Jump to content

பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்


Recommended Posts

பூமியை போல் செவ்வாய் கிரகத்திலும் உப்பு ஏரிகள் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பில் உள்ள காலே கிரேட்டர்((Gale crater)) எனப்படும் 95 மைல் அகலமுள்ள பாறை படிமத்தை க்யூரியாசிட்டி ரோவர் என்ற கருவி உதவியுடன் நாசா ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகின்றனர்.

சுமார் 350 கோடி  ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கிரகத்தை விண்கல் தாக்கி உருவான இந்த படிமத்தில்,  பல உப்பு ஏரிகள் இருந்ததை டெக்சாஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் அங்கு நுண்ணுயிரிகள் வாழ்ந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். மேலும், காலப்போக்கில் இந்த ஏரிகள் வறண்டு குளங்களாக மாறியதாகவும், அதன்பின் செவ்வாய் கிரகம் தனது காந்தபுலத்தை((magnetic field)) இழந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக கிரகத்தின் வளிமண்டலம் மீது சூரிய காற்று மற்றும் கதிர்வீச்சுகள் பட்டு, அது மென்மையாகி, தண்ணீரை தக்க வைக்க முடியாமல் போனதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.polimernews.com/dnews/85522/பூமியை-போல்-செவ்வாய்கிரகத்திலும்-உப்பு-ஏரிகள்இருப்பதைஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்துள்ளனர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா?

மனிதன் வேறு கிரகத்திற்குப் போகக் கூடாதா?

சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களுக்கு மனிதர்கள் குடிபெயரும் யோசனை, 'பைத்தியகாரத்தனமானது' இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? அண்மையில் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற சுவிட்சர்லாந்தின் இயற்பியல் விஞ்ஞானி மைக்கேல் மேயர்.

சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை அடையாளம் காண்பதற்கான விண்வெளியியல் உத்திகளை வகுத்துத் தந்ததற்காகத்தான் இவருக்கும், இவரது சகாவான டிடியர் குவெலோசுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஜெனீவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருந்த மைக்கேல், அவரது மாணவர் குவெலோசுடன் இணைந்து சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கிரகங்களை கண்டறிய, சில எளிய கருவிகளையும், அறிவியல் முறைமைகளையும் உருவாக்கினர்.

அதைப் பயன்படுத்தி, 1995 அக்டோபரில் ஒரு புதிய கிரகத்தை கண்டறிந்தனர். அன்றிலிருந்து இன்று வரை, 4,000 புதிய வெளி கிரகங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. இந்த நிலையில், “பூமியின் இயல்பை ஒத்திருக்குகும் ஒரு கிரகத்திற்கு மனிதர்கள் பயணித்து சென்றடையவே பல ஆண்டுகள் ஆகும். எனவே, அந்த யோசனை நடைமுறைக்கு ஒத்து வராது,” என மைக்கேல் கூறியுள்ளார்.

“பூமி இன்றைக்கும் அழகானதாகவே இருக்கிறது. இன்னும் பல கோடி மனிதர்களை வாழவைக்கும் திறன் பூமிக்கு உள்ளது. இந்த பூமியை பராமரித்து, இதிலேயே நம் தலைமுறைகள் வாழ்வது தான் நல்லது,” என்று அழுத்தமாக மைக்கேல் கூறியிருப்பது, விண்வெளி ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

தினமலர்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.