Jump to content

கறுப்புப்பணத்தைப் பதுக்க சுவிஸ் வங்கியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா?


Recommended Posts

இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது.

கடந்த பத்தாண்டுகளாக சுவிஸ் வங்கி குறித்த செய்திகள் எல்லா ஊடகங்களிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்திய பண முதலைகளின் பெரும்பாலான கறுப்புப் பணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டு பாதுகாக்கப்படுவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவருகின்றன. அப்படி பதுக்கியவர்களின் பெயர்கள்கூட அவ்வப்போது வெளியிடப்படுவதுண்டு.

 

``இந்தியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே வங்கித்துறையில் யதேச்சையாக ஒரு வரலாற்று ஒற்றுமை நடந்துள்ளது. ஆம், இந்தியாவில் 1934-ம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதே 1934-ம் ஆண்டில்தான் சுவிட்சர்லாந்திலும் வங்கித்துறை சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுவிட்சர்லாந்திலுள்ள வங்கிகளில், யூபிஎஸ் வங்கி (UBS), கிரெடிட் சுஸி பேங்க் (Credit Suisse bank), கன்டோனல் பேங்க் (cantonal bank) ஆகிய மூன்றும் முக்கியமானவை. இவற்றில் கன்டோனல் பேங்க், சுவிட்சர்லாந்து அரசாங்கத்தின் வங்கி.

வெளிநாட்டைச் சேர்ந்த தனிநபர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க பெரும்பாலான நாடுகளின் வங்கித்துறைகள் அனுமதிப்பதில்லை. ஆனால், சுவிட்சர்லாந்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த தனி நபர்கள் வங்கிக்கணக்கு தொடங்க அனுமதியுண்டு. ஆனால், வங்கிக்கணக்கு தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. நம் நாட்டில் வாடிக்கையாளர் குறித்து கே.ஒய்.சி பார்த்து முடித்துவிட்டாலே வங்கிக்கணக்கு தொடங்கிவிடலாம். ஆனால், அங்கே வாடிக்கையாளர் பற்றிய விவரங்கள் அனைத்துமே சரியாக இருந்தாலும்கூட, வங்கிக்கணக்கு தொடங்க அனுமதியளிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை. வங்கிக்கணக்கு தொடங்க அனுமதி மறுக்கவும் வாய்ப்புள்ளது.

பாஸ்போர்ட், தொழில் அல்லது பணிகுறித்த விவரங்கள், நிறுவனம் தொடர்பான ஆவணங்கள், லைசென்ஸ் மற்றும் வரித்தாக்கல் விவரங்கள், முதலீடு செய்யவுள்ள பணத்தைச் சம்பாதித்ததற்கான ஆதாரம் மற்றும் தனிப்பட்ட கேள்விகளுக்கும் அங்கு பதில்தர வேண்டும். வங்கிக்கணக்கு குறித்த ரகசியம் காக்கப்படும் என்பதால் அதற்கேற்ப கணக்கு தொடங்குவதற்கான விதிமுறைகள் கடுமையானவை. பொதுவாக உலகெங்கிலும் உள்ள வங்கிகளில், வாடிக்கையாளரின் பெயர், வாடிக்கையாளரின் அடையாள எண் (Customer ID), வங்கிக்கணக்கு எண் ஆகிய மூன்றும் இடம்பெறும். வாடிக்கையாளரின் பெயரை வைத்துதான் வங்கிக்கணக்கை அடையாளப்படுத்துவார்கள். ஆனால், ஸ்விஸ் வங்கிகளில் கஸ்டமர் ஐ.டி மட்டுமே முதன்மையானதாக இருக்கும். வாடிக்கையாளரின் பெயர், வங்கியின் மேல்மட்ட அதிகாரிகள் அளவில்தான் தெரியும். எனவே வெளிநபர்கள் மட்டுமின்றி, வங்கி ஊழியர்களேகூட வாடிக்கையாளரை அடையாளம் காண்பது கடினம். சுவிட்சர்லாந்து அரசின் வங்கிச்சட்டப்படி, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வெளியில் சொன்னால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த வங்கிகளைப் பெருமளவு நாடிவருகிறார்கள்.

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில், சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்களின் டெபாசிட் மற்றும் சுவிட்சர்லாந்தில் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டுமே அந்நாட்டில் வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன்காரணமாகவும் வெளிநாட்டினர் இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் பொருளாதாரம் நிலையானதாக இருக்கும். அந்த நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சி காண்பதில்லை. சுவிட்சர்லாந்தின் பணமான `சுவிஸ் பிராங்க்'கை இந்திய ரூபாயோடு ஒப்பிட்டால், ஒரு சுவிஸ் பிராங்கின் மதிப்பு, 71 ரூபாய்க்குச் சமமாகும். பத்து ஆண்டுகளுக்குமுன் இதே சுவிஸ் பிராங்க், 45 ரூபாய்க்குச் சமமாக இருந்தது. சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் சீராக இருப்பதும்கூட மற்ற நாட்டு வாடிக்கையாளர்கள், இந்த வங்கிகளில் முதலீடு செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது" என்று கூறினார்.

https://www.vikatan.com/news/banking/what-is-the-swiss-bank-who-can-open-an-account-there

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

சுவிட்சர்லாந்து அரசின் வங்கிச்சட்டப்படி, வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வெளியில் சொன்னால் அது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும். அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த வங்கிகளைப் பெருமளவு நாடிவருகிறார்கள்.

இந்தச் சட்டத்தை.... மற்றைய நாடுகளும் பின் பற்றினால்,
அந்த நாட்டுப் பணம் வெளியே போக சந்தர்ப்பம் இருக்கது தானே...
அதனை ஏன், நடைமுறைப் படுத்த தயக்கம் காட்டுகின்றார்கள்.  

Link to comment
Share on other sites

15 hours ago, தமிழ் சிறி said:

இந்தச் சட்டத்தை.... மற்றைய நாடுகளும் பின் பற்றினால்,
அந்த நாட்டுப் பணம் வெளியே போக சந்தர்ப்பம் இருக்கது தானே...
அதனை ஏன், நடைமுறைப் படுத்த தயக்கம் காட்டுகின்றார்கள்

சொந்த நாட்டில் கட்டாத வரிதான் கறுப்புப்பணம்.
அதை எப்படி சொந்த நாட்டு வங்கியில் இடலாம்? கணக்கு கூட்டி கழிக்க பிழைக்குமே  😄

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.