Jump to content

தேசிய பாதுகாப்பை கோத்தாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும் : அத்துரலிய தேரர்


Recommended Posts

IMAGE-MIX.png
 

(இராஜதுரை ஹஷான்)

தேசிய  மரபுரிமை, தேசிய  பாதுகாப்பு ஆகியவற்றை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் மாத்திரமே பாதுகாக்க முடியும்.

athuraliya.jpg

நல்லாட்சி அரசாங்கத்தின் முறைக்கேடுகள், ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே   பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய  ரத்ன  தேரர் தெரிவித்தார்.

வியத்மக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலமான அரசியல்  சக்தி தோற்றம் பெற வேண்டும். இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்   பலரது அரசியல்  பயணத்தை கேள்விக்குறியாக்கும். நாடு எதிர்க் கொண்டுள்ள  பொருளாதார பிரச்சினைகள்,  தேசிய பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள சவால்கள் ஆகியவற்றிற்கு விரைவாக தீர்வு காண வேண்டும்.

நாட்டின் தேசிய மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருகின்றன. மறுபுறம் தேசிய பாதுகாப்பு  அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.  இவ்விரண்டு விடயங்களுக்கும்  முக்கியத்துவம் அளிக்கும் பலமான   தலைமைத்துவத்தினை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காகவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/67010

Link to comment
Share on other sites

புத்தம்  கரணம் கச்சாமிக்கு  அந்த சக்தி இல்லை என்பதை பகீரங்கமாக ஒத்துக்கொள்ளுகிறார் தேரர். இப்படித்தான் தனது மதத்தை தீவிரமாக விரும்பும் ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளபவர்கள்  உண்மையில் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே. 

Link to comment
Share on other sites

2 hours ago, tulpen said:

புத்தம்  கரணம் கச்சாமிக்கு  அந்த சக்தி இல்லை என்பதை பகீரங்கமாக ஒத்துக்கொள்ளுகிறார் தேரர். இப்படித்தான் தனது மதத்தை தீவிரமாக விரும்பும் ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளபவர்கள்  உண்மையில் கடவுள் நம்பிக்கை அற்றவர்களே. 

எனக்கு தெரிந்த வரையில் பௌத்த மதம் ஏனைய மதங்கள் போலல்ல. பௌத்த மதம் கடவுள் உள்ளார், கடவுள் இவ் உலகத்தை படைத்தார் என்பவற்றை நம்புவதில்லை.

புத்தர் கடவுள் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.