Jump to content

’சஜித்,கோட்டாவை புறக்கணிக்க வேண்டும்’


Recommended Posts

(அப்துல்சலாம் யாசீம்)

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று(18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன்.

பிரதானமான  முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜத-கடடவ-பறககணகக-வணடம/175-240174

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களான அமைச்சர் சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை புறக்கணிக்க வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், "ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள 35 வேட்பாளர்களில் தமிழ் பேசும் மக்களின் பொதுவேட்பாளராக நான் களம் இறங்கியுள்ளேன்.

பிரதானமான  முக்கிய அரசியல் கட்சிகளில் களமிறங்கியுள்ள சஜித் பிரேமதாஸ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகிய இருவரும் தமிழ் மக்களை படுகுழியில் தள்ளியுள்ளனர்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவாஜிலிங்கம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க, ஹிஸ்புல்லா முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க, இன்னும் சில முஸ்லிம்களும் போட்டியிடுவதால் அவர்களும் வாக்குகளை பிரிக்க தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கில் கோத்தா வெற்றி பெறுவார் என பொதுஜன பெரமுனவை சேர்ந்த டிலான் பெரேரா கூறியிருந்தார்.

மக்கள் சிந்தித்து சஜித்துக்கு வாக்களியுங்கள்.

Link to comment
Share on other sites

தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் இலங்கையின் ஆட்சியை அந்த இனம் சார்ந்த கட்சிகள் சார்பாக நின்று கைப்பற்ற முடியாது. ஒருவேளை, சிங்களம் பேசும் தமிழ் தெரியாத ஆனால் தமிழ் பெயரை கொண்டவரால் ஒரு அளவிற்கு ஒரு சிங்கள கட்சிக்குள் உயர் பதவிகளை பெறலாம், ஆனால் ஒரு பிரதமாராகவோ இல்லை சனாதிபதியாகவோ வர முடியாது. இந்த வட்டத்திற்குள் தான் தமிழர்கள், முஸ்லீம்கள் வாக்களிக்க வேண்டும். 

தமிழர்களை பொறுத்தவரையில் சனாதிபதி தேர்தல் என்பது வெறுப்பு வாக்காகவும் ( கோத்தா எமது மக்களை அழித்தவர், மீண்டும் சனாதிபதி ஆனால் அழிப்பார் என்ற எதிர்வு கூறலாலும் ) , அதனால் சஜித்துக்கு வாக்களிக்க எண்ணுகிறோம். ஆனால், அந்த கட்சியோ இல்லை சஜித்தோ ஒரு அரசியல் தீர்வை இல்லை காணி/கல்வி/மதம்/பொருளாதாராம்/பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிப்பார் என்பதும் கனவே. 

எனவே, ஒற்றையாட்சிக்குள் சனாதிபதி தேர்தல் ஒரு 'வெறுப்பு வாக்காக' இல்லை 'இந்த இனவாதி மற்றையவரை விட பரவாயில்லை' என்ற வாக்காக மட்டுமே உள்ளது. விருப்பு வாக்காக எவரையும் தெரிவு செய்ய முடியாத துரதிஷ்டாவசமாக நிலை என்றும் இருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
    • 🤣என்ன தாலிகட்டி கலியாணம் செய்து குடும்பம்  நடத்தி பிள்ளை குட்டி பெற்று குடும்பம் நடத்தவா கூப்பிட்டார்? கண்ணியம் பற்றி ஓவர் பில்டப்பு குடுக்கிறியள்?🤣
    • கொழும்பு(Colombo) - முல்லேரியா பகுதியில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் என்ற ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையின் கடற்படை(sri lanka Navy) உறுப்பினர்கள் உட்பட நான்கு பேர் முல்லேரியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை இதன்போது 7.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 510 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை கடற்படையின் 2 லெப்டினன்ட் கொமாண்டர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://tamilwin.com/article/4people-including-member-sl-navy-arrested-colombo-1713558435
    • அங்கு தேசிய கட்சிகளுக்கு  எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.