Jump to content

புதிய அத்தியாயம் ஆரம்பம்; வடக்கில் பொருளாதார புரட்சி


Recommended Posts

இன நல்லிணக்கத்தின் சின்னம்
சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, மத்திய கிழக்கு
நாடுகளுக்கும் பலாலியிலிருந்து சேவை -  பிரதமர் பெருமிதம்

இலங்கை சிவில் விமான சேவையில் புதியதோர் அத்தியாயமாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றுக் காலை (17) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், முதலாவது விமானப் பயணத்தை ஆரம்பித்து எயார் இந்தியா எலைன்ஸ் (Air India Alliance) நிறுவனத்திற்குச் சொந்தமான விமானமொன்று சென்னையிலிருந்து அந்நாட்டின் விமான சேவை அதிகாரிகளுடன் நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

எனினும் நாளாந்த விமான சேவைகள் நவம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அர்ஜுன ரணதுங்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட மாகாண மக்கள் பிரதிநிதிகளும் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித் சிங் சந்து, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

விமான நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 

இன நல்லிணக்கத்தின் சின்னமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முழுமையான பலன்களை வடக்கு மக்கள் இன்னும் 3 வருடங்களில் அனுபவிக்க முடியும்.

"இன்று யாழ்ப்பாணத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தினமாகும். கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலேயே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த தீர்மானித்தோம். அதற்கான பணிகள் இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு இடையில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போதும் நாம் அதனைக் கைவிடவில்லை.

இத்தகைய சூழ்நிலையிலும், விமான நிலைய பணிகள் இடம்பெறுமா? எனச் சிலர் பிரசாரம் செய்தனர். எனினும், 6 மாத காலத்திற்குள் வெற்றிகரமாக இச் செயற்திட்டத்தை நிறைவு செய்துள்ளோம். இது முதற்கட்டமே. இதனூடாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், விமான சேவையை மேற்கொள்வதே எமது நோக்கம். இரண்டாம் கட்டமாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விமான சேவையை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும்.

இது வடக்கு மக்களின் பொருளாதாரப் புரட்சியாக கருதமுடியும். அத்துடன், வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இது வாய்ப்பாக அமைவதுடன், அதனூடான பொருளாதாரமும், மேம்படுத்தப்படும். அடுத்து மட்டக்களப்பிலும் சர்வதேச விமான நிலையங்களை நிறுவுவதே எமது எதிர்பார்ப்பு. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இதன் மூலம் வழிவகுக்கப்படும்.

யாழில் ஹோட்டல் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கும், சுற்றுலாத்துறை தொடர்பான பயிற்சி நிலையம் நிறுவுவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர் துறைசார்ந்தவர்களுடன் யாழ்.மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன், சிறந்த திட்டமொன்று தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

காங்கேசன்துறை துறைமுகமும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2015 ஆம் ஆண்டில் நாம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி செயற்திட்டங்களை ஆரம்பித்தோம். முதற்கட்டமாக படையினர் வசமிருந்த காணிகளை மக்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம். அதிலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்னும் 5 வருடங்களில் பாரிய முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பது உறுதி. அரசாங்கத்தின் கடந்த 5 வருட காலமே, மிக கஸ்டமான காலமாக இருந்தது. எனினும், நாம் இது போன்ற செயற்திட்டங்களை ஆரம்பித்து வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம்.

இந்திய அரசாங்கம், எமக்குத் தொடர்ச்சியான உதவிகளைச் செய்து வருகின்றது. நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலும், அதன் பின்னரும், இந்தியா தொடர்ச்சியான உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது. இரு நாட்டினரும் பொருளாதார மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவோம்" என்றார்.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக யாழ்ப்பாணம், பலாலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச விமான நிலையத்திற்கு 2,250 மில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,950 மில்லியன் ரூபாய் நிதியும் இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபாய் நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் தற்போது விமான நெறிப்படுத்தல் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் பிரதான ஓடு பாதை 950 மீற்றர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இங்கு 72 ஆசனங்களுக்குக் குறைந்த பொம்பார்டியர் - 100 (Bombardier - 100) வகை விமானங்களை ஏற்றி இறக்கக்கூடிய வசதிகள் உள்ளன.

1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பிரிட்டிஸ் ஆட்சியில் உலக யுத்தத்தின் போது, பலாலி விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, எயார் சிலோன் என்ற பெயரில் விமான சேவைகள் நடைபெற்றுள்ளன. அதன்பின்னர் 1980 ஆம் ஆண்டின் பின்பு முற்றாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு விமானப் படை அதனைப் பொறுப்பேற்று சிவில் விமான சேவைகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

யாழிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், சுமித்தி தங்கராசா

https://www.thinakaran.lk/2019/10/18/உள்நாடு/42252/புதிய-அத்தியாயம்-ஆரம்பம்-வடக்கில்-பொருளாதார-புரட்சி

 

 

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண மண்ணில் சர்வதேச விமான நிலையம்
2019-10-18 12:14:20
 
பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த் தப்பட்டு நேற்று 2019ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 17ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்துள்ளனர். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்துவதில் இந்தி யாவின் வகிபங்கு காத்திரமானது. தவிர, பலாலி விமானத்தளம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படுவதில் இந்தியாவின் கடும் பிரயத்தனம் இருந்ததை இவ்விடத்தில் கூறித்தானாக வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தற்போது தெற் காசிய நாடுகளிலும் அதனைத் தொடர்ந்து உலக நாடுகளிலும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பதிவாகிக் கொள்வது நம் யாழ்ப்பாண மண்ணுக்குப் பெருமை தருவ தாகும்.
 
இதைவிட, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் ஒன்றாகச் சேர்ந்து திறந்து வைத்துள்ளமை, இலங்கை யின் அரசியல் வரலாற்றில் நினைவுக்குரிய விடயமாகும். 
அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்ற வேளையில், ஒக்ரோபர் 17ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத் தமை ஜனாதிபதி மைத்திரியின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நிகழ்வாகும்.

இதை இன்னொரு வடிவத்தில் கூறுவதாயின் யாழ்ப்பாணம் சர்வதேச விமான  நிலை யத்தை ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி திறந்து வைத்து நவம்பர் 17ஆம் திகதி ஜனாதிபதிப் பதவியில் இருந்து விடைபெறுகின்ற நிகழ்வு நடந்தாகப் போகிறது.
 
எதுஎவ்வாறாயினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்பது யாழ்ப்பாண மண்ணுக்குப் பெருமை தருவதாக இருந்தால், அந்த விமான நிலையத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
 
பொதுவில் தமிழர்கள் சிறுபான்மை இனத்தினர் என்ற ஒரே காரணத்தால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.
இவ்வாறாக தமிழர்களை வேலைக்கு நியமிக்காத நிறுவனங்களில் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் அடங்கும்.
 
எனவே மேற்கூறப்பட்ட குறைபாட்டை நிவர்த்திப்பதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்ற தமிழர்களுக்கு அதீத இடம் கொடுக்கப்பட வேண்டும். இதனை தமிழ் அரசியல் தரப்பு வலியுறுத்துவது அவசியம்.  
 
Link to comment
Share on other sites

இது நகைச்சுவையாக இருந்தாலும் சில உண்மைகளை அழகாக கூறுகின்றது. 🙂 

 

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:
பொதுவில் தமிழர்கள் சிறுபான்மை இனத்தினர் என்ற ஒரே காரணத்தால் இந்த நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.
இவ்வாறாக தமிழர்களை வேலைக்கு நியமிக்காத நிறுவனங்களில் இலங்கையிலுள்ள விமான நிலையங்களும் அடங்கும்.
 

நாட்டின் முக்கியமான நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் நாட்டு மக்களுடன் அவர்கள் மொழியில் தொடர்பு கொள்ளும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் பெரும்பாலானவர்களுக்கு சிங்களம் மட்டுமே தெரியும். தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு சிங்கள அறிவு இல்லாததால் வேலைவாய்ப்பு  வழங்கப் படுவதில்லை.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.