Jump to content

வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

sumanthiran.jpg

தமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான  31 ஆம் திகதிக்கு முன்னர் எமது  நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.virakesari.lk/article/67316

Link to comment
Share on other sites

பார்க்கலாம் இது இராசதந்திரமா இல்லை சுமந்திரமா என்று. 


"பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்."

 

Link to comment
Share on other sites

தேடிச்சென்று சந்திக்கமாட்டோம் என்ற மார்தட்டல் காண்மின்களோ

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ்க் கட்சி கள் உடன்பட்டு ஒப்பமிட்ட 13 அம்சக் கோரிக்கைகள் பற்றிய எதிர்ப்பிரசாரம் தென்பகுதியில் சூடு பிடித்துள்ளது.

ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு 13 அம்சக்கோரிக்கைகளை முன்வைப்பது ஏதோ தனிநாட்டுக் கோரிக்கைக்கானது போல பிரசாரங்கள் முழங்கத் தொடங்கியுள்ளன.

சுருங்கக்கூறின் இனவாதத் தீயை மூட்டி எரித்து இந்த நாட்டை அழித்துக்கட்டுகின்ற முயற்சிகள் நடக்கின்றன எனலாம்.

நிலைமை இதுவாக இருக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேடிச் சென்று அவர் களுக்குப் பின்னால் ஓடிப்போய் சந்திக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

நல்லது தொழுதுண்டு பின்செல்லாப் பண்பாடு நம் தமிழினத்துக்குரியது என்ற வகை யில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கலாம்.

ஆனால் இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எப்போது எடுத்தது என்பதுதான் கேள்வி.

ஐந்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் சார்பில் 13 அம்சக்கோரிக்கை களை முன்வைப்பது என்று இணங்கிக் கொண்டன.

இவ்வாறு உடன்பட்ட 13 அம்சக்கோரிக்கை யுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களைச் சந்திப்பதென்றும் இந்தச் சந்திப்பில், ஒப்பமிட்ட ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாகப் பங் கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் புளொட் அமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைத் தனித்தனியாகச் சந்தித்தன.
இந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.

ஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்களை அல்லது அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் களைச் சந்திப்பதாகத் தீர்மானம் இருந்த போதிலும் அதுபற்றி எந்தக் கருசனையும் கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனித்தனியாகச் சந்திப்பு நடந்தது.

இதை நாம் கூறும்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாம் கதைக்கவில்லை என்று கூறலாம். ஆனால் அது நம்பக்கூடிய உண்மை அல்ல.

தவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுட னான சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயம் என்ன என்பது பற்றி தமிழரசுக் கட்சியோ அல்லது புளொட் அமைப்போ எதையும் வெளிப்படுத்த வும் இல்லை.

நிலைமை இதுவாக இருக்கையில், இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களை வலிந்து சென்று சந்திக்க மாட்டோம். எங்களின் ஆத ரவு தேவை என்றால் - தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்றால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்களைத் தேடி வந்து சந்திக்கட்டும் எனக் கூட்டமைப்புக் கூறியுள்ளது.

இங்குதான் ஓர் உண்மை வெளிப்படுகிறது. அதாவது ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாக ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பதை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.

எனவே பிரதமர் ரணிலுடன் தனியாகச் சந்தித்த பின்பு, ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சந்திப்பதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.

ஜனாதிபதித் தேர்தல் மூலம் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் தேடிச் சென்று சந்திப்பதும் சமயோசித நடவடிக்கையே.

ஆனாலும் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்வதா? அதைக் தடுக்கவே பின்சென்று சந்திக்கோம் என்ற மார்தட்டல்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19574&ctype=news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்... ரணிலுக்கு பின்னால் சென்று... அவரின் பதவியை காப்பாற்ற  தயார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.