Jump to content

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் எப்படி வாக்களிப்பது : 1 , 2 , 3 விருப்புகளை வழங்க எதிர்பார்ப்போர் கவனிக்க வேண்டியது

10915304_406520089528734_276907822317737

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகளையோ வாக்குச் சீட்டில் அடையாளமிட முடியும்.


குறிப்பாக வாக்காளர் ஒருவர் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்புவாராயின் தான் விரும்பும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியில் மட்டும் 1 என்ற இலக்கத்தை அல்லது X எனும் புள்ளடியை இடுவது பொருத்தமாகும். அல்லது முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பத் தெரிவுகள் இருக்குமாயின் முதலாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேராக உள்ள பெட்டியினுள் 1 எனவும் இரண்டாவது விருப்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 2 எனவும் மூன்றாவது விரும்பத் தெரிவுக்குரிய வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்துக்கு நேரான பெட்டியில் 3 எனவும் அடையாளமிடுவது பொருத்தமாகும்.


எவ்வாறாயினும் 1 , 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்கும் போது சில விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதாவது பிரதான வேட்பாளர்களாக கருதப்படுபர்களுக்கு 1ஆம் விருப்பை வழங்கிவிட்டு மற்றைய சாதாரண வேட்பாளர்களாக கருதப்படுபவர்களுக்கு 2 , 3ஆம் விருப்பு வாக்குகளை வழங்குவது அர்த்தமற்றதே.

அதாவது யாருக்கும் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் 2ஆம் , 3ஆம் விருப்பு வாக்குகளை எண்ணும் போது அதி கூடிய வாக்குகளை பெற்றுள்ள இரண்டு வேட்பாளர்களுக்கு கிடைத்துள்ள 2 , 3ஆம் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும்.

இவ்வேளையில் ஏற்கனவே பிரதான வேட்பாளர்கள் இருவருக்கும் கிடைத்துள்ள 1ஆம் விருப்பு வாக்கு எண்ணப்பட்டிருப்பதால் அந்த வாக்கு சீட்டு மீண்டும் வாக்கு எண்ணும் போது எடுத்துக்கொள்ளப்படாது. இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

இதனால் விருப்பு வாக்குகளை வழங்க விரும்பின் சாதாரண வேட்பாளர் ஒருவருக்கு 1ஆம் விருப்பை வழங்கிய பின்னர் பிரதான வேட்பாளருக்கு 2ஆவது விருப்பை வழங்கலாம். இது பிரயோசமானதாக அமையும்.


இதேவேளை எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கொன்று அடையாளமிடப்படாத அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு X என்ற அடையாளமிடப்பட்டுள்ள அல்லது ஒரு வேட்பாளருக்கு 1 எனவும் மற்றுமொரு வேட்பாளருக்கு X என்ற அடையாளமும் இடப்பட்டுள்ள அல்லது இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவித்தல் மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள வாக்குச் சீட்டுக்கள் செல்லுபடியற்றதானதாகும் என்பதுடன் வாக்கு எண்ணும் போது அவை நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.samakalam.com/செய்திகள்/ஜனாதிபதி-தேர்தலில்-எப்பட/

Link to comment
Share on other sites

இது பற்றி பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும்.

ஊரிலுள்ள பலர் பத்திரிகைகளை வாசிப்பதுண்டு. 

Link to comment
Share on other sites

"இதன்போது அவர்கள் இருவர் தவிர்த்த மற்றைய வேட்பாளர்களுக்காக முதலாம் விருப்பு வாக்கு வழங்கப்பட்டுள்ள வாக்கு சீட்டுகளில் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும். என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்"

 

எனக்கு புரிந்தது, சரியோ தெரியவில்லை :

அநேகமாக ஒருவரும் 50% த்திற்கு மேலாக முதல் தெரிவில் வாக்குகளை பெற மாட்டார்கள் என்றால், மிகுதி உள்ள வாக்குகளே இங்கு முக்கியமாக்கலாம்.

உதாரணத்திற்கு முதலாவதாக வந்தவருக்கு 47%
இரண்டாவதாக வனத்தாருக்கு 43% வாக்குகள் என்றால்    
மொத்தம் 90% வாக்குகள்; மிகுதி 10% வாக்குகள்.

யாருமே 50% பெறாதமையால், மிகுதி 10% வாக்குகள் பார்க்கப்படும் ( அதிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இருக்கும்) ; 
அதில் யாருக்கு அதிகம் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும்.  

Link to comment
Share on other sites

10 minutes ago, ampanai said:

எனக்கு புரிந்தது, சரியோ தெரியவில்லை :

அநேகமாக ஒருவரும் 50% த்திற்கு மேலாக முதல் தெரிவில் வாக்குகளை பெற மாட்டார்கள் என்றால், மிகுதி உள்ள வாக்குகளே இங்கு முக்கியமாக்கலாம்.

உதாரணத்திற்கு முதலாவதாக வந்தவருக்கு 47%
இரண்டாவதாக வனத்தாருக்கு 43% வாக்குகள் என்றால்    
மொத்தம் 90% வாக்குகள்; மிகுதி 10% வாக்குகள்.

யாருமே 50% பெறாதமையால், மிகுதி 10% வாக்குகள் பார்க்கப்படும் ( அதிலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் இருக்கும்) ; 
அதில் யாருக்கு அதிகம் 2 , 3ஆம் விருப்பு வாக்குகளே எண்ணப்படும்.  

இன்னொரு திரியில் நான் எழுதியது.

யாரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாவிட்டால் கூடிய வாக்குகளை பெற்ற முதல் இரு வேட்பாளர்களை தவிர ஏனையோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் இரண்டாம் விருப்பத்தெரிவில் இவ் இரு வேட்பாளர்களில் ஒருவர் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள், இரண்டாம் விருப்ப தெரிவில் நீக்கப்பட்ட வேறு யாரினதும் பெயரை ஏதும் வாக்காளர்கள் இட்டிருந்தால் அவர்களது மூன்றாம் விருப்ப தெரிவில் இவ்விரு வேட்பாளர்களில் ஒருவரின் பெயர் இருந்தால் அதை சேர்ப்பார்கள். அதன் மூலம் இறுதி முடிவெடுக்கப்படும்.”

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

 

இதில் இறுதியில் கூறப்படும் சில விடயங்கள் சாதாரண நடைமுறைகளே தவிர இத்தேர்தலில் இந்நடைமுறை பின்பற்றப்படாது.

நான் ஏற்கனவே தந்த விளக்கம் போல் தான் இரண்டாம் சுற்றில் வாக்குகள் சேர்க்கப்படும்.

அதன்படி A, B பெறும் மொத்த வாக்குகளை செல்லுபடியான வாக்குகளாக கொண்டு அதில் அரைவாசிக்கு மேல் (50% இற்கு மேல்) பெறுபவர் வெற்றியாளர் என அறிவிப்பார்கள்.

மகிந்த தேசப்பிரிய முன்னர் இவ்வாறு தான் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாளை நேர காலத்துடன் வாக்களிக்க செல்லுங்கள் : வாக்காளர்களுக்கு அறிவிப்பு

நாளை நேர காலத்துடன் வாக்களிக்க செல்லுங்கள் : வாக்காளர்களுக்கு அறிவிப்பு

நாளைய தினத்தில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு அனைத்து வாக்காளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்களிப்பு நேரத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையிலேயே நேரகாலத்துடன் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்புகள் நடக்கவுள்ளன. -(3)

http://www.samakalam.com/uncategorized/நாளை-நேர-காலத்துடன்-வாக்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.