Jump to content

ஜனாதிபதி தேர்தல் ;12 நாட்களுக்குள் 1034 முறைப்பாடுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் ;12 நாட்களுக்குள் 1034 முறைப்பாடுகள்

(செ.தேன்மொழி)

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

election.jpg

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று மாலை 4 மணிவரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு 1,034 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன்போது தேர்தல் சட்டத்திட்டங்களை மீறியதாக 992 முறைப்பாடுகளும், வெவ்வேறு தேர்தல் முரண்பாடுகளின் காரணமாக 34 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் எட்டு முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்  தேர்தல்கள் ஆணையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/67237

Link to comment
Share on other sites

ஜனநாயகமிக்க தேர்தல் முறையை இலங்கை பின்பற்றி வருவதால் ஜனாநாயக நாடுகள் பாராட்டு

J Anojan on 2019-10-20 14:57:09

 

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சுதந்திரம், ஜனநாயகமிக்க தேர்தல் முறைமையை தொடர்ச்சியாக பேணி வருவது தொடர்பில் ஜனநாயக நாடுகள் இலங்கையை பாராட்டியுள்ளதாக நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஸ்டீப் Stef  Blok தெரிவித்துள்ளார்.

01-4-1.jpg

இலங்கைக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையிலான இருதரப்பு மற்றும் பிராந்திய செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது கட்சி சார்பின்றி தான் செயற்படப்போவதாக தெரிவித்த ஜனாதிபதி , இந்த தேர்தல் அமைதியான ஜனநாயகமிக்க, ஊழல், மோசடியற்ற தேர்தலாக அமைவதற்கு தன்னால் உத்தரவாதமளிக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் முப்படைகள் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால் தேர்தல் காலங்களில் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து பக்கச்சார்பற்ற சுயாதீனமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் துறையினருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளின்போது குறிப்பாக நெடுஞ்சலைகள் அபிவிருத்தி, நீர் மாசடைதலை தடுப்பதற்கான செயற்திட்டங்கள், கிராமிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களுக்காக நெதர்லாந்து அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி, அண்மையில் பொலன்னறுவையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சில வேலைத்திட்டங்களுக்கு நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவிகளையும் நினைவுகூர்ந்தார்.

இலங்கையின் திரவ பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அத்துறை தொடர்பில் நிபுணத்துவமுடைய நெதர்லாந்தின் பங்களிப்பை மென்மேலும் பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்த நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளின்போது சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் தேவை தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.

நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆசியாவிற்கான பிரதான அதிகாரி, இலங்கையின் நெதர்லாந்து தூதுவர் உள்ளிட்டோரும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசல வீரக்கோன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/67236

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சனநாயகம்.. சொறீலங்காவில்.. வெள்ளைப் பைத்தியங்கள் சில.. மறதி பிடித்து அலையுதுங்க..

கோத்தாவுக்கு வாக்களிக்க முன் இதனைப் பார்க்கவும். 

Link to comment
Share on other sites

மேற்குலக நாடுகளை பொறுத்தவரையில் பல கட்சி அமைப்பு முறையும், சொன்ன கால கட்டத்தில் தேர்தல்களை நடாத்துவதும், சனநாயகத்தின் ஆணி வேராக பார்க்கப்படுகின்றது.

அதற்கு அப்பால், தான் மனித உரிமைகள், சம உரிமைகள், மத உரிமைகள் என பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவை முக்கியமாக பார்க்கப்படுவதில்லை.


 சனநாயகம் உள்ள இடங்களில் மேற்குலம் தனக்கு தேவையாவனற்றை சுரண்டவும் சந்தைப்படுத்தவும் இலகுவாக பயன்படுத்தி விடும்,

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.