Jump to content

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு? எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
உடல் பருமன்படத்தின் காப்புரிமை Jeff J Mitchell

அதிக எடை மற்றும் உடல் பருமனான நபர்களின் நுரையீரலில் கொழுப்பு திசுக்களை ஆராய்ச்சியாளர்கள் முதன்முறையாக கண்டறிந்துள்ளனர்.

52 பேரின் நுரையீரல் மாதிரிகளை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, பிஎம்ஐ எனப்படும்உயரத்துக்கு ஏற்ற எடை கணக்கின்படி, நுரையீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்திருப்பதை கண்டறிந்தனர். 

உடல் எடை கூடி இருப்பவர்கள் அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஏன் ஆஸ்துமா அபாயம் அதிகரிக்கிறது என்பதையும், இந்த கண்டுபிடிப்பு மூலம் விளக்க முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உடல் எடையை குறைப்பதன் மூலம் இவர்களின் உடல் நிலையை சீராக மாற்றியமைக்க முடியுமா என்பதையும் கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அதிகரிக்கும் ஆபத்து...

ஐரோப்பாவில் உடலின் சுவாச அமைப்பு குறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், தானமாக வழங்கப்பட்ட நுரையீரலின் பிரேத பரிசோதனை மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில் பதினைந்து பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு இல்லை என்றும், 21 பேருக்கு ஆஸ்துமா இருந்தது என்றும் கண்டறிந்தனர். மேலும், அவர்கள் பிற காரணங்களால் இறந்ததும் கண்டறிப்பட்டது. சுமார் 16 பேர் ஆஸ்துமா பாதிப்பாலேயே இறந்துள்ளனர்.

உடல் பருமன்படத்தின் காப்புரிமை Getty Images

நுண்ணோக்கி மற்றும் சாயங்களை பயன்படுத்தி நுரையீரல் மாதிரிகளிலிருந்து கிட்டத்தட்ட 1,400 சுவாசவழிப் பாதைகள் குறித்து விரிவான பகுப்பாய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

பிஎம்ஐ அளவு அதிகமாக இருந்த பலருக்கு சுவாசப்பாதைகளின் சுற்றுப்புறத்தில் கொழுப்பு திசுக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். 

கொழுப்பு அதிகரித்தால் சுவாசவழிப்பாதைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி   நுரையிரலை வீக்கமடைய செய்யும். இதுவே அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு ஆஸ்துமா அபாயம் இருப்பதை விளக்குகிறது. 

நேரடி அழுத்தத்துக்கு உள்ளாகும் நுரையீரல்

அதிக எடை மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு நிச்சயம் ஆஸ்துமா பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது அல்லது மோசமான ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும் என  இந்த ஆய்வில் பணிபுரிந்த பெர்த்தில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் உள்ள இணை பேராசிரியர் டாக்டர் பீட்டர் நோபல் கூறுகிறார். 

உடல் பருமன்படத்தின் காப்புரிமை SEBASTIAN GOLLNOW

அதிக எடை காரணமாக நுரையீரலில் ஏற்படும் நேரடி அழுத்தம் அல்லது அதிக எடையால் பொதுவாகவே நுரையீரல் வீக்கம் அடைந்துருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் விவரிக்கின்றனர்.

ஆனால், இவர்களின் ஆராய்ச்சி மற்றொரு செயல்முறையையும் விளக்குகிறது என்று கூறுகிறார் டாக்டர் பீட்டர் நோபல்.

நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்தும் காற்றுப்பாதைகள் வீக்கமாக இருப்பதே ஆஸ்துமா ஏற்படுவதற்கான அறிகுறிகளின் அதிகரிப்புக்கு விளக்கம் தருகிறது என நம்புவதாக தெரிவிக்கிறார் டாக்டர் பீட்டர் நோபல்.

அதிக முக்கியத்துவம்...

உடல் எடைக்கும், சுவாச நோய்க்கும் இடையே உள்ள தொடர்பில் இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு எவ்வளவு மோசமான அறிகுறி என்பதை இது காட்டுகிறது என்று ஐரோப்பிய ரெஸ்பிரேட்டரி சொசைட்டியின் தலைவர் தியரி ட்ரூஸ்ட்டர்ஸ் கூறுகிறார்.

உடல் பருமன் உள்ள நோயாளிகள் மூச்சுப்பயிற்சி மற்றும் ஏதேனும் ஒரு செயல்பாட்டின் மூலம்தான் சுவாசிக்க முடியும் என்ற எளிய கவனிப்புக்கு அப்பாற்பட்டு இந்த ஆராய்ச்சி செல்கிறது.  உடல் பருமனுடன் தொடர்புடைய உண்மையான காற்றுப்பாதை மாற்றங்களையும் இந்த ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.

உடல் பருமன்படத்தின் காப்புரிமை Getty Images

உடல் எடையை குறைப்பதன் மூலம் கொழுப்பு திசுக்களின் இந்த கட்டமைப்பை மாற்றியமைக்க முடியுமா என்பதை அறிய கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

பிரிட்டிஷ் தொராசிக் சொசைட்டி என்ற அறிவியல் குழுமதத்தின் தலைவர் டாக்டர் எலிசபெத் சாபே, உடல் எடை நுரையீரலில் உள்ள காற்றுப்பாதைகளின் கட்டமைப்பை பாதிக்கும் என்று சுட்டி காட்டப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்.

தேசிய மற்றும் உலகளவில் உடல் பருமன் பிரச்சனை அதிகரித்துவரும் சூழலில், ஆஸ்துமா ஏன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சனையாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் ஆஸ்துமா சிகிச்சையை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை அடையாளம் காண்பதற்கும் இந்த ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்கிறார் டாக்டர் எலிசபெத் சாபே.

மேலும், இது ஒரு சிறிய ஆய்வு என்றும், பெரியளவில் நோயாளிகளிடமும் பிற நுரையீரல் நோய்களிலும் இந்த மதிப்பீட்டை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் டாக்டர் சபே கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-50118175

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.