Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

எனது சைவ சமயம் இந்து மதத்தின் ஒரு கிளையாகும். அதற்காக மற்றய பிரிவுகளை எதிர்ப்பவன் அல்ல. உண்மையில், மற்றைய மதங்களை மதிக்க விரும்புவன் நான், அவை சொல்லும் நல்ல கருத்துக்களுக்காக. ஆனால் மதமாற்ற வியாபாரத்தை வெறுப்பவன் நான். 

நீங்கள் மதம் மாறுவது உங்கள் இஷ்டம். நான் இங்கு மதப்பிரச்சாரம் செய்ய வரவில்லை. முன்பு ஒரு திரியில், சைவ சமயம்/இந்து மதம் பற்றி அறிய உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்தால் உங்கள்் அருகிில் உள்ள பெரியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் போன்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே என்று கூறியிருந்தேன். 

இன்றைய இணைய உலகில் உங்களுக்குத் தேவையான அறிவைத் தேடிப் பெறுவது இலகு. தொன்மையான சைவசமயம், இந்து மதம் தந்த நூல்கள் எண்ணற்றவை. வெள்ளைக்காரனே தேடித் தேடி அவற்றைப் படிக்கிறான். ஈழத்தவரான நீங்கள் இப்படியான தேடல்களில் ஈடுபடுவது மிக மிக இலகுவாக இருக்கும். யாழ் கள விவாதத்தின் மூலம் எல்லாவற்றையும் அறிய முடியாது. உண்மையான ஊக்கம் இருப்பின் சுய தேடல் ஈடுபடுங்கள்.

எனது நம்பிக்கையில் நான் தெளிவாகவும், உறுதியாகவும் உள்ளேன்; அது என்னை பல இடங்களில் காத்தது. இதனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எனவே எனது நம்பிக்கையைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 😊

எனது கேள்வி உங்கள் தனிப்பட நம்பிக்கை சார்ந்தது அல்ல ...
மாறாக உங்கள் மதத்தில் இருந்து மந்திகள்போல பிற மதத்துக்கு அதிகமாக 
கூட்ட்டம் கூட்டமாக சேர்கிறார்களே? அவர்கள் பற்றியது 
சேர்ப்பவர்கள் இறைவன் கூறுகிறார் என்று பைபிள் என்று ஒரு புததகத்தை கொண்டு வருகிறார்கள் 
அப்படி இலகுவாக உங்கள் மதம் பற்றி நான் சொல்லிக்கொடுக்க உங்களிடம் ஏதும் புத்தகம் இருக்கிறதா? 
ஒன்றை வாசித்து உங்கள் மதம் பற்றி அறிய தெளிவுபெற என்று ஏதாவது இருக்கிறதா? 

சைவமதம் இந்துமதத்தின் ஒரு கிளை என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இந்துமதம் என்பது என்ன? இதுக்கு ஏதும் வரையறை இருக்கிறதா? இதுக்கு கிளைகள் இருக்கிறது என்றால் 
இதன் ஆதி அதாவது தொடக்கம் என்ன? 
உங்களுக்கே என்ன எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை ....... இதில் போகிறவனையும் இழுத்துவைத்திருக்க நினைகிறீர்களே? 

தயவு செய்து தெளிவாக பதில் தர முடியுமா? 

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

எந்த ஒரு நம்பிக்கை / மதம் மீதும் உங்களுக்கு உண்மையான ஆர்வம் இருந்திருந்தால் மேலுள்ளவாறு கேட்டிருக்கமாட்டீர்கள். இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, பௌத்தனாகவோ, முஸ்லிமாகவோ, வேறு எதுவுமாகவோ மாற விரும்பினால் முதலில் உங்களைத் தான் நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும்! 😃 இந்து மதத்தை கிறிஸ்தவ மத மனநிலையில் பார்க்கும் உங்கள் தவறான பார்வையே இவ்வாறு உங்களை எழுதவைத்தது என நினைக்கிறேன். 

 

"நான்" என்று நான் என்னை கூறவில்லை ஒரு உதாரணத்துக்கு எழுதினேன் 
நான் சாக்கடையில் இருந்து மீண்டவன் சாக்கடையில் வீழ்வது என்றால் என்ன குவாலிபிக்கேஷன் 
தேவை என்பது எனக்கு நன்கு தெரியும். மற்றவர்களுக்கு புரியவைக்க எனக்கு தெரியாத ஏதும் 
உங்களுக்கு தெரிந்து இருக்கிறதா? என்றுதான் கேட்டு எழுதினேன். 

என்னை நான் தொடர்புகொள்வது என்றால் உங்கள் மதம் யாருக்கு தேவை? 
இருக்கிறது இருக்கிறது என்று சப்பை கட்டு காட்டுகிறீர்கள் ... என்ன இருக்கு என்று கொஞ்சத்தை 
எடுத்துவிடுங்கள் என்றால் ... உங்களை நீங்களே தொடர்புகொள்ளுங்கள் என்கிறீர்கள்.

நீங்கள் மேலே எழுதியதை போய்  வாசியுங்கள் ... அடிக்கடி நீங்கள் பாவிக்கும் அடைமொழிகளை கொஞ்சம் 
அவதானியுங்கள்  சாமானியர்  ஏழைகள் கஸ்டபடடவர்கள்  போன்றவற்றை பற்றி யோசியுங்கள்.
உங்கள் மதம் என்ன செய்கிறது?
மற்ற மதம் என்ன செய்கிறது? என்ற வேறுபாட்டை பாருங்கள்.
இப்படியே அலம்பிக்கொண்டு இருந்தால் ..... நல்லூரில் நாளை புத்தன்தான் இருப்பான் 
அப்போதும் எங்கள் வாரிசுகள்தான் போய் வாதாடும் .... 
உங்கள் வாரிசுகள் அது இன்னொரு கிளை என்று வசதியாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

 ஐயனே! சைவ/இந்து மதத்தில் இல்லாத  கொள்கைகளை இதர மதத்தில்  இருந்து வேறுபடுத்தி காட்டமுடியுமா?

ஆம் 

நல்லூரை உதாரணத்துக்கு எடுத்தால் ... உங்கள் பூட்டன் தொடங்கி வணங்கி வருகிறார்கள் 
நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் பிள்ளையோ பேரனோ கூட அர்ச்சகர் ஆகமுடியாது.
இந்து என்ற போலி  மதத்தில் நீங்கள் எட்ட கூடிய உயரம் இவ்வளவுதான் என்று இருக்கிறது 

மாறாக புனித அந்தோனியார் கோவிலில் உங்களது  மகனோ பேரனோ நினைத்தால் 
பாதிரியார் ஆகமுடியும். இறைபணி என்பதை முழுமையாக செய்யமுடியும் 

முதலாவதில் நீங்கள் அடிமை 
இராண்டாவதில் நீங்கள் முழுமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.

மதம் மாறிய பின்பு/ முன்பு என்று எட்டி நின்று பார்க்கும் நீங்கள்தான் பிரிவினையை 
பார்க்கிறீர்கள்.
அவர்கள் உங்கள் நிலைமைக்கே ஏழ்மை/ வறுமைக்கே  மதத்தை பின்பற்றாது இருப்பதுதான் 
காரணம் என்று காண்கிறார்கள் 
தாம் முன்னேறியதுக்கு மதம் காரணம் என்று நம்புகிறவன் ... நீங்கள் முன்னேற வேண்டும் என்று அக்கறை கொள்ளும்போது தன்னோடு படகில் ஏறு என்கிறான்.

"யாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெறுக"
என்றுதான் அவன் எண்ணுகிறான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தை வியாபாரமாக்கிய மிஷினரிகள்: மதமாற்றம் எப்படி நடக்கிறது? நிதி வருவது எப்படி?


 சென்னை: ஆக்ராவில் முஸ்லிம்கள் 200 பேர், இந்துக்களாக மதம் மாறியுள்ள அல்லது மாற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், மதமாற்ற விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த சர்ச்சை காரணமாக, இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் சத்தமே இல்லாமல் நடத்திவரும் மதமாற்றம் குறித்து உளவுத்துறை அளித்துள்ள விவரங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. "ஆப்ரிக்காவுக்கு மிஷினரிகள் வந்தபோது அவர்கள் கைகளில் பைபிள் இருந்தன. எங்களிடம் நிலங்கள் இருந்தன. அவர்கள் சொன்னார்கள்... நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம் என்று. நாங்களும் கண்களை மூடினோம். ஆனால் கண்களை திறந்து பார்த்தபோது, எங்களிடம் பைபிள்கள் இருந்தன, அவர்களிடம் எங்கள் நிலங்கள் இருந்தன.." என்று வேதனையோடு ஆப்பிரிக்காவில் நடந்த மதமாற்ற மோசடியை வெளி உலகத்திற்கு தெரிவித்தார் மறைந்த கென்ய அதிபர் ஜோமோ கென்யத்தா.

மிஷினரிகளின் மார்க்கெட்டிங் டெக்னிக்குகள்தான், மக்களை கும்பலாக மதம்மாற்றுவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறுகின்றனர் மதம் மாற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளோர். உதாரணத்துக்கு 2000மாவது ஆண்டில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 2 கோடியே 40 லட்சமாக இருந்தது கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை. அது கடந்த ஆண்டில் 7 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வெளியே தெரிவதைவிட மிக கடுமையாக மதமாற்றம் இந்தியாவில் நடைபெற்றுவருவதை அப்புள்ளி விவரம் வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது.

உணவு, வசிப்பிடம் மற்றும் ஆடை போன்ற அடிப்படை தேவைகளுக்காக கஷ்டப்படுவோர்கள்தான் மிஷினரிகளின் முதல் டார்கெட். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள ஏழைகளை இவர்கள் எளிதில் மதம் மாற்ற முடிகிறது. அவர்களிடம் நிலவும் கடவுள் மீதான பயம் மற்றும் அறியாமை போன்றவை மிஷினரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது.

Cutting Edge International and the CoFounder of Billion Soul Network என்ற முன்னணி கிறிஸ்தவ அமைப்பின் நிறுவனர், டாக்டர். ஜேம்ஸ் ஓ டேவிஸ் கூறுகையில், "இந்தியாவில் 6 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளனர். உலகிலேயே அதிகமாக கிறிஸ்தவர்கள் வாழும் இரண்டாவது தேசம் இந்தியா. உலகிலேயே அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் நாடாக இந்தியா மாறும்" என்கிறார். இரு குழந்தைகள் முறையை பின்பற்றும் கிறிஸ்தவ குடும்பங்கள் எப்படி இப்படி பல்கி பெருகியுள்ளன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஜேம்ஸ் ஓ டேவிஸ் நடத்திவரும் அமைப்பு மேலும் 2 ஆயிரம் கிறிஸ்தவ அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரம் சர்ச்சுகளை மிகுந்த செலவு செய்து கட்டியுள்ளதாம்.

நிதி பெறுவது யார்? கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளன. இந்தியாவில்.. அதிலும் தமிழகத்திலுள்ள என்.ஜி.ஓக்கள் எனப்படும் தன்னார்வ அமைப்புகள், மக்களை மதம்மாற்ற வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியாக நிதி பெறுவது அதில் தெரியவந்துள்ளது.

ஆண்டுதோறும் சுமார் பத்தாயிரத்து 500 கோடி ரூபாய் இந்திய என்ஜிஓக்களுக்கு வருகிறது. மதம் மாற்றுவது, நாட்டின் கலாசாரத்தை உருக்குலைப்பது மட்டுமே இந்த நிதியின் நோக்கம். உள்துறை அமைச்சக தகவல்படி, கன்னியாகுமரியை சேர்ந்த Tuticorin Diocesan Association மற்றும் Tuticorin Multipurpose Social Service Society ஆகிய இரண்டும் அதிக அளவில் நிதி உதவி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றுக்கு அடுத்தபடியாக Rural Uplift Centre மற்றும் Association(TDA) of the Latin Catholic Diocese of Tuticorin ஆகிய என்ஜிஓக்கள் அதிகம் நிதி உதவி பெற்றுள்ளன.

இந்த என்ஜிஓக்களுக்கு பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இருந்துதான் அதிகப்படியான நிதி வந்துள்ளதும் உள்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. ரூ.44.16 கோடி, ரூ.20.60 கோடி, ரூ.10.30 கோடி, 5.15 கோடி, ரூ.3.22 கோடி என பல கட்டங்களாக இவ்வமைப்புகளுக்கு நிதி வந்துள்ளது. இந்த நிதியை ஏன் பெறுகிறார்கள் என்று சம்மந்தப்பட்ட என்ஜிஓக்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவை சுகாதார முகாம்கள், அநாதைகள் நல திட்டங்கள், மத போதகர்களுக்கான சம்பளம் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டதாதக தெரிவித்துள்ளன.
 
மார்க்கெட்டிங்!
மதமாற்றம் என்பது மார்க்கெட்டிங் போல மாற்றப்பட்டுள்ளது. பிரபல மதபோதகர் பென்னிஹின் பெங்களூருவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்து கூட்டம் நடத்தியபோது இந்து அமைப்புகள் அதை எதிர்த்து போராட்டங்களை நடத்தின. ஆயினும் அவரது கூட்டத்திற்கு அப்போதைய காங்கிரஸ் அரசு பாதுகாப்பு அளித்திருந்தது. அக்கூட்டத்தில் பென்னி ஹின் மைக்கேல் ஜாக்ஷனை போலத்தான் மேடையில் என்ட்ரி ஆனார். ராக் பாடல்கள் காதை கிழித்தன.

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்..? என்ற கேள்வியின் பின்னால்தான் மார்க்கெட்டிங் டெக்னிக் ஒளிந்துள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/india/marketing-religion-india-who-does-it-how-they-do-it-216874.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Maruthankerny said:

எனது கேள்வி உங்கள் தனிப்பட நம்பிக்கை சார்ந்தது அல்ல ...
மாறாக உங்கள் மதத்தில் இருந்து மந்திகள்போல பிற மதத்துக்கு அதிகமாக 
கூட்ட்டம் கூட்டமாக சேர்கிறார்களே? அவர்கள் பற்றியது 
சேர்ப்பவர்கள் இறைவன் கூறுகிறார் என்று பைபிள் என்று ஒரு புததகத்தை கொண்டு வருகிறார்கள் 
அப்படி இலகுவாக உங்கள் மதம் பற்றி நான் சொல்லிக்கொடுக்க உங்களிடம் ஏதும் புத்தகம் இருக்கிறதா? 
ஒன்றை வாசித்து உங்கள் மதம் பற்றி அறிய தெளிவுபெற என்று ஏதாவது இருக்கிறதா? 

சைவமதம் இந்துமதத்தின் ஒரு கிளை என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
இந்துமதம் என்பது என்ன? இதுக்கு ஏதும் வரையறை இருக்கிறதா? இதுக்கு கிளைகள் இருக்கிறது என்றால் 
இதன் ஆதி அதாவது தொடக்கம் என்ன? 
உங்களுக்கே என்ன எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை ....... இதில் போகிறவனையும் இழுத்துவைத்திருக்க நினைகிறீர்களே? 

தயவு செய்து தெளிவாக பதில் தர முடியுமா? 

மதம் மாறும் மந்திகள் பைபிள் போதனைகளை கேட்டுவிட்டுத்தான் மாறுகிறார்கள் என்று நம்பும் உங்கள் வெள்ளந்த்தித்தனம்  மிகவும் பிடித்திருக்கிறது.  கேவலமாக இல்லை??? கேனைத்தனமாக இருக்கிறது உங்கள் கேள்விகள். நாங்கள் யாரும் பைபிளில் என்ன சொல்லியிருக்கிறது, கிறிஸ்தவம் எப்படிவந்தது? அதன் கிளைகள் என்ன என்ற மடத்தனமான கேள்வி எதையும் உங்களிடம் கேட்கவில்லையே? சைவராக இருந்தால் இருங்கள். இல்லையா பைபிள் போதனைகள்தான் பிடித்திருக்கு என்றால் நீங்களும் தாவலாம். அதனால் எந்த நட்டமும் சைவத்துக்கு வந்துவிடப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, வாத்தியார் said:

 

அக்கூட்டத்தில், தள்ளுவண்டியில் அழைத்துவரப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பென்னிஹின் 'ஆசீர்வதித்ததும்' எழுந்து நடந்து சென்றதை நிருபர்கள் பார்க்க முடிந்தது. இதைப்போன்ற கண்கட்டி வித்தைகளை பார்க்கும் பகுத்தறிவில்லாத மனிதர்கள், மதமாற்றத்திற்கு உள்ளாகிறார்கள் என்கின்றனர் பகுத்தறிவாளிகள். ஆனால் அறிவியல் ரீதியாகவோ, நடைமுறையிலோ முடியாத ஒரு செயலை பென்னிஹின் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்.

 

பென்னி ஹின் செத்துப் போனதாக கேள்விப்பட்டேன்.

உண்மையோ தெரியாது.

மேடைகளில் ஆசீர்வதிப்பது எல்லாம் ஒரு 'set up' இல் செய்கிறார்கள்.

உண்மையான மாற்றுத் திறனாளிகள் யாரையும் அவர்கள் அழைக்க மாட்டார்கள்.

பென்னி ஹின் மட்டுமல்ல, இயேசுவே வந்தாலும் எந்த மாற்றுத் திறனாளிகளையும் குணப்படுத்த முடியாது.  

இதுதான் யதார்த்தம்.

பைபிளை முழுவதுமாக பகுத்து ஆராய்ந்தால், கிறிஸ்தவ மதத்தில் யாரும் இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Maruthankerny said:

ஆம் 

நல்லூரை உதாரணத்துக்கு எடுத்தால் ... உங்கள் பூட்டன் தொடங்கி வணங்கி வருகிறார்கள் 
நீங்கள் தலைகீழாக நின்றாலும் உங்கள் பிள்ளையோ பேரனோ கூட அர்ச்சகர் ஆகமுடியாது.
இந்து என்ற போலி  மதத்தில் நீங்கள் எட்ட கூடிய உயரம் இவ்வளவுதான் என்று இருக்கிறது 

மாறாக புனித அந்தோனியார் கோவிலில் உங்களது  மகனோ பேரனோ நினைத்தால் 
பாதிரியார் ஆகமுடியும். இறைபணி என்பதை முழுமையாக செய்யமுடியும் 

முதலாவதில் நீங்கள் அடிமை 
இராண்டாவதில் நீங்கள் முழுமை. 

அட சைவர்கள் அர்ச்சகர்களாக முடியாது ஆனால் கிறீஸ்தவர்கள் பாதிரியார் ஆகலாம் அதுதான் உங்கள் பிரச்சனையா? அதுசரி இலங்கையில் எத்தனைபேர் அர்ச்சகர்களாக விரும்புகிறார்கள்?? மதம் மாறிய மந்திகளெல்லாம் பாதிரியார்களாகத்தான் திரிகிறார்களா? எப்ப பார்த்தாலும் அர்ச்சகர் ஆகமுடியாது என்ற புராணம்தான்! எமது ஊர்களில் அப்படி ஐயர்மாரை யாரும் உச்சாணி கொம்பில் வைப்பதில்லையே?

 

இறைவனை தரிசிக்க, இறைபணி செய்ய நீங்கள் அர்ச்சகனாக இருக்க வேண்டியதில்லை. நல்ல மனமுள்ள சாதாரண பக்தனாக இருந்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

உங்களிடம் இலகுவான  கேள்வி ...
பதிலில் உங்கள் எண்ணத்தை பதிவு செய்யுங்கள்.

தரவு:  இன்னொரு கடவுளை ஏற்கனவே கொண்டவனுக்கு .. இன்னொருவன் வந்து சொல்கிறான் 
இது உண்மை இல்லை .... நீ என்னுடன் வா உனக்கு உண்மையான கடவுளை காட்டுகிறேன் என்று. 
ஓகே பார்க்கலாம் என்று அவன் போகிறான் ... பின்பு ஆம் என்று ஏற்று அங்கேயே இருந்துவிடுகிறான். 

கேள்வி 1: மதம் மாறியவன் ஏன் முன்னைய கடவுளை பின்பு மறுக்கிறான்? 

கேள்வி 2: இன்னொரு கடவுளை தேடி போகிறவனை ...... இழுத்து வைத்திருக்க நீங்கள் பெரும்பாடு படுவது ஏன்?
(இதில் இந்துமதம்தான் சுதந்தரமானது என்ற பினாத்தல் வேறு எழுதுகிறார்கள்) 

கேள்வி 3: உங்களுடைய மதம் என்ன? அதன் கொள்கை தத்துவம் என்ன? உங்கள் மதத்தை நான் அறிய விரும்பினால் படிக்க வேண்டிய புத்தகம் என்ன? .... 

கேள்வி 3இன் தொடர்ச்சிதான்: நான் இந்துவாக மாற விரும்பினால் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? பின்பு முழுதாக மாறுவதும் எவ்ளவு காலம் எடுக்கும்? எதை பின்பற்ற வேண்டும்? இதை நீங்கள் பின்பற்றுகிறீர்களா? 

மருதர்...
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு:
(*) சைவம் ஒன்றும் கார்ப்பரேட் மாடலில் இயங்கவில்லை. அதனால் அது 1-800-ஜீசஸ் (5378) போன்ற நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி போன்ற விளம்பரங்களுடன் தொடர்பு படுவதில்லை.

(*) ஆற்றுக்குள், குளத்துக்குள், வக்குத்தொட்டிக்குள் ஒருவனை முங்கி எடுத்து ஞானஸ்நானம் செய்து "சைவா" என்று அழைக்கும் பண்பாடில்லை.

(*) ரொட்டித்துண்டை நாக்கில்  திணித்து,  இதுவே கடவுளின் இருதயம் , இதுவே உனக்காக சிந்தப்பட்ட இரத்தம் போன்ற வசனங்களை சொல்லி குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுவதும் போதிப்பதில்லை.

நீ நீயாக இரு....
யாதும் ஊரே யாவரும் கேளீர் ...அன்பே எங்கள் உலக தத்துவம்.
அன்பே சிவம்... தென்னாடுடைய சிவனே போற்றி ...இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

கவனித்தீர்களா ?... மேலே  இன்பமே சூழ்க சைவம் மட்டும் வாழ்க என்று சொல்லவில்லை 

சைவம் என்னும் பொழுது நீங்கள் வெறுமனே கோவிலையும், குலத்தையும், சூலத்தையும், பீப்பி ஊதலையும் மட்டும் பார்க்காதீர்கள்...
சைவம் பேசும் சித்தாந்தங்கள் யாவருக்கும் பொது  .... 
பதி, பசு, பாசம், 
ஆணவம் , கர்மம், மாயை இப்படி பல.

கற்றுக்கொண்டால் குற்றம் இல்லை.
கைபிடித்து இழுத்தால் .... 

Link to comment
Share on other sites

2 minutes ago, Sasi_varnam said:

மருதர்...
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு:
(*) சைவம் ஒன்றும் கார்ப்பரேட் மாடலில் இயங்கவில்லை. அதனால் அது 1-800-ஜீசஸ் (5378) போன்ற நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி போன்ற விளம்பரங்களுடன் தொடர்பு படுவதில்லை.

(*) ஆற்றுக்குள், குளத்துக்குள், வக்குத்தொட்டிக்குள் ஒருவனை முங்கி எடுத்து ஞானஸ்நானம் செய்து "சைவா" என்று அழைக்கும் பண்பாடில்லை.

(*) ரொட்டித்துண்டை நாக்கில்  திணித்து,  இதுவே கடவுளின் இருதயம் , இதுவே உனக்காக சிந்தப்பட்ட இரத்தம் போன்ற வசனங்களை சொல்லி குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுவதும் போதிப்பதில்லை.

நீ நீயாக இரு....
யாதும் ஊரே யாவரும் கேளீர் ...அன்பே எங்கள் உலக தத்துவம்.
அன்பே சிவம்... தென்னாடுடைய சிவனே போற்றி ...இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

கவனித்தீர்களா ?... மேலே  இன்பமே சூழ்க சைவம் மட்டும் வாழ்க என்று சொல்லவில்லை 

சைவம் என்னும் பொழுது நீங்கள் வெறுமனே கோவிலையும், குலத்தையும், சூலத்தையும், பீப்பி ஊதலையும் மட்டும் பார்க்காதீர்கள்...
சைவம் பேசும் சித்தாந்தங்கள் யாவருக்கும் பொது  .... 
பதி, பசு, பாசம், 
ஆணவம் , கர்மம், மாயை இப்படி பல.

கற்றுக்கொண்டால் குற்றம் இல்லை.
கைபிடித்து இழுத்தால் .... 

நீங்கள் கூறும் சைவம் தற்போது இந்து கோவில்களில் நான் காணவில்லை. அதற்கு காரணம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

நீங்கள் கூறும் சைவம் தற்போது இந்து கோவில்களில் நான் காணவில்லை. அதற்கு காரணம் என்ன?

"சைவம் என்னும் பொழுது நீங்கள் வெறுமனே கோவிலையும், குளத்தையும், சூலத்தையும், பீப்பி ஊதலையும் மட்டும் பார்க்காதீர்கள்..."
நான் சைவ / ஆன்மீக சித்தங்களை கோவிலில், மசூதிகளில், சேர்ச்சுகளில் தேடுவதில்லை துல்பென்.

Link to comment
Share on other sites

4 minutes ago, Sasi_varnam said:

"சைவம் என்னும் பொழுது நீங்கள் வெறுமனே கோவிலையும், குளத்தையும், சூலத்தையும், பீப்பி ஊதலையும் மட்டும் பார்க்காதீர்கள்..."
நான் சைவ / ஆன்மீக சித்தங்களை கோவிலில், மசூதிகளில், சேர்ச்சுகளில் தேடுவதில்லை துல்பென்.

ஆனால் உங்களை போல் எல்லோரும் இல்லை. பெரும்பான்மை இந்துளாகிய எமது மக்கள் கடவுளை ஆன்மீகத்தை விட மூட நம்பிக்கைகளை தான் நம்புபவர்கள்.  அவ்வாறு நம்ப வைக்கப்படுள்ளார்கள்.  அதனால்  தான் மத மாற்றும் கும்பல்கள் அவர்களை இலகுவில் மாற்ற கூடியதாக உள்ளது என்பதே எனது கருத்து. 

Link to comment
Share on other sites

8 hours ago, Jude said:

"மத மாற்ற வியாபாரம்" என்று எழுதி இருக்கிறீர்கள். இலாபம் இல்லாமல் வியாபாரம் இல்லை. இங்கே மதம் மாற்றும் 'வியாபரிகளுக்கு' எவ்வளவு இலாபம் எப்படி கிடைக்கிறது என்று எழுத முடியுமா?

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடித்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன்.
மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன். தமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவமாட்டார்.. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள அர்ஜீன் சம்பத் இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி இருந்தது.அதன் பின்னரே ஏனைய மதங்கள் வந்திருந்தன.

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.
தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

தூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடி கடுமையாக எதிர்க்கிறார்.

Link to comment
Share on other sites

17 minutes ago, Paanch said:

மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட மெதடித்த சபையில் துணைத் தலைவராக இருப்பவர் ஆபிரகாம் சுமந்திரன்.
மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று மதமாற்றப் பணிகளை மட்டுமே மேற்கொள்பவர் அவரது துணைவியார் சாவித்திரி சுமந்திரன். தமிழர்களுக்கு எதிரான சைவர்களுக்கு எதிரான கடும் போக்குடைய இவர்கள் இருவரும் பிரதமர் மோடியை சந்திக்கப் போனால் பிரதமர் மோடி உதவமாட்டார்.. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு ஈழத்தமிழர்களிற்கு முற்றுமுழுதாக உதவுமென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் அர்ஜுன் சம்பத் தனக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அரசு அதிலும் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு. ஈழத் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை எனவும் செய்யப் போவதும் இல்லை எனவும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அண்மையில் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

 

இதற்கு பதிலளித்துள்ள அர்ஜீன் சம்பத் இலங்கை ஆதிகாலம் தொட்டுச் சிவபூமி இருந்தது.அதன் பின்னரே ஏனைய மதங்கள் வந்திருந்தன.

 

ஈழத் தமிழர்கள் சைவர்கள் அவர்கள் சார்பில் இதுவரை எந்தக் கட்சியும் பேசவில்லை.
தமிழர் சார்பில் பேசுவோர்கள் கிறிஸ்தவர்களே .அவ்வாறு பேசுவோரின் நோக்கம் சைவர்களைக் கிறிஸதவர்கள்; ஆக்குவதே.

 

தூண்டுதல் மதமாற்றத்தையோ கட்டாய மதமாற்றத்தையோ பிரதமர் மோடி கடுமையாக எதிர்க்கிறார்.

அப்ப இந்து பிரபாகரன் இருந்திருந்தால் மோடி தங்க தட்டில தமிழீழம் வைச்சு தந்திருப்பார் என்று சொல்லுறீங்கள் போல இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

மருதர்...
நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு:
(*) சைவம் ஒன்றும் கார்ப்பரேட் மாடலில் இயங்கவில்லை. அதனால் அது 1-800-ஜீசஸ் (5378) போன்ற நீங்கள் அழைக்க வேண்டிய தொலைபேசி போன்ற விளம்பரங்களுடன் தொடர்பு படுவதில்லை.

(*) ஆற்றுக்குள், குளத்துக்குள், வக்குத்தொட்டிக்குள் ஒருவனை முங்கி எடுத்து ஞானஸ்நானம் செய்து "சைவா" என்று அழைக்கும் பண்பாடில்லை.

(*) ரொட்டித்துண்டை நாக்கில்  திணித்து,  இதுவே கடவுளின் இருதயம் , இதுவே உனக்காக சிந்தப்பட்ட இரத்தம் போன்ற வசனங்களை சொல்லி குற்ற உணர்ச்சியை வாழ்நாள் முழுவதும் போதிப்பதில்லை.

நீ நீயாக இரு....
யாதும் ஊரே யாவரும் கேளீர் ...அன்பே எங்கள் உலக தத்துவம்.
அன்பே சிவம்... தென்னாடுடைய சிவனே போற்றி ...இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க.

கவனித்தீர்களா ?... மேலே  இன்பமே சூழ்க சைவம் மட்டும் வாழ்க என்று சொல்லவில்லை 

சைவம் என்னும் பொழுது நீங்கள் வெறுமனே கோவிலையும், குலத்தையும், சூலத்தையும், பீப்பி ஊதலையும் மட்டும் பார்க்காதீர்கள்...
சைவம் பேசும் சித்தாந்தங்கள் யாவருக்கும் பொது  .... 
பதி, பசு, பாசம், 
ஆணவம் , கர்மம், மாயை இப்படி பல.

கற்றுக்கொண்டால் குற்றம் இல்லை.
கைபிடித்து இழுத்தால் .... 

உங்களுக்கு இது பதில் இல்லை .... பொதுவாக தீவிரவாதம் பற்றி முஸ்லீம்களுடன் 
வாக்குவாதம் செய்யும்போதும் அவர்கள் எமது குரானில் இப்படி இருக்கிறது என்று இழுப்பார்கள் 
எனது பதில் .... 2000-3000 வருடம் பழமையான குரான் என்ன சொல்கிறது என்பது எனக்கு தேவையில்லை 
அதிலும் விட மிக எளிமையாக விளக்கம் தர கூடிய புத்தகங்கள் லட்ஷக்கணக்கில் ஒன்லைனில் இப்போது 
உண்டு. பெரும்பான்மை முஸ்லீம்கள் இன்று வீதியில் என்ன செய்கிறார்கள்? இதுதான் வாதத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியது. இதுதான் அடுத்தவனை பாதிக்கிறது (நல்லதோ/ கெட்டதோ).

உங்களுக்கான பதிலும் ....
சைவம் என்று நீங்கள் கூறவருவது தெருக்களில் எங்கேனும் காணோம் 
அன்பே உங்கள் உலக தத்துவம் என்றால் .... சாதியின் பெயராலே கோவிலின் வீதியில் நிற்பவன் 
மனிதனில்லையா? அல்லது அவனுக்கு உங்கள் அன்பு வேலைசெய்யவதில்லையா?

சைவம் மட்டும் வாழ்க! என்று சொல்லவில்லை என்றால் ...
விரும்பியவன் போய்  பைபிளை படிப்பதில் என்ன தப்பு இருக்கிறது?
ஏன் மதம் மாற்றுகிறான் என்று அடுத்தவனை நோகிறார்கள்? அவனது மதம் என்ன சொல்கிறதோ அவன் அதைத்தானே செய்கிறான் .. அவனது மதம் தேவவாக்குகளை எல்லோரிடமும் பரப்பும்படியும் எல்லா மனிதருக்கும்  பைபிளை பற்றி அறியத்தரவும் என்று சொல்கிறது அவன் தனது கடமையை செய்கிறான். 

நீங்கள் இவைபற்றி கேள்விடுவது உண்டா? 

http://www.worldhinducongress.org/

3 hours ago, Sasi_varnam said:

"சைவம் என்னும் பொழுது நீங்கள் வெறுமனே கோவிலையும், குளத்தையும், சூலத்தையும், பீப்பி ஊதலையும் மட்டும் பார்க்காதீர்கள்..."
நான் சைவ / ஆன்மீக சித்தங்களை கோவிலில், மசூதிகளில், சேர்ச்சுகளில் தேடுவதில்லை துல்பென்.

அப்போ என்ன அண்ணாந்து வானத்தை பார்ப்பதா?
ஊரிலை இருபப்தைதானே பார்க்கமுடியும் ... நடைமுறையில் இருப்பதை பார்க்காதீர்கள் 
என்றால் ......
மதம் பரப்புவனை மட்டும் எப்படி உத்து உத்து பார்க்கிறீர்கள்? 
அவனையும் பார்க்காமல் விட்டு விட்டு ஜேசுவின் தத்துவத்தைமட்டும் பார்க்கலாமே?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

அட சைவர்கள் அர்ச்சகர்களாக முடியாது ஆனால் கிறீஸ்தவர்கள் பாதிரியார் ஆகலாம் அதுதான் உங்கள் பிரச்சனையா? அதுசரி இலங்கையில் எத்தனைபேர் அர்ச்சகர்களாக விரும்புகிறார்கள்?? மதம் மாறிய மந்திகளெல்லாம் பாதிரியார்களாகத்தான் திரிகிறார்களா? எப்ப பார்த்தாலும் அர்ச்சகர் ஆகமுடியாது என்ற புராணம்தான்! எமது ஊர்களில் அப்படி ஐயர்மாரை யாரும் உச்சாணி கொம்பில் வைப்பதில்லையே?

 

இறைவனை தரிசிக்க, இறைபணி செய்ய நீங்கள் அர்ச்சகனாக இருக்க வேண்டியதில்லை. நல்ல மனமுள்ள சாதாரண பக்தனாக இருந்தாலே போதும்.

அவருடைய கேள்வி என்ன வேறுபாடு .... என்னயுடைய பதிலில் வேறுபாடடை விளக்கி உள்ளேன்.
உங்கள் வில்லங்கம் எனக்கு புரியவில்லை ....
ஒரு கூட்டம் தம்மை ஆதிக்கராக கருதிக்கொண்டு மற்றவர்களை அடிமை செய்கிறது 
ஏன் அறிவுள்ள ஒருவன் ஒரு மனிதம் இல்லாத பொறுக்கிற்கு சீர் செய்யவேண்டும்?

இறைபணி செய்ய ஏன் உங்கள் மதத்தில் தாவ வேண்டும்?
ஒருமதமும் இல்லாமல் இருந்தாலே அதை செய்யமுடியுமே?

மதம் மாறி போகிறவனை ஏன் வில்லங்கபட்டு இழுக்கிறீர்கள் என்பதுதான் எனது கேள்வி?
உங்கள் மத்தில் ஏதும் நல்லது இருந்தால் ஏன் அவனுக்கு இதுவரை யாரும் எடுத்த சொல்லவில்லை?

இன்னொமொருமுறை முயற்சி செய்யுங்கள் ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:


மதம் பரப்புவனை மட்டும் எப்படி உத்து உத்து பார்க்கிறீர்கள்? 
அவனையும் பார்க்காமல் விட்டு விட்டு ஜேசுவின் தத்துவத்தை மட்டும் பார்க்கலாமே?

 

 


 

இயேசுவின் தத்துவம், ஒரே கடவுளை வணங்குமாறு போதிக்கிறது.

இயேசு, தன்னை ஒருபோதும் கடவுள் என்று சொன்னது கிடையாது. தன்னை வணங்குமாறும் சொல்லவில்லை.

கிறிஸ்தவர்களோ, இயேசுவை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும் வணங்கி வழிபடுகிறார்கள்.

இந்த செயல், இயேசுவின் தத்துவத்திற்கே எதிரானது.

இயேசுவிற்குப் பின்னால் வந்த பைபிளுக்கும் எதிரானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Maruthankerny said:


எனது பதில் .... 2000-3000 வருடம் பழமையான குரான் என்ன சொல்கிறது என்பது எனக்கு தேவையில்லை 
 



 


 

குர் ஆன், 2000 - 3000 வருடங்கள் பழமையானது அல்ல.

ஏறக்குறைய 1400 வருடங்களுக்கு முன், குர் ஆன் இந்த பூமியில் இருக்கவில்லை.

2000 வருடங்களின் முன், பைபிள் கூட இருக்கவில்லை. அது இயேசுவின் பின்னால் எழுதப்பட்டது.

இயேசு வாழ்ந்த காலத்தில், பைபிளோ கிறிஸ்தவமோ இருக்கவில்லை.

1 hour ago, Maruthankerny said:

 

இறைபணி செய்ய ஏன் உங்கள் மதத்தில் தாவ வேண்டும்?
ஒருமதமும் இல்லாமல் இருந்தாலே அதை செய்யமுடியுமே?

 



 

மதவாதிதான், இறைபணி செய்வான்.

ஒரு மதமும் இல்லாதவனுக்கு ஏது இறைபணி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களாகவே, மதம் மாறுகிறவர்களெல்லாம் பருப்புக்கும், அரிசிக்கும் வழி இல்லாமல் மதம் மறுபவர்களாக அவர்களை நினைத்து, கொச்சைப் படுத்தி, வாதாடி நிறுவப்பாக்கிறோம். அந்த மக்களின் வேதனைகளை நாங்கள் அறிய, ஏற்றுக்கொள்ள,  உதவ தயாரில்லை என்பது தான் உண்மை. யாரும் உதவ மறுத்தவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஓரம்கட்டப்பட்டவர்கள் இப்படி எத்தனையோ அவலங்களின் ஆறுதல் தேடிப்போனவர்கள் உண்டு. அவர்கள் தேடுவது  அங்கே கிடைப்பதால் போகிறார்கள். இங்கு எழுதுவோர் யாரும் எதுவும் செய்யாமல் வாயளந்து மீண்டும் அவர்களை தனிமைப்படுத்தி அழகு பாக்க ஆசைப்படுகிறார்கள். நீங்கள் அவர்களது தேவையை சந்தித்து, உதவிசெய்து மதம் மாறுபவர்களையும், மாற்றுபவர்களையும் தடுக்க வக்கில்லை வசை வேற. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மாங்குயில் said:

 

 


 

இயேசுவின் தத்துவம், ஒரே கடவுளை வணங்குமாறு போதிக்கிறது.

இயேசு, தன்னை ஒருபோதும் கடவுள் என்று சொன்னது கிடையாது. தன்னை வணங்குமாறும் சொல்லவில்லை.

கிறிஸ்தவர்களோ, இயேசுவை கடவுளாகவும், கடவுளின் மகனாகவும் வணங்கி வழிபடுகிறார்கள்.

இந்த செயல், இயேசுவின் தத்துவத்திற்கே எதிரானது.

இயேசுவிற்குப் பின்னால் வந்த பைபிளுக்கும் எதிரானது.

என்னை  ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பிய தந்தையையே ஏற்றுக்கொள்கிறான் என்றார். அது அவரவர் நம்பிக்கை. மாற முடிந்தவனின் குறை அறிந்து உதவி தடுங்கள். அதை விட்டு, உதவுபவனின் நம்பிக்கையை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, satan said:

என்னை  ஏற்றுக்கொள்கிறவன் என்னை அனுப்பிய தந்தையையே ஏற்றுக்கொள்கிறான் என்றார். அது அவரவர் நம்பிக்கை. மாற முடிந்தவனின் குறை அறிந்து உதவி தடுங்கள். அதை விட்டு, உதவுபவனின் நம்பிக்கையை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.


 

உங்களது நம்பிக்கையை விமரிசிக்கவில்லை.

உங்களது நம்பிக்கை, பிழை என்று சொல்கிறேன்.

உங்களது நம்பிக்கை, பெரும்பாலும்  இயேசு சொன்னதல்ல.

இயேசுவிற்கு, பைபிளோ, கிறிஸ்தவமோ தெரியாது.  அவர் வாழ்ந்த காலத்தில் அவை இருக்கவில்லை.

கடவுள், யாருக்கும் தந்தை கிடையாது.  இயேசு, கடவுளின் மகனும் கிடையாது. 

இயேசு மேரி என்ற பெண்ணின் மகன்.  அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

ஏழை எளிய மக்களுக்கு உதவும் மனப்பான்மை உள்ளவர்கள் ஏன் மதம் மாறிய பின்னர் உதவ வேண்டும்?
இது சம்பந்தமாக எனக்கு ஜேர்மனி வந்த புதிதில் ஒரு சில அனுபவங்கள் உண்டு.

ஒவ்வொருவரின் அனுபவமும் வித்தியாசமானது.  மதம் மாறாமல் உதவி பெறுபவர்கள் உண்டு, செய்பவைகளும் உண்டு. வீட்டுக்கு வந்து உதவி கேட்பவரிடம் மதம், சாதி, கோத்திரம் கேட்டா கொடுக்கிறோம்? அவ்வாறுதான்  வெறும் அரிசி, பருப்பல்ல. மதம் மாறிய பின் வெளிப்படுவதை பற்றி விமர்சிக்கப் படுகிறது. ஏனென்றால் அதுதான் கண்ணுக்கு தெரிகிறது 

3 minutes ago, மாங்குயில் said:


 

உங்களது நம்பிக்கையை விமரிசிக்கவில்லை.

உங்களது நம்பிக்கை, பிழை என்று சொல்கிறேன்.

உங்களது நம்பிக்கை, பெரும்பாலும்  இயேசு சொன்னதல்ல.

இயேசுவிற்கு, பைபிளோ, கிறிஸ்தவமோ தெரியாது.  அவர் வாழ்ந்த காலத்தில் அவை இருக்கவில்லை.

கடவுள், யாருக்கும் தந்தை கிடையாது.  இயேசு, கடவுளின் மகனும் கிடையாது. 

இயேசு மேரி என்ற பெண்ணின் மகன்.  அவ்வளவுதான்.

இறை மகன் மனுவுயிர் எடுக்க கடவுள் தேர்ந்தெடுத்த தாய் மேரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/21/2019 at 8:34 AM, குமாரசாமி said:

நான் வேலை தேடுறன்.:cool:
பெயர்:- குடாரப்பு குமாரசாமி
வயது: 59
பிறந்த இடம்:- செல்வச்சன்னதி அடியார் மடம்.
படிப்பு:- ஐந்தாம் வகுப்பு சித்தியடையவில்லை.
தெரிந்த தொழில்:- ஆடுமாடு மேய்த்தல்,பூக்கன்றுக்கு தண்ணி ஊத்துதல்.
அனுபவங்கள்:-யாழ்களத்தில் குமுறுதல்,குத்திமுறிதல்,கொழுவுப்படுதல்,வெறுப்பேத்துதல்.
தகமைகள்:- யாழ்களத்தில் இரண்டு செம்புள்ளி.
எதிர்பார்க்கும் ஊதியம்:- ஏதோ முடிஞ்சதை பாத்து தரலாம்.
 

 கவலையை விடுங்கோ  சாமி. எங்கட அடுத்த அரசியல்  தலீவர் நீங்கள் தான். அதற்கான எல்லாத் தகுதிகளும், அதற்கு மேலேயும் உங்களுக்கு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, satan said:

 

இறை மகன் மனுவுயிர் எடுக்க கடவுள் தேர்ந்தெடுத்த தாய் மேரி.


 


 


இறைவனுக்கு மகன் கிடையாது. 

இறைவன் வேறு. மனித குலம் வேறு. 

மனித குலம் படைக்கப்பட்டது.  இறைவன் யாராலும் படைக்கப்பட்டவனல்ல.

உலகில் பிறக்கும் எல்லாரும் மனுவுயிர்கள்தான்.   எந்தெந்த மனுவுயிர்கள் , எந்தெந்த தாயின்மூலம் பிறக்கச் செய்வது, இறைவன் செயல். 

இயேசு, மேரியின் வயிற்றில் இருந்து பிறந்த ஒரு சாதாரண மனிதர்.

எல்லா மனிதர்களையும்போல.

9 minutes ago, satan said:

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, மாங்குயில் said:


 


 


இறைவனுக்கு மகன் கிடையாது. 

இறைவன் வேறு. மனித குலம் வேறு. 

மனித குலம் படைக்கப்பட்டது.  இறைவன் யாராலும் படைக்கப்பட்டவனல்ல.

உலகில் பிறக்கும் எல்லாரும் மனுவுயிர்கள்தான்.   எந்தெந்த மனுவுயிர்கள் , எந்தெந்த தாயின்மூலம் பிறக்கச் செய்வது, இறைவன் செயல். 

இயேசு, மேரியின் வயிற்றில் இருந்து பிறந்த ஒரு சாதாரண மனிதர்.

எல்லா மனிதர்களையும்போல.

 

முதலாம்வகுப்பு மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு பாடம் எடுக்க முயல்வது முட்டாள்தனம். அதனாற்தான்  சொல்கிறேன். உதவியை மதத்தோடு விமர்சிக்க முனைந்தால் விளங்குவது கஸ்ரம். எனக்கு தெரிந்த எல்லாவற்றையும்  மற்றவர்கள் விளங்கிக்கொள்வார்கள் என்றோ, விளங்க முடியும் என்றோ நான் எதிர்பார்ப்பதில்லை. தெரியாத ஒன்றை தெரியும் என்றோ, நான் சொல்வது தான் சரி என்றோ அடம் பிடிப்பதும் நேர சக்தி விரயம்.  அவரவர் நம்பிக்கையை மதிப்பது எனது இயல்பு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.