Jump to content

அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே

on October 17, 2019

 

96d789bbea36c0405301b4c3804b2a00.jpg?zoo

 

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO

தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார்.

இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர் என்று மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகின்றார்.

தடுப்பில் இருக்கும் இராணுவத்தினர் தொடர்பாக கோட்டபாய ராஜபக்‌ஷ கூறாத விடயமொன்றும் இருக்கிறது. அது – பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 42 இராணுவ சிப்பாய்களுள் இன்று 7 பேர் மாத்திரமே சிறைவைக்கப்பட்டுள்ளதோடு, ஏனைய அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, சேவை நேரத்தின்போது செய்த குற்றத்தினால் எவரும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படவில்லை. ஊடகவியலாளர்களை கொலை செய்தமை, ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டமை, ஊடகவியலாளர்களை கடத்திச் சென்றமை, கப்பம் பெறும் நோக்கில் இளைஞர்களை கடத்திச் சென்றமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக மட்டும்தான் சில இராணுவ சிப்பாய்கள் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டனர். இவ்வாறான செயற்பாடுகள் இராணுவ சிப்பாயின் உத்தியோகபூர்வ வேலை அல்ல. இவை அரசியல் நோக்கங்களுக்காக அல்லது உத்தரவின் பேரில் இடம்பெற்ற குற்றங்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இந்த விடயங்களை ஒருபுறம் வைத்துவிட்டு, அநுராதபுரத்தில் கோட்டபாய ராஜபக்‌ஷ அளித்த உறுதிமொழி குறித்து மீண்டும் பார்ப்போம். நவம்பர் 17ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்யப்போவதாக மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் உறுதிமொழி அளிந்திருந்தார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, நீதிமன்றம் ஊடாக குற்றவாளியாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பின்னரே ‘ஜனாதிபதி மன்னிப்பு’ வழங்கமுடியும். அப்படியில்லாமல், நடத்தப்படும் விசாரணையில் சந்தேகநபர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் போது அவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை.

கோட்டபாய ராஜபக்‌ஷ கூறுவது போன்று நம்பர் 17 அதிகாலை இராணுவ சிப்பாய்களை விடுதலை செய்வதற்கு இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் அதற்கான சந்தர்ப்பம் எங்கும் இல்லை. அப்படியிருந்தும் அவர் கூறியதைப் போன்று செய்வதாக இருந்தால் அது, நீதிக் கட்டமைப்புக்கும் நீதியை நிலைநாட்டுவதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கும் எதிராக நேரடியாக விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். சட்டத்தின் ஆட்சி என்பது சட்டத்தின் மேல் யாரும் இல்லை என்பதாகும்.

சட்டத்தின் முன் எல்லோரும் சமம்

நீதிமன்றின் உத்தரவினை அடுத்தே இராணுவத்தினர் அனைவரும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். கோட்டபாய ராஜபக்‌ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த அதே சுயாதீன நீதிமன்றம்தான் மேற்கண்ட உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

இராணுவ சிப்பாயோ அல்லது வேறு எந்தவொரு நபரோ கடத்தல் மற்றும் கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இது சாதாரண மக்களுக்கு எதிரான குற்றங்களாகும்.

கோட்டபாயவின் ஒழுக்கமான சமூகத்தில் இவர்களுக்கு விசேட இடம் இருக்கிறதா? அல்லது அந்த ஒழுக்கமான சமூகத்தில் இந்த விசேடமானவர்களுக்கு குற்றங்களில் ஈடுபட முடியுமா?

2005இலிருந்து இராணுவத்தின் கௌரவத்தை உறுதிப்படுத்தியதாக கோட்டபாய கூறுகிறார். எப்படி இருந்தபோதிலும் 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசு (சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதி குற்றங்களில் ஈடுபட சீருடையை பாதுகாப்புக் கவசமாகப் பயன்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து) இராணுவத்தின் கௌரவத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. ஆனால், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் கௌரவமிக்க முப்படையினரை வீதிகளை சுத்தம் செய்ய, மரக்கறி விற்பனை செய்ய அப்போதிருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்‌ஷ உத்தரவிட்டிருந்தார் என்பதை யாரும் மறக்கக்கூடாது.

அரசியல் ரீதியாக துன்புறுத்தி இராணுவ சிப்பாய்களை சிறைவைத்தது யார்?

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டதற்காக போரை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறைக்கு அனுப்பிய விதம், முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க ஜனாதிபதிப் போட்டியில் நுழைந்தவுடன் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள் போன்றவற்றை நினைவில் கொள்வோம்.

சரத் பொன்சேகா மட்டுமன்றி, தேர்தலின்போது அவருக்கு உதவிபுரிந்த அனைத்து முன்னாள் இராணுவ அதிகாரிகளும் கைதுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர்.

மக்களுடைய வாக்குகளால் தெரிவுசெய்யப்படுவார் என்று நம்புகிற கோட்டபாய ராஜபக்‌ஷ தான் நினைத்தாற் போல் சட்டத்தை கையாளப்போவதாக உறுதியளித்து பிரசாரத்தை தொடங்குகிறார்.

மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும்.

අනේ! ඔවුන් සිර­ග­තව සිටින්නේ ඔබ නිදොස් කළ අධි­ක­ර­ණ­යේම නියෝ­ග­යෙනි! என்ற தலைப்பில் சிலுமின பத்திரிகையில் விஹங்க வீரசேகர எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.
 

https://maatram.org/?p=8134

 

Link to comment
Share on other sites

"ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையில் பணியாற்றுவதற்காக எமது முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு நல்ல கொடுப்பனவும் வழங்கப்படுகிறது

ஒழுக்கமற்ற இராணுவத்தை, குற்றங்கள் புரிந்த (உள்நாட்டிலும் வெளிநாட்ட்லும்) இவர்களை ஐ.நா. இணைப்பது அவர்களுக்குத்தான் பெருமை  😞 

"மக்களின் வாக்குகளால் நாட்டின் உயர் பதவிக்குத் தெரிவாகி அதிகாரத்துக்கு வர எதிர்பார்க்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ, தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்திலேயே இதுபோன்ற சட்டத்துக்கு விரோதமான முறையில் உறுதிமொழி வழங்கியமையால் நாட்டில் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அவரின் அந்தப் பேச்சு நாட்டின் எதிர்காலத்தை இருண்ட படுகுழிக்குள் கொண்டுசெல்லும் என்பது தெளிவான, ஆபத்தான எச்சரிக்கையாகும்."

தமிழர்களை  விழுங்கும்பொழுதும் முஸ்லீம்களை கடிக்கும்பொழுதும் பொழுது வராத கவலை தமக்கு வந்துவிடும் என்ற பொழுது வரும். 

Link to comment
Share on other sites

இந்த கட்டுரை சரத் இல்லை மகேஸ் ஆதரவாளர் ஒருவரால் எழுதப்பட்டது போன்று தெரிகின்றது. 
சாதாரண சிங்கள மக்கள் இந்த மாதிரி சிங்கள சிப்பாய்களை ஹீரோ எனவே பார்க்கின்றனர். அதை கோத்தா பயன்படுத்துகின்றார்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.