Jump to content

குருக்­கந்த விகாரை விட­யத்தில் சிறை செல்­லவும் நான் தயார் - ஞானசார


Recommended Posts

(எம்.மனோ­சித்ரா)

நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. மாறாக சுமந்­தி­ர­னுக்கும் விக்­கி­னேஸ்­வ­ர­னுக்கும் மாத்­தி­ரமே பிரச்­சினை இருக்­கி­றது. கிறிஸ்­தவ மதத்­த­வ­ரான சுமந்­திரன் இந்து ஆலயம் குறித்து  அக்­கறை காட்ட வேண்­டிய அவ­சியம் என்ன? என்று பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

 

இரா­ஜ­கி­ரி­யவில் உள்ள பொது­பல சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில், 

வடக்கில் தற்­போது தனி அர­சாங்­கமே காணப்­ப­டு­கி­றது. பிரி­வினை வாதத்தை வளர்க்கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் செயற்­பா­டு­க­ளுக்கு அடி­ப­ணிய வேண்­டிய தேவை எமக்­கில்லை . தனி நாடு பற்றி பேசி சட்­டத்தை தங்கள் இஷ்­டத்­துக்கு அவர்கள் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்க முடி­யாது .

குரு­கந்த விகா­ரா­தி­ப­தியின் இறுதி கிரி­யை­களை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் சில அர­சி­யல்­வா­தி­களே குழப்­பி­ய­டித்­தனர். அங்­கி­ருந்த தமிழ் சகோ­தர்கள் இதற்கு எவ்­வித எதிர்ப்பும் தெரி­விக்­க­வில்லை. குரு­கந்த தேரர் பொது­மக்­க­ளுக்கு சேவை செய்­தவர். புற்­று­நோயால் பீடிக்­கப்­பட்டு மர­ண­ம­டைந்தார். சுமார் 11 வருட காலம் குறு­கந்த பகுதி மக்­க­ளுக்­கா­கவே அவர் சேவை செய்து வந்­தாரே தவிர தனிப்­பட்ட தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­ள­வில்லை. 

வடக்கில் வேறொரு அர­சாங்­கமே இருக்­கி­றது. இந்த அர­சாங்­கத்தின் குதர்க்­க­மான ஆட்­சியின் கார­ண­மா­கவே சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு இந்த நாட்டில் இட­மில்­லாமல் போகி­றது. தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் தாம் இந்த நாட்­டுக்கு விசு­வா­ச­மாக இருப்­ப­தாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து விட்டு அநு­ரா­த­பு­ரத்­துக்கு அப்பால் சென்­ற­வுடன் தனி நாடு பற்றி பேசு­வது எந்த வகையில் நியா­ய­மாகும்? எங்­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் சட்டம் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. சட்­டத்தை அவர்கள் தங்கள் இஷ்­டத்­துக்கு நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்கப் போவ­தில்லை. 

காலஞ்­சென்ற பௌத்த பிக்­குவின் இறுதி சடங்­கிற்கு செய்ய வேண்­டி­யதை நாங்கள் பௌத்­தர்கள் என்ற ரீதியில் செய்து விட்டோம். கூட்­ட­மைப்­பினர் அதற்கு எதி­ராக நீதி­மன்றம் சென்­றுள்­ளனர். அதனை நாங்கள் நீதி மன்­றத்தில் சந்­திக்க தயார். குரு­கந்த தேரரின் உடல் மூன்று நாட்­க­ளுக்கு வைத்­தி­ருக்கும் வகை­யில்­லேயே பதப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. நீதி மன்ற தீர்ப்பு வரு­வ­தற்கு தம­த­மாகும் என்ற நிலை­யி­லேயே மனி­தா­பி­மான ரீதியில் அவரின் இறுதி கிரி­யை­களை மேற்­கொண்டோம். இந்த சந்­தர்ப்­பத்தில் நாட்டின் பல பாகங்­களில் இருந்து 200 க்கும் அதிக பௌத்த பிக்­குகள் முல்­லை­தீ­வுக்கு வருகை தந்­தி­ருந்­தனர். 

இந்த விடயம் தொடர்­பாக நான் சிறை செல்­லவும் தயா­ராக இருக்­கின்றேன். பல தட­வைகள் சிறை சென்­றுள்ளேன். இதற்­காக ஒரு­போதும் பயப்­படப் போவ­தில்லை. இந்த அர­சாங்கம் இனங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்திக் கொண்டு வெட்கித் தலை­கு­னியக் கூடிய வகையில் கை கட்டிப் பார்த்துக் கொண்­டி­ருக்­கி­றது. அர­சாங்­கத்­திற்குள் இன்­னொரு அர­சாங்கம் இருக்­கி­றது. பிரி­வி­னை­வா­திகள் அவர்­களின் நட­வ­டிக்­கையைத் தொடர்­கின்­றனர். அவர்­க­ளுக்கு எதி­ராக பொலி­ஸாரும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. 

வடக்கு கிழக்கில் பிரி­வி­னை­வா­திகள் கடந்த சில வரு­டங்­களில் வேறூன்றி விட்­டார்கள். இங்கு குண்­டாந்­த­டியால் மக்­களை தாக்­கலாம். அங்கு வேறொரு அர­சாங்கம் செயற்­ப­டு­வதால் இந்த குண்­டாந்­தடி பிர­யோகம் சரி­வ­ராது. இந்த பிரி­வி­னை­வாத்தை தடுக்­கா­விட்டால் மீண்டும் ஒரு இருண்ட யுகத்­திற்கு செல்ல வேண்­டிய நிலை­மையே ஏற்­படும்.  இதனால் தமிழ் , சிங்கள மக்களே பாதிக்கப்படுவார்கள். 

தமிழ் மக்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை. மாறாக சுமந்திரனுக்கும் விக்கினேஸ்வரனுக்கும் மாத்திரமே பிரச்சினை இருக்கிறது. சுமந்திரன் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராவார். எனவே இந்து ஆலயம் குறித்து அவர் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன? எமக்கெதிராக கூட்டமைப்பு நீதிமன்றத்தை நாடியமை தவறானதொரு தீர்மானமாகும்.

https://www.virakesari.lk/article/67472

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.