Jump to content

பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் மரண அச்சுறுத்தல் விவகாரம்- இன்று மீண்டும் நீதிமன்றில்


Recommended Posts

பிரிட்டனிற்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி இலங்கை தூதரகத்தின்  பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோமரண அச்சுறுத்தல் சைகை செய்தது  தொடர்பான வழக்கினை வெஸ்மிஸ்டர்ஸ் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.

இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

2018 பெப்ரவரி நான்காம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலேயே நீதிமன்ற விசாரணை மீண்டும் இடம்பெறுகின்றது.

priyankara_fe_oct_18.jpg

இலங்கை தூதரகத்திற்கு வெளியே அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ  மரண எச்சரிக்கை விடுப்பதை  காண்பிக்கும் வீடியோக்களும் படங்களும் வெளியானதை தொடர்ந்து  சர்வதேச அளவில் பலத்த சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இனப்படுகொலையை தடுப்பது வழக்கு தாக்கல் செய்வது தொடர்பான அமைப்பு இதற்கு உதவியளித்தது.

https://www.virakesari.lk/article/67171

Link to comment
Share on other sites

பிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பிரிகேடியர் பிரியங்கரவின் வழக்கு; லண்டன் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்-Protest-Near-Westminster-Magistrate-Brigadier-Priyanka-Fernando

ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தி சைகை

இலங்கையின் ராஜதந்திரியும் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பான அதிமான பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் வெஸ்மினிஸ்டர் நீதிமன்றுக்கு முன்பாக குறித்த ஆர்ப்ப்பாட்டம் இன்று (18) இடம்பெற்றது.

குறித்த வழக்கு வெஸ்மினிஸ்டர் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட நிலையிலேயே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இவ்வார்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற" சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய நீதி துறையில் அரசியல் தலையீட்டை தவிர்ப்போம் எனவும், குறித்த இராணுவ அதிகாரிக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், புலம்பெயர் தமிழ் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரிகேடியர் பிரியங்கர பெனாண்டோ, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும்பாலான முன்முனை தாக்குதல்களை மேற்கொண்ட, இலங்கை இராணுவத்தின் 59 அவது பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தர்ப்பத்தில் இராணுவ உடை அணிந்திருந்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி, அவர்களை அச்சுறுத்தும் வகையில் மூன்று முறை இவ்வாறு சைகை செய்திருந்ததோடு, குறித்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியது.

அத்துடன் இது தொடர்பில் லண்டனிலுள்ள பொலிஸில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பதோடு, பின்னர் ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்த்கது.

(வவுனியா விசேட நிருபர் - கே. வசந்தரூபன்)

http://www.thinakaran.lk/2019/10/18/உள்நாடு/42302/பிரிகேடியர்-பிரியங்கரவின்-வழக்கு-லண்டன்-நீதிமன்றம்-முன்பாக-ஆர்ப்பாட்டம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.