Jump to content

அணித்தலைவர் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும் சர்பராஸ் அகமட் நீக்கம்


Recommended Posts

பாக்கிஸ்தானின் டெஸ்ட் அணித்தலைவர் மற்றும் ரி 20 அணித்தலைவர் பதவியிலிருந்தும் அணியிலிருந்தும்  சர்பராஸ் அகமட்டை நீக்கியுள்ளதாக பாக்கிஸ்தானின் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாக்கிஸ்தான் டெஸ்ட் அணிக்கு அசார் அலி தலைமை தாங்குவார் என தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

safraz_ahmad_june_3.jpg

 

 ரி2அணிக்கு பாபர் அசாம் தலைமை தாங்குவார் எனவும் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.சமீப காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் பாக்கிஸ்தான் சந்தித்த மோசமான தோல்விகளை தொடர்ந்தே தெரிவுக்குழுவினர் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாக்கிஸ்தான் ஏழாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ரி20 போட்டிகளில் பாக்கிஸ்தான் படுதோல்வியடைந்ததும் தெரிவுக்குழுவின் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.

அணித்தலைவராகவும் வீரராகவும் சிறப்பாக விளையாடியுள்ள  சர்பராஸ்அகமட்டை தலைமை பொறுப்பிலிருந்து நீக்கும் முடிவு கடினமாவொன்று என பாக்கிஸ்தான் தெரிவுக்குழுவின் தலைவர் இசான் மனி தெரிவித்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் அவர் சிறப்பாக விளையாடவில்லை அவரது தன்னம்பிக்கையும் குறைவடைந்து காணப்பட்டது, என மேலும் தெரிவித்துள்ள அவர் அணியின் நலனை  கருத்தில்கொண்டு சர்பராஸ்அகமட்டை தலைமை பதவியிலிருந்து நீக்க தீர்மானித்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மீண்டும் சிறப்பாக சர்வதேச போட்டிகளில் விளையாடும் நிலையை எட்டுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்துள்ளோம் அவர் மீண்டும் திரும்பி வருவார் எனவும் இசான் மனி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/67155

 

Link to comment
Share on other sites

உலக கோப்பையில் சவாறஸ் அணி இமாட் வசிம் அணி என குழுவுக்குள் போட்டி நிலைவிய நிலைமையில் குழு தலைவர் மாற்றப்பட்டார் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

சர்பிராஸ் பதவி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பின்னர் வீரர்கள் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை

பாக்கிஸ்தானின் டெஸ்ட் மற்றும் ரி 20 அணிகளின் தலைமைபொறுப்பிலிருந்து சர்பராஸ் அகமட் நீக்கப்ப்ட்ட பின்னர் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தனது டுவிட்டரில் பதிவு செய்த வீடியோவொன்றினால் சர்ச்சை உருவாகியுள்ளது.

சர்பராஸ் அகமட நீக்கப்பட்ட அறிவிப்பின் பின்னர் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தனது டுவிட்டரில் வீரர்கள் பயிற்சியின் போது நடனமாடுவதை காண்பிக்கும் வீடியோவை வெளியிட்ட பின்னர்உடனடியாக அதனை அகற்றியது.

எனினும் அந்த டுவிட்டர் செய்தியை பத்திரிகையாளர் ஒருவர் மீள் பதிவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து பாக்கிஸ்தான் ரசிகர்கள்  கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபைக்கு எதிராக  கடும் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த டுவிட்டர் செய்திக்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ள  பாக்கிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை குறிப்பிட்ட வீடியோ பொருத்தமற்ற தருணத்தில் வெளியாகியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/67196

இந்த வீடியோவை  ரி20 உலக கிண்ணப்போட்டி விளம்பரங்களிற்காக நாங்கள் உருவாக்கியிருந்தோம் எனினும் தலைமைத்துவ மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியான தருணத்தில் இந்த வீடியோ வெளியாகிவிட்டது அதற்காக மன்னிப்பு கோருகின்றோம் என பாக்கிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது

எனினும் இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.