Jump to content

யுத்தத்தை ஆரம்பித்து முடித்தது நானே – சரத்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போரை மாவிலாற்றில் ஆரம்பித்து, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன். பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) சற்றுமுன் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

இறுதிப்போரை மாவிலாறில் ஆரம்பித்து சம்பூர், வாகரை, தொப்பிகல முதல் கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை சென்று யுத்தத்தை நான் வெற்றிகரமாக முடித்தேன்.

சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை. ஆனால் ராஜபக்சவினர் யுத்த வெற்றிகளை கேக் வெட்டிக் கொண்டாடினார்கள்.

நான் இராணுவத்தளபதியாக இருந்த போது, மாதம் நாலாயிரம் பேரை படையில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி படையை பலப்படுத்தினேன். யாரும் எப்படியும் மோதலில் ஈடுபடலாமென கோத்தாபய நினைத்தார். ஆனால் மோதல் நடக்கும் இடத்தில் இடத்தை சுருக்கி பயங்கரவாதிகளை ஒழித்தோம்.

பயங்கரவாதிகளை கொல்லவே நாங்கள் இடங்களை பிடித்தோம். நிலங்களை பிடிக்க யுத்தம் செய்யவில்லை. பயங்கரவாதிகளை கொல்லாமல் இடங்களை பிடிப்பதில் அர்த்தமில்லை. நேரகாலம் குறிப்பிட்டே நான் பயங்கரவாதிகளின் இடங்களை கைப்பற்றினேன்.

ரை, கோட் அணிந்து கோத்தாபய உத்தரவிட்டால் படையினர் அதற்கேற்றபடி செயற்பட மாட்டார்கள். தளபதி ஒருவர் சொன்னால் தான் செய்வார்கள். அது தான் நடந்தது. எனக்கு பாதுகாப்பு அமைச்சை வழங்கினால் நான் அதனை திறம்பட செய்வேன். வெளிநாடுகளுடன் தேவையற்ற ஒப்பந்தங்களை செய்யமாட்டேன் – என்றார்.

https://newuthayan.com/?p=8134

Link to comment
Share on other sites

"சில காரணங்களுக்காக சில விடயங்களை நான் பாதுகாப்பு சபை கூட்டத்தில் கூடச் சொல்லவில்லை."

அவைதான் போர்க்குற்றங்கள் ?

ஆனால், இவர் உயிர்த்த ஞாயிறு அரச விசாரணைக்குழுவில் உள்ளார் 😞 

Link to comment
Share on other sites

'பயங்கரவாதிகளை அழிப்பதற்காகவே யுத்தம்; கோட்டா அறியாமல் பேசுகிறார்’

நிலத்தை மீட்கும் நோக்கில் தான் யுத்தம் செய்யவில்லை என்றும் பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் நோக்கிலேயே தான் திட்டங்களை வகுத்து யுத்தத்தை வழிநடத்தியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,“முன்னதாக நிலத்தை மீட்கும் நோக்கத்தில் தமிழீழ விடுதலை புலிகளுடன் எமது இராணுவத்தினர் யுத்தம் செய்து நிலத்தை கைப்பற்றினர். எனினும், பின்னர் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தி இராணுவத்தினரிடம் இருந்து மீண்டும் நிலப்பகுதிகளை கைப்பற்றினர். இவ்வாறான நிலையில், நிலத்தை மீட்கும் நோக்கில் யுத்தம் செய்து அதனை மீண்டும் இழப்பதைவிட, பயங்கரவாதிகளை முழுமையாக அழித்தால் மாத்திரமே மீட்கப்படும் நிலத்தை பாதுகாக்க முடியும் என்று நினைத்தேன்”என்றார்.

“தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை அவதானித்து அவர்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவத்தை வலுப்படுத்த முடிந்தமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள முடிந்தது. 35 ஆயிரம் விடுதலை புலிகளில் யுத்தத்தின்போது 23 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 12 ஆயிரம் பேர் சரணடைந்தனர்.” என்றார்.

“இராணுவத்தில் இணைந்து 35 வருடங்கள் கடமையாற்றியதால் பாதுகாப்பு தொடர்பான தெளிவான விளக்கம் எனக்கு உண்டு. ஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவ்வாறு இல்லை. 20 வருடங்கள் இராணுவத்தில் கடமையாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணம் என, கூறி இராணுவத்தில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார்.

“யுத்தம் தீவிரமடைந்த 15 வருடங்கள் அவர் விடுமுறைக்கு கூட நாட்டு பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. நாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூட வெளியிடவில்லை. தனது சகோதரர் ஜனாதிபதியான பின்னர் நாடு திரும்பி பாதுகாப்பு செயலாளராகிவிட்டார்.

“யுத்தத்தை பாதுகாப்பு செயலாளரான தானே வழிநடத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது தவறான விடயம்.  யுத்தத்தை நானே வழிநடத்தினேன். மாற்று திட்டங்களை வகுத்து யுத்தத்தை வெற்றிக்கொள்ள போராடினேன. 

“யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, முன்னாள்  பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜக்ஷ ஒரு முறை மாத்திரமே ஆலோசனையொன்றை கூறினார். எனினும், அவர் கூறிய விடயத்துக்கு தேவையேற்படாத நிலையில் அதனை செய்யப்படுத்த அவசியம் ஏற்படவில்லை. 

“யுத்தத் திட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். பாதுகாப்பு சபை கூட்டங்களில் கூட முழுமையான விடயங்களை கூறவில்லை. அவ்வாறு கூறினால் ஊடகங்களில் வெளிவந்து திட்டம் சீர்குலைந்துவிடும். ஒரு வாரத்துக்குரிய விடயங்களை மாத்திரம் நான் தெளிவுப்படுத்தினே்.

“இராணுவத்தினருக்கு கூட எனது நோக்கம் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கை தெரியாது. நாங்கள் வழங்கிய உத்தரவுகள் ஆவணப்படுத்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் திட்டங்களை வைத்திருந்து செயற்படுத்தியமையாலேயே யுத்தத்தை வெற்றிக்கொள்ள எம்மால் முடிந்தது.

" 5 இலட்சம் படைவீரர்களை கொண்டு யுத்தத்தை நடத்தியதாலேயே வெற்றிப்பெற்றதாக கோட்டாபய இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளார். உண்மையில் அவ்வளவு வீரர்கள் எம்மிடம் இருக்கவில்லை. நான் இராணுவ தளபதியாக பொறுப்பேற்ற போது, 1 இலட்சத்து 10 ஆயிரம் இராணுவத்தினர் இருந்தனர். அதனை நான் இரண்டு இலட்சமாக அதிகரித்தேன். கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார். 

இதேவேளை, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தன் மீது நம்பிக்கை வைத்து பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சராக தன்னை நியமிப்பதாக பொதுமக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளதாகவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

“அவ்வாறு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படும் பட்சத்தில், நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழும் நிலையை நிச்சயமாக நான் உருவாக்குவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/பயஙகரவதகள-அழபபதறககவ-யததம-கடட-அறயமல-பசகறர/150-240164

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரையே சம் சும் மாவை கும்பல் சனாதிபதியாக ஆக்கவும் நின்றது.

சம் சும் மாவை கும்பலின் சாணக்கியம் என்பது தமிழர்களை தலைநிமிரவே விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக உள்ளது. தம் சுயலாபம் மட்டுமே குறிக்கோள். 

Link to comment
Share on other sites

ஒரு பக்கம் மகிந்த அண்ட் கோ, தாங்கள் தான் நாட்டை பாதுகாக்கும் வல்லமை படைத்தவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்ட முனைகிறார்கள். அதற்கு கோத்தா, அவரின் கடந்த கால 'வரலாற்றை' முன்னிலை படுத்த முனைகிறார். அதை சாதாரண சிங்கள மக்களாலும் உள்வாங்க முடிகின்றது. இந்த தலைப்பில் கோத்தாவும் பேசும் 'வல்லமை' கொண்டவராகவும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பொழுது 'இலகுவானவராகவும்' காணப்படுகின்றார். (மற்றைய கேள்விகளுக்கு தடுமாறுகின்றார் போலுள்ளது). 

இதை சிங்கள மக்கள் மனதில் நன்றாக பதியமுன் சஜித் தரப்பு சரத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது. தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்றும், தங்களாலும் பாதுகாப்பை 'உறுதிப்படுத்த' முடியும் என காட்ட முனைகிறார்கள். 

இதனால், தேர்தல் அரங்கத்தில் யார் தமிழர்களை அதிகம் கொன்றவர்கள், அழிக்கக்கூடியவர்கள் என்ற வாதங்களை முன்வைக்கின்றனர்.   

இந்த வாதம் தொடர்ந்தால், சில மறைக்கப்பட்ட  உண்மைகள்  சிலவேளைகளில் வெளிவரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசையும் பொருளின்... இசையும் நானே!

ஆடும் படையின் நாயகன் நானே!

நான் அசைந்தால்..,அசையும் ஆமி எல்லாமே..!

அறிவாய் கோத்தா...!

உன் ஆணவம் பெரிதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/19/2019 at 3:08 AM, ampanai said:

. கடற்படை, விமானப்படை, பொலிஸார் உள்ளிட சுமார் 3 இலட்சம் வீரர்களே போரில் ஈடுபட்டிருந்தனர். எனினும், 5 இலட்சம் என்றே கோட்டாபய இன்றும் நம்பிக்கொண்டிருக்கின்றார்”. என்றார்.

அடேங்க அப்பா இவ்வளவு தொகை படையை வைத்து இலங்கையில்   ஒரு மூன்றாம் உலகப் போரையே நடத்தி முடித்து  விட்டார்கள் போலிருக்கிறதே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.