Jump to content

கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது


Recommended Posts

"கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" இது பழமொழி. அதுவே அறிவியல் ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய புது மொழியானாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எமது சமையலில் கடுகுக்கு முக்கிய இடம் இருக்கும் அதன் வாசனைக்காக. ஆனால் அறிவியலில் அதன் பயன் உணவு பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டிருக்கிறது.

முன்னைய ஒரு பதிவில் சுட்டியது போல வட அமெரிக்கா குறிப்பாக ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா ஆகிய வற்றில் இறைச்சியை மாசுபடுத்த (contamination)கூடிய மனிதனுக்கு நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கியாக Escherichia coli O157: H7 விளங்குகிறது. எவ்வாறு இறைச்சி, மற்றும் பதனிடப்பட்ட இறைச்சி உணவுகள் (Processed meat products : sausage) போன்ற வற்றில் இந்த நுண்ணங்கியை வளராது கட்டுப்படுத்துவது என்பது சம்பந்தமாக பல ஆராய்சிகள் நடைபெற்று வருகிறன. சில ஆய்வுகளில் கடுகு மா/ பொடியை மாட்டிறைச்சியின் மீது தூவி இந்த நுண்ணங்கியை கட்டுப்படுத்த செய்யப்பட்ட ஆய்வுகள் சாதகமான பலனை கொடுத்துள்ளன.

கடுகில் காணப்படும் நுண்ணங்கி எதிர்ப்பு இயல்புக்கும் அதன் வாசனைக்கும் allyl isothiocyanate (AIT) எனும் இலகுவில் ஆவியாக கூடிய ஒரு இரசாயன பதார்த்தமே முக்கிய காரணம் என அறியப்பட்டுள்ளது. பின்னர் கடுகில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate (AIT) இரசாயனத்தை இறைச்சி, sausage ஆகியவற்றில் பிரயோகித்து செய்யப்பட்ட ஆய்வுகளிலும்; allyl isothiocyanate ஆனது Escherichia coli O157: H7 நுண்ணங்கியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதுடன், அதை கொல்வதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், கடுகை அல்லது பிரித்தெடுக்கப்பட்ட allyl isothiocyanate உணவு/ இறைச்சியில் பாவிப்பதில் உள்ள ஒரு பிரச்சனை அதன் கார இயல்பும், கடுமையான மணமுமாகும். பொதுவாக இவற்றுக்கு பழக்கப்படாத ஐரோப்பியர்கள், மற்றும் அமெரிக்கர்களால் இது அதிகம் விரும்பப் படுவதில்லை.

கடுகில் இருக்கும் இந்த allyl isothiocyanate நுண்ணுயிர் கொல்லியாக (antimicrobial) மட்டும் அல்லாது மனிதரில் புற்று நோய் எதிர்ப்பிலும் (anticarcinogens) பயன் பட கூடியது என அறியப்படுள்ளது.

கடுகு மட்டுமல்லாமல் மற்றைய வாசனை பொருட்களான கராம்பு (Clove) இருக்கும் eugenol , கறுவா/ பட்டை (Cinnamon) இல் இருக்கும் CINNAMALDEHYD ஆகிய இரசாயன பதார்த்தஙளும் பல்வேறு உணவு மூலம் பரவி நோய் ஏற்படுத்தும் நுண்ணங்கிகளை கொல்லும் திறன் வாய்ந்தவை என அறியப்பட்டுள்ளது.

என்ன " கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது" எனும் பழ மொழி அறிவியலிலும் உண்மை தானே.

http://viriyumsirakukal.blogspot.com/2007/...og-post_04.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலைப் பகிர்ந்தமைக்கு நநன்றிகள் பல

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.