Jump to content

தமிழ்க்­கட்­சி­களை சந்­திக்க தயங்கும் வேட்­பா­ளர்கள்: நிபந்­த­னை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்­கட்­சி­களை சந்­திக்க தயங்கும் வேட்­பா­ளர்கள்: நிபந்­த­னை­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி

ஆர்.ராம்

ஜனா­தி­பதி வேட்­பாளர்  யாருக்கு  ஆத­ரவு வழங்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்கும் வகையில்  ஐந்து தமிழ்க்  கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து  எடுத்த  இணக்­கப்­பாடு தொடர்­பான ஆவ­ணத்தை ஏற்­றுக்­கொள்­வதில் இரு பிர­தானக் கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் பின்­ன­டிப்­ப­தாகத்  தெரி­ய­வ­ரு­கி­றது.

13 அம்­சக்­கோ­ரிக்­கை­களை  உள்­ள­டக்­கிய   குறித்த  ஆவ­ணத்தை  மேற்­படி  பிர­தான வேட்­பாளர்  இரு­வ­ரி­ட மும் சமர்ப்­பித்து பேச்சு நடத்த தமிழ்த்­த­ரப்பு  விரும்­பிய போதிலும்  குறித்த ஆவ­ணத்தின்  அடிப்­ப­டையில் பேச்­சுக்­களை  ஆரம்­பித்தால்  பெரும்­பான்மை  சிங்­கள  மக்­களின் ஆத­ரவை  அவை இழக்க நேரும் என  அஞ்­சு­வ­தா­கவும்  அதுவே தமிழ் தலை­வர்­களை  சந்­திக்க  தயக்கம்  காட்­டு­வ­தற்­கான பிர­தான காரணம்  என்றும்  தெரி­ய­வ­ரு­கி­றது.

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் பிர­தான மூன்று ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டத்­திலும் தமிழ் மக்­களின் அடிப்­படை மற்றும் உட­னடிப் பிரச்­சி­னை­களை உள்­ள­டக்­கிய 13அம்ச கோரிக்­கை­களை முன்­வைத்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வ­தென்றும், அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது என்று பகி­ரங்­க­மாக அறி­விப்பு விடுக்கும் தீர்­மா­னத்­தினை எடுப்­ப­தென்றும் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள ஐந்து தமிழ் அர­சியல் கட்­சிகள் பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்­த­தோடு அக்­கட்­சி­களின் தலை­வர்­களும் கையொப்பம் இட்­டி­ருந்­தனர். 

இந்­நி­லையில் பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரும் முன்னாள் பாது­காப்புச் செய­லா­ள­ரு­மான கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஐந்து கட்­சிகள் கூட்­டி­ணைந்து முன்­வைத்­துள்ள 13அம்ச கோரிக்­கை­களை ஏற்­கப்­போ­வ­தில்லை என்றும் நிபந்­த­னை­க­ளுடன் அக்­கட்­சி­களின் தலை­வர்கள் குழு­வுடன் அமர்ந்து பேசு­வ­தற்கு கூட தயா­ரில்லை என்றும் திட்­ட­வட்­ட­மாக  அறி­விப்­பினை விடுத்­துள்ளார். 

2019_presiend_candtates.jpg

பிர­த­மரின் கூற்றும் சஜித்தின் தாம­தமும்

அடுத்த கட்­ட­மாக மற்­றொரு பிர­தான அர­சியல் தரப்­பான ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பாளர் அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸவை ஐந்து கட்­சி­களின் தலை­வர்­களும் கூட்­டாக சந்­திப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டன. 

குறிப்­பாக யாழிற்குச் சென்­றி­ருந்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஈழ­மக்கள் புரட்­சி­க­ர­வி­டு­தலை முன்­ன­ணியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­ட­னான சந்­திப்­பின்­போது, தான் கொழும்பு திரும்­பி­யதும் வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி சந்­திப்பை நடத்­து­வ­தற்­கான நேர ஒதுக்­கீட்­டினை பெற்­றுத்­த­ரு­வ­தா­கவும் தேசிய விட­யங்­களில் நீண்ட அனு­ப­வங்­களைக் கொண்ட அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, ராஜித சேனா­ரத்ன போன்­ற­வர்­க­ளையும் அக்­க­லந்­து­ரை­யா­டலில் உள்­ளீர்ப்­ப­தற்­கான நிலை­மை­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார். 

எனினும் சஜித் பிரே­ம­தாஸ பிர­சாரப் பணி­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டுள்­ள­மையால் உட­ன­டி­யாக கொழும்பில் இத்­த­கைய சந்­திப்­பொன்றை நடத்­து­வ­தற்கு நேர­ஒ­துக்­கீட்டை வழங்க முடி­யாத திரி­சங்கு நிலையில் அவர் இருப்­ப­தாக சஜித் தரப்பில் பிர­த­ம­ருக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அக்­கட்­சியின் முக்­கி­யஸ்தர் ஒருவர் தெரி­வித்­துள்ளார். 

இதே­நேரம் பிர­தமர் ரணி­லிடம் நேர ஒதுக்­கீட்டை பெறு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், நேர ஒதுக்­கீடு குறித்த உறு­திப்­பாடு இன்­னமும் கிடைக்­க­வில்லை என்று குறிப்­பிட்டார்.

மறு­பக்­கத்தில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலைவர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் அண்­மைய நாட்­களில் கொழும்பில் தங்­கி­யி­ருப்­ப­தோடு 23ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்வில் பங்­கேற்­ப­தற்­காக புளொட், ரெலோ ஆகிய கட்­சி­களின் தலை­வர்­களும் கொழும்­புக்கு வருகை தர­வுள்­ளனர். 

சிங்­கள வாக்­குகள் இழக்­கப்­படும் அச்சம்

எவ்­வா­றா­யினும், ஐந்து தமிழ் கட்­சி­களும் இணைந்து முன்­வைத்­துள்ள 13அம்ச கோரிக்­கைகள் நாட்டை பிள­வு­ப­டுத்­து­வ­தா­கவும் இரா­ணு­வத்­தி­னரை காட்­டிக்­கொ­டுப்­ப­தா­கவும் அமை­கின்­றது. அந்த நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டால் இந்த நாட்டின் சுயா­தீ­னத்­தன்மை கேள்­விக்­கு­றி­யா­கி­விடும் ஆகவே அவற்றை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

அத­னா­லேயே நிபந்­த­னை­களை முன்­வைத்­துள்ள தமிழ்த் தரப்­பினை கோத்­தா­பய சந்­திக்கும் தீர்­மா­னத்­தினை கூட எடுக்­க­வில்லை என்று  ராஜ­பக்ஷ தரப்பில் பிர­சா­ரங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் சஜித் பிரே­ம­தாஸ தமிழ்த் தரப்­பினை சந்­திப்­ப­தற்­கான நிலை­மை­களை தவிர்ப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 

சஜித் பிரே­ம­தாஸ தமிழ்த் தரப்பின் 13அம்ச கோரிக்­கை­களை ஏற்­காது வெறு­மனே சந்­திப்பில் ஈடு­பட்­டாலே தென்­னி­லங்­கையில் தமிழ்த் தரப்­புடன் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்றை மேற்­கொண்­டு­விட்டார் என்று கடு­மை­யான பிர­சாரம் செய்­யப்­படும். இதனால் தென்­னி­லங்கை சிங்­கள வாக்­கு­களை அவர் பெற­மு­டி­யாத நிலை­யொன்று தோற்­றம்­பெற்­று­விடும் என்றும் அவ­ருக்கு நெருக்­க­மான தரப்­புக்கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

எனினும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தரப்பில் தமிழ்த் தரப்­புடன் சந்­திப்­புக்­களை நடத்­த­வேண்டும் என்றும் தென்­னி­லங்கை மக்­க­ளுக்கு யதார்த்­தத்­தினை தெளிவு படுத்­த­வேண்டும் என்றும், கடந்த காலத்தில் கூட்­ட­மைப்­புடன் ஒப்­பந்தம் செய்­வ­தாக பிர­சாரம் செய்­யப்­பட்­ட­போதும் நாடு இன்று வரையில் பிள­வ­டை­ய­வில்லை என்­ப­தையும் எடுத்­துக்­கூ­ற­வேண்டும் என்றும் பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் தமிழ்த் தரப்­பினை சந்­திப்­பது குறித்து எவ்­வி­த­மான இறுதி முடி­வு­களும் இச்­செய்தி அச்­சுக்கு செல்லும் வரையில் எடுக்­கப்­ப­ட­வில்லை.


ஜே.வி.பியின் சமிக்ஞை
தமிழ்க் கட்­சி­களின் 13அம்ச நிபந்­த­னைகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பிர­சார செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விஜித ஹேரத் கருத்­து­வெ­ளி­யி­டு­கையில், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி கோரிக்கை போன்ற நடை­மு­றைச்­சாத்­தி­ய­மல்­லாத விட­யங்­களை எம்மால் ஏற்க முடி­யாது என்றும் தமிழ் மக்­களின் வாழ்­வா­தாரப் பிரச்­சி­னை­க­ளையும்  உட­னடிப் பிரச்­சி­னை­க­ளையும் தாம் ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் குறிப்­பிட்டார். 

அத்­துடன் தமது கட்­சியின் நிலைப்­பா­டு­க­ளுடன் ஒத்­துப்­போ­கின்­றதும் நடை­முறை சாத்­தி­ய­மான விட­யங்­களும் 13  அம்ச கோரிக்­கை­களில் காணப்­ப­டு­வதால் அவை தொடர்பில் கலந்­து­ரை­யாட தயா­ராக இருப்­ப­தா­கவும் கூறினார். 

கால அவ­கா­சமும் மாற்­று­வ­ழியும்
இவ்­வா­றி­ருக்க, 13அம்ச கோரிக்­கை­களில் ஐந்து கட்­சி­களின் தலை­வர்கள் கையொப்­ப­மிட்டு பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்­த­பின்னர் இந்த நிபந்­த­னை­களை பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்கள் ஏற்க மறுத்தால் அடுத்­த­கட்­ட­மாக என்ன செய்­வது என்­பது தொடர்பில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் மூன்று தெரி­வுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளன. 

தேர்தலை புறக்கணிப்பது இல்லையேல் தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ள சிவாஜிலிங்கத்தினை ஆதரிப்பது, மக்களின் சுயாதீன முடிவுக்கு விடுவது ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலேயே ஆராயப்பட்டுள்ளன.

எனினும்  தேர்தலை  புறக்கணிப்பது  அல்லது  பொருத்தமற்ற  வேட்பாளருக்கு   வாக்களிப்பது  என்பன  மேலும்  தமிழ் மக்களை  மோசமான  நிலைக்கு  கொண்டு செல்லும் என்பதால்  மக்களை  சுயாதீனமுடிவுக்கு விட்டுவிடுவதே  சிறந்தது  என்றும்  தமிழ் தரப்புக்கள் விரும்பவதாகத் தெரியவருகிறது. 

இந் நிலையில் 23ஆம் திகதி வரையில் ஜனாதிபதி வேட்பாளர்களின் போக்கினை அவதானித்து அதன் பின்னர் அடுத்த  கட்டம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலை ஐந்துகட்சிகளுக்கும் இடையில் முன்னெடுப்பதற்கு  முயற்சிகள்  எடுக்கப்படுவதாக   சிவில் சமுக பிரதிநிதி கலாநிதி.கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/67225

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.