு, கல்வி வாய்ப்புக்கள், அரசியல் வசதிகள் படைத்தவர்கள் தங்கள் பலத்தை பிரயோகிக்கிறார்கள். இதற்கு அவர்கள் மதமும் இடம் கொடுக்கின்றது. அதற்கு அவர்கள் மதத்தில் வசதி, பலம் படைத்தவர்களும் உதவுகிறார்கள்.

ஆம், இது நீண்ட காலமாக நடந்து  வருகின்றது. நாம், காணி; மொழி; அதிகாரம் என்பனவற்றுடன் மதத்தையும் நீண்டகாலமாக இழந்தே வருகின்றோம்.

ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை, இந்த நிலைமை தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, MEERA said:

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

ஆனால்  எங்கள் மூதாதையர் கண்டுபிடித்து விட்டுச்சென்ற இலை குழை , தைலங்கள் பற்றிய மருத்துவங்களை சொன்னால் ஆதாரம் கேட்பார்கள்.😂

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

 

51 minutes ago, குமாரசாமி said:

ஆனால்  எங்கள் மூதாதையர் கண்டுபிடித்து விட்டுச்சென்ற இலை குழை , தைலங்கள் பற்றிய மருத்துவங்களை சொன்னால் ஆதாரம் கேட்பார்கள்.😂

உலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின்  மூதாதயரில்  சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர்.  இவையெல்லாம் அறிவியலே.

ஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது  மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய  பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

இது இன்று நேற்றல்ல காலாகாலமாக வெற்றி நடைபோடுகிறது.

உந்த பருப்பு எல்லா இடங்களிலையும் அவியாது. ஒட்ட அறுத்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

“பொன்னாலையில் குடும்பம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வீட்டில் அக்குடும்பம் வசிக்காத நிலையில், அந்த வீட்டில் கிறிஸ்தவ மதமாற்ற சபையொன்று சண்டே ஸ்கூல் என்ற பெயரில் மத போதனையை நடத்திக்கொண்டிருந்தது.”

இங்கு நடந்ததும் வீட்டில். “கிளை நிறுவனம்” என பெயர் பலகை போடாமல் தான் நடந்தது.

விசாரணையின் போது வெளியிலிருந்து வந்து மதபோதனை நடத்தினார்கள் என்பதால் சபைக்குரிய அனுமதி இருந்தாலும் பிரதேசங்களில் கிளை நிலையங்களை நடத்த அனுமதி மற்றும் இடம் தொடர்பான பதிவுகளை பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வீடொன்றில் வைத்து மதவழிபாடு செய்வது வேறு. மதமாற்றும் நோக்கில் மதபோதனை செய்வது வேறு. இத்திரி இரண்டாவதை குறிப்பதால் மதச்செயற்பாட்டிற்கு அனுமதி தேவை.

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா? இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை!

ஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது! ஏன்? மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை.  ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை! அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை! கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.

உங்கள் வாதம் " தமிழ் சைவம் இந்து"  என்ற வாதக் குணங்களால் எழுவதேயொழிய அதில் தனிமனித சுதந்திரம், நாட்டின் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை! இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை! மாறுபவன் மாறிக் கொண்டு தான் இருப்பான்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 

உலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின்  மூதாதயரில்  சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர்.  இவையெல்லாம் அறிவியலே.

ஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது  மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய  பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே. 

ஆடி அமாவாசை ஆரதானை ஜெபகூட்டம் என்றும் ஏமாற்றுகிறார்கள் 

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா? இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை!

நான் தந்த இணைப்பில் கூறப்பட்டிருப்பதை வைத்தே விளக்கம் தந்தேன்.

“மதம் மாற்றும் சபைகளின் செயற்பாடுகளை மக்கள் விரும்பாவிட்டால் உரிய சட்டத்தின் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துமாறு காவல்துறை பொறுப்பதிகாரி அறிவுறுத்தினார். கிராம சேவையாளர், பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவிப்பதன் மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உரிய அனுமதி இன்றி பொன்னாலையில் மதச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என குறித்த கிறிஸ்தவ சபையின் போதகருக்கு காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.”

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.

கட்டாய மதமாற்றம் பற்றி இங்கு யார் கதைத்தது?

உங்களுக்கு மதமாற்றம், கட்டாய மதமாற்றத்துக்கு வேறுபாடு தெரியாவிட்டால் அதற்கு யாரும் பொறுப்பல்ல.

முன்னைய திரியிலும் இப்படித்தான் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொண்டு பதிலளித்தீர்கள். 😀

1 hour ago, Justin said:

ஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது! ஏன்? மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை.  ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை! அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை!

நீங்கள் முன்னர் எந்த வீட்டில் நடந்த மதபோதனைக்கு வக்காலத்து வாங்கி எழுதினீர்களோ, அவர்களுக்கு அனுமதி தேவையில்லை என எழுதினீர்களோ அவ்விடயம் தான் பின்னர் பொலிஸ் வரை சென்று அனுமதி தேவை என பொலிஸ் கூறியிருந்தது. அது பற்றிய இணைப்பே நான் மேலே தந்தது. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அப்படியா? இலங்கைச் சட்டத்தில் எங்கே இப்படி இருக்கிறது என்று சுட்டிக் காட்டினால் தொடர்ந்து உரையாடலாம்! காட்டுவீர்களா? இது யாராலும் முடியாது, ஏனெனில் இலங்கையில் மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக ஒரு சட்டமும் இல்லை!

ஏற்கனவே முன்னொரு திரியில் இதைப் பற்றி உங்களிடமே கேட்டேன். அங்கே நடந்தது மதமாற்றப் போதனை என்று ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்க முடியாது! ஏன்? மதமாற்றப் போதனை என்பதை இலங்கைச் சட்டம் வரையறை செய்யவில்லை.  ஒருவன் பைபிளை, குர் ஆனை, சைவை சித்தாந்தத்தை இன்னொருவருக்கு எடுத்துச் சொல்லுவதில் ஒரு தடையும் இல்லை! அதை ஏற்பதும் ஏற்காமல் கடந்து போவதும் கேட்பவரின் தனியுரிமை! கட்டாயமாக ஆயுத முனையில் மதமாற்றம் செய்வதைத் தவிர வேறு வகைகளை கட்டாய மதமாற்றம் என்பதே ஒரு misnomer.

உங்கள் வாதம் " தமிழ் சைவம் இந்து"  என்ற வாதக் குணங்களால் எழுவதேயொழிய அதில் தனிமனித சுதந்திரம், நாட்டின் சட்டங்கள் பற்றி எதுவும் இல்லை! இத்தகைய வாதங்களால் ஒரு பயனும் இல்லை! மாறுபவன் மாறிக் கொண்டு தான் இருப்பான்!  

http://www.sundaytimes.lk/090222/Plus/sundaytimesplus_08.html

Anti-conversion Bill paving the way to ‘therocracy’

The anti-conversion bill, introduced by the Jathika Hela Urumaya (JHU) in 2004, was approved in January 2009, and the Sri Lanka Parliament is to vote on the Bill in February or March.....................................................

Link to comment
Share on other sites

1 hour ago, vaasi said:

http://www.sundaytimes.lk/090222/Plus/sundaytimesplus_08.html

Anti-conversion Bill paving the way to ‘therocracy’

The anti-conversion bill, introduced by the Jathika Hela Urumaya (JHU) in 2004, was approved in January 2009, and the Sri Lanka Parliament is to vote on the Bill in February or March.....................................................

அறிவுக் கொழுந்துகளே, பத்து வரிய நியூஸ் சார். வாசிக்க பஞ்சியோ, இங்கிலீஸ் மட்டு மட்டோ


பாராளுமன்றத்திலே இதை கடாசி குப்பைக்குள் போட்டு கனகாலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

 

உலகம் முழுவதும் வாழந்த மனித குலத்தின்  மூதாதயரில்  சிலர் தமது பட்டறிவைக்கொண்டு இயற்கை வைத்திய முறைகளைக் கண்டு பிடித்தனர்.  இவையெல்லாம் அறிவியலே.

ஆனால் இந்த சி. டி மூலம் நோய்களை குணப்படுத்துவாதாக கூறி ஏமாற்றும் கும்பல் குறிவைப்பது அந்த மூதாதயரின் அறிவியலை புரிந்து கொண்ட எமது  மக்களை அல்ல. இவர்கள் குறிவைப்பது வெப்பு நோயை திருநீறு குணப்படுத்தியதாக, சூலை நோயை உண்டாக்கி பின்னர் மாற்றியதாக, நரியை பரியாக்கியதாக, அமாவாசையை பெளர்ணமி ஆகியதாக இன்னும் பல வடிகட்டிய  பொய்களைக் கூறி நம்ப வைக்கப்பட்ட பேதைகளையே. 

உண்மை...தான்!

இவர்கள் தானே.....யேசுநாதர்....ஒரு மீனையும் , ரொட்டியயையும் வைத்து....எல்லோரது பசியையும் போக்கினார் என்று கூறுகின்ற அறிவியலாளர்கள்...!

ஜெகோவா.....கடலைப் பிளந்து மறுகரைக்குப் போனார் என்னும் போது....வாய்களை....அகலப் பிளந்து...ஆமோதிப்பவர்கள்!

இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது....மற்றைய மதங்களை விமரிசிப்பதற்கு?

யேசு நாதரின்.... பிறப்பே....கிருஷ்ணனிடமிருந்து கடன் வாங்கியது....!

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

 வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது. எனினும், வீடொன்றில் வைத்து மதபோதனைகளை முன்னெடுப்பதற்கான எவ்விதமான அனுமதியும் கிராம அலுவலகரிடமோ, ஏனைய உரிய அதிகாரிகளிடமிருந்தோ, அவர்கள் பெற்றுக்கொள்ளவில்லை என அறியமுடிகின்றது.

 

7 hours ago, Justin said:

இதை கிறிஸ்தவனான நான் சொல்வதால் இங்கே பொறி பறக்கலாம்!

ஆனால், தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமென்பதற்காகச் சொல்லத் தான் வேண்டும்: இப்படி தனியார் வீடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு எந்த அதிகாரிகளிடமும் அனுமதி தேவை என்று இலங்கையில் சட்டம் இல்லை! அப்படி இருந்தால் இங்கே ஆதாரம் இணையுங்கள்!

“வீடொன்றில் வைத்தே மதபோதனைகள் இடம்பெற்றாலும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு அது பெரும் தொந்தரவை ஏற்படுத்தி வருகின்றது.”

அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு பெரும் தொந்தரவை ஏற்படுத்துவது சட்டவிரோதம். அதிக சத்தம், அபரீதமான போக்குவரத்து போன்றவை உரிய அங்கீகாரம், முன்னறிவித்தல், சூழ உள்ள சமூகத்தின் விருப்பம் இன்றி இடம் பெறுவது, ஒரு வகையில் ஆதிக்க முயற்சி.

நல்லூர் தேர் திருவிழாவுக்கு பெருமளவு மக்கள் போகிறார்கள், பெரும் சத்தங்கள் ஒலிக்கின்றன. ஆனால் அது ஆதிக்கம் இல்லை - காரணம் சூழ உள்ள இந்துக்கள் மட்டும் அன்றி கிறீஸ்தவர்களும் விரும்பி பங்குபற்றும் தேர் திருவிழா அது. 

Link to comment
Share on other sites

மதம் மாற்றுவதற்கு என்டு  உலகையே ஏமாற்றும் கயவர் கும்பல்கள் காலம் காலமா அலைஞ்சு திரியுது.

அற்ப சொற்ப பொருளுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு அந்த கயவர் கும்பல்கள் வலையில வீழ்கின்ற பேராசைக் கும்பல்களும் அங்கையங்கை இருக்கத்தான் செய்யுது.

மதம்மாறி வாலறுந்த நரியான அந்த பேராசைக் கும்பல்களின் கதை இருக்கே, சொல்லிமாளாது. தங்களை வென்ற ஆக்கள் உலகத்திலேயே இல்லை என்ட ரேஞ்சில அரசியல் கிரசியல் எல்லாம் உளறித்திரிவீனம். எங்கையாவது ஏதாவது வீசப்பட்ட அதை பொறுக்கிக்கொண்டு திரிவீனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

அவர்கள் CD யை வைத்தே நோய்களை குணப்படுத்துவார்கள்😆😆😆😆😆

வெள்ளைக்காரன்   பொய்  சொல்ல  மாட்டான் என்று நம்புற ஆட்கள் தான்... 
அதனையும்.. நம்புகிறார்கள்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயேசு கிறிஸ்துவின் அற்புதமான போதனைகளை / சத்தியங்களை பின்பற்றுகின்றவன் /

இயேசு எந்த மதத்தையும் தாபிக்க வரவில்லை 

இயற்கையே கடவுள் என நம்புகின்றவன்.
 
ஆன ஒரு மனிதனையும் நம்புவதில்லை. போதகர்கள் / பாதிரிகள் /  ஊழியக்காரர்கள் எல்லோரும் திருடர்கள். உழைக்காமல்  இறைவனின் சத்தியத்தை தங்கள் வாசிக்கு எற்ற விதமாக போதித்து வாழும் கயவர்/சோம்பேறி கூட்டம். கோட்டும், சூட்டும், அலங்காரங்களும், விலையுர்ந்த கார்களும் வெளிநாட்டு பயணங்களும் அவர்களது வாழ்க்கை பகட்டானது. தனி மனித பலவீனங்களை தாங்களுக்கு சாதகமாக பாவித்து கொள்வார்கள்.   தாங்களுக்கு தாங்களே Reverent, Bishop, Pastor, Evangelist, Prophet போன்ற பட்டங்களை சூடிகொள்வார்கள்.  

google ஐத‌ட்டிப்பார்த்தால் தெரியும் இவர்கள்து சொத்து மதிப்பு 

பக்கத்து வீட்டில் நோயுற்று / வறுமையில் வாடும் ஒருவரையும் சந்திக்க நேரம் இருக்காது. அனாதைகளை அரவணக்க நேரம் கிடைகாது / பசியால் வாடுபவர்க்ளுக்கு ஒரு நேரம் உணவளிக்க மாட்டார்கள். உன்னை நேசிப்பது போல உன் அயாலனையும் நேசி என்ற அடிப்படை தத்துவத்தையும் மறந்து விடுவார்கள். இந்த ஊத்தை வியாபரிகளினாலேயே சமூகத்தில் இத்தனை பிரச்சினை. 

மனிதன் என்று தன் சகமனிதனை நேசிக்க ஆரம்பிக்கிறானோ அன்று இந்த உலகம் சொர்க்கமாக மாறும். மாறாக நல்லுர் கந்தனுக்கு பாலபிசேகம் செய்வதாலோ அல்லது மக்காவிற்கு சென்று கல் எறிவதாலோ, புத்தங் சரணங் கச்சாமி என்று பனை ஓதுவாதலோ ஒரு மண்ணும் நடக்காது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.