Jump to content

•யாழ் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமா? அல்லது இந்திய ஆக்கிரமிப்பு நிலையமா?


Recommended Posts

 
 
Image may contain: airplane
Tholar Balan

•யாழ் விமான நிலையம்
சர்வதேச விமான நிலையமா? அல்லது
இந்திய ஆக்கிரமிப்பு நிலையமா?

ஆங்கிலேயர்கள் விமான நிலையங்களை கட்டி விமானங்களை தரை இறக்கியபோது அதை யாரும் வரவேற்று மகிழவில்லை.

ஏனெனில் அது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது.

ஆனால் இப்போது இந்தியஅரசு யாழ் விமான நிலையத்தை திருத்தி அதில் தனது விமானத்தை இறக்கும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஏனெனில் இது இந்திய ஆக்கிரமிப்பின் நிலையம் என்பதை எம்மால் உணரமுடியாதபடி எமது தலைவர்கள் நன்றாக ஏமாற்றியுள்ளனர்.

இங்கு எழும் கேள்வி என்னவெனில், இது சர்வதேச விமான நிலையம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் சர்வதேச விமானங்கள் இங்கு இறங்குவதற்கு இந்திய அரசு அனுமதிக்குமா?

ஏனெனில், 2002ல் இலங்கை பாதுகாப்பு செயலராக இருந்த ஒஸ்ரின் பெர்ணாந்து என்பவர் எழுதிய " My Belt is Whiter “ என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ பலாலி விமான நிலையத்தை செப்பனிட இந்தியஅரசு இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. முதலாவது நிபந்தனை, இந்திய விமானங்கள் தவிர வேறு எந்த விமானங்களும் பலாலியில் இறங்க அனுமதிக்கக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, இந்தியா கேட்கும் நேரத்தில் விமானநிலையம் இந்தியாவிடம் கையளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனையின்படி சர்வதேச விமானங்கள் யாழ் விமானநிலையத்தில் இறங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதைவிட ஒரு யுத்தம் எற்படும் நேரத்தில் விமான நிலையத்தை இந்திய அரசு கேட்டால் கையளிக்க வேண்டும். இதனால் இந்தியாவை தாக்க நினைக்கும்நாடு யாழ் விமான நிலையத்தை தாக்க முற்படும். இதனால் அநியாயமாக தமிழ் மக்கள் இறக்க நேரிடும்.

இந்த சந்தேகங்களுக்கு உரிய பதில் தரவேண்டியது இலங்கை இந்திய அரசுகளின் கடமையாகும்.

பதில் தருவார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:
...

“ பலாலி விமான நிலையத்தை செப்பனிட இந்தியஅரசு இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. முதலாவது நிபந்தனை, இந்திய விமானங்கள் தவிர வேறு எந்த விமானங்களும் பலாலியில் இறங்க அனுமதிக்கக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, இந்தியா கேட்கும் நேரத்தில் விமானநிலையம் இந்தியாவிடம் கையளிக்க வேண்டும்..

இருநாடுகளுக்கிடையே இப்படியொரு புரிந்துணர்வு ஒப்பந்தம்  இருக்கிறதா..? 🙄

இருக்க வாய்ப்புண்டு..!

'ஆதாயமில்லாமல் செட்டியார் ஆத்தில் இறங்க மாட்டார்' என்றவொரு சொலவடை இங்கே உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.