Jump to content

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கை பிரஜைகளுக்கு முக்கிய அறிவிப்பு


Recommended Posts

(ஆர்.விதுஷா)

மலேசியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும்  இலங்கையர் நாடு திரும்புவதற்கா டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மலேசிய அரசாங்கம் கால அவகாசம் வழங்கியிருப்பதாக  அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.  

தொழில் நிமித்தம் மலேசியாவிற்கு சென்று அந்நாட்டின் குடிவரவு  குடியகல்வு சட்டதிட்டங்களை மீறியவர்களை அவர்களது தாய்  நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காகவே இந்த கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்   தெரிவித்துள்ளது.   

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 31  ஆம் திகதி வரையான 5 மாத கால அவகாசமே இவ்வாறு  வழங்கப்பட்டுள்ளது. 

அவர்களில் வீசா இன்றி  சட்டவிரோதமான முறையிலும், மலேசிய  விதிமுறைகள் சட்டதிட்டங்களை மீறியும் அங்கு  தங்கியிருப்பவர்களுக்கு எதிராகவே இந்த  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.  

அவ்வாறு சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பவர்களுக்கு  கடிதம் மூல அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்பதுடன்  , அவர்களிடமிருந்து நிர்வாக கட்டணமாக சுமார் 30 ஆயிரம்  ரூபாய் (700 ரிங்கிட்)  கட்டணமும் அறவிடப்படவுள்ளது.   

அதேவேளை அவர்கள் நாடு  திரும்புவதற்கான கடவுச்சீட்டு மற்றும்   அவசர வீசா என்பனவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான  நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளது.  

இலங்கை பிரஜைகள்  இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் தங்கியிருப்பார்களாயின் மலேசிய  அரசாங்கம்  வழங்கியுள்ள பொது மன்னிப்பு காலத்தை தகுந்த முறையில் உபயோகித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்துடன் 00603-20341705  மற்றும் 00603-20341706 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக    தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.  

https://www.virakesari.lk/article/67116

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.