Jump to content

சிவாஜிலிங்கம் ஒரு தமிழ் தெரிவு?


Recommended Posts

 

அண்மையில் ஜந்து கட்சிகள் இணைந்து ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்திருந்தன. நீண்ட காலமாக, தங்களுக்குள் தெருச் சண்டை பிடித்துக்கொண்டிருந்த தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் சந்தித்திருந்தமை ஒரு நல்ல விடயம்தான். ஆனாலும் அப்போதும் கூட ஒரு சிறிய விடயத்தை முன்வைத்து கஜேந்திரகுமார் வெளியேறிவிட்டார். ஐந்து கட்சிகளும் இணக்கம் காணப்பட்ட தமிழர் கோரிக்கைகளை பிரதான வேட்பாளர்களில் ஒருவரான கோட்டபாய ராஜபக்ச நிராகரித்துவிட்டார். அவ்வாறான ஆவணத்துடன் வரும் கட்சிகளை தாம் சந்திக்கப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுவிட்டார்.

இந்த நிலையில் அடுத்த பிரதான வேட்பாளரான சஜித் பிரேமதாச தமிழ் கட்சிகளை சந்திப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது உறுதியான முடிவை வெளியிடுவதில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனது கணிப்பின்படி கூட்டமைப்பு இறுதியில் எவருக்கும் ஆதரவு வழங்காமல் விடுவதற்கும் வாய்ப்புண்டு. ஆனால் சில உள் தகவல்களின்படி சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன்னர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக அறிக்கையொன்றை வெளியிடலாம். இறுதி நேரத்தில் இதனை செய்தால் எவருக்கும் எதிர்த்து செயற்படுவதற்கு அவகாசம் இல்லாமல் போகலாம் என்று சம்பந்தன் எண்ணுவதாவும் தகவலுண்டு. ஆனாலும் கூட்டமைப்பின் ஆதரவை தான் வெளிப்படையாக பெறுவது தனது சிங்கள வாக்குவங்கியை பாதிதித்துவிடும் என்றே, சஜித் கணிப்பதாகத் தெரிகின்றது. உண்மையில் இவைகள் அனைத்தும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள மறுகின்ற ஒரு சிங்கள வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான தமிழ் முயற்சிகள்தான்.

இன்று தென்னிலங்கை பிரச்சாரங்களை பார்க்கும் போது யார் யுத்த வெற்றிக்கு அதிகம் சொந்தக்காரர்கள் என்னும் போட்டிதான் இடம்பெறுகின்றது. கோட்டா தான் தான் என்கிறார். ஆனால் சரத்பொன்சேகாவோ இல்லை நான்தான் மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை யுத்தம் செய்து விடுதலைப் புலிகளை தோற்கடித்தவன் என்கிறார். அதாவது, ஒவ்வொருவரும் யார் அதிகம் தமிழ் மக்களை கொன்றவர்கள் என்பதில் போட்டி போடுகின்றனர். தான் வெற்றிபெற்றால் சரத்பொன்சோகாவை கௌரவித்து பாதுகாப்பு அமைச்சை அவரிடம் ஒப்படைப்பேன் என்கிறார் சஜித். இவ்வாறானதொரு பின்புலத்தில் நாம் கேட்கவேண்டிய கேள்வி – அவ்வாறாயின் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் ஏன் பங்குபற்ற வேண்டும்? ஒரு சிங்களவரை வெற்றிபெறச் செய்வதற்கு தமிழர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ஏன் இந்த இடத்தில் ஒரு மாற்று தெரிவு தொடர்பில் சிந்திக்கக் கூடாது? ஏன் எங்களில் ஒருவரான சிவாஜிலிங்கத்தை ஒரு தமிழ் தெரிவாக்கக் கூடாது? தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் சிவாஜிலிங்கத்திற்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. தமிழர் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடையவர்களில் உயிரோடிருக்கும் மிகச் சிலரில் சிவாஜியும் ஒருவர். துணிச்சல்மிக்க தமிழ்த் தேசியக் காரனாக தன்னை நிரூபித்த ஒருவர்.

2009 யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தாமே விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்றும், தாங்களே அவர்களை பின்தொடர்பவர்கள் என்றெல்லாம் பலர் திரிந்துகொண்டிருந்த போது, தலைவர் பிரபாகரனின் தகப்பனை, தாயாரை பராமரித்து அவர்களின் இறுதிக் கிரியைகளையும் செய்த ஒரே மனிதன் சிவாஜிதான். மகிந்த அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் துணிந்து காரியங்களை செய்தவர் சிவாஜி. தான் நம்பும் ஒன்றிற்காக தன்னை எப்போதும் பலியிடத் தாயாராக இருந்த ஒருவராகவே சிவாஜியின் கடந்தகாலம் கழிந்திருக்கிறது. ஒரு தமிழ் பொது வேட்பாளராக நிற்பதற்கு சிவாஜிலிங்கத்தை விடவும் தகுதியுடைய வேறு எவரும் வடக்கு கிழக்கில் இல்லை. எனவே சிவாஜிலிங்கத்தை ஒரு தமிழ் தெரிவாகக் கொள்வதில் ஏன் தடுமாற வேண்டும்? ஏன் தமிழர்களை இரண்டாம் தரமாக நடத்தும் சிங்கள வேட்பாளர்களுக்கு பின்னால் இழுபட வேண்டும்?

சிவாஜிலிங்கத்தை ஒரு தமிழ் தெரிவாக்குவதன் ஊடாக, சிங்கள வேட்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளுக்கான ஒரு மக்கள் ஆணையை வழங்க முடியும். எங்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்ளாத உங்களுக்கு எங்களின் வாக்குகள் இல்லை என்பதை சொல்வதற்கான ஒரு கருவியாக சிவாஜிலிங்கத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன் ஊடாக சிங்கள தேசத்திற்கும் இலங்கைத்தீவில் தலையீடு செய்துவரும் அன்னிய சக்திகளுக்கும் தமிழர் தெரிவின் மூலம் ஒரு தெளிவான செய்தியை கூற முடியும். அதே வேளை இந்த வாய்ப்பை தமிழ் மக்கள் மத்தியில் தேசியம், தாயகம் சார்ந்து விழிப்புணர்வையும் ஒற்றுமையுணர்வையும் ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இதனை பயன்படுத்திககொள்ள முடியும்.

அவ்வாறில்லாது மீண்டும் சிங்கள தேர்தல் வியூகங்களுக்கு முண்டுகொடுக்கும் வேலையை தமிழ் கூட்மைப்பும் ஏனைய கட்சிகளும் செய்யுமாக இருந்தால், அது மீண்டும் மீண்டும் தமிழ் தேசிய அரசியலை சிங்கள சிறைக்குள் தள்ளுவதாகவே இருக்கும். 2015இல் இவ்வாறுதான் தமிழ்த் தேசிய அரசியலை கூட்டமைப்பு சிங்கள சிறைக்குள் தள்ளியது. அவ்வாறு தள்ளப்பட்ட அரசியலை இன்றுவரை விடுதலை செய்ய முடியவில்லை. இன்றுவரை ரணிலின் சிங்கள வியூகத்திற்குள்தான் கூட்டமைப்பு இருக்கிறது. இப்போதும் கூட ஒரு வேளை ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டிருந்தால் சுமந்திரன் – சம்பந்தன் தரப்பு இந்தளவு குழம்பியிருக்காது. தங்களுடன் முரண்பாடு கொண்டிருந்த விக்கினேஸ்வரனுடனும் கஜேந்திரகுமாருடனும் ஒரே மேசையில் அமர்ந்திருக்காது. ஆனால் ரணில் சற்றும் எதிர்பாரா வகையில் ஜக்கிய தேசியக்கட்சிககுள் ஒரு உட்புரட்சி இடம்பெற்றது. சஜித் தவிர்க்க முடியாத ஆளுமையாக வெளியில் தெரிந்தார். இதன் காரணமாக ரணில் அரங்கிலிருந்து ஒதுங்க நேர்ந்தது. இதனை சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாகத்தான் இப்போது சஜித்திடம் நிபந்தனைகளுடன் செல்ல முற்படுகின்றது. ரணில் என்றால் அவ்வாறான நிபந்தனைகள் தேவைப்பட்டிருக்காது. ஆனால் உண்மையில் சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் இன்று கூட்டமைப்பு செய்ய வேண்டியது ஆனால் அதனை செய்வதற்கு சிங்கள நிகழ்சிநிரல் அனுமதிக்கவில்லை. தமிழ் தேசிய சிவில் அமைப்புக்களும், புத்திஜிவிகளும், புலம்பெயர் அரசியல் அமைப்புக்களும் முன்னால் இருக்கும் ஒரு தெரிவு சிவாஜிலிங்கம் மட்டுமே! அவரை நோக்கி மக்களை அணிதிரளச் செய்வதும், அவற்றை வாக்குகளாக திரட்டுவதற்கான போதிய உதவிகளைச் செய்வதுதான் இன்றைய நிலையில் உண்மையான தமிழ்தேசியப் பணி.

தமிழ்க் குரலுக்காக கரிகாலன்

http://thamilkural.net/?p=6102

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
    • என்ன அண்ணை இது…..ஏதோ என்ர தனிப்பட்ட விசயம் போல என்னை கேட்டு கொண்டு நிக்கிறியள் 🤣… நான் ஒரு நேர்மையான திராவிட கொள்கையை நடைமுறை செய்த ஆட்சி எப்படி இருக்கும் என்ற உங்கள் கேள்விக்கு அண்ணா ஆட்சி போல இருக்கும் என கூறினேன். அவருக்கும் நடிகைக்கும் தொடர்பு என்றீர்கள். அதுக்கும் ஆட்சி செய்யும் விதத்துக்கும் என்ன தொடர்பு? எதுவுமில்லை. இருப்பினும் அவர் பானுமதியை பாலியல் இம்சை செய்ததாயோ, அல்லது நம்ப வைத்து கைவிட்டதாயோ நான் அறியவில்லை. பானுமதி கடைசிவரை அண்ணா மீது அப்படி ஏதும் சொல்லவில்லை. நான் அறிந்த வரை தீராகாதலிலேயே இருந்தார். ஆனால் சீமான் பற்றி விஜி அண்ணி சொல்வது நாம் அறிந்ததே. முடிவாக உண்மையான திராவிட கொள்கை உள்ள ஆட்சி இப்போதைய ஆட்சியா? என்ற உங்கள் கேள்விக்கு பதில் இல்லை. இது கொள்ளையர் ஆட்சி. உண்மையான திராவிட கொள்கை ஆட்சி அப்பாவி ஆட்சி போல இருக்கும் என்பதே என் பதில். இதில் நீங்கள் கனிமொழியை பற்றி என்ன, யாரை பற்றியும், படம், நீலப்படம் எதுவும் போடலாம் - என்னிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமே இல்லை🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.