Jump to content

ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் படுகொலை: சீமான் பேசியதன் சிக்கலும் அதிலுள்ள ‘கடுகளவு‘ நியாயமும்

ஆர். அபிலாஷ்

B77F6135-7885-4E17-9190-7AC749953CE4.jpeg
 
 
சீமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது சமீபமாக கூறியது இதுதான்: “முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியைக் கொன்றது சரிதான்ஒருகாலம் வரும்அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும்அமைதிப்படை என்ற பெயரில் ஓர் அநியாயப்படையை அனுப்பிஎன் இன மக்களைக் கொன்றுகுவித்த ராஜீவ்காந்தி என்ற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம்என்ற வரலாறு வரும்”.
 
ராஜீவின் அயலுறவு முடிவுகள் முன்னுக்குப் பின் முரணானவைநிதானமான தெளிவானநோக்கற்றவைஅதன் பலனாகத் தான் ஈழத்தில் கடுங்குற்றங்களை நமது அமைதிப்படைநிகழ்த்தியதுஅயல் நாட்டுனான உங்களது ராஜதந்திர நகர்வுகளை பொதுமக்களைபகடையாக்கி செய்யக் கூடாதுஆனால் இதை எல்லா வளர்ந்த நாடுகளும் தொடர்ந்து செய்துவருகின்றனஅமைதிப்படை (பயங்கரவாதிகளையே கொல்கிறோம் எனும் தோரணையில்அதுவரை நட்புப் படையினராக இருந்தவர்களை தாக்குகிறோம் எனும் முரணுடன்ஈழத்தில்பொதுமக்களை தாக்கியதுபெண்களை பலாத்காரம் பண்ணியதுஎத்தனை எத்தனையோபடுகொலைகள்ஒரு உறுதி செய்யப்படாத கணக்கு மொத்தம் 20,000 தமிழர்கள்கொல்லப்பட்டதாய் சொல்கிறது.
 
 
இந்திய ராணுவ குற்றங்களில் ஒன்றே ஒன்றை இங்கு உதாரணமாக தருகிறேன்:
1987இல் அக்டோபர் மாதம் 21, 22 நாட்களில் யாழ்ப்பாண மருத்துவமனையில் இந்தியஅமைதிப்படை நடத்திய மரணவேட்டைபுலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தஇந்திய ராணுவம் எதிர்பாராமல் யாழ்ப்பாண மருத்துவமனைக்குள் நுழைந்து சுமார் மருத்துவர்கள்செவிலியர்நோயாளிகள் உள்ளிட்டு 70 பேரை சுட்டு வீழ்த்தியதுகொலைகளைக் கண்டு அஞ்சிஅழுத குழந்தைகளையும்சத்தமெழுப்புகிறார்கள் எனும் காரணத்துக்காகசுட்டுக் கொன்றதுதண்ணீர் கேட்டவர்களையும் சுட்டனர்ரேடியாலஜி பிளாக்குக்குள் பதுங்கி இருந்தபொதுமக்களையும் படை யோசிக்காமல் சுட்டி வீழ்த்தியதுஅடுத்து உயிருடன் இருக்கும்நோயாளிகள் முன்னிலையிலேயே பிணங்களை எரித்ததுமருத்துவர் சிவபாத சுந்தரம்மூன்றுசெவிலியருடன்கைகளை உயர்த்திய நிலையில் சரணடைய வந்தார்அவரையும் உடனடியாய்அமைதிப்படை சுட்டு வீழ்த்தியது.
மேலும் இதே வருடம் கொக்குவில் கிராமத்தில் 40 பொதுமக்களை சுட்டுக் கொன்றது.  1989ஆம்வருடம் வெல்வெட்டித்துறையில் குழந்தைகள் உள்ளிட்டு 64 பேரைக் கொன்றது.
இதற்குராணுவம் பின்னர் அளித்த விளக்கம் “எங்களுக்கு பொதுமக்களுக்கும் புலிகளுக்கும்வித்தியாசம் தெரியவில்லைபுலிகள் பொதுமக்களுக்கு இடையில் பதுங்கி இருந்துதாக்குகிறார்கள்” என்பதுமருத்துவமனையில் பதுங்கி இருக்கும் குழந்தைகள்மருத்துவர்செவிலிகள் எல்லாம் உங்களுக்கு புலிகளா?
 
 இது குறித்த சர்வதேச விசாரணையை இன்னமும் யாரும் நடத்தவில்லைஇந்திய அரசும் இந்தபடையினரை விசாரிக்கவோ தண்டிக்கவோ இல்லை. (சிலரை தண்டித்திருக்கிறோம் என இந்தியராணுவம் பெயரளவுக்கு சொன்னாலும் குற்றம் சாட்டப்பட்ட பலரையும் இந்திய ராணுவம் பின்னர்சர்வதேச அமைதி படைகளுக்கு அனுப்பி இருக்கிறது.)
 இந்த பின்னணியில் சீமான் பேசியதில் நிச்சயம் நியாயமுள்ளது - அதாவது எளிய மக்களின்உயிரிழப்புக்குபெண்கள் மீதான தாக்குதலுக்கு நீதி வழங்கப்படவில்லைராஜீவின் குடும்பமும்இதற்கு மன்னிப்பு கோரவில்லை எனும் பொருளில்ஆனால் இந்த பிரச்சனை இத்தோடு முடிந்துபோகிற ஒன்றில்லை.
காஷ்மீரியரை இதே போல் கொன்றும் கண்ணில் பெல்லெட் குண்டுகளால் சுட்டும் பெண்களைபலாத்காரம் பண்ணியும் அழித்ததற்கும்இந்திரா படுகொலையை ஒட்டி பஞ்சாபியரைகொத்துக்கொத்தாய் கொன்றொழித்ததற்கும்பல பழங்குடிகளையும் போராடும் மக்களை சுட்டுக்கொன்றதற்கும்மதக்கலவரங்கள் எனும் பெயரில் பல்வேறு சிறுபான்மையினரை குண்டர்களால்தாக்கியும் வீட்டுக்குள்ளும் கடைக்குள்ளும் வாகனங்களுக்குள்ளும் வைத்து கொளுத்திகொன்றதற்கும் இதுவரை எந்த அரசும் அதிகாரிகளும் மன்னிப்புக் கோரியதில்லைஇதுதொடர்ந்து இறையாண்மை பொருந்திய நமது அரசுகள் நிகழ்த்தும் கொடுங்குற்றங்களின்கரும்பக்கம்
ராஜீவின் அரசு இதையே மற்றொரு நாட்டில் நிகழ்த்தியதுஇதற்கு பல அதிகாரிகளும் துணைபோயினர் என்பது மட்டுமே வித்தியாசம்இங்கு நாம் அமைதிப்படையின் குற்றங்களைப் பற்றிப்பேசும் போது இந்தியாவுக்குள் இவர்கள் நிகழ்த்தும் கொடுங்கொலைகளையும் பட்டியலிடவேண்டும்அந்த பின்னணிக்குள் வைத்தே இதையும் பேச வேண்டும்காங்கிரஸை மட்டும் பழிக்கக்கூடாது.
 
இந்த நோக்கில் தான் சீமானின் பேச்சில் ‘கடுகளவாவது’ நியாயமுண்டு என நினைக்கிறேன்அதாவது இத்தகைய உணர்ச்சிகர அறிக்கைகளால் தான் ஓரளவாவது இவர்களை சற்று நெளியவைக்க முடியும்.
 
ஆனால் எந்த ஜனநாயக அரசமைப்புக்குள்ளும் நீதி கோருபவர்கள் பழிக்குப் பழி வாங்குவதைநியாயப்படுத்த முடியாதுஅப்படி செய்தால் இந்த அரச பயங்கரவாதங்களைவெளியுறவுத்துறையின் மீறல்களைஇனப்படுகொலைகளை கேள்வி கேட்கும் தகுதியை நாம் இழந்துவிடுவோம்சீமானின் பேச்சின் பிரச்சனை அது சட்டென தமிழ்க் குரலை ஒரு காட்டுமிராண்டிக்குரலாக திரித்துக் காட்டுகிறது என்பது
 
அதே நேரம் சீமான் முன்வைத்ததை சற்று நாகரிகமான நிதானமான மொழியில் நாம் தேசியசர்வதேச ஊடகங்களில் தொடர்ந்து பேச வேண்டும்ராணுவம்காவல்துறைவெளியுறவுத்துறைஆகியவற்றுக்கு வழங்கப்படும் மட்டற்ற அதிகாரத்தை கண்டித்துஅந்த அதிகாரத்தை மட்டுப்படுத்தகோரிக்கை வைக்க வேண்டும்கடந்த ஐம்பதாண்டுகளில் நமது காவல்துறையும் ராணுவமும் நம்மண்ணிலும் வெளிமண்ணிலும் நடத்திய அத்தனை படுகொலைகளுக்கும்பாலியல்குற்றங்களுக்கும் அவர்கள் மன்னிப்பு கோர வேண்டும்இதை ஒவ்வொரு கட்சியும் தம் ஆட்சியில்நடந்த குற்றங்களுக்காக செய்ய வேண்டும்எவ்வளவு பெரிய போராட்டங்களில் மக்கள்ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்ட மாட்டோம் என உறுதிமொழியை இந்தராணுவமும்காவலர்களும் இவர்களுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரிகளும் தலைவர்களும்எடுக்க வேண்டும்சாலையை சுத்தமாக வைப்போம் என்பது போன்ற உறுதிமொழிகளை விடஇதுவே முக்கியம்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.