Jump to content

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Election-2-720x450.jpg

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் 9 மாகாணங்களில் கண்காணிப்பு நடவடிக்கை

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர்.

இலங்கைக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரும் இவர்கள் இன்று முதல் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். அத்தோடு அதற்கு முன்னதாக அவர்கள் கொழும்பில் ஊடகங்களை சந்திக்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நீண்டகால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடவுள்ளனர். இவர்களுள் குறுகிய கால கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள 30 பேர் எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஐரோப்பிய-ஒன்றியத்தின்-பி/

Link to comment
Share on other sites

நீதியான தேர்தலை உறுதிப்படுத்துவதே எமது வேலை

வாக்களிப்பது தொடர்பில் தலையிட முடியாது

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் உள்ள மக்கள் தமது வாக்குகளை வழங்குவதை அதைரியப்படுத்துவதற்கு எடுக்கப்படும் எந்தவொரு முயற்சிக்கும் ஐரோப்பிய யூனியன் தூதுக்குழு இடையீடு செய்ய முடியாது என ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணிக்கான குழுவின் பிரதி பிரதான கண்காணிப்பாளரான திமித்ரா ஐயனோ (Dimitra Ioannou) தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையில் ஐந்து தமிழ் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் தமது 13அம்சக் கோரிக்கைகளுக்கு இணங்கும் வரை அவர்கள் எவருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறி வருகின்றன.

இந்நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் தமது விருப்பத்திற்குரிய வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்ய ஐரோப்பிய யூனியன் என்ன செயற்பாட்டை எடுக்க முடியும் என்று கேட்கப்பட்ட போதே லோனோன் இவ்வாறு கூறினார்.

https://www.thinakaran.lk/2019/10/24/உள்நாடு/42623/நீதியான-தேர்தலை-உறுதிப்படுத்துவதே-எமது-வேலை

Link to comment
Share on other sites

On 10/22/2019 at 9:17 AM, தமிழ் சிறி said:

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் 9 மாகாணங்களுக்கு செல்லவுள்ளனர்.

சொறிலங்காட சிங்கள கொலைகார அரசு ஜனநாயகம் என்ட பேர்ல தார சொகுசுகளை நல்லா அனுபவிங்கோ!

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.