Jump to content

எதிர்காலத்தில் மூளப்போவது நீருக்கான போர்!


Recommended Posts

உலகம் எதிர்காலத்தில் போர் ஒன்றைச் சந்திக்குமாகவிருந்தால் அது  நீருக்கான போராகத்தான் இருக்கும். சூழலை துவம்சம் செய்யும் மனிதர்களால் இந்தப் போரை வெல்வது சுலபமானதுமல்ல.

உலகம் வெகுவிரைவில் தனது இயல்பு நிலையில் இருந்து மாறிவிடப்  போகின்றது. மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் இந்தப் பூமியை  விரைவாக அழித்து விடும் என்பதில் ஐயமில்லை.  

என்னதான் விழிப்புணர்வு நிகழ்வுகள் உலகளவில்  ஏற்படுத்தப்பட்டாலும் மனிதர்கள் அதனை கிஞ்சித்தும் கண்டு கொள்வதில்லை.இது  குறித்து பூமியையும், இயற்கையினையும் நேசிக்கும் அநேகமான உள்ளங்கள்  கவலைப்படுகின்றன.  

பசுமை நிறைந்த சூழல்கள் வரண்ட தேசங்களாக மாறிப்  போயிருக்கின்றன. பச்சை வீட்டுத் தாக்கம் என்னும் விடயத்தை அழுத்திச்  சொல்லும் அளவுக்கு சூழல் துவம்சம் செய்யப்பட்டுக்  கொண்டிருக்கின்றது.சூழலில் உள்ள மரம், செடி, கொடிகள் அழிக்கப்பட்டு  வெறுமையான சூழலுக்குள் மனிதர்கள் விரும்பியே விழுந்து கொண்டுள்ளனர். அதன்  பிற்பாடு ஏற்படுகின்ற சூழிலியல் பாதிப்புகளில் இருந்து விடுபட முடியாமல்  சிக்கித் தவிக்கின்றனர்.  

காடுகளை அழித்து வீடுகளை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு,  சூழல் தனது சமநிலையை இழக்கத் தொடங்கியது. காடுகளில் வாழ்கின்ற விலங்குகள்,  ஊர்வன வீடுகளைத் தேடி வரத் தொடங்கின. யானைகள் வெகுவாக உயிர் இழப்புகளுக்கு  ஆளாகின. இதனால் காடுகளின் பரப்பு குறையத் தொடங்கிற்று.  

இந்த சூழலின் சமநிலைப் பாதிப்பு பற்றி எவரும் சிந்திக்கத்  தயாரில்லை. தாம் வாழ்கின்ற சூழலே இவ்வாறெனில், தமது சந்ததிகளுக்கு எதனை  விட்டுவிட்டு செல்லப் போகின்றோம் என்றும் மனிதன் நினைப்பதாயில்லை.  

விடயம் இவ்வாறிருக்க, நீருக்கான கேள்வியும் அதனை விட  பல்மடங்காகியுள்ளது. முன்னொரு காலத்தில் ஆறுகள், ஏரிகள் மற்றும் கிணறு என  வழிகளிலும் மக்கள் தங்களுக்குத் தேவையான நீரை மிகச் சுலபமாக, இலவசமாகப்  பெற்றுக் கொண்டனர். ஆனால் சூழலை துவம்சம் செய்து நீர்நிலைகளை அழித்து  வாழ்விடங்களை நிர்மாணிக்கத் தொடங்கியதன் விளைவு இன்று பணம் கொடுத்து நீரைப்  பெற்றுக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.  

ஒரு தேசத்தில் வரட்சி நிலவுவதற்குக் காரணம் அங்குள்ள  இயற்கைச் சமநிலையில் ஏற்படுகின்ற மாற்றமே. இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த  எழில்மிகு தேசம். அவ்வாறிருக்ைகயில் வரட்சி எங்கிருந்து வந்தது? எப்போது  காடுகளை அழிக்க முற்பட்டனரோ அன்றே வரட்சி வாட்டி வதைக்கத் தொடங்கிற்று.  காடுகளில் உள்ள குளங்கள், ஏரிகளும் சேர்த்தே நாசம் செய்யப்பட்டன.  

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத்தான்  மற்ற உபயோகங்களுக்கான தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25  சதவீதத்தை மக்கள் பயன்படுத்தினார்கள். இது 1980இல் 45சதவீதமாகவும்,  1990இல் 65சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை மொத்த  நீரில் 80சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால் நீர் அரிதான  பொருளாகும் அபாயம் இருக்கிறது.  

நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி  இல்லாத நடவடிக்கைகள்தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும்  கழிவுகள்,இரசாயனப் பொருட்கள், எண்ணெய்ப் பதார்த்தங்கள்,வர்ணங்கள்  போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது,  நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கைத் தன்மையே  மாறுகிறது. வீட்டுக் கழிவறைக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றாலும்  நீர் மாசுபடுகிறது.  

இன்றைய காலத்தில் பணம் இருந்தும் சுத்தமான நீரைப் பெற்றுக்  கொள்ள முடியாத சிக்கல் நிலை உள்ளது. பூமி 71சதவீதம் நீரால்  சூழப்பட்டுள்ளது. 29சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த நீரில் உப்பு நீரே  அதிகம். 2.5சதவீதம் நீர் மட்டுமே நன்னீர். உலகில், 0.08சதவீதத்துக்கும்  குறைவான நன்னீரை மட்டுமே மனிதனால் பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர்  பற்றாக்குறை ஏற்படும் 50நாடுகளை 1999இல் ஐ.நா அறிவித்தது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான  தண்ணீர் கிடைப்பதில்லை. நீரைப் பாதுகாப்பது நமது ஒவ்வொருவரினதும் கடமை.  நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும்.  தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். கடல்நீரை  குடிநீராக்கும் திட்டம், சூரியஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த  நாடுகள் முன்வர வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம், நீர்த்தெளிப்பு போன்றவற்றை  பயன்படுத்தி தண்ணீரைச் சேமிக்கும் திட்டங்கள் கிராம மட்டங்களில் இருந்து  அறிமுகப்படுத்தப்படுதல் அவசியம்.

றிசாத் ஏ. காதர்
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

https://www.thinakaran.lk/2019/10/19/கட்டுரைகள்/42341/எதிர்காலத்தில்-மூளப்போவது-நீருக்கான-போர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிலிருந்து... பாகிஸ்தானுக்கு போகும்  நதியை மறிக்கப்  போவதாக...
மோடி, சொல்லி விட்டார் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.