Jump to content

மொட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் தொண்டமான்


Recommended Posts

image_73c263ad07.jpg

 

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே ஜனாதிபதி தேர்தல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரியில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (18) முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவும் இரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மடடடன-பரநதணரவ-ஒபபநதததல-கசசததடடர-தணடமன/150-240141

Link to comment
Share on other sites

கடந்த சனாதிபதி தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் எவருடன் கூட்டு சேர்ந்து இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

கடந்த சனாதிபதி தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் எவருடன் கூட்டு சேர்ந்து இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா

மகிந்தவுடன்.

மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் போன்றன மைத்திரியுடன்.

Link to comment
Share on other sites

இந்தியா மொட்டுவை ஆதரிக்கின்றது? எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?

இல்லை, இந்தியாவை மீறி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கடந்த சனாதிபதி தேர்தலில் ஆறுமுகன் தொண்டமான் எவருடன் கூட்டு சேர்ந்து இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா

மகிந்த கொம்பனியிடம் தான் இருந்தார் ஆட்சி மாறியதும் பல உடமைகள் நல்லாட்சியினரால் கைப்பற்றப்பட்டது  எல்லாம் கள்ளன் தான் 

Link to comment
Share on other sites

22 minutes ago, ampanai said:

இந்தியா மொட்டுவை ஆதரிக்கின்றது? எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?

இல்லை, இந்தியாவை மீறி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மொட்டுவை ஆதரிக்கின்றது?
  

கோத்தாவை அமெரிக்கா ஆதரிப்பதால் இந்தியாவும் கோத்தாவை ஆதரிக்கும் என நம்புகின்றேன். தேசியவாதியும் இலகுவாக விட்டுக் கொடுக்க முடியாதவருமான சஜித்தை கையாளுவதை விட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் போர்க் குற்றவாளியான கோத்தாவை கையாளுவது இலகு என நினைக்கின்றனர் என கருதுகின்றேன்.

ஆனால் சீனா இவர்களுக்கு எல்லாம் பெப்பே காட்டி விடும்

Link to comment
Share on other sites

18 minutes ago, நிழலி said:

கோத்தாவை அமெரிக்கா ஆதரிப்பதால் இந்தியாவும் கோத்தாவை ஆதரிக்கும் என நம்புகின்றேன். தேசியவாதியும் இலகுவாக விட்டுக் கொடுக்க முடியாதவருமான சஜித்தை கையாளுவதை விட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் போர்க் குற்றவாளியான கோத்தாவை கையாளுவது இலகு என நினைக்கின்றனர் என கருதுகின்றேன்.

ஆனால் சீனா இவர்களுக்கு எல்லாம் பெப்பே காட்டி விடும்

அமெரிக்கா கோத்தாவை ஏன் ஆதிரிக்கின்றது? தனது நலம் சார்ந்த உடன்படிக்கைகளில் எந்த தடையையும் மீறி கை எழுத்திடும் 'சண்டியன்' வலிமை உள்ளதால் என எண்ணுகின்றேன். அதேவேளை, கையொப்பம் இடாவிட்டால், தங்களிடம் உள்ள கோத்தா சார்ந்த 'இரகசியங்களை' பகிரப்படுத்துவேன் என மிரட்டலாம். ஆனால், அமெரிக்காவையும் மகிந்த அண்ட் கோ மீறலாம், நீங்கள் கூறியது போன்று சீனாவின் உதவியுடன். ஆனால், இந்தியா அதை விரும்பாது.   

இவ்வாறான நிலைமை சில அரசியல் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பிற்கு  வழங்கலாம்.

எமது தலைமைகள் மத்தியில், தாயகத்திலும் சரி புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியிலும் சரி, ஒரு உள்ளூர் (ஐ.தே.க. / மொட்டு/ ஜே.வி.பி., ..), பிராந்திய (இந்தியா, தமிழகம், சீனா) மற்றும் சர்வதேச (அமெரிக்கா)  அரசியலை ஆராயும் நிறுவனம் (think tank) இல்லை என்றே நம்புகின்றேன். இதனால் எமது அரசியல் தலைமைகள் அரசியலில் மூளை சொல்வதை விட இதயம் விரும்புவதையே தெரிவு செய்கின்றோம்.
 

Link to comment
Share on other sites

18 minutes ago, ampanai said:

அமெரிக்கா கோத்தாவை ஏன் ஆதிரிக்கின்றது? தனது நலம் சார்ந்த உடன்படிக்கைகளில் எந்த தடையையும் மீறி கை எழுத்திடும் 'சண்டியன்' வலிமை உள்ளதால் என எண்ணுகின்றேன். அதேவேளை, கையொப்பம் இடாவிட்டால், தங்களிடம் உள்ள கோத்தா சார்ந்த 'இரகசியங்களை' பகிரப்படுத்துவேன் என மிரட்டலாம். ஆனால், அமெரிக்காவையும் மகிந்த அண்ட் கோ மீறலாம், நீங்கள் கூறியது போன்று சீனாவின் உதவியுடன். ஆனால், இந்தியா அதை விரும்பாது.   

இவ்வாறான நிலைமை சில அரசியல் சந்தர்ப்பங்களை தமிழர் தரப்பிற்கு  வழங்கலாம்.


 

கோத்தாவின் வருகை தமிழர்ளுக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் அமெரிக்காவை பகைத்தால் அமேரிக்கா + இந்தியா தமிழர்களுக்கு சாதகமாக திரும்பும் என்பதையும் நான் நம்பவில்லை.

காரணங்கள்

1. கோத்தாவினால் அமெரிக்காவினை திருப்தி படுத்திக் கொண்டு சீனாவை அனுமதிக்க முடியும்.  இலங்கை அரசு மூன்று எதிர்முனைகளில் இருக்கும் சக்திகளை (அமெரிக்கா, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா) கையாள்வதில் தேர்ந்தவர்கள். 2009 இலும் இதுதான் நடந்தது.

2. ஒரு வேளை கோத்தா அமெரிக்காவை  + இந்தியாவை மீறி செயல்பட்டால் இவை அடுத்த 5 வருடங்களில் ஆட்சியை மாற்ற முனையும். 2015 இல் மைத்திரியை கொண்டு வந்த மாதிரி

3. போர்க்குற்றத்தின் பிரதான பங்காளிகள் அமெரிக்காவும் இந்தியாவும் மேற்குலகும். இவை சும்மா வெருட்ட போர்க்குற்றத்தினை பற்றி இலேசாகத்தான் கதைக்க முடியும். . போர்க்குற்றச் சாட்டு இந்தியாவை மீறி ஒரு அடி கூட எடுத்து வைக்காது. இது இலங்கை அரசுக்கு 100 வீதம் தெரிந்த விடயம்

4. தமிழர்கள் பக்கம் சாய்வதை விட மேற்குலகுக்கு இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மூலம் இலங்கை அரசை இலகுவாக தம் பக்கம் இழுக்க முடியும். ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் அதைத்தான் நிரூபித்தன.

5. சீனா மூலம் இலங்கை அரசு பெப்பே காட்டினாலும், சீனாவை மீறி இந்தியாவாலும் சரி அமெரிக்காவாலும் சரி காத்திரமாக எதையும் செய்ய முடியாது. மைத்திரி வந்தபின்பும் கூட இவர்களால் சீனாவை பெரியளவில் விரட்ட முடியவில்லை.

6. இவை எல்லாவற்றையும் விட சிங்கள மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு இலங்கை அரசுக்கு சனனாயக முறையின் மூலம் கிடைக்கும் போது மேற்குலகால் ஒரு எல்லைக்கு அப்பால் அழுத்தம் கொடுக்க முடியாது. போர்க்குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட அல்லது விசாரணை இடம்பெறும் நாடுகளில் அனேகமானவை சனனாயக ரீதியில் தெரிந்தெடுக்கப்பட்டவை அல்ல.


மிதவாத அரசை கொண்டு கூட எதையும் செய்ய வக்கற்ற தமிழ் தலைமைகள் கோத்தா போன்றவர்களை கையாள முடியாமல் வழக்கம் போல மேற்குலகின் தூதரகங்களுக்கு போய் முறையிட மட்டுமே முடியும். அதற்குள் முதல் 5 வருடங்கள் ஓடி முடிந்து தமிழர்களின் நிலை மிகவும் மோசமாக போயிருக்கும்.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு சிங்கள மக்கள் (தேரர்கள், அரசியல்வாதிகள்) உடன்பட வேண்டும். அவ்வாறாக, மக்களையும் சிங்கள மதவாதிகளையும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளையும் கையாளக்கூடிய வல்லமை யாரிடம் உள்ளது?

மகிந்த அண்ட் கோவிடம் தான் அது உள்ளது என நூறுவீதம் சொல்லாவிட்டாலும் அவர்களிடம் வேறு எவரையும் விட அந்த 'வல்லமை' கூடுதலாக உள்ளது என தெரிகின்றது.

 

Link to comment
Share on other sites

Spiritual leader மகிந்த நிற்கும் நிலையை பார்த்தால் ஆள் ஏதும் பிரச்சினையில் உள்ளாரோ என தோணுது.

EHJG1bnWwAEh4pF?format=png&name=900x900

பி.கு: பசில் ராஜபக்ச The Hindu க்கு வழங்கிய செவ்வியில் மகிந்தவை “He is our leader, and he is the spiritual leader of our country” என குறிப்பிட்டிருந்தார். 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.