Jump to content

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?


Recommended Posts

பிரஹ்மா  செல்லானி ( புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர்)

 

தமிழில் ரஜீபன்

 

 ஆசியாவின்  மிகவும் பழமையான ஜனநாயகம் ஆபத்தை சந்திக்கலாம்..இலங்கையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ராஜபக்சகுடும்பத்தை சேர்ந்த ஒருவரை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.இந்த குடும்பத்திற்கும் ஏதேச்சாதிகாரத்திற்கும், வன்முறைக்கும், ஊழலிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கறியப்பட்ட விடயம்.

ஒரு வருடத்திற்கு முன்னர் விரைவில் பதவி விலகவுள்ள ஜனாதிபதி சிறிசேன மேற்கொண்ட அரசமைப்பு சதி முயற்சியிலிருந்து இலங்கையின் ஜனநாயகம் தப்பியது. இம்முறை கோத்தாபய ராஜபக்சவின் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இலங்கையின் ஜனநாயகம் தப்பாது.

கோத்தாபய தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் முன்னிலையில்  நிற்கும் ஒருவர் -தனது சகோதாரர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியுள்ளார்.2015 இல் முடிவிற்கு வந்த மகிந்தராஜபக்சவின் நீண்ட கால ஆட்சியின் குணாதியசங்களாக குடும்ப  ஆட்சி காணப்பட்டது.நான்கு சகோதரர்கள் அரசாங்கத்தின் பெரும்பான்மையான அமைச்சுகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்ததுடன்,பொது நிதியில் 80 வீதத்தினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர்.

ஜனாதிபதியின் அதிகாரத்தை மெல்லமெல்ல அதிகரித்ததன் மூலம் மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளையும் யுத்த குற்றச்சாட்டுகளையும் சந்தித்த அரை சர்வாதிகார ஆட்சியை மகிந்த உருவாக்கினார்.

மேலும் மகிந்தவின் சீனா ஆதரவு கொள்கை இலங்கையில் சீனா தனது செல்வாக்கை மிகவேகமாக பரப்புவதற்கு உதவியது.மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட கடன்கள் காரணமாகவே இந்து சமுத்திரத்தின் மிகவும் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமான அம்பாந்தோட்டை துறைமுகத்தை சிறிசேன சீனாவிற்கு 99 வருட குத்தகைக்கு வழங்கவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார்.

இது ஹொங்கொங் விட்டுக்கொடுக்கப்பட்ட விதத்தில் அமைந்திருந்தது.

கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரின் கறைபடிந்த பாரம்பரியத்திற்கு மீண்டும் புத்துயுர் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இலங்கையின் ஜனாதிபதியாவதன் மூலம் இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தவேளை இழைத்த யுத்த குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவில் காணப்படும் வழக்குகளில் இருந்து அவர் விடுபாட்டுரிமையை பெற்றுக்கொள்வார்.

இலங்கையின் 25 வருடகால யுத்தம் 2009 இல் முடிவிற்கு வருவதை மகிந்தராஜபக்ச மேற்பார்வை செய்தார். ஆனால் அவர் சமாதானத்தின் முகவர் இல்லை.

Mahinda-Gota.jpg

யுத்தத்தின் இறுதி வருடங்களில் அப்பாவி பொதுமக்கள் -மனிதாபிமான பணியாளர்கள் -ராஜபக்ச  குடும்பத்தின்  அரசியல் எதிரிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல்போயினர் அல்லது சித்திரவதை செய்யப்பட்டனர்.

மேலும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி இராணுவதாக்குதல் என்பது சர்வதேச சட்டங்களின் மீது  மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல் என ஐநா தெரிவித்துள்ளது.இதன்போது 40,000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்கள் சரணடைந்தவேளை அவர்களை சுட்டுக்கொல்லுமாறு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டார் என யுத்த கால இராணுவதளபதி  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அதிகளவிற்கு இந்துக்களான தமிழர்கள் மீது பாரிய கொடுமைகளை இழைத்தபோதிலும் ராஜபக்ச குடும்பத்தவர்கள் இலங்கையின் சிங்கள பெரும்பான்மையினத்தவர்களின் கதாநாயகர்களாக மாறினார்கள்.

இது பல்லின தேசமென்ற என்ற இலங்கையின் அடையாளத்திற்கு பதில் ஒரு இனத்திற்கான தேசமென்ற அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்வதற்கான துணிச்சலை மகிந்தராஜபக்சவிற்கு வழங்கியது.

இந்த அணுகுமுறையை கோத்தாபய ராஜபக்ச நிச்சயமாக புதுப்பிக்கப்போகின்றார், எனினும் இந்த அணுகுமுறை இலங்கையில் உள்நாட்டு யுத்தத்திற்கு காரணமாக அமைந்த இனங்களிற்கு இடையிலான பதட்டத்தை குறைப்பதற்கு உதவப்போவதில்லை.

சமீபத்தில் இலங்கையில் சிங்களவர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் இடையில் பதட்டம் உருவாகியிருந்தது,உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இந்த பதட்டநிலை பலமடங்காக அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் மோசமான பயங்கரவாத தாக்குதல் மாத்திரமல்ல,முஸ்லீம்கள் ஒட்டுமொத்த சனத்தொகையில் சிறிய அளவினராக காணப்படும் இலங்கையில் இடம்பெற்ற முதலாவது இஸ்லாமியதாக்குதலாகும்.

ஆனால் இவ்வாறான தாக்குதல் இடம்பெறலாம் என்பது குறித்த எதிhவுகூறல்கள் வெளியாகமலிருக்கவில்லை.

gota_oct_18.jpg

இலங்கையில் உடனடி தாக்குதல் இடம்பெறலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரித்திருந்ததுடன் தாக்குதலில் ஈடுபடக்கூடியவர்கள் குறித்த விபரங்களையும் பாதுகாப்பு மற்றும் பொலிஸாரிற்கு வழங்கியிருந்தனர் என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருந்தார்.

ஆனால் தனக்கு அந்த எச்சரிக்கை கிடைக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் சிறிசேனவின் சதிப்புரட்சி முயற்சியின் இலக்காக காணப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தான் இந்த எச்சரிக்கைகள் குறித்து அறியவில்லை என தெரிவித்திருந்தார்.

ராஜபக்சாக்கள் இஸ்லாமிய குண்டுதாக்குதல்களை ஏற்கனவே சிங்களபௌத்த தேசியவாத உணர்வுகளை தீவிரப்படுத்துவதற்காக பயன்படுத்தியுள்ளனர்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இஸ்லாமிய தீவிரவாதத்தை நசுக்குவதற்காக இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பினை பலப்படுத்துவேன் பொதுமக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீற அறிமுகப்படுத்துவேன் என கோத்தாபய ராஜபக்ச தனது ஆதரவாளர்களிற்கு ஏற்கனவே வாக்குறுதி வழங்கியுள்ளார்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் இன்னமும் தீவிர நம்பிக்கை கொண்டுள்ள யுத்த குற்றவாளியொருவர் இலங்கையின் ஜனாதிபதியாவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவவது சிறுபான்மை குழுவினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் சிவில் உரிமை ஆர்வலர்களிற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை இன்னமும் கவலையளிக்ககூடிய செய்திகளும் உள்ளன.கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் சீனாவுடனான உறவுகளை அவர் புதுப்பிப்பார் என அவரது முகாமை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மும்முரமான கடல்பாதைக்கு அருகே இலங்கை உள்ளதால் அவரின் இந்த உறுதிமொழிகளின் தாக்கம் இலங்கைக்கு அப்பாலும் எதிரொலிக்ககூடியதாக காணப்படுகின்றது.

சீனாவிற்கும் இந்தோ பசுபிக்கின் ஜனநாயக வல்லரசுகளிற்கும் இடையிலான கடல்சார் மோதலில் இலங்கை ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கலாம்.இந்து சமுத்திரத்தின் முக்கிய கடற்பாதைகளில் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் வர்த்தக கட்டுமானங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் இந்தியாவை சுற்றிவளைக்கும் தந்திரோபாயத்தை சீனா பின்பற்றுகின்றது.

சீனா ஜனாதிபதி தனது புதியபட்டுப்பாதை திட்டத்தின்  மையம் என வர்ணித்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகம் மிகவும் பெறுமதியான முத்து ஆகும்.

 சீனா ஜனாதிபதியின் புதிய பட்டுப்பாதை திட்டம் குறித்து சர்வதேச அளவில் அவநம்பிக்கை உண்டாகியுள்ள இந்த தருணத்தில் ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் இலங்கையில் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றமை சீனாவிற்கு மிகவும் இனிப்பான செய்தியாகும்.சீனா இலங்கையை தனது இராணுவ தளமாக மாற்ற எண்ணியுள்ளது.

ஆனால் ஏனைய அனைவருக்கும் இது மோசமான செய்தியாகும்.

கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாவது அவரது சகோதரரின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களிற்கு ஏற்கனவே தாமதமாகியுள்ள நீதி கிடைக்காமல் தடுக்கப்படுகின்ற நிலையை உருவாக்கும்.

இன மற்றும் மத அடிப்படையிலான பதட்டங்களை அதிகரிக்கும்,அத்துடன் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா மேலாதிக்கத்தை பெறும் நிலையை உருவாக்கும்.

இலங்கையின் ஜனநாயகம் முன்னர் எப்போதையும் விட தற்போது அதிகம் பாதிக்கப்படக்கூடியதாக காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/67182

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Brahma Chellaney, சொறி சிங்களத்தை சனநாயகம் என்று வர்ணித்திருப்பது,  Brahma Chellaney சிங்கள இனநாயகத்தை நியப்படுத்தி உள்ளார்.

இவை எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாக்கள,கேரளா நம்பூதிரிகள், நாராயணங்கள், மேனன்கள், மாபியாக்கள் என்பதை பரந்து பட்ட ஹிந்திய கொள்கைவகுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளாதவரை, கிந்தியா நகர முடியாது.

மேலும், கிந்தியவே, ராஜ்பகசக்களின் தமிழினப்படுகொலையில் முதன்மைப் பங்காளர் என்பதை Brahma Chellaney மூடி மறைப்பது,  Brahma Chellaney நேர்மையற்ற ஆய்வாளர் என்பதை ஏற்றுக்கொள்கிறாரா?

சிவ் சங்கர் மேனனே கிந்தியாவின் தமிழினப் படுகொலை பங்கை ஏற்றுக்கொண்ட பின், Brahma Chellaney அதை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.
    

Link to comment
Share on other sites

மூலம் : ( ஆங்கிலத்தில் ) 

https://www.project-syndicate.org/commentary/sri-lanka-election-rajapaksa-end-of-democracy-by-brahma-chellaney-2019-10

பிரஹ்மா  செல்லானி, புதுடில்லி கொள்கை ஆராய்ச்சிகளிற்கான நிலையத்தின் பேராசிரியர் - விக்கிபீடிய மூலம் அறிவது இவர் கடல், கடல் சார் துறைகள் பற்றிய கட்டுரைகளை வரைந்துள்ளார். 

அதி கூடிய கவனத்தை சீனா சார்ந்து எழுதுகின்றார். அதாவது, சீனாவின் கடல் சார்ந்த இராணுவ - பொருளாதார விரியாக்கம், தென் சீன கடல் பற்றி குறிப்பிடுகின்றார். 

இந்தியாவை சுற்றி சீனா தனது வலைப்பின்னலை இறுக்கி வருகின்றது என்கிறார். 

1185177791496503296?ref_src=twsrc%5Egoog

Link to comment
Share on other sites

அமேரிக்கா கோத்தா சனாதிபதி தேர்தலில் வெல்வதை விரும்பலாம் ; காரணம் அதன் விருப்பம் சார்பான உடன்படிக்கைகளில் கையெழுத்து ஐடா வைக்கலாம். 

சீனா அவ்வாறான உடன்படிக்கையை எதிர்க்கும். சீனாவை மீறி மகிந்த கூட்டம் அமெரிக்காவிற்கு ஆதரவை தருமா என்பது விதையில்லா வினா. 

அதேவேளை, இந்தியா கோத்தா வருவதை விரும்பாது போலுள்ளது. காரணம், சீன - மகிந்த சிநேகிதம் பலமானது. இது பற்றி அமெரிக்காவிற்கும் கூறி இருக்கும். 

அதேவேளை, சஜித் வெல்வதை இந்தியா கோத்தாவை விட விரும்பக்கூடும். ஆனால், அது சாத்தியமாகமல் போனால் என்ற காரணத்தால் வடக்கில் மற்றும் கிழக்கில் தனது முதலீடுகளை அதிகரிக்கின்றது என பார்க்கலாம். யாழ் சர்வதேச விமான நிலையம் அதன் ஒரு அங்கம் என பார்க்கலாம். 

இதில் திறக்கும் கதவுகளை சாதகமாக தமிழினத்திற்கு பயன்படுத்த எமக்குள் ஒற்றுமையும் சாணக்கியமும் தேவை. 
 

Link to comment
Share on other sites

இலங்கையின் ஜனநாயகத்தின் முடிவு ?

இலங்கையில் எப்போது சனநாயகம் இருந்தது முடிவதற்கு......??????? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.