Jump to content

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்

Presidential-Election-2019-e157138860745

 

1.தேசியப் பாதுகாப்பு

இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம்.

எனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது கலவரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம்.

இராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும்?

(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன? (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன? (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா? (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை? (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை? (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன?

2. நாடாளுமன்றம்

19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை

(I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன? (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா? (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன?

3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம்

முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம்.

குறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர முடியுமாக அமையும்.

(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன? (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா?

4. கல்வி

கல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது.

மனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.

மாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.

உலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது.

பணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை.

(I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன? (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை?

5. பால் மற்றும் இறைச்சி

இலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும்.

இந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும்.

மாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும்.

(I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா?

6. குப்பைப் பிரச்சினை

தெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன.

(I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா? (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன?

7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில்

விவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன.

எந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும்.

(I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன?

8. குற்றவியல் வழக்குகள்

முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்களை காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன?

(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா? அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

9. அரசியல்யாப்பு

தற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

யாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது.

(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன? (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும்? அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா?

Victor-Ivan.jpg?resize=90%2C114&ssl=1விக்டர் ஐவன்
 

 

https://maatram.org/?p=8141

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.