Jump to content

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; சீமானையும் விசாரணையில் சேர்க்கவேண்டும் என காங்கிரஸ் மனு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

seman.jpg

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; சீமானையும் விசாரணையில் சேர்க்கவேண்டும் என காங்கிரஸ் மனு

ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சீமானையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐ. அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அந்த முறைப்பாட்டில்கூறப்பட்டுள்ளதாவது. “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது.

ஏராளமானோர் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு, பலர் தண்டிக்கப்பட்டனர். இந்த வழக்கு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் சீமான் கடந்த 11-ம் திகதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கூட்டத்தில் பேசும்போது பகிரங்கமாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்று புதைத்தோம் என பெருமையுடன் குறிப்பிட்டு பேசியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியிலும் அதை உறுதிப்படுத்தி தனது பேச்சிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராஜிவ் கொலையை நாங்கள் தான் செய்தோம் என்று சீமான் பகிரங்கமாக தெரிவித்திருக்கும் நிலையில் சீமான் மீது 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும்” என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோட்சே காந்தியை சுட்டதை சரி என்கிறார்கள். “நாங்கள்தான் ராஜிவ் காந்தியை கொன்றோம்.

ஒரு காலம் வரும் வரலாறு திருப்பி எழுதப்படும். என் இனத்தை இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற அநியாயப்படையை அனுப்பி என் இன மக்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை, தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்கிற வரலாறு எழுதப்படும்” என்று பேசியிருந்தார்.

இந்தப்பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு உருவானதை அடுத்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் தான் பேசியதில் பின் வாங்கப்போவதில்லை என்று சீமான் பேட்டி கொடுத்தார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி பொலிஸார் பிரிவு 153 மற்றும் 504-ன் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். காங்கிரஸ் சார்பில் டி.ஜி.பி. மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறைப்பாடு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ராஜீவ்-காந்தி-கொலை-வழக்க/

Link to comment
Share on other sites

"ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., சீமானையும் வழக்கில் சேர்த்து விசாரிக்கவேண்டும் என கோரி காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது".

காங்கிரஸ், இந்த நான்காவது உறுப்பினர்

finally-the-fourth-ape-e1566794111618.jp

Link to comment
Share on other sites

பல ஆண்டுகளாகியும் இன்னும் நம் போராளிகள் சிறையில் இருப்பது வருத்தமளிக்கும் நிலையில், இது போன்ற வீண் பேச்சுக்கள் அவர்கள் விடுதலையை மேலும் தாமதிக்கும் அல்லது முற்றிலும் பாதிக்கும். இதுபோன்ற உணர்ச்சிவயப்பட்ட பேச்சுகள் ஒருபோதும் உதவாது.

சீமானின் பேச்சு ஒரு சில தருணங்களில் நியாயமானதாகத் தோன்றியுள்ளது. ஆனால் இவ்விடயத்தை அரசியலாக்கி அதன்மூலம் ஆதரவைப் பெற நினைப்பது வரவேற்கத்தக்கதல்ல..இதற்கு பதிலாக போராளிகளின் விடுதலைக்கு ஏதாவது செய்திருந்தால் வரவேற்கப்பட்டிருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.