Jump to content

கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையின்இரகசியமுகாம்கள்- இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச பிரதிநிதிகளிற்கு சூக்கா முக்கிய வேண்டுகோள்

 

கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள காலி உரையாடல் சர்வதேச  மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற  சித்திரவதைகள் குறித்த விசாரணைகளிற்கு  இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2008- 2009 இல் 11 பேர்  இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை  குறித்து இலங்கையின் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார்.

11_abduc_case.jpg

கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்டவிரோதமாக தடுத்துவைத்தல்  சித்திரவதைகள் காணாமற்போகச்செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல  தளபதிகளிற்கு தொடர்புள்ளது அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான  இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராகயிருந்தார் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர் , புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி  நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்கவேண்டும் ஆனால் அவர் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

11_abductions.jpg

இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்  தபேச்சுவார்த்தைகளிற்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக்கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்
 

https://www.virakesari.lk/article/67209

 

Link to comment
Share on other sites

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு மற்றும் செல்வி சூக்கா அவர்களும் தொடர்ந்தும் உண்மைகளை வெளிவர செய்வதிலும் நீதியை பெற்றுக்கொடுப்பதிலும் முனைந்து வெற்றியும் கண்டு வருகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா நினைத்தால் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாகவே வெளியிடலாம்.

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா நினைத்தால் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாகவே வெளியிடலாம்.

நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம்.

அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா?

உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Jude said:

நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம்.

அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா?

உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

இல்லையே மேலே இருந்து உங்க வீட்டு கோடிக்குள்ளும் என்ன நடக்கிறது ,நடந்தது என்று துல்லியமாக படமெடுப்பது அவர்கள் தானே.

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

நீங்கள் நினைத்தாலும் இந்த இரகசிய முகாம்களை கலர்படமாக வெளியிடலாம்.

அமெரிக்கா வந்து தானா உங்களுக்கு எல்லாம் தீத்தி விட வேண்டும்? உங்களால் ஒன்றுமே செய்ய முடியாதா?

உங்களுக்கு தீத்தி விட அமெரிக்காவை தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

இல்லையே மேலே இருந்து உங்க வீட்டு கோடிக்குள்ளும் என்ன நடக்கிறது ,நடந்தது என்று துல்லியமாக படமெடுப்பது அவர்கள் தானே.

படம் எடுத்தால் உங்களுக்கு இலவசமாக தர வேண்டுமா? படம் எடுக்க செலவான மில்லியன்களில் எவ்வளவை இந்த படங்களுக்கு நீங்கள் தருவீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

 

படம் எடுத்தால் உங்களுக்கு இலவசமாக தர வேண்டுமா? படம் எடுக்க செலவான மில்லியன்களில் எவ்வளவை இந்த படங்களுக்கு நீங்கள் தருவீர்கள்?

யூட் அதற்காகவே
அமெரிக்கா நினைத்தால் என்று எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மைக் சின்னத்துக்கான லைற் எரியவில்லை? புதிய தலைமுறை காணொளி.
    • எண்ணையும் 82……85.5…..81.5 என ஏறி இறங்கி விட்டது. இந்த நொட்டல்களை இரு தரப்பும் ஒரு அளவுக்குள் மட்டுப்படுத்தும் என்ற @Justin கூற்று மெய்ப்படுகிறது.
    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.