Jump to content

அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையைப் பயன்படுத்துவதா? குஷ்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் ஆதாயத்துக்காக ராஜீவ் கொலையைப் பயன்படுத்துவதா? குஷ்பு

ராஜீவ்காந்தி கொலையைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது என அகில இந்தியக் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், முன்னணி தமிழ் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

“சில நாட்களாகத் தமிழக அரசியல் களத்தில் ராஜீவ்காந்தியின் படுகொலை சம்பவம் விவாதிக்கப்படும் விதம் வேதனை அளிக்கிறது. நாட்டின் பிரதமர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்திப் பேசும் சீமானுக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.

kosupoo.jpg

கொலை செய்பவர்களும், கொலைக் குற்றவாளிகளும் தங்களுக்குச் சாதகமாக எதையாவது காரணத்தைத் தேடுவது இயல்பு. ஆனால் 7 பேர் விடுதலைக்காகப் பிரதமரைக் கொலை செய்ததைப் பெருமையாகப் பேசும் ஒவ்வொருவரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுதலை செய்யும் முடிவை ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் நிராகரித்து இருக்கிறார். இனிமேல் யார் என்ன சொல்ல முடியும்? இதற்குச் சட்டம்தான் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்பம் அவர்களை விடுதலை செய்வதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறி விட்டது.

ஆனால், அதற்கு மேல் நாடு என்று வரும் பொழுது, சட்டம் தான் இதனை முடிவு செய்யும். ராஜீவ்காந்தியோடு பழகியவர்களுக்கு அவர் எப்படிப்பட்ட தலைவர் என்பது தெரியும். மகாத்மா காந்தியோடு பழகியவர்களுக்கு அவரைப்பற்றித் தெரியும். அவர்கள் காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே  இன்று இருந்தாலும் விடுதலை செய்யக் கூடாது என்று தான் சொல்வார்கள்.

அதே போல் தான் பணியாற்றியவர்கள், பழகியவர்கள் அவரை கொலை செய்தவர்களை விடுவிக்கக் கூடாது என்கிறார்கள். கட்சி ரீதியாக இந்த விவகாரத்தைப் பேசும் தகுதி காங்கிரஸிற்கு மட்டும்தான் உண்டு. ஏனெனில் அந்த கட்சி தங்கள் தலைவரை இழந்திருக்கிறது. தண்டனை வழங்கப்பட்டவர்கள் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இதற்குச் சட்டம்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிக்க கூடாது.” என்றார்.
 

https://www.virakesari.lk/article/67202

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவா எல்லாம் அரசியல் பேசுறது.. கேவலமா இருக்குது.

ஈழத்தில் பெரும் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய ஹிந்திய படைகளின் கதாநாயகனான.. ராஜீவ் காந்தி கொலையை வைத்து.. மொத்த தமிழினதையும்... சீரழித்து.. ஈழத்தில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை கருவறுத்ததை எப்படிம்மா பார்க்கிறீர்கள்..??! அது நியாயமா..???! 

ராஜீவ் காந்தி கொலையை ஈழத்தை கருவறுக்க பாவிக்கலாமா..??! 

ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்படாத எத்தனையோ அப்பாவிகளை கொன்றொழித்து.. ஒரு தேசத்தையே அடிமைப்படுத்தி.. இன அழிப்பு ஆளாக்கி இருக்கிறீர்களே.. இதே ராஜீவ் காந்தி கொலையைப் பயன்படுத்தி.. அதற்கு எங்கு போய் நீதி கேட்பது.

ராஜீவ் காந்தி கொலைக்கு சம்பந்தட்டதாக கருதப்படும்.. சுப்பிரமணியம் சுவாமி.. உட்பட்ட பலர் வெளில இருக்கிறார்கள்.. அவர்களை எல்லாம் பாதுகாக்கும் ஹிந்தியா.. ஏன் ஈழத்தமிழர்களை மட்டும் ஹிந்தியப் படைகள் காலத்திலும் சரி.. ராஜீவ் கொலைக்கு பின்னான காலத்திலும் சரி.. ஈழப் போராட்ட பின்னடைவின் பின்னும் சரி.. தண்டித்துக் கொண்டே இருக்கிறது... காரணம்..

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதே ஈழத்தை கருவறுக்கும் நோக்கோடு அமைந்த ஒரு சர்வதேச.. ஹிந்திய.. சிங்கள கூட்டுத்தேவைக்குத்தான் என்பதே வெளிப்படை உண்மை. அதை ஏன் பேசுகிறீர்கள் இல்லை... யாரும். 

Link to comment
Share on other sites

இன்று யாழ் வைத்தியசாலை படுகொலை நடந்தேறிய நாள். இக்கொலையின்போது ராயீவ் காந்தி பதவியில் இருந்தார், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இன்று யாழ் வைத்தியசாலை படுகொலை நடந்தேறிய நாள். இக்கொலையின்போது ராயீவ் காந்தி பதவியில் இருந்தார், 

காங்கிரஸ் கட்சி ஒரு கொலையை மையப்படுத்தி செய்த தொடர் பிரச்சாரங்களின் விளைவு நாம் எம் இனத்தின் எதிர்காலத்தையே இழக்கும் அளவுக்கு கொண்டு செல்ல அனுமதித்தது.

எமது மெளனங்களும்.. ஹிந்திய வல்லாதிக்க.. ராஜீவ் அரசின்.. அரச படைகளின் கொடுமைகளை நாம் தொடர்ச்சியாக பதிவு செய்யாததும்.. உலக அளவில் அதனை தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தத் தவறியதும்.. நாம் நமக்கான நியாயங்களை நீதிகளை தொலைத்து.. பேரழிவுகளை சந்திக்க.. காங்கிரஸ் தி மு க.. அதி முக கும்பல்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. 

இதே தவறையே நாம் மீண்டும் மீண்டும் செய்து கொண்டு..

அன்று கிளாலியில் எம் உறவுகளை வேட்டையாடி.. எம் மீது கடுமையான பொருண்மியத் தடைகளை விதித்த பிரேமதாசவின் வாரிசை எமக்கான தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் மறதி பிடித்த சுயநல மிகை அரசியல்வாதிகளின் பேச்சோடு மட்டுமன்றி..

எம் மீது இன அழிப்பை பகிரங்கமாகவே கட்டவிழ்த்துவிட்ட கோத்தபாயவுக்கு ஆதரவு என்று சொல்லி செல்லும் நிலையில் எமக்குள் ஒரு பிரிவு அடிப்படை மனித உணர்வின் ஈவு இரக்கமின்றி இருக்கும் கொடுமையை..

தமிழினத்தில் கொண்டிருப்பது தான்.. தமிழினத்தின் அரும்பெரும் தியாகங்களின் மத்தியிலும் அந்த இன விடுதலை.. தேச விடுதலை.. சமூக விடுதலை இன்றி.. இந்தப் பூமிப்பந்தில்.. அடிமைப்பட்டுக்கிடக்க முக்கிய காரணம்.

எனிவரும் சந்ததியாவது.. நாம் தமிழராக ஒருங்கிணைந்து.. இனம்.. மொழி..தேசம் என்று சிந்தித்து உரிமை வெல்லுமா.. ??!

வெல்ல வேண்டும். வெல்ல வேண்டும் என்றால்.. எமது இனத்தின் கடந்த கால வரலாறு அவர்களை நோக்கி சரியாகச் சொல்லப்படுவதோடு.. எமது இனத்தின் துன்பியல்.. உலகின் கண்களின் முன் சதா நிறுத்தப்படுவதும் அவசியம்.

இதனை இந்த ராஜீவ் கொலையை ஹிந்தியர்கள் கையாள்வதில் இருந்து பாடமாக நாம் கற்றுக்கொள்வது முக்கியம்.

இந்திரா அம்மையாரின் கொலைக்கு இல்லாத முதன்மை ராஜீவின் கொலைக்கு வரக்காரணம்.. எமது துன்பியலை நாம் தொடர்ந்து உலகின் முன் நிறுத்தாததும் தான்.  சீக்கியர்கள் அப்படியல்ல. அதனால் தான் இந்திரா கொலை அடைக்கி வாசிக்கிறார்கள். 

இந்திரா ஒரு பொற்கோவில் படுகொலை தான் செய்தார். ஆனால்.. ராஜீவும் இந்தியப் படைகளும் ஈழத்தில் செய்தது பல பொற்கோவில் படுகொலைகளாகும். ஆனாலும்.. நாம்.. எல்லாத்தையும் மறந்து மறைத்து மரத்து வாழ்வதால்.. இன்று எம் இனத்தை நாமே அடிமைப்படுத்தி.. படுகுழிக்குள் தள்ளியுள்ளோம். 

நாம் தான் எனி சரியா சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.