Jump to content

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்…

October 19, 2019

 

IMG-5348.jpg?resize=800%2C600

ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள்.

சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை குறித்து முதலில் சிந்தித்திருக்க வேண்டியது யார்? சில ஆயர்களும் சில சாமியார்களும் சில அரசியல் விமர்சகர்களும்தானா? அரசியலை முழு நேரத் தொழிலாகக் கொண்ட அதற்காக சம்பளம் வாங்குகின்ற அரசியல் தலைவர்கள்தானே அதைப்பற்றி முதலிலேயே சிந்தித்திருக்க வேண்டும்? அதை சிந்தித்திருக்க வேண்டிய வேண்டிய ஒரு காலகட்டத்தில் சிந்திக்காமல் இருந்துவிட்டு அதைப்பற்றி சிந்தித்த ஒரு சிவில் அமைப்பிடம் நீங்கள் பிந்திவிட்டீர்கள் என்று கூறும் தலைமைகளை எப்படி பார்ப்பது?

அது அவர்களுடைய தொழில் அல்லவா? ஆனால் அவர்களில் எவரும் அதை பற்றி சிந்தித்திருக்கவில்லை. எந்த சிங்களத் தலைவரோடு எப்படி டீல் வைத்துக் கொள்ளலாம் என்றுதான் சிந்தித்தார்கள்.

ஆனால் தமிழ்ப் பேரம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரோடுதான் தொடங்குகிறது என்பது ஏன் அவர்களுக்கு தெரியாமல் போனது? தமிழ் தலைவர்கள் யாருமே நீண்டகால நோக்கில் சிந்திப்பதில்லையா? தூர நோக்கோடு சிந்தித்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை திட்டமிட்டு கட்டியெழுப்பி இருந்திருக்கலாம். அது நடக்கவில்லை. அதைப் பற்றி சிந்தித்திருக்கவேண்டிய தலைவர்கள் சிந்திக்கவில்லை. சில ஆயர்களும் சாமியார்களும் கருத்துருவாக்கிகளுமே சிந்தித்தார்கள். அதுவும் மிகப் பிந்தி சிந்தித்தார்கள். இது எதைக் காட்டுகிறது?

தமிழ் தலைவர்களுக்கு எது பேரம் என்பதில் சரியான தெளிவு இல்லை. இன்னும் கூராகச் சொன்னால் பேர அரசியலைக் குறித்து அவர்களிடம் சரியான தரிசனம் எதுவும் கிடையாது. இதுதான் உண்மை. இவ்வாறான ஒரு பாரதூரமான வெற்றிடத்தில்தான் ஒரு சுயாதீன குழு ஒரு பொது வேட்பாளரை குறித்து மிகவும் பிந்திச் சிந்தித்து. என்பதனால் அது காரியம் ஆகவில்லை. இப்பொழுது அத்தெரிவு ஒரு சிவாஜிலிங்கமாக சுருங்கிவிட்டது. இனி சிவாஜிலிங்கத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.

ஒரு பொதுத் தமிழ் பொது வேட்பாளர் இல்லாத வெற்றிடத்தில் அதற்கு நிகரான மற்றொரு தெரிவு பகிஷ்கரிப்பு தான். ஆனால் பகிஸ்கரிப்பு எனப்படுவது வெளியுலகத்துக்கு எதிர்மறையான செய்தியை கொடுக்கும். மேலும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது மிஞ்சி இருப்பது ஒரே செயல் வழி. அதுதான் தேர்தல் வழி. தமக்கு மிஞ்சியிருக்கும் ஒரே செயல் வெளியையும் மூடுவதா? அல்லது அந்த வெளிக்குள் இறங்கி விளையாடி பார்ப்பதா?

இல்லை. விளையாட முடியாது. பகிஸ்கரிக்கப்போகிறோம் என்று சொன்னால் அது ஒரு நிலைப்பாடு மட்டுமல்ல. மாறாக அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதை ஒரு தமிழ் கூட்டு உளவியல் ஆக மாற்ற வேண்டும். அதற்கென்று வளங்களைக் கொட்டி உழைக்க வேண்டும். அப்படி செய்யும் போது கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் மைய கட்டமைப்பை கட்டி எழுப்பலாம். அது ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டுமல்ல அதற்குப் பின்னரும் குறிப்பிட்ட கட்சிக்கு ஒரு பெரிய அடித்தளமாக அமையும். ஆனால் அப்படி உழைத்து பகிஷ்கரிப்பை வெற்றி பெறச் செய்ய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரா?

தமிழ்பொது வேட்பாளரையும் பகிஸ்கரிப்பையும் விடடால் ஏனைய எல்லா தெரிவுகளும் மங்கலானவைதான் துலக்கமில்லாதவைதான். சஜித்துக்கு சாதகமானவைதான். இதைப் பிழிவாகச் சொன்னால் பொது வேட்பாளருக்கும் பகிஸ்கரிப்புக்கும் இடையில் இருக்கும் எந்த ஒரு தெரிவும் சஜித்துக்கு எப்படி தமிழ் மக்களின் ஆணையை வாங்கிக் கொடுப்பது என்பது குறித்து மறைமுகமான வழிகளில் சிந்திப்பதுதான். அந்த முடிவை எப்படி புதிய வார்த்தைகளால் நியாயப்படுத்துவது என்று சிந்திப்பதுதான்.

இவ்வாறு மங்கலான தெரிவுகளைக் கொண்ட ஒரு பேரக் களத்தில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ஐந்து கட்சிகளின் கூட்டு செயற்படப்போகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால்தான் தமிழ் பேரம் துலக்கமாகவும் சிங்கள வேட்ப்பாளர்களை இறங்கி வரச் செய்யும் விதத்திலும் கூர்மையானதாக இருக்கும். அப்படி ஒரு பொது வேட்பாளர் இல்லாத வெற்றிடத்தில்தான் சஜித் பிரேமதாச இறுமாப்போடு கதைக்கிறார். கோத்தபாய ராஜபக்ச அதை இனவாதிகளுக்கு தீனியாக மாற்றுகிறார்.

உண்மையில் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் தலைவர்கள் தயாரில்லை என்பது ஒருவிதத்தில் இறங்கி வருவதுதான். உச்சமான பேரத்தை பிரயோகிக்க தமிழ்த் தலைவர்கள் தயாரில்லை என்பத்தைத்தான் அது காட்டுகிறது. ஆனால் அப்படி இறங்கி வந்து ஒரு பொது ஆவணத்தை தயாரித்திருக்கும் ஐந்து கட்சிகளையும் அஸ்கிரிய பீடத்தின் பிரமுகர் எவ்வாறு பார்க்கிறார்? அஸ்கிரிய பீடத்திற்கு அதிகம் நெருக்கமான ராஜபக்ச அணி அதை எப்படி பிரச்சாரம் செய்கிறது?
அதைவிடக் கேவலம் சஜித் என்ன சொல்கிறார் என்பது. எந்த ஒரு நிபந்தனைக்கும் அவர் அடிபணிய மாட்டாராம். நிபந்தனைகளுக்கு இணங்கி லட்சக்கணக்கான வாக்குகளை பெறுவதை விடவும் நிபந்தனைகளுக்கு இணங்காது தோல்வியடைந்து வீட்டுக்கு செல்லவும் அவர் தயாராம். இப்படிப்பட்ட சஜித்துக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்க வேண்டும் என்று எப்படி கேட்பது?

இதுதான் பிரச்சினை. ஐந்து கட்சிகளும் கூட்டாக தயாரித்த ஆவணம் அதன் கால முக்கியத்துவம் காரணமாக தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக மாறிவிட்டது. தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டது போல ஒரு தோற்றம் உருவாகியது தென்னிலங்கையில் இனவாதிகளை ஐக்கிய படுத்துவிட்டது என்று சில கையாலாகாத தமிழர்கள் புலம்பத் தொடங்கி விட்டார்கள். அப்படி என்றால் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது பேரத்தை முன்வைக்கக் கூடாது என்று இவர்கள் கேட்கிறார்களா?

ஆனால் தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் உருப்பெருக்கி காட்டும் அளவுக்கு ஐந்து கட்சிகளின் ஐக்கியமானது நிரந்தரமாக இருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அவசரமாக ஏற்படுத்தப்பட்ட ஐக்கியம் இது. இப்படி ஒரு ஐக்கியத்துக்கு போக வேண்டிய தேவை அதில் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு இருந்தது. குறிப்பாக கூட்டமைப்புக்கு அது ஒரு வரப்பிரசாதம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தனது வாக்கு வங்கியில் 35 விகிதத்தை அக்கட்சி இழந்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து திருத்திய வீதிகள் வாக்குகளாக மாறுமா என்ற சந்தேகம் உண்டு. குறிப்பாக ரணில் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு இந்தளவுக்கு இறந்கி வந்திருக்குமா? எனவே கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் கூட்டமைப்பை தற்காலிகமாக மீள இணைத்து விட்டார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நீக்கியதன் மூலம் அவர்களுக்கு இரட்டை லாபம். அதை விடப் பெரிய ஒரு லாபமும் உண்டு. அது என்னவெனில் மேற்படி ஐந்து கட்சிகளின் கூட்டை தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் எந்த அளவுக்கு எதிர்க்கிறார்களோ அதே அளவுக்கு தமிழ் வாக்குகள் இக்கூட்டின் பின் செல்லும். தமிழரசுக் கட்சி வழமைபோல தேர்தல் நேரத்தில் எதிர்ப்பு அரசியல் என்ற முகமூடியை வசதியாக அணிந்து கொண்டு தனது வாக்கு வங்கியை பெருக்கிக்கொள்ள இது உதவும். இப்படிப் பார்த்தால் மேற்படி ஐந்து கட்சிகளின் கூட்டினால் அதிக லாபம் கூட்டமைப்புக்குத்தான்.ஒரு மாற்று அணியை நோக்கி சிந்திக்கப் பட்டு வந்த ஒரு சூழலில் அந்த மாற்று அணிக்கு பதிலாக கூட்டமைப்பு மீள இணைக்கப்பட்டு விட்டதா?

ஈ.பி.ஆர்.எல்.எப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் தெரிவிக்கும் கருத்துக்களின்படி கூட்டினை ஒரு கொள்கைக் கூட்டாக அவர்கள் கருதவில்லை என்று தெரிகிறது. இது தற்காலிகமானது. ஜனாதிபதி தேர்தலுக்கானது. எதிர்காலத்தில் நிரந்தரமான ஒரு கூட்டை உருவாக்குவது என்று சொன்னால் அதற்கு முதலில் ஒரு கொள்கை ஆவணம் வரையப்பட வேண்டும். அதன்மீது ஐக்கியத்துக்கான உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். எனவே இக்கூட்டை நிரந்தரமானதாகக் கருதத் தேவையில்லை.
பொதுஆவணத்தை உருவாக்கும் பணிகள் முடிவடைந்த பின் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ……..’தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று இம் முயற்சியில் இறங்கிய நாம் ஐந்து கட்சிகள் உடன்பட்டு வந்த நிலையில் அவர்களிடம் இப்பொது ஆவணத்தை ஒப்படைத்து இதனடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததோடு அவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் நாம் பொறுப்பு வாய்ந்த மாணவர்களாய் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டவர்கள் என்ற வகையிலும் இவ்விடயத்தினை அவர்களிடமே ஒப்படைத்து விலகிக்கொண்ட நிலையில் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களின் அடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்களே தொடர்ச்சியாக இவ் விடயத்தினை கையாள்வார்கள்’

என்று அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கட்சிகளின் கூட்டை உருவாக்கும் பொழுது அனுசரணையாளர்களாகத்தொழிற்பட்டார்களா அல்லது வசதி வழங்குனர்களாகத் தொழிற்பட்டார்களா? அனுசரணையாளர்களாகச் செயற்பட்டிருந்திருந்தால் பல்கலைக்கழகம் ஐக்கியத்தை ஏற்படுத்திய பின் விலகி நிற்க கூடாது. கட்சிகளின் கூட்டு தென்னிலங்கையில் உள்ள பிரதான வேட்பாளர்களோடு பேசி ஒரு முடிவை எடுக்கும் வரை மாணவர்கள் அனுசரணை புரியவேண்டும். அந்த முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட தீர்மானத்தை எடுப்பதற்கும் மாணவர்கள் அனுசரணை புரிய வேண்டி இருக்கும்.

ஒரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து அனுசரணை புரியும் அளவுக்கு தொழில்சார் திறனுடனும் இருப்பதில்லை. எனவே இது விடயத்தில் கட்சிகள் கொள்கை ஆவணத்தை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பதற்கும் சிங்கள வேட்பாளர்கள் ஆவணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்பதற்கும் அல்லது கூட்டமைப்பு கூறுவது போல ஆவணத்தில் உள்ள கோரிக்கைகளில் குறைந்தது அறுபது விகிதத்தையாவது ஏற்றுக் கொள்ளும் ஒரு வேட்பாளரோடு எந்த அடிப்படையில் ஒத்துழைப்பது என்பதற்கு உரிய வழிவகைகளை கண்டு பிடிப்பதற்கும் பொருத்தமான அனுசரணையாளர்கள் தேவை.

அதைக் கட்சித் தலைவர்களை செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவும் பல்கலைக்கழக மாணவர்களும் தலையீடு செய்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் மேற்கண்ட முடிவை எடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. எனவே இனிமேலும் அரசியல் கட்சிகளின் மீது சிவில் சமூகங்களின் தலையீடு அவசியம். அவாறான தார்மீகத் தலையீடே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்குள்ள ஒரே பாதுகாப்பு உத்தரவாதம் ஆகும்.

 

http://globaltamilnews.net/2019/132132/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால், மேற்கின் கவனம், அரசியல் போர்வையில் உக்கிரைன் வளமான நிலங்களை கையகப்படுத்துவது (கணிசமான அளவு செய்து விட்டது, கீழே இணைப்பை பார்க்கவும்), ( தலைப்பை மொழிபெயர்த்து இருக்கிறேன்.      யுத்த அல்லோலகல்லோலங்களுக்கு மத்தியில், உக்கிரைன் விவசாய நிலங்கள் கபடமாக கையகப்படுத்தப்படுவதை  அம்பலப்படுத்துகிறது (இந்த) புதிய அறிக்கை.  ) (கிட்டத்தட்ட இதையே, மிலேனியம் கொடையில் தொடக்கப்பார்த்தது அமெரிக்கா இலங்கையில், அனால் இப்போது சிங்களம் அதன் மோட்டு தனத்தால் அதுவாகவே சிக்கி கொண்டு இருக்கிறது. ) உக்கிரைனில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதன் நோக்கம், உணவு உற்பத்தி, வழங்கலை மேற்கு, மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது.    இப்படி, மேற்கு அரசியல் / இரணுவ  சமநிலையை குழப்ப எத்தனித்து, கபடமாக செய்வதுடன் (எரியும் வீட்டில் கொல்லி புடுங்கும் மேற்குடன்) , சீனா செய்வதை ஒப்பிட்டால், சீன மிகுந்த வெளிப்படை தன்மையோடு செய்கிறது; அதுவும் சாதரண பொருளாதார, கட்டுமான நிதி அல்லது கடன் என்று வரும் போது (அனால், புள்ளி விபரப்படி, அதன் நிகழ்தகவு   மிகவும் குறைவு). (உக்கிரைன், மற்ற எல்லா முறுகல், முரண்பாடு, யுத்த முனைப்புகளின் மேற்கின், குறிப்பாக US இன்  உந்துதல், இங்கே சிலர் குத்திமுறிவது போல சனநாயக, உரிமைகள் ... அல்ல (அனால் அது போர்வையாக பாவிக்கப்படுகிறது) . மேற்கின், குறிப்பாக US இன் அடுத்த கட்ட முயற்சி (மேலாண்மையை தக்க வைக்க), உலகின் முக்கிய பொருளாதாரங்களை USக்கு, மேற்கிற்கு rentier பொருளாரமாக மாற்றுவதற்கு, மற்ற பொருளாதரங்கள் முதலாளித்துவ தன்மையை கொண்டு இருந்தாலும்).      (US இல், மற்றும் மேற்கில் இருப்பது plutocracy பக்கம், plutocracy, oligarchy கலவையான அதிகார அமைப்பு (ஆம், சனநாயக, உரிமைகள் ... போர்வைகள், சோடனைகள், சில யதார்த்தங்களுடன்). )   https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund. https://reliefweb.int/report/ukraine/war-and-theft-takeover-ukraines-agricultural-land#:~:text=The largest landholders are a,US-based private equity fund.   Amidst Chaos of War, A New Report Exposes the Stealth Take-over of Ukrainian Agricultural Land   ... Oakland, CA — One year after the Russian invasion of Ukraine, a new report from the Oakland Institute, War and Theft: The Takeover of Ukraine’s Agricultural Land, exposes the financial interests and the dynamics at play leading to further concentration of land and finance. “Despite being at the center of news cycle and international policy, little attention has gone to the core of the conflict — who controls the agricultural land in the country known as the breadbasket of Europe. Answer to this question is paramount to understanding the major stakes in the war,” said Frédéric Mousseau, Oakland Institute’s Policy Director and co-author of the report. The total amount of land controlled by oligarchs, corrupt individuals, and large agribusinesses is over nine million hectares — exceeding 28 percent of Ukraine’s arable land. The largest landholders are a mix of Ukrainian oligarchs and foreign interests — mostly European and North American as well as the sovereign fund of Saudi Arabia. Prominent US pension funds, foundations, and university endowments are invested through NCH Capital, a US-based private equity fund. Several agribusinesses, still largely controlled by oligarchs, have opened up to Western banks and investment funds — including prominent ones such as Kopernik, BNP, or Vanguard — who now control part of their shares. Most of the large landholders are substantially indebted to Western funds and institutions, notably the European Bank for Reconstruction and Development (EBRD) and the World Bank. Western financing to Ukraine in recent years has been tied to a drastic structural adjustment program that has required austerity and privatization measures, including the creation of a land market for the sale of agricultural land. President Zelenskyy put the land reform into law in 2020 against the will of the vast majority of the population who feared it would exacerbate corruption and reinforce control by powerful interests in the agricultural sector. Findings of the report concur with these concerns. While large landholders are securing massive financing from Western financial institutions, Ukrainian farmers — essential for ensuring domestic food supply — receive virtually no support. With the land market in place, amidst high economic stress and war, this difference of treatment will lead to more land consolidation by large agribusinesses. The report also sounds the alarm that Ukraine’s crippling debt is being used as a leverage by the financial institutions to drive post-war reconstruction toward further privatization and liberalization reforms in several sectors, including agriculture. .....
    • ஆனல், இவை பெரிய தொகையில் கொடுக்க முடியுமா என்பது கேள்வி? இவை ஒவ்வொன்றும் ஆக குறைந்தது $1.5 மில்லியன். மற்றது, ரஷ்யாஇவற்றை தேடி அழிக்கும், தடுக்கும்  முயற்சி. அத்துடன், ரஷ்யா இப்பொது retooling செய்து வருகிறது, அதுக்கு சீன பல்உபயோக பொருட்களை விற்பதாக US   அனுப்பி இருக்கிறது Blinken ஐ  சீனவை எச்சரிப்பதற்கு, சீன (நமுட்டுச்) சிரித்துக் கொண்டே வரவேற்றது.           
    • பாராளுமன்ற பகிஸ்கரிப்பு என்றால் தாங்கள் ஏதோ வெற்றி மந்திரம் என்று நினைத்து காலமும் இருந்தது இன்று கழுதை தேய்ந்து கடடேறும்பு ஆனது தான் உண்மைநிலை என்று பல அய்யாமார்கள் அண்ணைமார்கள் சொல்ல அறிந்துள்ளேன்..
    • ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோக பூர்வமான விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருக்கின்றார். தற்போது வரையில் அவரது பயண ஒழுங்கிலோ, அல்லது நிகழ்ச்சி நிரலிலோ எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அதேபோன்று, ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக, முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக அதிகாரிகள் மட்டக்குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜதந்திரத் தரப்பினர் தெரிவிக்கின்றார்கள்.  குறிப்பாக, பாதுகாப்பு உள்ளிட்ட இதர ஏற்பாடுகளுக்காக இந்தக் குழுவினர் கொழும்பில் முகாமிட்டிருப்பதாகவும், ஈரான் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் அவர்கள் பிரசன்னமாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் ஈரான் அரசின் உதவித் திட்டத்தின் கீழ் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் பதுளை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனம் மற்றும் நீர்மின் சக்தி வளாகத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் வருகை தரவுள்ளார். அத்தோடு இலங்கை மற்றும் ஈரானுக்கு இடையிலான பொருளாதார தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்வதில் இரு தரப்பும் ஆர்வம் செலுத்தியுள்ளமையால் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவொன்றை நிறுவுதல் உட்பட இருதரப்பு உடன்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், உமா ஓயாத் திட்டத்திற்கான  ஆரம்ப மதிப்பீடுகள் 1989ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தின் பிரகாரம் தல்கொல்ல ஓயாவின் குறுக்கே ஒரு அணையை அமைத்து சுரங்கப்பாதை ஊடாக நீரை மின்திட்டத்துக்கு அனுப்பப்படுகிறது.   உமா ஓயாவின் துணை நதிகளான மாத்தட்டிலா ஓயாவுக்கு குறுக்கே மற்றொரு அணை கட்டப்பட்டு சுரங்கப்பாதை வழியாக உமா ஓயா மின் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுவதே இலக்காக இருந்தது. எவ்வாறாயினும் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் கட்டுமான பணிகள் அங்குராட்பணம் செய்யப்பட்டன.  மொத்த திட்டச் செலவாக சுமார் 529 மில்லியன் டொலர்கள் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதில் 85சதவீதம் ஈரான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக, நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பக்க நிகழ்வாக ஈரான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியபோதே அவருக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே, ஈரான் ஜனாதிபதியின் இலங்கைக்கான விஜயமானது ஏலவே திட்டமிடப்பட்டதொன்றாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், தற்போதைய சூழலில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜதந்திரப் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.  அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்தார். இவ்வாறு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது நேரடியான மோதல் நிலைமைக்கு வந்துள்ளது.  கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இஸ்ரேல் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் வகையில் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அத்துடன், ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாகவும் அங்கு கடமையாற்றுகின்ற ஊடகவியலாளர்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லையென ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளதோடு அந்தக் கட்டமைப்பு அவசரமான கூட்டமொன்றையும் நடத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றார். அவருடைய வருகையானது உண்மையில் இலங்கைக்கு இரண்டு வகையில் நெருக்கடிகளை ஏற்படுத்தவதாக உள்ளது. முதலாவதாக, தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் முக்கியமானதாகின்றது. இஸ்ரேல், ஈரான் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை இலக்கு வைத்து வேறெந்த நாடுகளின் எல்லைகளுக்குள்ளும் உட்புகுந்து ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகள் ஊடாக தாக்குதல்களைச் செய்வதில் தயக்கம் காண்பிப்பதில்லை ஏற்பதற்கு கடந்த காலச் சம்பவங்கள் சான்றுபகிர்கின்றன. அவ்விதமானதொரு சூழலில் இலங்கைக்கு ஈரானிய ஜனாதிபதியின் வருகையின் போது அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கணிசமான பொறுப்பு இலங்கைக்கும் உள்ளது. இஸ்ரேல் போன்ற நாடுகள் பயன்படுத்துகின்ற நவீன ஆயுத தளவாடங்களுடன் ஒப்பிடுகையில், அவற்றுக்கு பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அப்பால் அவற்றை அடையாளம் காண்பதற்கான வல்லமைகள் இலங்கையிடம் இருக்கின்றதா என்கிற கேள்விகள் இருக்கின்றன. ஆகவே, ஈரான் ஜனாதிபதி ரைசி இலங்கை வந்து திரும்பும் வரையில் தேசிய பாதுகாப்பையும், நட்புநாட்டின் தலைமையின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் இலங்கைக்கு மிகக்பெரும் நெருக்கடிகள் ஏற்படப்போகின்றன. இரண்டாவதாக, சமகால நிலைமைகளை அடுத்து ஈரான் ஜனாதிபதி ரைசியுடன் இலங்கை நெருக்கமான உறவுகளை கொள்வதையோ, இருதரப்பு உடன்பாடுகளை மேலும் மேம்படுத்துவதையோ இஸ்ரேல் விரும்பவில்லை.  குறிப்பாக, இஸ்ரேலின் முக்கிய அதிகாரிகளின் நிலைப்பாடுகளின் பிரகாரம், இலங்கை தவறானதொரு தெரிவினை நோக்கிச் செல்கின்றது. இதனால் பாரிய தவறை இழைக்கப்போகின்றது என்ற அடிப்படையில் தான் காணப்படுகின்றது. இதன் காரணத்தினால் இஸ்ரேல் இலங்கைப் பணியாளர்களை மையப்படுத்தி வழங்கிவரும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை மட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அவதானிகள் தெரிவிக்கின்றார்கள். குறிப்பாக, இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேல் அரசின் திட்டவட்டமான தொழிற்சந்தைத் துறைகளில் தற்காலிகமாக தொழிலில் அமர்த்துவதற்கு இஸ்ரேல் அரசுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும், அதற்காக, இருதரப்பினருக்கும் இடையில் அடிப்படை ஆவணங்களில் கையொப்பமிடுவதற்கு 2020.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், குறித்த உடன்பாடு 2023ஆம் ஆண்டு நவம்பர் ஆறாம் திகதி இருநாடுகளுக்கும் இடையில் கையொப்பமிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு அமைவாக, இதுவரையில் விவசாயத்துறையில் பணியாற்றுவதற்காக 602பேர் நாட்டிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்துள்ளனர். அத்துடன் பத்தாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் இலங்கையர்கள் மேலும் இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், முதியோர் பராமரிப்பு, பொதுஊழியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதனைவிடவும். இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகே இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில் விமான சேவைகளை அதிகரித்தல், விமான, கப்பல்துறை பிரிவுகளில் தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களிலும் இணக்கம் காண்பிக்கப்பட்டுள்ளன. ஆகவே, பொருத்தமற்ற தருணத்தில் இலங்கை அரசாங்கம் அளவுக்கதிகமாக ஈரானுடன் ஆதரவுக்கரத்தினை நீண்டுவது இஸ்ரேலுக்கு எதிர்மறையான மனோநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்;லை. இலங்கை அரசாங்கம், ஈரானுடன் கிட்டிய உறவுகளைப் பேணுவதன் ஊடாக எரிபொருட்கள் உள்ளிட்ட விடயங்களில் நெருக்கடியற்றதொரு சூழலை ஏற்படுத்தலாம் என்றொரு இராஜதந்திரக் கணக்கினை போடலாம். ஆனால், இஸ்ரேல், ஈரான் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ள ஓரிரு நாட்களிலேயே மசகு எண்ணெயின் விலைகள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டன. அந்த அதிகரிப்பு நிச்சயமாக இலங்கையிலும் தாக்கத்தைச் செலுத்தாது இருக்கப்போவதில்லை.  அந்தத் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஈரானுடனான நெருக்கமான உறவுகள் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத் தனமான நப்பாசையாகவே இருக்கும்.  இலங்கை அணிசேராக் கொள்கையை பின்பற்றுவதாக தன்னை அடையாளப்படுத்தி வருகின்றபோதும், கடந்த காலங்களில் சீன சார்பு நிலையால், அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பூகோளப் போட்டித்தளமாக தன்னை மாற்றிக்கொண்டது. அது தற்போது வரையில் நீடிக்கின்றது. அதன்பின்னர் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்தி பலஸ்தீனத்தின் அதிருப்திக்கு ஆளானது. எனினும், பலஸ்தீன் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக இருக்கவில்லை என்பதால் நெருக்கடிகள் உருவாகவில்லை. இந்நிலையில் தற்போது ஈரானுடன் நேசக்கரம் நீட்டி இஸ்ரேலின் அதிருப்தியைச் சம்பாதிக்கிறது. இஸ்ரேலின் அதிருப்தி என்பது அமெரிக்கா உட்பட மேற்குல நாடுகளின் அதிருப்தியை சம்பாதிப்பதற்கு நிகரானது என்பதை இலங்கை புரிந்துகொள்வதற்கு வெகுகாலம் நீடிக்காது.  https://www.virakesari.lk/article/181712
    • இப்போது சுற்றுலா பிரயாணம் செய்யும் போது தெரிந்த ஈழ தமிழர்கள் சிலர் bon voyage  என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கின்றனர். அது பிரெஞ்சு என்று அவர்களுக்கே தெரியாது 🤣   ஒருவர் bon voyage சொல்ல வழக்கம் போல மற்றவர்களும் அதை சொல்கின்றனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.