Jump to content

ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து அரசியல் கட்சிகளும் பேரம்பேசும் சக்தியை சரியாக கையாள வேண்டும்: யாழ்.பல்கலை மாணவர் ஒன்றிய செயலர் செவ்வி

பொது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ள ஐந்து கட்­சித்­த­லை­வர்­களே அடுத்த கட்­ட­மான மூன்று பிர­தான வேட்­பா­ளர்­களைச் சந்­திக்­க­வுள்­ளனர். அவர்கள் கூட்­டுப்­ப­லத்­துடன் ஏற்­பட்­டுள்ள பேரம்­பேசும் சக்­தியை பயன்­ப­டுத்தி அர­சியல் சூழலை சரி­யாக கையாள்­கின்­றார்­களா என்­பதை தொடர்ந்தும் அவ­தா­னித்­துக்­கொண்டே இருப்போம் என்று யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்தின் செய­லாளர் எஸ்.பி.எஸ்.பபி­லராஜ் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வி­யின்­போது தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு,

virakesari.jpg

கேள்வி:- வடக்கு, கிழக்கு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அர­சியல் கட்­சி­களை ஒன்­றி­ணைக்கும் முயற்­சி­யினை கையி­லெ­டுத்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில்:- தமக்­கான நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வொன்­றினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கா­கவே தமிழ் மக்கள்  நீண்­ட­ கா­ல­மாக போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். பல்­வேறு வழி­க­ளிலும் அம்­மக்கள் தமது போராட்­டங்­களை விரி­வு­ப­டுத்தி ஜன­நா­யக ரீதியில் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இச்­சந்­தர்ப்­பத்தில் ஜனா­தி­பதித் தேர்­த­லொன்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத்­த­கை­ய­தொரு நிலை­மையில் தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அர­சியல் கட்­சிகள் வெவ்­வேறு தரப்­புக்­க­ளாக பிள­வு­பட்டு நிற்­பதால் தமிழ் மக்­க­ளுக்­கான பேரம்­பேசும் பலம் இழந்­து­விடும் துர்ப்­பாக்­கிய நிலைமை ஏற்­படும் ஆபத்து உள்­ள­மையை  கூர்ந்து கவ­னித்தோம்.

தமிழ்த் தேசிய அர­சியல் பரப்­பி­லுள்ள கட்­சி­களை ஒன்­றி­ணைத்து தமி­ழர்­களின் பேரம்­பேசும் சக்­தி­யினை பலப்­ப­டுத்தி ஒரு­மித்த முடி­வினை எடுக்க வேண்­டி­யது என்­பது காலத்தின் கட்­டாய தேவை­யாகும் என்­பதை உணர்ந்து கொண்டோம். தற்­போ­தைய சந்­தர்ப்­பத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்தி தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­க­ளிடம் நாம் நிலை­மை­களை எடுத்­துக்­கூ­றினோம்.  தமிழ் ­த­ரப்­புக்கள் அனைத்தும் தற்­போ­தைய அர­சியல் சூழலை உணர்ந்து கொண்­டன. அத­னை­ய­டுத்தே கலந்­து­ரை­யா­டல்கள் ஆரோக்­கி­ய­மான முறையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கேள்வி:- பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்ற ஆறு கட்­சி­க­ளி­டை­யேயும் ஆரம்­பத்தில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி பொது நிபந்­த­னை­களைக் கொண்ட ஆவ­ணத்தில் கைச்­சாத்­தி­ட­வில்­லையே?

பதில்:- ஆம், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை நிரா­க­ரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி முன்­வைத்த கருத்தால் 13ஆம் திகதி நடை­பெற்ற நான்­கா­வது சுற்று கலந்­து­ரை­யாடல் நீண்­டு­கொண்டு சென்­றது. இதனால் அன்­றை­ய­தினம் பொது இணக்­கப்­பாட்டில் கைச்­சாத்­தி­டப்­ப­டா­ம­லேயே கலந்­து­ரை­யாடல் மறுநாள் 14ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

அனைத்து கட்­சி­க­ளையும் இணங்க வைத்து பொது உடன்­பாட்டை கைச்­சாத்­திடும் நோக்­குடன் 14ஆம் திகதி  அன்று மதியம் 1.30இற்கு ஆரம்­ப­மான கலந்­து­ரை­யா­டலின் போது இடைக்­கால அறிக்­கை­யினை நிரா­க­ரிக்க வேண்டும் என்­ப­தனை ஆவ­ணத்தில் உள்­ள­டக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் உறு­தி­யாக இருந்த நிலையில் தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், என்­பன அதனை ஆவ­ணத்தில் உள்­ள­டக்கக் கூடாது என்றும் இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திற்கு வழங்­கிய உறு­தி­மொ­ழியின் பேரி­லேயே யாப்பு உரு­வாக்க முயற்சி இடம்­பெ­று­கின்­றது. அதனை நாம் குழப்பி விடக்­ கூ­டாது என்­றனர்.

அதே­வேளை ரெலோ தரப்­பினர் தாம் இடைக்­கால வரைபு வந்த போதே அதனை எதிர்த்­த­வர்கள் என்றும் தற்­போ­தைய  நிலையில் அதனை ஆவ­ணத்தில் உள்­வாங்கி தமி­ழ­ரசுக் கட்­சி­யி­ன­ருக்கு சங்­க­டத்தை ஏற்­ப­டுத்­து­வ­தனை தவிர்க்க வேண்­டு ­மென்றும் தாம் ஒன்­றாக பய­ணிப்­ப­வர்கள் என்­பதால் இவ்­வி­ட­யத்தில் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து இவ் ஆவ­ணத்தில் இடைக்­கால அறிக்கை நிரா­க­ரிப்­பதை உள்­ள­டக்க தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­னார்கள்.

தமிழ் மக்கள் கூட்­டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தாம் இடைக்­கால அறிக்­கை­யினை வெளிப்­ப­டை­யாக நிரா­க­ரித்­துள்ள போதும், புதிய யாப்பு உரு­வாக்கம் கைவி­டப்­பட்ட நிலை­யிலும் இவ் ஆவ­ணத்தில் ஒற்­றை­யாட்சி நிரா­க­ரிப்பு என்ற வாசகம் இருப்­பதன் அடிப்­ப­டை­யிலும் இடைக்­கால அறிக்கை பற்றி இவ் ஆவ­ணத்தில் உள்­ள­டக்க வேண்­டிய தேவை இல்லை எனவும் வாதிட்­டனர்.  

தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் புதிய யாப்பு உரு­வாக்க முயற்சி தொடர வாய்ப்­புள்­ள­மையை ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­களின் கருத்­துக்­களை குறிப்­பிட்டு முன்­வைத்­தார்கள். அதனால் ஒற்­றை­யாட்சி இடைக்­கால வரைபு நிரா­க­ரிக்க வேண்டும் எனும் தமது நிலைப்­பாட்­டி­லி­ருந்து பின்­வாங்­க ­வில்லை.  

இந்­நி­லையில் விவாதம் நீண்டு கொண்டு செல்­வ­தாலும் இதனை ஓர் முடி­வுக்கு கொண்டு வர வேண்டும் எனும் நோக்­கிலும் அடிக்­கு­றிப்­பி­லேனும் இடைக்­கால அறிக்கை நிரா­க­ரிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­னணி பிரே­ரித்­தது என்று குறிப்­பி­டலாம் என்று கலந்­து­ரை­யா­டலில் பங்­கு­கொண்ட சிவில் சமூக தரப்­பி­னரால் ஓர் கருத்து முன்­வைக்­கப்­பட்­டது.

அதனை தமிழ்த் ­தே­சிய மக்கள் முன்­னணி ஏற்­றுக்கொண்ட போதும் ஏனைய கட்­சிகள், அடிக்­கு­றிப்­பினை இடு­வது எம்முள் இணக்­கப்­பாடு இல்லை என்­ப­தனை தெளி­வாக காட்­டு ­மென்­ப­துடன் பொது ஆவணம் பல­வீன­ம­டையும் எனக் கூறி அதனை அடி­யோடு மறுத்­து­விட்­டனர்.

இறு­தி­யாக இடைக்­கால அறிக்கையை நிரா­க­ரித்தல் வேண்டும் என்ற விட­யத்தை ஆவ­ணத்தில் உள்­ள­டக்­காது விடு­வது என்­ப­துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி உட்­பட கட்­சிகள் வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்­க­ளையும் நிலைப்­பா­டு­க­ளையும் நாம் ஊடக அறிக்கை ஒன்றின் மூல­மாக பகி­ரங்­கப்­ப­டுத்­து­வ­தென்றும் அனை­வரும் இதனை ஏற்­றுக்­கொண்டு கையொப்­ப­மிட வேண்டும் என்றும் நாம் கூறிய போதும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர் கையொப்­ப­மிட மறுத்­தனர்.

சிவில் சமூ­கத்­தினர் சார்பில் பங்கு கொண்ட மத­கு­ரு­மார்கள் மேற்­கொண்ட சம­ரச முயற்­சிகள் வெற்றி அளிக்­காத நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணி­யினர்  பொது உடன்­பாட்டில் கையொப்­ப­மிட மறுத்­த­தோடு தமது கவ­லை­யி­னையும் பதிவு செய்து வெளி­யேறி சென்­றனர்.

கேள்வி:- அடுத்த கட்டச் செயற்­பா­டு­களில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் வகி­பாகம் எவ்­வாறு இருக்­கப்­போ­கின்­றது?

பதில்:- கையொப்­ப­மிட்ட ஐந்து கட்­சியின் தலை­வர்கள் அடங்­கிய குழு­வினர் இவ் ஆவ­ணத்தை முன்­னி­றுத்தி ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கி­யுள்ள பிர­தான  மூன்று  வேட்­பா­ளர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­­ப­ட­வுள்­ளனர். அதன் அடிப்­ப­டையில் அடுத்­த­கட்ட நகர்­வுகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன.

பொது இணக்­கப்­பாட்­டிற்கு வந்த அர­சியல் தலை­வர்­க­ளி­டத்தில் இவ் விட­யத்­தினை ஒப்­ப­டைத்து பொறுப்பு வாய்ந்த மாண­வர்­க­ளாக நாம் விலகிக் கொண்­டுள்ளோம். கலந்­து­ரை­யா­டல்­களின் முன்­னேற்­றங்­களின் அடிப்­ப­டையில் அர­சியல் கட்சித் தலை­வர்­களே தொடர்ச்­சி­யாக இந்த விட­யத்­தினை கையாள்­வார்கள்.

எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் இரு பிர­தான வேட்­பா­ளர்­களில் எவ­ருமே 50 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மான வாக்­கு­க­ளினை பெறப்­போவ­தில்லை. அவ்­வா­றான சூழலில் இரண்டாம் விருப்பத் தெரிவு கணக்கில் எடுக்­கப்­பட்டே புதிய ஜனா­தி­பதி தெரி­வு­செய்­யப்­ப­டுவார் என்­ப­தனை கருத்தில் கொண்டு தமிழ் அர­சியல் கட்சித் தலை­வர்கள் இப்­பே­ரம்­பேசும் சக்­தியை பயன்­ப­டுத்தி சூழலை சரி­யாக கையாள்­கி­றார்­களா என்­ப­தனை நாம் தொடர்ந்தும் அவ­தா­னித்த வண்­ணமே இருப்போம்.

கேள்வி:- பொது இணக்கத்திற்கு வந்துள்ள கட்சிகள் வழி தவறினால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில்:- அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் வகையில் எம்மாலான  முயற்சிகளை செய்துவிட்டோம். இதனை  மக்கள் முன்னும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். அரசியல் கட்சிகள் இணங்கிக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து மாறுவார்கள் எனில் தாயகவாழ் தமிழ் மக்களே தீர்க்கமான முடிவுகளை சுயாதீனமாக எடுக்கவேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் சரியான முடிவினை எடுக்கும் வகையிலும் அவர்களின் நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும். எம்மினத்தின் அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தொடர்ந்தும் எம்மாலான பங்களிப்புக்களை செய்துகொண்டே இருப்போம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

நேர்காணல்கள் : ஆர்.ராம்

 

https://www.virakesari.lk/article/67222

Link to comment
Share on other sites

இந்த ஆண்டு சமாதானத்திற்கான தமிழ் நோபல் பரிசை கிழக்கு-வடக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொடுக்கலாம்.

கேள்வி:- பொது இணக்கத்திற்கு வந்துள்ள கட்சிகள் வழி தவறினால் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்?

பதில்:- அரசியல் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஒருமித்த நிலைப்பாடு ஒன்றினை எடுக்கும் வகையில் எம்மாலான  முயற்சிகளை செய்துவிட்டோம். இதனை  மக்கள் முன்னும் பகிரங்கப்படுத்தியுள்ளோம். அரசியல் கட்சிகள் இணங்கிக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்து மாறுவார்கள் எனில் தாயகவாழ் தமிழ் மக்களே தீர்க்கமான முடிவுகளை சுயாதீனமாக எடுக்கவேண்டும். அத்துடன் தமிழ் அரசியல் தலைவர்கள் சரியான முடிவினை எடுக்கும் வகையிலும் அவர்களின் நகர்வுகளினை தொடர்ந்தும் அவதானித்த வண்ணம் இருத்தல் வேண்டும். எம்மினத்தின் அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கான பயணத்தில் தொடர்ந்தும் எம்மாலான பங்களிப்புக்களை செய்துகொண்டே இருப்போம் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஊசிப் போன வடை என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.