Jump to content

தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கை


Recommended Posts

image_00eb8dbf11.jpg

மலேசியாவில், தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்வதா என்பதை உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையிடம் விட்டுவிடுவதாக பி.கே.ஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சு மற்றும் அமைச்சரவையின் நடவடிக்கை இருந்தால் மாத்திரமே நாடாளுமன்றத்தில் வெள்ளை அறிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அன்வார் கூறியுள்ளார்.

ஆனால், தனிப்பட்ட முறையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதில் தமக்கு இணக்கபாடு இல்லையென்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் மீதான முழு விசாரணையையும் நடத்தும் பொறுப்பு பொலிஸாரிடம் விட்டுவிட வேண்டும். 

போலி நெருக்குதல் அளிக்கக் கூடாது. பொலிஸாரிடம் விசாரணை நடைமுறை குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமில்லை” என்றார்.

அத்துடன், தமிழீழ  விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ப்பு கொண்டிருந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் விவகாரம் குறித்து தற்காப்பு மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய வேண்டுமென முன்மொழியப்பட்ட ஆலோசனையை அவர் நிராகரித்துள்ளார்.

-மலேசிய ஊடகங்கள்

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமழழ-வடதலப-பலகள-கறதத-வளள-அறகக/175-240033

Link to comment
Share on other sites

இலங்கை அரசாங்கத்திற்கும்  விடுதலைப்புலிகளிற்கும் இடையில் 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழர்கள் தொடர்பில் பாரிய  பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் இடம்பெறாத போதிலும் தேர்தல்களிற்கு முன்னர் சிங்கள பெரும்பான்மையின அரசியல் கட்சிகள்  விடுதலைப்புலிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்துவது வழக்காமாக காணப்படுகின்றது.

தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிப்பது போன்று- பாதுகாப்பு என்ற விடயத்தை அடிப்படையாக கொண்டு தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெற்றிவாய்ப்பை அதிகரிக்ககூடிய இரண்டு கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் முன்னாள் போராளியொருவரின் கைதும் மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளுமே அவை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழர்கள் அதிகமாக வாழும் நகரில் முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் இரண்டு கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் புதைத்த நிலக்கண்ணிவெடிகள் இன்னமும் அகற்றப்படாததால் அப்பகுதியில் கண்ணிவெடிகள் மீட்கப்படுவது வழமையாக உள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மலேசியாவில் இடம்பெற்றுள்ள கைதுகள்  இலங்கை செய்தித்தாள்களில் முதல்பக்க செய்திகளாக இடம்பெற்றுள்ளன.

இந்த செய்திகள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தாபயவை விட வேறு எவருக்கும் அதிகமாக உதவப்போவதில்லை. அவரரே தேர்தலில் முன்னிலையில் நிற்கின்றார்.

 

========  

ஆர்கே ராதகிருஸ்ணன்

புரொன்ட் லைன்

தமிழில் ரஜீபன்

https://www.virakesari.lk/article/67031

 

 

மலேசியாவில் இடம்பெற்ற கைதுகளைப் பொறுத்தவரை, பயங்கரவாத பணக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு பின்னரே நபர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுகளையும்  அவற்றுக்கு கொடுமையான 2012 ஆம் ஆண்டின் பாதுகாப்பு குற்றங்கள் ( விசேட ஏற்பாடுகள் சட்டம் ( சொஸ்மா ) பயன்படுத்தப்பட்டதையும் மலேசிய பிரதமர் மஹாதிர் முஹம்மது திங்கட்கிழமை நியாயப்படுத்தினார்." பொலிசார் எனக்கு நிலைவரத்தை விளக்கிக்கூறினார்கள். அந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு அவர்களுக்கு காரணங்கள்  இருக்கின்றன.பொலிசாரின் விளக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்" என்று பிரதமர் ஊடகங்களுக்கு கூறினார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஆளும் நான்கு கட்சி பகதான் ஹரபான் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஜனநாயக நடவடிக்கை கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால், இந்த விவகாரத்தில் உள்ளக இயக்கவிசையொன்றும் செயற்படுகிறது என்று தோன்றுகிறது.இது தவிரவும், விசாரணைகள் பற்றிய செய்திகள் வெளியிடப்பட்ட நேரம் தேர்தல் போட்டியில் முன்னணியில் நிற்கும்  கோதாபயவைத் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் உதவவில்லை.

https://www.virakesari.lk/article/66967

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மலேசியாவில் இடம்பெற்றுள்ள கைதுகள்  இலங்கை செய்தித்தாள்களில் முதல்பக்க செய்திகளாக இடம்பெற்றுள்ளன.

இந்த செய்திகள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கோத்தாபயவை விட வேறு எவருக்கும் அதிகமாக உதவப்போவதில்லை. அவரரே தேர்தலில் முன்னிலையில் நிற்கின்றார்.

அடிக்கடி 'வைத்தியம்' என்ற பெயரில் சிங்கையூர் சென்றுவரும் கோத்தாதான் இதன் சூத்திரதாரியோ தெரியவில்லை.

சஜித்தும் சரத்தும் இது பற்றி ஆராயவேண்டும்😎
 

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

அடிக்கடி 'வைத்தியம்' என்ற பெயரில் சிங்கையூர் சென்றுவரும் கோத்தாதான் இதன் சூத்திரதாரியோ தெரியவில்லை.

கோத்தபாயாவுக்கும் முஸ்லீம் பயங்கரவாதக் குழுக்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கிறது ஏற்கனவே தெரிஞ்சது தானே!

சஹ்ரான் கோஷ்டியை சேர்ந்த 100 பேருக்கு மேல கோத்தபாயா பாதுகாப்பு அமைச்சு நிதியில இருந்து நிறைய காலம் சம்பளம் வழங்கினது இப்ப பழைய செய்தி.

இன்னொரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிரா 5, 6 பௌத்த மதவெறிக் குழுக்களையும் கோத்தபாயா உருவாக்கியிருக்கார்.

எனவே, முஸ்லிம்களை அழிகிறதுக்கான ஒரு திட்டத்தை கோத்தபாயா உருவாக்கியிருக்கார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.