Jump to content

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரச்சார கூட்டம் இடைநிறுத்தம்

வவுனியா தாலிக்குளம் பகுதியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்றையதினம் காலை இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் வவுனியா மாவட்ட  தேர்தல் திணைக்களத்திலிருந்து வருகை தந்த உத்தியோகஸ்தர்கள் பிரச்சார கூட்டத்தினை இடைநிறுத்துமாறு தெரிவித்தனர்.

குறித்த பிரச்சார கூட்டத்திற்குத் தேர்தல் திணைக்களத்திடம் இருந்து  உரிய முறையில் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்தே கூட்டம் இடை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Douglas_Devananda.jpg

இந்நிலையில் குறித்த கூட்டம் இடை நடுவில் நிறுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உட்படக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மீண்டும் திரும்பிச் சென்றிருந்தனர். இதனால் சற்று நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

வேறு ஒரு பிரச்சார கூட்டத்திற்குச் செல்ல இருந்த நிலையில் ஆதரவாளர்கள் விரும்பியமையால் இங்கு வந்து கலந்து கொண்டேன். சட்டரீதியான அனுமதி பெறப்படாமையினால் இந்த கூட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிறிதொரு நாள் உங்களைச் சந்திப்பதாக டக்ளஸ் தேவானந்தா இதன்போது பொதுமக்களிடத்தில் தெரிவித்திருந்தார்.  
 

https://www.virakesari.lk/article/67206

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.