Jump to content

மதமாற்றத்துக்குத் தூண்டும் செயல்களை நிறுத்தவும்’


Recommended Posts

15 hours ago, Maruthankerny said:

உங்களுக்கு சைவமும் தெரியாது 
ரிக் வேதமும் தெரியாது 
வைஷ்ணமும் தெரியாது 
தெரிந்திருந்தால் எதைப்பற்றியாவது விளக்கமாக எழுதுவீர்கள். மாறாக சும்மா எதை எதையோ தொடர்ந்தும் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். 

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு எமக்கு உண்டு. எமது ஆன்மீகத் தேடலுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. கூடவே யோகர், செல்லப்பா, கடையிற் சுவாமிகள் போன்றோரின் உபதேச மொழிகளும். இந்தப் பட்டியல்  மிக நீண்டது. 

ஆனால், "கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு" என்பதையும் நாம் அறிவோம். எனவே எமக்குத் தேவையானதை உபதேசங்களை எமது வயது, சூழல், பக்குவநிலை என்பவற்றுக்கேற்க நாம் தேடிப் பெற்றுக்கொள்வோம். இதுவே இந்து மதம் மீீது விசுவாசமாக இருக்கக் காரணம். 

குறைகளையே தூக்கிப்பிடிக்கும் உங்களால் நிறைகளை ஏன் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது? ஏனெனில் உங்கள் இலக்கு மதத்தலைவராவதும், சலுகைகளை எதிர்பார்ப்பதுமே. இந்தக் கேவலமான சிந்தையுடன் எங்களை முட்டாளாக்காதீர்.

Link to comment
Share on other sites

  • Replies 412
  • Created
  • Last Reply
15 hours ago, Maruthankerny said:

புத்தகம் இருக்கிறது இருக்கிறது என்று அடுத்தவனுக்கு சொல்லிக்கொண்டு இருக்காமல் நேரம் கிடைத்தால் 
சென்று வாசியுங்கள். 
நல்வழிக்கும் பைத்தியகாரத்தனத்துக்கும் நிறைய வித்தியாசம் உண்டு 
ஒரு மனிதன் நல்வழியில் நடந்தால் நாட்டிலும் அவனை சார்ந்து பல நல்லதும் நன்மையும் நடந்துகொண்டு இருக்கும். 

எதைச் செய்வது என்பதை நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அறிவுரை நல்லதென்றால் கேட்கக்கூடிய பக்குவம் எனக்கு உள்ளது. ஆனால், அநாவசியமாக இந்து மதத்தைக் கேவலப்படுத்தியும், மதவியாபாரத்தை நியாயப்படுத்தியும் பேசும் உங்களைப் போன்றோருக்கு அந்தத் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் நீங்கள் CEO மதகுரு மனநிலையில் இருப்பவர். மதத்தை corporate மனநிலையில் அணுகும் நீங்கள் தான் தெளிவுபெற வேண்டும். முதலில் அதற்கான தேடலில் ஈடுபடுங்கள். வாழ்த்துக்கள். 😊

7 hours ago, Maruthankerny said:

இங்கு குத்தி முறிபவர்களின் கணக்கின்படி 
இவையும் இந்துமதம் என்ற போலியைத்தான் சேரும் 
அவர்களின் மதம்தான் எல்லாவற்றுக்கும் முன்னோடியாம் 

உண்மையான கணக்கின்படி எல்லாம் ஒரே கணக்கில்தான் சேரும் ....
ஆறாம் அறிவை அடகுவைத்த அடி முட்டாள்கள்  கணக்கில் சேரும் 

மற்றைய மதத்தின் மூடநம்பிக்கைகளையும் இந்து மதத்தின் கணக்கில் சேர்க்கும் உங்கள் வக்கிரபுத்தியைப் பார்க்கும் போது, நீங்கள் யாருடைய கைக்கூலி என்று ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது. தவறான தகவல்களைப் பரப்புரை செய்யும் உங்களைப் போல மனநிலை பிறழ்ந்தவர்களுடன் வாதிடுவது வீணாணது.

Link to comment
Share on other sites

34 minutes ago, மல்லிகை வாசம் said:

 இவையெல்லாம் உணர்த்துவது என்னவென்றால், அந்நியரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் இந்து சமயத்தில் நிறையவே உண்டு என்பதே. எனவே உங்கள் புலம்பல் அர்த்தமற்றது.

அன்னியரையும்  ஈர்ககூடிய சக்தி உள்ள இந்து மதத்தினல் அந்த அன்னியர் வந்து நாட்டை ஆக்கிரமித்த போது அவர்களிடம்  இருந்து தறபாதுகாக்க கூடிய வல்லமையை  தன்னை நம்பிய மக்களுக்கு வழங்க சக்தி இல்லாமல்  போனது விந்தை தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னும் முடியவில்லை என்றாலும் என்னுடைய சொந்த அனுபவத்தில் கண்டதையும் எழுதுகின்றேன்.

நான் சிறுவயதில் வளர்ந்த இடம் ஒரே போதைவஸ்து காரர்களினாலும், திருடர்களினாலும் கள்ள சாராயம் காச்சுபவர்களினாலும் நிறைந்திருக்கும். பல குடும்பப் பெண்கள் குடித்துவிட்டு நாள்முழுவதும் துசணத்தினால் கத்திக்கொண்டிருப்பார்கள். சேலை விலகி மண்ணில் வீழ்ந்து கிடப்பார்கள் இது மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் வாழும் இடமாககருதப்பட்டது. எந்த ஒரு சமய மேய்பர்களும் இங்கு வருவதில்லை.

அப்பொழுதுதான் இத்தகைய அல்லேலுயா சபைகள் பெருகிய காலம். (80 களின் பிற்பகுதியில்) அக்காலப்பகுதியில் ஒர் சபையை சேர்ந்தவர்கள் வந்து இயேசுவின் அன்பைற்றி அறிவித்தார்கள். இயேசு விடுவிக்கின்றார்...உங்கள் பாவங்களில் இருந்து விடுதலை... நோய் நொடி, குடி, பில்லி சூனியத்தின் கட்டுக்களில் இருந்து  விடுதலை என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். தீண்டத்காதவர்களாக கருதப்பட்டஅத்தகைய மக்களோடு மிகவும் அன்பாக பழகினார்கள்.

நாளடைவில் இந்த வறுமையான மக்கள் கூட்டம் அவர்களது சபைக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. குடி , களவு சாரயம் எல்லவற்றையும் விட்டார்கள் . திருந்தி வாழ ஆரம்பித்தார்கள். இங்கு யாரும் இவர்களை கட்டயமாக தம் மாற்றவில்லை. இந்த சபையினரின் அன்பான பழக்கத்தினாலெயே இவர்கள் இப்படி மாறினார்கள். இன்று அவர்களும் சமுதாயத்தில் நாகரீகமாக வாழுகின்றார்கள்.     இவர்களினது பிள்ளைகள் எல்லோரும் இப்பொழுது பொரிய உத்தியேகங்களில் உள்ளார்கள். மேலும் இத்தகைய சபபைக்கு ஏழைகள் அல்ல பெரும் செல்வந்தர்களும் / பல படித்த சமூகத்தில் நல்ல நிலையில் நிலையில் உள்ளவர்களும் கூட செல்கின்றார்கள் 

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் உலகம் அன்புக்காக ஏங்கிகொண்டிருக்கின்றது. மனித மனம் அப்படித்தான். தாங்களை யாரவது ஏற்றுக்கொள்ள மாட்டார்களா/ அன்பாக கதைக்கமாட்டார்களா ஏன தவித்து கொண்டிருக்கின்றது. குறிப்பக வறுமையிலும் துன்பத்திலும் வாழுபவர்கள். மேலுள்ள செய்தியில் ஏன் இந்து மேய்ப்பர்கள் இங்கு செல்லவில்லை? ஏன் கஷ்டப்படும் இவ்வாறான பிற்தங்கிய மக்களை சந்திப்பதில்லை ?

இயேசுவின் போதனையில் இருக்கும் மன்னிப்பு, ஒப்புறவு, ஏற்றத்தழ்வின்மை, இறைவன் முன் எல்லோரும் சமம், நம்பிக்கை, மரணத்திற்கு பின்னான நித்திய வாழ்வு போன்றவற்றினால் கவரப்பட்டே மக்கள் சாரை சாரையாக இந்த கூட்டத்தில் இணகின்றார்கள். எனக்கு தெரிந்து தினமும் காலையில் மசராத்தி காரும் மாலையில் பென்ட்னி காரும் ஓட்டும் செல்வந்த அரபிக்கார குடும்பங்கள் இந்த சபைகளில்  இருக்கின்றார்கள். இவர்கள் ஏழைகள் அல்லவே இவர்களுக்கு பணம் கொடுத்து மதம் மாற்ற தேவை இல்லை

எமது சமுதாயம் மறுமலர்ச்சி அடைய வேண்டும். மனித நேயம் பெருக வேண்டும்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, மல்லிகை வாசம் said:

இந்த முகவர்களையே தான் வழிகாட்டிகளாக ஏற்று அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை எண்ணிப்பார்க்க வேதனையாக உள்ளது.

 

2 hours ago, Jude said:

இந்து மதத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் அந்த மதத்தை நீங்கள் பின்பற்றும் விதத்தை எண்ணிப்பார்க்க எனக்கும் வேதனையாகத்தான் உள்ளது. 

 

1 hour ago, மல்லிகை வாசம் said:

நான் இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தீர்மானிக்க நீங்கள் யார்? 

நான் யாழ் கள வாசகன். நீங்கள் எழுவதை படித்து உங்களுக்கு இந்து மதம் பற்றிய அறிவு குறைவு என்று தீர்மானித்து இருக்கிறேன்.

மதம் மாறியவர்கள் செய்வது தவறு என்று நீங்கள் தீர்மானித்து உள்ளது போல் தான் இதுவும்.

Link to comment
Share on other sites

The word 'God' is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honorable, but still primitive legends which are nevertheless pretty childish

அல்பேர்ட் ஐன்ஸ்ரைனின் மேற்படி பார்வை  எவ்வளவு நிதர்சனமானது. பைபிளுக்கு மட்டுமல்ல பகவற்கீதை, குரான் போன்ற stupidness  நூல்களுக்கும் இது பொருந்தும். 

பகலில் பயப்படாத நாம் இரவில்  பயப்படுகிறோம். ஏனென்றால் இருட்டில் பக்கத்தில் என்ன இருக்கிறது என்பது கூட தெரியாததால். இரவில் இருட்டின் மீது  வெளிச்சம் பாய்ச்சப்படும் போது பயம் காணாமல் போய்விடுகிறது. அதே போல் அறிவூட்டல் என்ற வெளிச்சம் பாய்ச்சப்படும்  போது  மதம் மற்றும் அதனால் பரப்படும் மூடத்தனம்  விலகி மக்கள் தன்னம்பிக்கையுடன் மகிழ்வாக வாழ்வர்.  மூடத்தனத்தை பரப்பும் அதற்கு முண்டு கொடுக்கும்  அயோக்கியர்களும் காணாமல் போவர். 

 

Link to comment
Share on other sites

45 minutes ago, Jude said:

 

 

நான் யாழ் கள வாசகன். நீங்கள் எழுவதை படித்து உங்களுக்கு இந்து மதம் பற்றிய அறிவு குறைவு என்று தீர்மானித்து இருக்கிறேன்.

மதம் மாறியவர்கள் செய்வது தவறு என்று நீங்கள் தீர்மானித்து உள்ளது போல் தான் இதுவும்.

இந்து மதம் பற்றிய எனது அறிவை நிரூபிக்க வேண்டிய மேடையல்ல யாழ்களம். மற்றவர்கள் முன் வைத்த கருத்துக்களின் தன்மையைப் பொறுத்தே எனது பதில்களும் இருந்தன. 

இந்து மதம் பற்றிய அறிவை எனது தகுதிக்கேற்ப தேடி வளர்த்துக்கொள்வது என் தனிப்பட்ட ஆன்மீகவிருத்தி சார்ந்தது. எனவே அது பற்றிப் பீீற்றிக் கொள்வது எனக்கு நன்மை பயக்காது. 

"யாரடா நீ? உன்னுள்ளே பாரடா! தேரடா நீ!" என்று நம் தேசத்தில் வாழ்ந்த ஞானியர் வார்த்தைகளையும், "அன்பே சிவம்" என்ற திருமூலர் வாக்கையும் என்றென்றும் நினைவில் வைத்திருப்பவன் நான். எனவே,இந்து மதத்தின் தத்துவங்களை எல்லாம் இங்கு சொற்பொழிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கான நேரமும் இல்லை. பல பயனுள்ள காரியங்களை வெளியே செய்யலாம். 

ஆனால், உங்களது எழுத்துக்களின் நாகரீகத்தை நாம் இதே திரியில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தது தான்! முதலில் நாகரீகமாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மதத்தை ஒழுங்காகப் பின்பற்றுங்கள். மற்றவனுடைய அழுக்கைப் பற்றி பின்னர் பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மல்லிகை வாசம் said:

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு எமக்கு உண்டு. எமது ஆன்மீகத் தேடலுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. கூடவே யோகர், செல்லப்பா, கடையிற் சுவாமிகள் போன்றோரின் உபதேச மொழிகளும். இந்தப் பட்டியல்  மிக நீண்டது. 

ஆனால், "கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு" என்பதையும் நாம் அறிவோம். எனவே எமக்குத் தேவையானதை உபதேசங்களை எமது வயது, சூழல், பக்குவநிலை என்பவற்றுக்கேற்க நாம் தேடிப் பெற்றுக்கொள்வோம். இதுவே இந்து மதம் மீீது விசுவாசமாக இருக்கக் காரணம். 

குறைகளையே தூக்கிப்பிடிக்கும் உங்களால் நிறைகளை ஏன் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது? ஏனெனில் உங்கள் இலக்கு மதத்தலைவராவதும், சலுகைகளை எதிர்பார்ப்பதுமே. இந்தக் கேவலமான சிந்தையுடன் எங்களை முட்டாளாக்காதீர்.

நல்ல கருத்து மல்லிகை வாசம்.👍
வாழ்த்துக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Sasi_varnam said:

p9Kvp8D.jpglQvRLh4.jpgCOQgS9r.jpg

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம் (US Dollars)
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

கத்தோலிக்க மையமாக விளங்கும் வத்திக்கானின் தோராயிரமான மதிப்பு சுமார் 
400 பில்லியனில் இருந்து 2 ட்ரில்லியனாம்
தனியாக வங்கி வைத்து, முதலீடு, ஸ்டோக் இப்படி எவ்வளவோ நடக்கிறது...

வத்திக்கான் (நாடு / நகரில்) கத்தோலிக்க பாதிரியார்கள் போன்றவர்கள்  மட்டுமே வசிக்கமுடியும், 
இவர்களின் தொகை சுமார் 800 பேர் வரையில்.
அவர்களுக்கு சேவகம் செய்வோர் சுமார் 2,400.
எனக்கு தெரிந்த மட்டில், இவர்கள் யாரும் வத்திக்கானில் தங்க முடியாது.  

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

இதைத்தானடி ராசா தொடங்கின நேரத்திலிருந்து சொல்லிக்கொண்டு இருக்கிறோம். அவர்கள் பணத்தை வைத்து தமக்கு வேண்டியதை வாங்குகிறார்கள். நாம் நம்மிடம் உள்ளதை பகிர்ந்து தடுக்கலாம். அவர்கள் மாறவும் விடோம், மாற்றுவதையும் தடோம். அடம் பிடித்து நீயா நானா போட்டி. கடைசி ஒருவன் மதம் மாறும் வரையில் இழுபடும் போலிருக்கு. இந்த இடைவெளியில் கோத்தாவும் வென்று விடுவார். இதற்கு மேலும் அந்த மக்களின் தேவையை பரிகசித்து பழிதீர்க்கும் நிலையிலிருந்து மற்றவரின் சொத்துக்கணக்கு பார்க்கிற வரை நீண்டு கொண்டு போகுது. சொல்வதில் அல்ல வீரம், செய்வதில்தான் உள்ளது வீரம். இறுதியாக ஒன்று. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் இருந்தார் அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் நிலைமை மிகவும் கேடுற்றது. அவர் ஜேசுவைப்பற்றி கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்கு பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில் "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக்கொண்டாள். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று அவரும் தம் நோய் நீங்கி நலம் பெற்றதை தம் உடலில் உணர்ந்தார். உடனே ஜேசு தம்மிடம் இருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்து மக்கள் கூட்டத்தை திரும்பி பார்த்து "என் மேல் உடையை தொட்டவர் யார்?" என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மை சூழ்ந்து நெருக்குவதை  கண்டும் 'என்னை தொட்டவர் யார்?' என்கிறீரே" என்றார்கள். ஆனால் அவர், சுற்றிலும் திரும்பி பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய் அவர் முன் வந்து விழுந்து நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். ஜேசு அவரிடம் "மகளே, உனது நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று, அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாய் இரு," என்றார். 

Link to comment
Share on other sites

11 hours ago, Sasi_varnam said:

 

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.
அட ச்சை ....என்ன உலகமடா இது.

எவனோ ஒரு சொம்பு பாலை கருங்கல்லுக்கு ஊத்துவதை விமர்சிக்கிறோம்.

அட ச்சை ....என்ன உலகமடா இது.

ஒரு சொம்பு பால் அல்ல சசிவர்ணம். இங்கு மட்டும் 21000 லிற்றர் பால் தீயணைக்கும் வண்டி மூலம் வீணாக்கப்படுகிறது. மக்களை காப்பாற்ற தீயணைப்பு வாகனத்தை கண்டு பிடிக்க வக்கிலாத பஜனை கோஷடிகள் எங்கோ  அறிவுள்ள மக்கள்  கண்டு பிடித்த வாகனத்தை உபயோகித்து இந்த வீணான வேலையை செய்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் நாட்டில். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த சுவிற்சர்லாந்திலே கூட இப்படி உணவுப் பொருளை வீணாக்க மாட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Sasi_varnam said:

u1sxCBC.jpg1edioGV.jpgSUsQRMj.jpgqPaJ1zh.jpgceoLoZV.jpg


இந்த சிலுவை தூக்கு, ஆணி அறைதல், பேய் ஓட்டுதல் "ஹாலோவீன்" கொண்டாட்டம் இது எல்லாம் எந்த கணக்கில் சேரும்? 
 

 

இது சில வருடங்களுக்கு முன் பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு சில கிறுக்கர்கள் செய்த வேலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

 இறுதியாக ஒன்று. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் இருந்தார் அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் நிலைமை மிகவும் கேடுற்றது. அவர் ஜேசுவைப்பற்றி கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்கு பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில் "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக்கொண்டாள். தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று அவரும் தம் நோய் நீங்கி நலம் பெற்றதை தம் உடலில் உணர்ந்தார். 


 

பன்னிரு வருடங்களாக இரத்தப்போக்கு இருந்தால், அந்தப் பெண் இறந்திருப்பாளே!

இயேசு இந்தப் பூமியில் அவதரித்தது, அற்புதங்களை செய்யவோ, பிறரின் நோய்களைக் குணமாக்கவோ அல்ல.

இயேசு கடவுளால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இறைத்தூதர்.  காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர்.

ஓரிறைவனை வணங்க வேண்டும் என்பதைத்தான் இயேசு போதித்தார்.

இயேசுவை கடவுளாக வணங்குமாறு அவர் ஒருபோதும் போதித்ததில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

The word 'God' is for me nothing more than the expression and product of human weaknesses, the Bible a collection of honorable, but still primitive legends which are nevertheless pretty childish

அல்பேர்ட் ஐன்ஸ்ரைனின் மேற்படி பார்வை  எவ்வளவு நிதர்சனமானது. பைபிளுக்கு மட்டுமல்ல பகவற்கீதை, குரான் போன்ற stupidness  நூல்களுக்கும் இது பொருந்தும். 

 

 


 

Albert Einstein ஓர் அறிவியலாளர். 

கிறிஸ்தவ சபைகளில் இறைவனைப்பற்றி ஒருவிதமாகவும், முஸ்லிம்களின் மத்தியில் இன்னொருவிதமாகவும்  நாத்திகர்களின் மத்தியில் இன்னொரு விதமாகவும் பேசுபவர்.

இவரைப்போல, எத்தனோயோ பேர் ஒவ்வொருவிதமாகவும் உளறியிருக்கிறார்கள்.

பிற மத நூல்களை,  'stupidness' என்று எள்ளி நகையாடுவதை விட்டு விட்டு, அவர்களை ஆழமாக படியுங்கள்.

 

 

 

Link to comment
Share on other sites

46 minutes ago, மாங்குயில் said:


 

பன்னிரு வருடங்களாக இரத்தப்போக்கு இருந்தால், அந்தப் பெண் இறந்திருப்பாளே!

இயேசு இந்தப் பூமியில் அவதரித்தது, அற்புதங்களை செய்யவோ, பிறரின் நோய்களைக் குணமாக்கவோ அல்ல.

இயேசு கடவுளால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் இறைத்தூதர்.  காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர்.

ஓரிறைவனை வணங்க வேண்டும் என்பதைத்தான் இயேசு போதித்தார்.

இயேசுவை கடவுளாக வணங்குமாறு அவர் ஒருபோதும் போதித்ததில்லை.

/காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர்/

இது போதும் உங்களுக்கு கிறிஸ்தவம் பற்றி என்ன தெரியும் என அறிவதற்கு...

 இஸ்ரேலியர்கள் மதம்  கிறிஸ்தவம் அல்ல, ஆனால் யேசு ஒரு யூதர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, அபராஜிதன் said:

/காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரேலிய சமுதாயத்திற்கு மாத்திரம் அனுப்பப்பட்ட ஓர் இறைத்தூதர்/

இது போதும் உங்களுக்கு கிறிஸ்தவம் பற்றி என்ன தெரியும் என அறிவதற்கு...

 இஸ்ரேலியர்கள் மதம்  கிறிஸ்தவம் அல்ல, ஆனால் யேசு ஒரு யூதர்..


கிறிஸ்தவம் பற்றிய எனது அறிவு, வெறும் கேள்வி ஞானம்தான் என்று ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன்.

இஸ்ரேலியர்கள் எல்லாரும் யூதர் கிடையாது.

இயேசுவும் யூதர் கிடையாது.

கிறிஸ்தவம் என்ற மதம், இயேசுவிற்குப் பின்னால் தோற்றுவிக்கப்பட்டது.

இயேசுவின் காலத்தில், பைபிளோ கிறிஸ்தவமோ இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

14 minutes ago, மாங்குயில் said:


இஸ்ரேலியர்கள் எல்லாரும் யூதர் கிடையாது.

இயேசுவும் யூதர் கிடையாது.

கிறிஸ்தவம் என்ற மதம், இயேசுவிற்குப் பின்னால் தோற்றுவிக்கப்பட்டது.

இயேசுவின் காலத்தில், பைபிளோ கிறிஸ்தவமோ இருக்கவில்லை.

நல்ல  சிறந்த கண்டு பிடிப்புக்கள் மாங்குயில்...... 

என் பெற்றோர் எனக்கு முதலே பிறந்து விட்டார்கள். 

என் பெற்றோர் என்னைப் பெற்ற பிறகு தான் நான் வளர்ந்தேன். 

என் தாத்தா இறந்திருக்காவிட்டால்  அவர்  இப்போதும் உயிரோடு இருந்திருப்பார். 

இப்படி இன்னும் தொடர்ந்து  எழுதலாம் 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, tulpen said:

நல்ல  சிறந்த கண்டு பிடிப்புக்கள் மாங்குயில்...... 

 


 

கிறிஸ்தவர்கள் பொதுவாக எல்லாரும் அறிந்த விடயங்கள்தான் இவை.

எனது கண்டுபிடிப்புகள் ஒன்றும் இல்லை இதில்.

 

Link to comment
Share on other sites

4 hours ago, மல்லிகை வாசம் said:

ஆனால், உங்களது எழுத்துக்களின் நாகரீகத்தை நாம் இதே திரியில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்தது தான்! முதலில் நாகரீகமாக எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மதத்தை ஒழுங்காகப் பின்பற்றுங்கள். மற்றவனுடைய அழுக்கைப் பற்றி பின்னர் பேசலாம்.

 

1. உங்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்து மத அறிவையும் இதே திரியில் பார்த்தது தான்! அதற்குள் அதை மறைக்க சாட்டு போக்குகள் வேறு.

2. நான் உங்கள் இந்துமத நாகரிகரப்படி எழுதுவதும் இல்லை, எழுதப் போவதும் இல்லை, அந்த பிற்போக்கு நாகரிகத்தை கற்று கொள்ள போவதும் இல்லை. நீங்களும் கிறீஸ்தவராக மதம் மாறி மத மாற்றம் செய்யும் நாகரிகத்தை கற்றுக்கொள்ள தயாரில்லை அல்லவா?

3. “உங்கள் மதத்தை ஒழுங்காகப் பின்பற்றுங்கள்.” என்று இப்படி முட்டாள்தனமாக எழுதுகிறீர்களே? இதற்கு மேலும் எதை எழுதி என்ன பயன்? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மல்லிகை வாசம் said:

வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், திருமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு எமக்கு உண்டு. எமது ஆன்மீகத் தேடலுக்கு இவை பெரிதும் உதவுகின்றன. கூடவே யோகர், செல்லப்பா, கடையிற் சுவாமிகள் போன்றோரின் உபதேச மொழிகளும். இந்தப் பட்டியல்  மிக நீண்டது. 

ஆனால், "கற்றது கைமண் அளவு; கல்லாதது உலகளவு" என்பதையும் நாம் அறிவோம். எனவே எமக்குத் தேவையானதை உபதேசங்களை எமது வயது, சூழல், பக்குவநிலை என்பவற்றுக்கேற்க நாம் தேடிப் பெற்றுக்கொள்வோம். இதுவே இந்து மதம் மீீது விசுவாசமாக இருக்கக் காரணம். 

குறைகளையே தூக்கிப்பிடிக்கும் உங்களால் நிறைகளை ஏன் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது? ஏனெனில் உங்கள் இலக்கு மதத்தலைவராவதும், சலுகைகளை எதிர்பார்ப்பதுமே. இந்தக் கேவலமான சிந்தையுடன் எங்களை முட்டாளாக்காதீர்.

சைவ மதத்தின் மூல கடவுள் யார்? 
எந்த எந்த காலப்பகுதியில் உருவாகியது?
யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

ரிக் வேதத்தின் மூல கடவுள் யார்? 
எந்த எந்த காலப்பகுதியில் உருவாகியது?
யாரால் தோற்றுவிக்கப்பட்டது?


வைஸ்ணவத்தின் மூல கடவுள் யார்? 
எந்த எந்த காலப்பகுதியில் உருவாகியது?
யாரால் தோற்றுவிக்கப்பட்டது? 


என்று ஒருக்கா எங்கு எழுதுங்கள் .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் கேட்ட கேள்விக்கு ஏற்ப சரியான பதில் தரப்பட்டுள்ளது. அது உங்களுக்குக் கசப்பானதாக இருந்தால் அலம்புவதாகக் கூறித் தப்பித்துக் கொள்வது உங்கள் இயல்பு போலும்!

பலர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதாகக் கூறும் நீங்கள், வெள்ளையர்கள் பலர் இந்து மதம் பால் ஈர்க்கப்பட்டு அதன் கொள்கைகள் மீது ஆர்வமாக இருப்பதை அறியவில்லைப் போலும். இந்து மதத்தை தழுவிய வெள்ளையர்களும் பலவுண்டு. Meditation, இந்து மதப் பாடல்கள் இவற்றைப் பயின்று நாளாந்த வாழ்வில் வெள்ளையர்கள் கடைப்பிடிப்பதை நாம் அறிந்திருப்போம். இவையெல்லாம் அவர்கள் தன்னார்வமாக முன் வந்து பயின்றவை. சலுகைகள் கொடுப்பதன் மூலம் மதவியாபாரம் செய்து பரப்பப்பட்டவை அல்ல. 

இவையெல்லாம் உணர்த்துவது என்னவென்றால், அந்நியரையும் ஈர்க்கக்கூடிய அம்சங்கள் இந்து சமயத்தில் நிறையவே உண்டு என்பதே. எனவே உங்கள் புலம்பல் அர்த்தமற்றது.

உண்மை உண்மை அவ்வளவும் உண்மை 
என்ன பேசுகிறோம் என்பதைவிட ...
யாரோடு பேசுகிறோம் என்பது ரொம்ப முக்கியம் என்று தோன்றியதால் 
உங்களுடன் மேற்கொண்டு விவாதிப்பதை நிறுத்துவது சுபம் என்று எழுதினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10/23/2019 at 8:47 AM, மல்லிகை வாசம் said:

ஆதி சொல்ல முடியாத பழைமையானது. கிறிஸ்துவுக்கும், நபிக்கும், புத்தனுக்கும் முற்பட்டது. சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் இந்து மதத்தில் உண்டு.

இந்தியாவில் இருந்த மதத்திற்கு ‘இந்து’ என்று பெயர்  வந்ததாகவும், நெடுங்காலமாக பெயரில்லாத மதமாகத்தான் ‘இந்து’ என்ற மதம் இருந்தது என்று ‘சோ’ ஒரு பேட்டியில் சொன்னார்.

இந்துப் பண்டிதர்கள் கூட இதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

Comparative Religious studies experts பலரும் இதை உறுதிப் படுத்துகிறார்கள்.

ஆக, ஆதியற்ற தொன்மையானது ‘இந்து மதம்’ என்பது நீங்கள் சொல்வதுபோல் நம்ப கூடியதாக இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஒரு சொம்பு பால் அல்ல சசிவர்ணம். இங்கு மட்டும் 21000 லிற்றர் பால் தீயணைக்கும் வண்டி மூலம் வீணாக்கப்படுகிறது. மக்களை காப்பாற்ற தீயணைப்பு வாகனத்தை கண்டு பிடிக்க வக்கிலாத பஜனை கோஷடிகள் எங்கோ  அறிவுள்ள மக்கள்  கண்டு பிடித்த வாகனத்தை உபயோகித்து இந்த வீணான வேலையை செய்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் ஒரு வேளை சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் நாட்டில். இது ஒரு சிறிய உதாரணம் மட்டுமே. பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த சுவிற்சர்லாந்திலே கூட இப்படி உணவுப் பொருளை வீணாக்க மாட்டார்கள். 

வணக்கம் துள்பென்,
உங்கள் கருத்துக்களை இங்கு ஆர்வமாக வாசிக்கும் பலரில் நானும் ஒருவன்.
பொதுவான  உங்கள் சமூகம் சார்பான பார்வை, தனி மனித சுதந்திரம், மூட பழக்கவழக்கங்கள், சமய அனுஷ்டானங்கள் போன்ற கருத்துகளில் நானும் ஒத்துப்போபவன் தான்.

இங்கே நடப்பது என்னவோ ஈழத்தில் சமயக் கோட்டபாடாக கடைபிடிக்கப்படும் "சைவ சமயம்" சார்ந்த காழ்ப்பு உணர்வுகளின் வெளிப்பிரவாகம் மட்டுமே. அதை நீங்கள் மிகவும் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்வதாக நான் பார்க்கிறேன்!!

கிறீஸ்தவ , கத்தோலிக்க ஏனைய மதங்களில் பழுது இருப்பதாக மேலோட்டமாக கருத்து எழுதும் நீங்கள், சைவ சமயம் நோக்கி மட்டும் குறிபார்த்து  மிகவும் தாராளமாக கல்லையும் , பொல்லையும் வீசி எறிகிறீர்கள்.

யாவற்றையும் விவாதிப்பதற்கு நிறைய இருக்கிறது துள்பென்.
மூட நம்பிக்கை களைவது வரவேற்கத்தக்கது ...அதுவே மூல வேரையும் பிய்த்து எறியும் அடாவடியாகவும் இருக்கக்கூடாது. 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, எல்லா மதங்களிலும் பல உயர்ந்த தத்துவங்களும், பல தற்போதைய காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும் உள்ளன. இதை எல்லா மத, சமய, போதனைகள்,அனுஷ்டானங்களில் பார்க்கலாம்.
ஒருவன் தனிமனித உரிமை என்ற போர்வையில் திட்டமிட்ட பூர்வீக, அடையாள அழிப்புகளுக்கு என்னால் துணை போக முடியாது.

கிறிஸ்தவமும், கத்தோலிக்கமும், இஸ்லாமும் எங்கள் நாட்டுக்குள் இப்படித்தான் வந்தது.
அதை தருகிறேன், இதை தருகிறேன் , அது தவறு, இது பிழை இப்படி சொல்லி சொல்லியே மக்களையும் மாற்றி நாட்டையும் அபகரித்தார்கள்.

இன்றும் கூட...நீங்கள் சிங்களனை எதுவும் செய்ய விட்டுவிட்டு கைகட்டி நின்று பாருங்கள் இன்னும் 50 வருடத்துக்குள் ஆயிரம் பௌத்த விகாரைகளோடு, குடியேற்றங்களோடு தமிழ் மண் அடையாளம் இழந்து பௌத்த பிரதேசமாக ஜொலிக்கும்.
மேலே சொன்ன செயலுக்கு வரும் எதிர்ப்பும், கண்டனமும் நிச்சயம் உள்ளூரில் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்துக்கும், மதம் பரப்பிகளுக்கும் நிச்சயம் இருக்கும்.

சைவ சமயம் நான் நானாக இருப்பதற்கு இடம் கொடுக்கிறது. ஆன்மீக தேடலை அடாவடியாய் புகுத்தவில்லை.  உனக்கான பக்குவம் வரும் பொழுது நீயாக வருவாய் என்றும், லௌகிக வாழ்க்கையின் பல உயர்த்த மாண்புகளை சொல்லித்தந்து இருக்கிறது.
இந்த சந்தடி சாக்கில் ஆங்காங்கே அவன், அவன்  படும் கஷ்டத்தை  தமக்கு சாதகமாக , அனுகூலமாக மாற்றிக்கொண்டு ஒருவனின் அடையாளத்தை அழிக்கும் இழி செயலே இந்த கூட்டம் செய்கிறது.
அம்மா பகவான் தொடங்கி ஆட்டுக்குட்டி பகவான் வரையிலும் இதை தான் செய்கிறார்கள்.
என்ன ஒரு வித்தியாசம் இவர்கள் பணம் கொடுக்காமல் செய்கிறார்கள்... மற்றையவர்கள் பணம் கொடுத்து, பள்ளி கொடுத்து, தொழில் கொடுத்து செய்கிறார்கள் (பல சந்தர்ப்பங்களில் அதுவும் கூட ஆசை காட்டி மோசம் செய்யும் விளையாட்டுத்தான்)
ஆகா மொத்தத்தில் நோக்கம் ஒன்று தான்...

மத கோட்பாடு, கோத்திரம்  பார்க்காமல் கர்மமே கண்ணாய் மண் படைக்கச்சென்ற கேணல் விக்டர் முதல், சிறுவன் போராளி விக்னேஷ் வரை பார்த்த மண்ணில் ...இப்படி ஒரு திரி இன்னும் தணலாய் கொழுந்துவிட்டெறிகின்றது.

மூட பழக்கங்களை களைவதற்கு முன்னர் நாம் தமிழராய் இருக்கப்போம்!!!

Link to comment
Share on other sites

1 hour ago, Sasi_varnam said:

வணக்கம் துள்பென்,
உங்கள் கருத்துக்களை இங்கு ஆர்வமாக வாசிக்கும் பலரில் நானும் ஒருவன்.
பொதுவான  உங்கள் சமூகம் சார்பான பார்வை, தனி மனித சுதந்திரம், மூட பழக்கவழக்கங்கள், சமய அனுஷ்டானங்கள் போன்ற கருத்துகளில் நானும் ஒத்துப்போபவன் தான்.

இங்கே நடப்பது என்னவோ ஈழத்தில் சமயக் கோட்டபாடாக கடைபிடிக்கப்படும் "சைவ சமயம்" சார்ந்த காழ்ப்பு உணர்வுகளின் வெளிப்பிரவாகம் மட்டுமே. அதை நீங்கள் மிகவும் ஆணித்தரமாக இங்கே பதிவு செய்வதாக நான் பார்க்கிறேன்!!

கிறீஸ்தவ , கத்தோலிக்க ஏனைய மதங்களில் பழுது இருப்பதாக மேலோட்டமாக கருத்து எழுதும் நீங்கள், சைவ சமயம் நோக்கி மட்டும் குறிபார்த்து  மிகவும் தாராளமாக கல்லையும் , பொல்லையும் வீசி எறிகிறீர்கள்.

யாவற்றையும் விவாதிப்பதற்கு நிறைய இருக்கிறது துள்பென்.
மூட நம்பிக்கை களைவது வரவேற்கத்தக்கது ...அதுவே மூல வேரையும் பிய்த்து எறியும் அடாவடியாகவும் இருக்கக்கூடாது. 

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போல, எல்லா மதங்களிலும் பல உயர்ந்த தத்துவங்களும், பல தற்போதைய காலத்துக்கு ஒவ்வாத கருத்துக்களும் உள்ளன. இதை எல்லா மத, சமய, போதனைகள்,அனுஷ்டானங்களில் பார்க்கலாம்.
ஒருவன் தனிமனித உரிமை என்ற போர்வையில் திட்டமிட்ட பூர்வீக, அடையாள அழிப்புகளுக்கு என்னால் துணை போக முடியாது.

கிறிஸ்தவமும், கத்தோலிக்கமும், இஸ்லாமும் எங்கள் நாட்டுக்குள் இப்படித்தான் வந்தது.
அதை தருகிறேன், இதை தருகிறேன் , அது தவறு, இது பிழை இப்படி சொல்லி சொல்லியே மக்களையும் மாற்றி நாட்டையும் அபகரித்தார்கள்.

இன்றும் கூட...நீங்கள் சிங்களனை எதுவும் செய்ய விட்டுவிட்டு கைகட்டி நின்று பாருங்கள் இன்னும் 50 வருடத்துக்குள் ஆயிரம் பௌத்த விகாரைகளோடு, குடியேற்றங்களோடு தமிழ் மண் அடையாளம் இழந்து பௌத்த பிரதேசமாக ஜொலிக்கும்.
மேலே சொன்ன செயலுக்கு வரும் எதிர்ப்பும், கண்டனமும் நிச்சயம் உள்ளூரில் கூட இருந்தே குழிபறிக்கும் இந்த சுவிசேஷ கூட்டத்துக்கும், மதம் பரப்பிகளுக்கும் நிச்சயம் இருக்கும்.

சைவ சமயம் நான் நானாக இருப்பதற்கு இடம் கொடுக்கிறது. ஆன்மீக தேடலை அடாவடியாய் புகுத்தவில்லை.  உனக்கான பக்குவம் வரும் பொழுது நீயாக வருவாய் என்றும், லௌகிக வாழ்க்கையின் பல உயர்த்த மாண்புகளை சொல்லித்தந்து இருக்கிறது.
இந்த சந்தடி சாக்கில் ஆங்காங்கே அவன், அவன்  படும் கஷ்டத்தை  தமக்கு சாதகமாக , அனுகூலமாக மாற்றிக்கொண்டு ஒருவனின் அடையாளத்தை அழிக்கும் இழி செயலே இந்த கூட்டம் செய்கிறது.
அம்மா பகவான் தொடங்கி ஆட்டுக்குட்டி பகவான் வரையிலும் இதை தான் செய்கிறார்கள்.
என்ன ஒரு வித்தியாசம் இவர்கள் பணம் கொடுக்காமல் செய்கிறார்கள்... மற்றையவர்கள் பணம் கொடுத்து, பள்ளி கொடுத்து, தொழில் கொடுத்து செய்கிறார்கள் (பல சந்தர்ப்பங்களில் அதுவும் கூட ஆசை காட்டி மோசம் செய்யும் விளையாட்டுத்தான்)
ஆகா மொத்தத்தில் நோக்கம் ஒன்று தான்...

மத கோட்பாடு, கோத்திரம்  பார்க்காமல் கர்மமே கண்ணாய் மண் படைக்கச்சென்ற கேணல் விக்டர் முதல், சிறுவன் போராளி விக்னேஷ் வரை பார்த்த மண்ணில் ...இப்படி ஒரு திரி இன்னும் தணலாய் கொழுந்துவிட்டெறிகின்றது.

மூட பழக்கங்களை களைவதற்கு முன்னர் நாம் தமிழராய் இருக்கப்போம்!!!

வணக்கம் சசி, 

உங்களின் கருதோடு நான் ஒத்துப்போகிறேன்.  ஆனால் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் அதற்க்கான தேவையை இல்லாதொழிக்க வேண்டும் இல்லையா? இங்கே குத்தி முறிபவர்களில் பலர் எய்தவனை (காரனைத்தை ) விட்டு அம்பை (பிரச்சராம் ) நோவது ஏன்   மதம் மாறுபவர்களின் பிரச்னையை அடையாளம் கண்டாலே அரைவாசி பிரச்ச்சனை தீர்ந்துவிடுமல்லவா? 

( எனக்கென்னவோ  இவ்வாறு பிரயோசனம் இல்லாமல் குத்தி முறிபவர்களை விட சிங்களவன் எவ்வளவோ மேல் என்று படுகிறது (கடுமையான சொற்பிரயோகம் இருந்தால் பொறுத்தருள்க ))

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மகராஜ், 
புதிய உறூப்பினரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கல்.
ஒரு குற்றெழுத்தில் தான் நாங்கள் இருவரும் மாறுபடுகிறோம் :)
உங்கள் பார்வை:
ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ....

எனது பார்வை: 
ஏன் மதம் மாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ...

இல் தான் இருக்கிறது.
எனக்கு தெரிந்து, யாரும் சர்ச்சு வாசலில் நின்றுகொண்டு பாதிரிமாரிடமும், போதகரிடமும் ஐயோ என்னை உங்கள் மதத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சவில்லை, கூப்பாடு போடவில்லை.

மாறாக ...அவர்கள்தான் வீட்டு கதவுகளை தட்டியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,  ஆசை வார்தைகள் பேசியும் (சிலுக்கு சுமிதா ) போல் (சலுகை) கவர்ச்சி காட்டியும், மாற்ற முனைகிறார்கள்.

இதை தான் நான் தவறு என்று சொல்கிறேன்.
கனடாவில் கூட வெள்ளைக்காரர் இதை தான் செய்தார்கள்...பூர்வ குடி மக்களின் பாரம்பரியங்களை எல்லாம் கலையப்பண்ணி இப்போது அவர்கள் அடையாளம் இழந்த அன்னக் காவடிகளாக உலா வருகிறார்கள்.

வறுமை அனைவருக்கும் பொது ... இன்றைய நாளில் இலங்கையில் இருக்கும் எல்லா கத்தோலிக்கரும் , கிறீஸ்தவர்களும் செல்வம் நிரம்பி வழியவா வாழ்கிறார்கள்?
ஒருவேளை சோற்றுக்கு கை  ஏந்துபவர்கள் எத்தனை? இவர்கள் எல்லோருமே மத மாற்றம் பற்றி பிரச்சாரம் செய்யும்  மத ஸ்தாபனங்களால் இன்னுமே இரட்சிக்கப்படவில்லையே. அது ஏன்?

Link to comment
Share on other sites

2 hours ago, Sasi_varnam said:

வணக்கம் மகராஜ், 
புதிய உறூப்பினரான உங்களுக்கு எனது வாழ்த்துக்கல்.
ஒரு குற்றெழுத்தில் தான் நாங்கள் இருவரும் மாறுபடுகிறோம் :)
உங்கள் பார்வை:
ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ....

எனது பார்வை: 
ஏன் மதம் மாற்றுகிறார்கள் என்பதை நாங்கள் அறிய முட்படுவதுடன் ...

இல் தான் இருக்கிறது.
எனக்கு தெரிந்து, யாரும் சர்ச்சு வாசலில் நின்றுகொண்டு பாதிரிமாரிடமும், போதகரிடமும் ஐயோ என்னை உங்கள் மதத்தில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சவில்லை, கூப்பாடு போடவில்லை.

மாறாக ...அவர்கள்தான் வீட்டு கதவுகளை தட்டியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும்,  ஆசை வார்தைகள் பேசியும் (சிலுக்கு சுமிதா ) போல் (சலுகை) கவர்ச்சி காட்டியும், மாற்ற முனைகிறார்கள்.

இதை தான் நான் தவறு என்று சொல்கிறேன்.
கனடாவில் கூட வெள்ளைக்காரர் இதை தான் செய்தார்கள்...பூர்வ குடி மக்களின் பாரம்பரியங்களை எல்லாம் கலையப்பண்ணி இப்போது அவர்கள் அடையாளம் இழந்த அன்னக் காவடிகளாக உலா வருகிறார்கள்.

வறுமை அனைவருக்கும் பொது ... இன்றைய நாளில் இலங்கையில் இருக்கும் எல்லா கத்தோலிக்கரும் , கிறீஸ்தவர்களும் செல்வம் நிரம்பி வழியவா வாழ்கிறார்கள்?
ஒருவேளை சோற்றுக்கு கை  ஏந்துபவர்கள் எத்தனை? இவர்கள் எல்லோருமே மத மாற்றம் பற்றி பிரச்சாரம் செய்யும்  மத ஸ்தாபனங்களால் இன்னுமே இரட்சிக்கப்படவில்லையே. அது ஏன்?

சசி 

எனது  கருத்து மதம் போதிக்கும் தரப்போ அல்லது மாறும் தரப்போ பற்றியதல்ல. நாங்கள் என்ன செய்யலாம் என்பது பற்றியது.  

எவரேனும் மதமாற்றத்தை முற்றிலும் நிறுத்தலாம் என நம்புகிறீர்களா?  நான் நம்பவில்லை.  ஏனெனில்  மதம் மாறும் நிகழ்வுகள்  உலகம் முழுவதும் காலம் காலமாக நடைபெறுவதே.  தமிழருடைய வரலாறு முழுவதும் இத்தனை நாம்  காணலாம்.  வைணவம்,  பவுத்தம்,  சைவம் என எமது தமிழர் வரலாறு முழுவதும் மதம் மாறும் நிகழ்வு உண்டு. 

தனிப்பட்ட ரீதியாக மதம் மாறுவதில்,  மதம்மாற ஊக்குவிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஆனால் பிரச்சாரம் செய்வதற்கு உள்ள உரிமையை அல்லது பிரச்சாரத்தை நம்புவதட்கும் உள்ள உரிமையை நான் மறுக்கமாட்டேன். 

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.