Jump to content

பிரான்சில் வசிக்கும் யாழ் பெண் பெற்ற பிள்ளைகள் நான்கிற்கு செய்த பதை.. பதைக்கும் கொடூரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளைக் கொடுமைப்படுத்திய குற்றத்துக்காக பிரான்சில் வசிக்கும் 46 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவருக்கு பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

பரிசின் புறநகர்ப் பகுதியான திறாப் என்ற இடத்தில் வசிக்கும் இந்தப் பெண் 14 வயதிலிருந்து 9 வயது வரையிலான தனது 4 பிள்ளைகளையும் கடந்த 6 வருடங்களாக கொடூரமாகத் துன்புறுத்தியதாக ஆண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினருக்கு அதிர்ச்சியழிக்க கூடிய தகவல்கள் கிடைத்ததாக பெரும்பாலான பிரெஞ்சு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தப் பெண், தற்போது 14 வயதாகும் தனது மூத்த மகளை அவரது 8வது வயதிலிருந்து தொடர்ச்சியாகத் துன்புறுத்தியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரண்டி மற்றும் பெல்ட்டால் அடித்தது, லைட்டரால் சூடு வைத்தது, தனது அனுமதியின்றி வெளியே வரக் கூடாது என்று அறையில் அடைத்து வைத்தது, சாப்பாடு கொடுக்க மறுத்தது, வீட்டில் பெருகியிருக்கும் கரப்பான் பூச்சிகளையும் சிலந்திகளையும் சாப்பிடும்படி நிர்ப்பந்தித்தது, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்யும்படி கட்டாயப்படுத்தியது, குளிக்க அனுமதி மறுத்தது என்று தொடர்ச்சியாக கொடுமைப் படுத்தியதாக காவல்துறையினரின் விசாரணையில் ஏனைய மூன்று குழந்தைகளும் தெரிவித்திருக்கிறார்கள்.

தங்களை தங்கள் தாயார் அடித்துக் கொடுமைப்படுத்துவதாக அந்தக் குழந்தைகள் கூறியுள்ளனர்.

தாயின் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு உள்ளான அந்த பெண் குழந்தை வயதுக்குரிய வளர்ச்சி இல்லாமல் 7 வயது முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைக்குரிய வளர்ச்சியுடன் இருந்ததைப் பார்க்கக் கூடியதாக இருந்தாக லு பரிசியன் பத்திரிகையின் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இந்தக் குழந்தைகளைத் தாயிடமிருந்து மீட்ட காவல்துறையினர் அந்த பிராந்திய சமூக சேவைகள் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளர்.

அந்தக் குழந்தைகளை மனநல மருத்துவர் பார்வையிட்ட போது, ‘தங்கள் தாய் தங்களைக் கொடுமைப்படுத்திய போதும் தங்களுக்கு அவரை விட்டால் யாரும் இல்லை’ என்றும் ‘தாங்கள் அவருடன் செல்லவிரும்புவதாகவும்’ மூத்த பிள்ளையைத் தவிர ஏனைய இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் கூறியுள்ளனர்.

இந்தப்பிள்ளைகளின் தந்தை, 6 வருடங்களுக்கு முன்னர் தனது மூத்த பெண் பிள்ளையுடன் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்க முற்பட்டதாக அவரது மனைவி அதாவது இவர்களின் தாய் காவல்துறையில் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து இவர்களைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும் அதன் பின்பே இந்தப் பிள்ளைகளுக்கு கொடுமைகள் இடம்பெற்றதாகவும் லு பரிசியன் பத்திரிகை தெரிவித்துள்ளது

இது தொடர்பாக வேர் சாய் குற்றவியல் நீதிமன்றத்தில் திறாப் (பரிசின் புறநகர்ப் பகுதி) நகர காவல்துறையினர் தொடர்ந்த வழக்கு கடந்த 16.10.2019 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இந்த விசாரணையின் போது தான் தவறு செய்து விட்டதாக 46 வயதுடைய அந்த தாய் நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். ‘தன்னுடைய மூத்த மகள் தன்னுடைய சொல்லைக் கேட்பதில்லை’ என்றும் அவரை பணிய வைப்பதற்காகவே அவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச வழக்கு தொடுனர், இந்தப் பெண்ணுக்கு 2 வருடம் கட்டாய சிறைத் தண்டனையும் 2 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையுமாக 4 வருட சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரியிருந்தார்.

ஆனால் இந்தப் பெண் ஏற்கனவே குற்றம் எதுவும் செய்யாததால்அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

https://www.ibctamil.com/france/80/129940?ref=rightsidebar

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.