Jump to content

ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகளில் தகவல்


ampanai

Recommended Posts

 
கனடா பிரதமர் தேர்தலுக்கு இரண்டாவது முறையாக போட்டியிடும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பெரும்பான்மையை இழப்பார் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நிலப்பரப்பில் உலகின் 2வது பெரிய நாடாக, 338 மக்களவை தொகுதிகளுடன் இருக்கும் கனடாவில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் செல்வாக்கும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு பெற்றவருமான ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக போட்டியிடுகிறார்.


இந்த தேர்தலில்  ஜஸ்டின் பெரும்பான்மை இழப்பார் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. குயூபெக் என்ற நிறுவனம் தொடர்பான ஊழல் வழக்கை விசாரிக்க ஜஸ்டின் தடை விதித்தை முன்வைத்து, எதிர்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்ட்டி தீவிர பிரச்சாரம் செய்து வருவதால் இந்த பின்னடைவு எனவும்  கூறப்படுகிறது.

இதனால் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மையை பெற வாய்ப்பில்லாததால், ஜஸ்டின் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க நேரிடும் எனவும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.polimernews.com/dnews/85779/ஜஸ்டின்-ட்ரூடோபெரும்பான்மையை-இழப்பார்-எனகருத்து-கணிப்புகளில்-தகவல்

LEADERS-DEBATE.jpg

Liberal Party Leader Justin Trudeau, People’s Party of Canada Leader Maxime Bernier, Conservative Leader Andrew Scheer, Bloc Québécois Leader Yves-François Blanchet, Green Party Leader Elizabeth May and NDP Leader Jagmeet Singh. CANADIAN DEBATE PRODUCTION PARTNERSHIP.
Link to comment
Share on other sites

எனக்கு ஜஸ்ரினையும் லிபரல்ஸ் ஐயும் கண்ணிலும் காட்டக் கூடாது. கடுமையாக உழைப்பவர்களிடம் இருந்து உறிஞ்சி Welfare கூட்டத்துக்கு அர்ப்பணிக்கும் இடது சாரி கூட்டங்கள் இவர்கள். இவர்களைப் போலத்தான் NDP யும்.
ஆனால் இம் முறை எவருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டு லிபரலும் NDP யும் சேர்ந்து ஆட்சியமைக்கும் நிலை வரலாம். ஆரம்பத்தில் பழமைவாத கட்சியான கொன்சர்வேட்டிக்கு கிடைத்து இருந்த ஆதரவு அதன் தலைவரின் வசீகரமற்ற கொள்கை மற்றும் பேச்சுக்களால் குறைவடைந்து விட்டது.

Link to comment
Share on other sites

தலைப்பாகை வைத்திருப்பவர் என்னை கவர்ந்திருந்தார். என்னால், எமது அடுத்த தலைமுறையையும் எதிர்காலத்திற்கும் சரியானவராக தெரிந்தார்.

கியூபெக் பிரிவினைவாதியையும் பிடித்திருந்தது, ஆனால் பிடிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

கடுமையாக உழைப்பவர்களிடம் இருந்து உறிஞ்சி Welfare கூட்டத்துக்கு அர்ப்பணிக்கும் இடது சாரி கூட்டங்கள் இவர்கள்.

இது welfare கூட்டம் என்று அடித்தட்டு மக்களை சோம்பேறிகள் என்று சொல்லி வர்க்கவேறுபாட்டை வளர்க்கும் கருத்து. இந்தியாவில் சாதியமைப்பு போல மேல்நாடுகளில் வர்க்க அமைப்பு உள்ளது. கீழ் வர்க்க மக்கள் மேலே முன்னேற சமூக உதவித் திட்டங்கள் உதவுகின்றன. அதனைத் துஷ்பிரயோகிக்கும் சிலரை வைத்துக்கொண்டு எல்லோரையும் வேலை செய்யாமல் சொகுசாக வாழ்கின்றார்கள் என்று சொல்லமுடியாது.

தற்போது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதைப் பற்றி வரும் விமர்சனங்களும் இப்படியான “பார்வை”களிலேயே வருகின்றது.

Link to comment
Share on other sites

27 minutes ago, கிருபன் said:

இது welfare கூட்டம் என்று அடித்தட்டு மக்களை சோம்பேறிகள் என்று சொல்லி வர்க்கவேறுபாட்டை வளர்க்கும் கருத்து. இந்தியாவில் சாதியமைப்பு போல மேல்நாடுகளில் வர்க்க அமைப்பு உள்ளது. கீழ் வர்க்க மக்கள் மேலே முன்னேற சமூக உதவித் திட்டங்கள் உதவுகின்றன. அதனைத் துஷ்பிரயோகிக்கும் சிலரை வைத்துக்கொண்டு எல்லோரையும் வேலை செய்யாமல் சொகுசாக வாழ்கின்றார்கள் என்று சொல்லமுடியாது.

தற்போது இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதைப் பற்றி வரும் விமர்சனங்களும் இப்படியான “பார்வை”களிலேயே வருகின்றது.

இங்கு கொடுக்கப்படும் இவ்வாறான உதவித் திட்டங்களில் அனேகமானவை சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் அதனை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதற்குமே உதவி செய்கின்றன.  அங்கவீனமானவர்களுக்கு, உடல் நிலை காரணமாக உழைக்க முடியாதவர்களுக்கு சரியான போசாக்கு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்வது வேறு, வருடாந்திரம் குறைவான தொகையை அரசுக்கு காட்டும் கும்பல்களுக்கு உதவி செய்வது வேறு.

ரூடோ போன்ற இடது சாரிகள் தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலை வழங்குவதற்கு பதிலாக உதவிப்பணத்தை வழங்குவது எந்த பயனையும் கொடுக்காது. பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்காமல் அல்லது பெறும் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்காமல், வருடம் 50000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இலவசமாக கொடுக்க நினைப்பது எல்லாம் உழைப்பவர்களை சுரண்டும் முறைகள் தான், ரூடோவின் காபர்ன் வரி போன்றன மிகப் பெரும் Scams.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் இதனையும் ஒப்பிடமுடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் இடது சாரி மற்றும் சோசலிச அரசியலை அடியோடு வெறுப்பவன் என்பதாலும் முதலாளித்துவ கொள்கைகளில் நாட்டமுள்ளவன் என்பதாலும் லிபரல்களையும், ndp இனரையும் அடியோடு வெறுக்கின்றேன்.

Link to comment
Share on other sites

காப்பரின்  8 வருட ஆட்சியில் மேற்குறிப்பிட்ட எவற்றை மாற்றிக்காட்டி இருந்தார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலான வெளிநாடுகளில் ஜஸ்டின் விரும்பத்தக்க  பிரதமராகவே காணப்படுகின்றார். எனினும் அவருக்கு மிகவும் இறுக்கமான தேர்தலாகவே இருக்குமென ஜேர்மனிய தொலைக்காட்சிகளில் காட்டினார்கள். காரணம் ஊழல் வழக்கு மற்றும் ஒரு புகைப்படம்.

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

காப்பரின்  8 வருட ஆட்சியில் மேற்குறிப்பிட்ட எவற்றை மாற்றிக்காட்டி இருந்தார்??

அதனால் தான் கடந்த முறை ரூடோவுக்கு வாக்களித்து இருந்தேன்.

ஆனால் ரூடோ வந்தபின் செய்தவற்றில் பல எனக்கு பிடிக்கவில்லை.

சிரியா அகதிகளை / முஸ்லிம்களை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றியது, கார்பன் வரி, கஞ்சாவை அனுமதித்தமை, வெளியுறவு கொள்கை, தன்னை முன்னிலைப் படுத்த்திய ரூடோவின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள், சோசலிச சார்பு போன்றன வெறுக்க வைத்து விட்டன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

சிரியா அகதிகளை / முஸ்லிம்களை பெரும் எண்ணிக்கையில் குடியேற்றியது

ஏன் இந்த எரிச்சல்? கனடாவிற்கு அகதியாக வந்து குடியேறிய ஈழத்தமிழர் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இங்கு கொடுக்கப்படும் இவ்வாறான உதவித் திட்டங்களில் அனேகமானவை சோம்பேறித்தனத்தை வளர்ப்பதற்கும் அதனை துஷ்பிரயோகத்துக்குள்ளாக்குவதற்குமே உதவி செய்கின்றன.  அங்கவீனமானவர்களுக்கு, உடல் நிலை காரணமாக உழைக்க முடியாதவர்களுக்கு சரியான போசாக்கு கிடைக்காத குழந்தைகளுக்கு உதவி செய்வது வேறு, வருடாந்திரம் குறைவான தொகையை அரசுக்கு காட்டும் கும்பல்களுக்கு உதவி செய்வது வேறு.

ரூடோ போன்ற இடது சாரிகள் தொழில் இல்லாதவர்களுக்கு தொழிலை வழங்குவதற்கு பதிலாக உதவிப்பணத்தை வழங்குவது எந்த பயனையும் கொடுக்காது. பல்கலைக்கழகங்களின் கட்டணத்தை குறைக்காமல் அல்லது பெறும் கடனுக்கான வட்டி வீதத்தை குறைக்காமல், வருடம் 50000 இற்கும் குறைவான வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இலவசமாக கொடுக்க நினைப்பது எல்லாம் உழைப்பவர்களை சுரண்டும் முறைகள் தான், ரூடோவின் காபர்ன் வரி போன்றன மிகப் பெரும் Scams.

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டையும் இதனையும் ஒப்பிடமுடியாது.

எல்லாவற்றுக்கும் மேலாக நான் இடது சாரி மற்றும் சோசலிச அரசியலை அடியோடு வெறுப்பவன் என்பதாலும் முதலாளித்துவ கொள்கைகளில் நாட்டமுள்ளவன் என்பதாலும் லிபரல்களையும், ndp இனரையும் அடியோடு வெறுக்கின்றேன்.

எனக்கும் உங்களது கருத்தில் உடன்பாடுண்டு ஆனால் உண்மையாக மனிதாபிமான உதவிகளை சிலர் தவறாக பாவிக்கிறார்கள் என்பதற்காக அது தேவைப்படுபவர்களை கைவிடமுடியாதல்லவா? இதுவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு சுற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படை தான். இதில் நாம் கோபப்படுகின்றோம் ஆனால் இதனால் அதிகம் பயனடையாத இந்நாட்டவரே இச்சட்டங்களை இயற்றுகின்றனர். தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனக்கும் உங்களது கருத்தில் உடன்பாடுண்டு ஆனால் உண்மையாக மனிதாபிமான உதவிகளை சிலர் தவறாக பாவிக்கிறார்கள் என்பதற்காக அது தேவைப்படுபவர்களை கைவிடமுடியாதல்லவா? இதுவும் ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு சுற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது என்பதன் அடிப்படை தான். இதில் நாம் கோபப்படுகின்றோம் ஆனால் இதனால் அதிகம் பயனடையாத இந்நாட்டவரே இச்சட்டங்களை இயற்றுகின்றனர். தொடர்ந்து ஊக்குவிக்கின்றனர்

பணக்கரவர்க்கம் மிடில் கிளாஸ் குடிகளின் இரத்தத்தை குழல் வைத்து 
உறிஞ்சு குடித்த்துக்கொண்டே இருக்கும் 
இவர்களின் கட்டுப்பாட்டில்  வங்கி  அரசியல்வாதிகள் மீடியா இருக்கும்.

மீடியா மூலம் குழப்பவாதங்களை பரப்பி கொண்டே இருப்பார்கள் 
அரசியல்வாதிகள் மூலம் தமக்கு சாதகமானவற்றை அமுலாக்குவார்கள் 
வங்கிகள் மூலம் நாட்டு வருமானத்தை வடித்துக்கொண்டு இருப்பார்கள் 

இன்றைய நிலையில் நிழலி வர்கள் பிரதமர் ஆனாலும் கீழே இருக்கும் படத்தில் 
பெரிதக மாற்றம் செய்ய முடியாது. மேலைநாடுகளில் வெள்ளை இனத்தவரில் 
(டிஸ்அபிலிட்டி) வலதுகுறைந்தவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது 
இவர்களை பராமரிக்க எல்லா அரசுகளுக்கும் பாரிய செலவு ஆகிறது அதுபோல வயதானவர்களின் 
எண்ணிக்கையும் கூடிக்கொண்டு இருக்கிறது ........ பணக்கார வர்க்கம் இவர்களை வைத்து எப்படி 
வியாபாரம் செய்வது என்று யோசித்து பல வியாபாரங்களை இவர்கள் மூலம் செய்கிறார்கள் 
அதன்மூலம் அரசு பணத்தின் ஒரு பகுதியை தமதாக்கி கொள்கிறார்கள்.
பின்பு பத்திரிகைகள் மூலம் வரிகள் கூடுவதுக்கு சோம்பேறிகள் காரணம் என்று மிடில் கிளாஸை 
கோபம் ஊட்டுவார்கள் கனடா பணக்காரர்களின் வங்கி கணக்கு மட்டும் எப்போதும் கூடிக்கொண்டே 
இருக்கும் ............ அமெரிக்கா கனடாவை பொறுத்தவரை மிடில் கிளாஸ்தான் அரசு சக்கரத்தை சுழற்றுவது.

கட்சி மாறும் 
ஆட்சி மாறும் 
காட்சி மாறும் 
உழைத்து பில் கட்டிக்கொண்டு இருப்பது என்பது ஒருபோதும் மாறாது.   

 

Image result for canada welfare share on annual budget

Link to comment
Share on other sites

இன்னும் வாக்களிப்பு முடிவடையவில்லை.  பெரும்பான்மை பலம் பெற 170(338இல்) தேவை


ஆனால், வந்த கணிப்பை வைத்து மீண்டும் லிபரல் ஆட்சி, ஆனால் பெரும்பான்மை பலம் இருக்காது. ஜாக்மீத் சிங்கின் என்.டி.பி. உடன் ஆட்சி அமைக்கலாம். 

எனவே, அடுத்த வருடம் மீண்டும் தேர்தல் / வாக்களிப்பு நடக்கலாம் 

கனடாவில் மத்திய அரசு சேர்க்கும் வரியில் ( அம்மா) , தனது வாழ்க்கையில் கடினப்படும் மாகாணங்களுக்கும் (மொத்தம் 10)  பிரதேசங்களுக்கும் ( மொத்தம் 3 ) (பிள்ளைகளுக்கு) பகிர்ந்தளிப்பார்.


இதில் பிரிவினை கோரும் க்யூபேக் பெரிய தொகை பெறும். அவர்கள் வாழ்க்கையினை அனுபவிக்கிறார்கள். 

b1RRQtB.png

graph 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் Justin Trudeau

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் Justin Trudeau.💐

உலக மக்களால் விரும்பப்படும் அரசியல் தலைவர் ஒபாமாவைப் போல் நீங்களும் ஒருவர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது முறையாக கனடியத் தேர்தலில் வென்று ஆட்சி  அமைக்கவிருக்கின்றார்.
தவறுகளை சீர்செய்து தொடர்ந்தும் கனடிய மக்களுக்கு நல்லாட்சியை
வழங்க வாழ்த்துக்கள்
ஹரி அவர்களும் மிகப்பெரும்பான்மையுடன் வென்றிருக்கின்றார்
அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கனடாவில் 2ஆவது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ

 Oct 22, 2019 0 180
157172822585901.jpg

கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, மீண்டும் வெற்றிப்பெற்றிருக்கிறது.

பெரும்பான்மையை இழந்திருந்தாலும் ஜஸ்டின் ட்ரூடோ மைனாரிட்டி ஆட்சியை அமைக்கவிருக்கிறார். உலகளவில், முற்போக்கு சிந்தனையுள்ள தலைவர்களில் ஒருவராக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பார்க்கப்படுகிறார்.

இருப்பினும், ஆளும் லிபரல் கட்சிக்கு எதிராக அரசியல் செய்து வரும், வலதுசாரி சிந்தனையுடைய பழமைவாத கட்சிக்கு, முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்கள் கிடைத்திருக்கின்றன.

மொத்தமுள்ள 338 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி, 156 இடங்களை பெற்றுள்ளது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவைப்படுவதை விட 14 இடங்கள் குறைவாகவே, ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கிடைத்துள்ளது.

கனடாவின் எதிர்க்கட்சியான பழமைவாத கட்சி 122 இடங்களை தனதாக்கியுள்ளது. கடந்த முறை, 95 இடங்களை வென்ற நிலையில் இம்முறை, கூடுதலாக 27 இடங்களை வென்றுள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாததால், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மைனாரிட்டி ஆட்சியமைக்கு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்((Jagmeet Singh)) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.polimernews.com/dnews/85901/கனடாவில்-2ஆவது-முறையாகபிரதமராகிறார்-ஜஸ்டின்ட்ரூடோ

Link to comment
Share on other sites

27 minutes ago, ampanai said:

இந்திய வம்சாவளியினரான ஜக்மீத் சிங்((Jagmeet Singh)) தலைமையிலான புதிய ஜனநாயக கட்சி குறிப்பிடத்தக்க இடங்களை வென்றிருப்பதால், கிங் மேக்கராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்தும் ஆட்சியில் உள்ள அரசு, என்.டி.பி. யுடன் இணைந்து இடதுசாரி கொள்கைகளை முன்னெடுக்கும். 
இல்லாவிடில் ஆட்சி கவிழ்ந்து விடும், 

குறிப்பாக நாட்டிற்குள் வருடத்திற்கு 280000 பேரளவில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்படுவார்கள்.   

Link to comment
Share on other sites


பிரெக்சிட் போன்று சில நாடுகள் ஐரோப்பாவில் பிரிய எண்ணும்பொழுது, கனடாவிலும் இவ்வாறான ஒரு பிரிவு மீண்டும் தலைதூக்கியுள்ளது. 

ஏற்கனவே, கனடாவின் மாகாணமான கியூபெக் பிரிய நீண்டகாலமாக முனைந்து வருகின்றது. 

நேற்றைய தேர்தல் முடிவுகளில், வென்ற கட்சியான லிபரல் இரண்டு மேற்கு மாநிலங்களில் எந்த ஒரு வெற்றியையும் பெறவில்லை. அதனால், அந்த மாகாண மக்களின் விருப்புக்களை இந்த அரசால் பூர்த்தி செய்ய முடியுமா?, என்ற கேள்வி உள்ளது.  

 

https://www.vicnews.com/news/wexit-trending-after-election-in-support-of-western-canada-separation/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.