Jump to content

இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு


Recommended Posts

இலங்கையில் கடற்படையின் பல இரகசிய முகாம்கள்- முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்பு -திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்- சர்வதேச அமைப்பு அதிர்ச்சி அறிக்கை

IMAGE-MIX.png
 

இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய  அதிகாரிகளிற்கு  தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் நீதித்துறையின் மிகப்பெரிய வெற்றிக்கதையாக 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம் அமைந்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ள  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா ஆனால் இது தோல்வியின் அடையாளமாக மாறிவிட்டது என குறிப்;பிட்டுள்ளார்.

கடற்படையின் புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளையும் திருகோணமலை முகாமிற்கு பொறுப்பான  அதிகாரிகளையும் இன்னமும் விசாரணை செய்யவில்லை,குற்றவாளிகள் பாதுகாக்க படுகின்றனர் அவர்களிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளுத  பாதிக்கப்பட்டவர்களில் உயிருடன் உள்ளவர்கள் இன்னமும் விசாhரணை செய்யபடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

navy.jpg

கடற்படையின் தளபதியாகயிருந்தவர் கடற்படையின் புலனாய்வு பிரிவிற்குள் விசேட பிரிவொன்றை உருவாக்கியது கடற்படையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருக்கவேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விசேட பிரிவை சேர்ந்தவர்கள் நாட்டின் மிகவும் பாதுகாப்பான கடற்படை தளத்தில் நிலத்தடி இரகசிய சித்திரவதை கூடத்தை இயக்கினார்கள்  இங்கு பெருமளவு சிறைக்கைதிகள் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்,இந்த சித்திரவதை கூடத்திலிருந்து எவரையும் வெளியே கொண்டுவரமுடியாது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இரகசிய சித்திரவதை கூடங்களில் பலரை கடற்படையின் தலைமைக்கு தெரியாமல் வைத்திருக்க முடியாதுஎனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் குறிப்பிட்டுள்ளது.

நாங்கள் உரையாடிய கடற்படை அதிகாரிகள் அந்த முகாம்களில் என்ன நடக்கின்றது என்பதை தாங்கள் கண்டும்காணாமல் இருக்கவேண்டும் என்பது தங்களிற்கு தெரிந்திருந்தது என தெரிவித்தனர் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கடற்படையின் முழு கட்டளைப்பீடமும் இதில் தொடர்புபட்டிருந்தது என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை கடற்படை காவல்துறையினரின் விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வரை, குற்றவாளிகளிற்கு பதவி உயர்வு வழங்கும்வரை இலங்கை கடற்படை மீது தடைகளை விதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் சர்வதேச சமூகம் இனிமேலும் இலங்கை கடற்படையின் இந்த குற்றங்களை புறக்கணிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

11_abduc_case__1_.jpg

திருகோணாமலை கடற்படை முகாமில் 11 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறித்து விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா 11 இளைஞர்கள் கடத்தப்பட்டமை குறித்து கடற்படையின் உயர் அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டிருந்தார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது

கன்சைட்டில் சித்திரவதைகளும் காணாமல்போகச்செய்யப்படுதலும் இடம்பெறுவதாக கடற்படையின் உயர் மட்ட அதிகாரிகளிற்கு தெரிந்திருந்தது.

கன் சைட் முகாமிற்கு பொறுப்பாகயிருந்த ஆர்எஸ்பி ரணசிங்க அவ்வேளை பாதுகாப்பு செயலாளராக காணப்பட்ட கோத்தாபய ராஜபக்சவுடன் நேரடியாக தொடர்புகொள்ள கூடியவராக காணப்பட்டார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது

 

கோத்தாபய ராஜபக்ச அந்த முகாமிற்கு பல தடவை விஜயம் மேற்கொண்டார்.இதுதவிர இலங்கை கடற்படையின் கிழக்கு கட்டளை தளபதி எஸ்எம்பி வீரசேகர பிரதி சிசிர ஜெயக்கொடி ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதிக்கு செல்லக்கூடியவர்களாகயிருந்தனர் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது

.torture_cham.jpg

ஆகக்குறைந்தது மூன்று கடற்படை சாட்சிகளாவது கடத்தல் நடவடிக்கை குறித்து அப்போதைய கடற்படை தளபதி வசந்த கராணகொடவிற்கு முழுமையாக தெரிந்திருந்தது என சிஐடியினரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதி டிரவைஸ் சின்னையா 2017 இல் சிஐடியினருக்கு வாக்குமூலங்களை அளித்த வேளை திருகோணமலை கடற்படை தளத்தில் அமைந்துள்ள கடற்படை கல்லூரிக்கு தான் தலைமை தாங்கியவேளை கன் சைட்டில் ஆட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என கரனாகொடவிற்கு தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கரனாகொட தன்னை இந்த விடயத்தில் தலையிடுவதை தவிர்க்குமறு நேரடியா தடையை விதித்தார் அதேபோல் கன்சைட் பகுதியிலிருந்து வெளியே செல்லும் அந்த பகுதிக்கு உள்ளே செல்லும் வாகனங்களை சோதனையிடுவதை தவிர்க்குமாறு உத்தரவிட்டார்

தனது படையினர் மீதான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து 2009 மே10 திகதியளவில் தனக்கு தெரிந்திருந்தது என கரனாகொட சிஐடியினரிடம்  தெரிவித்துள்ளார்.

ஐடிஜேபியின் சொந்த விசாரணையுடன் ஒத்துப்போகும் உத்தியோகபூர்வ விசாரணைகள் ஏனைய அதிகாரிகளிற்கும் இந்த இரகசிய முகாம்கள் குறித்து தெரிந்திருந்தது என்பதை உறுதி செய்துள்ளன.

திருகோணமலையில் பிரசன்னமாகியிருந்ததன் காரணமாகவும் கடற்படையில் அதிகாரிகளாக பணியாற்றியதால் இந்த விசேட பிரிவின் குற்றங்கள் குறித்து ஏனையவர்களிற்கும் தெரிந்திருக்கவேண்டும்.

கன் சைட்டில் கடற்படையின் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் குறித்து தங்கள் தலைமைக்கு தெரியப்படுத்திய கடற்படை அதிகாரிகள் அச்சுறுத்தப்பட்டனர் அல்லது பதவிகள் பறிக்கப்பட்டனர்.

அதேவேளை இந்த முகாமை இயக்கியவர்களும் அதற்கு ஆதரவு வழங்கியவர்களும் பதவி உயர்வு பெற்றனர்.

திருகோணமலை கடற்படை தளத்திலிருந்து செயற்பட்ட கடற்படையின் விசேட பிரிவினருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டது அவர்களது வாகனங்கள் குறித்த விபரங்கள் பதியப்படாமலேயே அவர்கள் தங்கள் வாகனங்களை முகாமிற்குள் கொண்டு செல்லக்கூடியதாகயிருந்தது எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்  தெரிவித்துள்ளது

https://www.virakesari.lk/article/67467

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.