Jump to content

ஓர் அஸ்தமனத்தின் உதயம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் அஸ்தமனத்தின் உதயம்?

இலட்சுமணன்

போருக்குப் பின்னரான, இன்றைய தமிழ்த் தேசிய அரசியலின் அண்மைக்கால செல்நெறியானது, என்றுமில்லாத அளவு ஓர் இக்கட்டான சூழலுக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. காரணம், ஐந்து கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளும் அதன் பின்னரான அரசியல் சூழலும் ஆகும்.  

தமிழ் மக்களின் அரசியல் கட்சித் தலைமைகளை ஒன்றிணைத்து முன்வைத்துள்ள 13 அம்சக் கோரிக்கைகளின் உள்ளடக்கமானது, சிங்களத் தேசியவாதிகளிடத்தில் எந்த அளவுக்குச் சாதகமான வகிபாகத்தைப் பெறும் என்பது, கடந்த கால அனுபவங்களில் இருந்து ஊகித்தறியக் கூடியதே. எதிர்பார்த்தது போலவே, சிங்களத் தேசியவாதிகளின் பரப்புரைகளும் கருத்துகளும் கண்ணோட்டங்களும் அமைந்துள்ளன.  

தமிழரது உரிமைகள் தொடர்பான அடிப்படை விடயங்களுடன் அமைந்த, மேற்படி கோரிக்கைகள், சிங்கள அரசியல்வாதிகளால்  எத்தகைய முரண்நிலையில் நோக்கப்படுகின்றன என்பது, தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதல்ல; ஆனால், அதற்குமப்பால் இந்த 13 அம்சக் கோரிக்கைகளைத் தயாரித்தவர்கள், அத்தகைய கோரிக்கைகள் தொடர்பான கருத்தாடல்களைப் புரிந்துதான் தயாரித்தார்களா, செயற்பட்டார்களா என்பதை விளங்கிக் கொள்ளமுடியவில்லை.   

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தமிழ்த் தலைமைகள், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாகப் புரிந்து கொண்டுதான் கைச்சாத்திட்டனவா, இத்தகைய கோரிக்கைகளின் விபரீதங்கள் எத்தகையானவையாக அமைந்து விடும் என்ற ஊகங்களைப் புரிந்து கொண்டனவா என்பது, இன்று வௌிக்கிளம்பியுள்ள மிகப் பெரிய வினாவாகும்.  

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப் புலிகள் மிகவும் பலமுள்ள சக்தியாகத் திகழ்ந்த வேளை, எமக்கென்று ஒரு நிலப்பகுதி, அரசியற் கட்டமைப்பு, ஆயுத பலம் எல்லாம், பேரம் பேசும் பலத்தை, அன்றைய காலத்தில் தமிழருக்குக் கொடுத்திருந்தது. 

ஆனால், அத்தகைய பலம்பொருந்திய சூழலில், தமிழ்த் தரப்பால் பேச்சுவார்த்தை மேசையில் விடுக்கப்பட்ட மேற்படி 13 அம்சங்களை அடியொற்றிய கோரிக்கைகளில் சிலவற்றைக் கூட, விடுதலைப் புலிகளால் வெற்றி பெற முடியவில்லை.   

அத்தகைய சூழலில், தற்காப்பு அரசியலை மேற்கொண்ட சிங்களத் தேசம், சமஷ்டி அடிப்படையில் பேசுவதற்கு தயார் எனக் கூறிய போதும், பின்னர் அதை நிராகரித்து, இழுத்தடிப்புச் செய்துகொண்டு, மாவிலாறில் யுத்தத்தைத் தொடங்கி, தொடர் வெற்றிகளைப் பெற்று, புலிகளின் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்த பின்னர், ‘13 பிளஸ்’ அதிகாரத்தைத் தருவதாகச் சாக்குப் போக்குக் காட்டியது.  

மேலும், சர்வதேச அழுத்தங்களின் பெயரால் முன்னெடுக்கப்பட்ட இடைக்கால அறிக்கைச் செயற்பாடுகளும் கிடப்பில் போடப்பட்டன. இத்தகைய சூழல் தோன்றும் முன்பே, ஜே.வி.பியால் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைவாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன.   

இத்தகைய சூழ்நிலைகள் அனைத்தையும் தமிழ்த் தரப்புகள் புரிந்துகொண்டிருந்தும் கூட, சிங்கள அரசாங்கத்தின் நீண்டகால இழுத்தடிப்புளை அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தும் கூட,  பல்கலைக்கழக மாணவர் சமூகமும், ஐந்து தமிழ்க் கட்சிகளும் ‘பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது போல்’ செயற்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் கையறு நிலையில் இருக்கும்போது, அவர்களின்  இருப்புக்கு பொருத்தமற்றதும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதும் என்றுமே நிறைவேற்றப்பட முடியாத கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டமை ஏன் என்ற கேள்வி எழுகின்றது. 

இத்தகைய அணுமுைறை, தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை, ஆட்சியாளர்கள் முற்றாக நிராகரிக்க வேண்டிய சூழ்நிலையையும் தமிழ்த் தரப்பைத் தட்டிக்கழித்துக் காலம் தாழ்த்தும் சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனலாம்.  

மேலும், சிங்கள ஆட்சியாளர்கள், தமிழ்த் தரப்புகளுடன் ஒப்பந்தத்தையோ, பேச்சுவார்த்தையையோ நடத்தினால், தாய் நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்கள் ஆகவும் நாட்டை பிரிப்பதற்கு சதி செய்பவர்களாகவுமே சிங்களப் பேரினவாதிகளால் சிங்கள மக்களுக்குக் காண்பிக்கப்படுவார்கள்.   

எனவேதான், இத்தகைய சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சிங்களத் தலைமைகள் தமிழ்த் தரப்புடன் பேசுவதற்கு மறுத்தும் வருகின்றார்கள்.   

இத்தகைய பின்புலத்தில், கோட்டாபய, ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் பொதுஜன பெரமுன, “தமிழர்களுடன் பேசத் தயாரில்லை” என வெளிப்படையாகத் தெரிவித்திருக்கின்றது. 

இத்தகைய மறுப்பு, தமிழரைப் பொறுத்தவரையில் எதிர்பார்த்த ஒரு விடயமாக இருந்தாலும் கூட, தமிழ்க் கட்சிகளின் நிலை, எதிர்கால அரசியலில் மிக மோசமான பின்னடைவுக்கு இட்டுச் செல்வதற்கு வழிவகுப்பதுடன், செல்லாக் காசாகவும் கருதுவதற்கு ஏதுவாக இருக்கும். 

ஏனெனில், மஹிந்தவைச் சார்ந்து நிற்கும் சிங்கள மக்கள், தமிழர் தீர்வு தொடர்பாக மஹிந்த எதுவும் செய்யமாட்டார்; நாட்டைப் பிரிக்க மாட்டார் என நம்புவதுடன், தமிழருக்கு எதையும் அவர் கொடுக்கத் தயாரில்லை என்பதையும் உணர்வார்கள்.    

இந்நிலையில், தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி, பல்கலைக்கழக மாணவர்களின் துணையுடன் 13 அம்சக் கோரிக்கைகளில் கையெழுத்திட்ட கட்சிகள், நிறைவேற்ற முடியாத 13 அம்ச கோரிக்கைகளாலும் தமது பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளனர்.   

ஏனெனில், ஏற்றுக்கொள்ளப்படாததும் நிறைவேற்றப்படாததுமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத விடத்து, மாற்றுத் திட்டம் என்ன? அவை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் எவை? போன்ற தௌிவுபடுத்தல்கள் எவையுமே, இன்று தமிழ் மக்கள் முன் வைக்கப்படவில்லை.   

இத்தகைய சூழலில், தமிழ்த் தரப்பு தனது நியாயங்களைத் தேர்தலில் பேரம் பேசும் கோரிக்கைகளாக முன் வைத்ததில் தவறில்லை. ஆனால், அவை எந்தளவுக்குத் தற்காலச் சூழ்நிலையில் சிங்கள ஆட்சியாளர்களால் பரிசீலிக்கப்படும், ஏற்றுக்கொள்ளப்படும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், இது தயாரிக்கப்பட்டதா? 

தமிழ் அரசியல் தலைமைகளைச் சிக்கலுக்குள் சிக்கவைக்க இது தயாரிக்கப்பட்டதா? 
தமிழ்த் தலைமைகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளத் தயாரிக்கப்பட்டதா? என்ற பல்வேறு வினாக்கள் தமிழ் மக்களிடமிருந்து எழுந்துள்ளன.  

ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகத் தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ள 13 கோரிக்கைகள் தொடர்பாக, சிங்கள ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்ளாதவிடத்து, மாற்று நடவடிக்கையாகத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதா? சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதா? மக்களைத் தமது விருப்பத்தின் பேரில், சுயாதீனமாக வாக்களிக்க விட்டுவிடுவதா? போன்ற வினாக்கள் உள்ளன.  

ஆனால், தற்போதைய சூழலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளதால், மக்கள் சக்தி வேட்பாளருக்கு (ஜே.வி.பி) ஆதரவு தெரிவிப்பதா?  

ஏற்கெனவே, ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கவும் அதன் சார்பாகச் செயற்படவும் வியூகம் வகுக்கப்பட்ட போதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் நோக்கிய விமர்சனங்களைப் புறந்தள்ளவும்  எதிர்கால அரசியல் களநிலைவரம் குறித்தும் அடைந்துள்ள அச்சநிலை காரணமாகவும் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் சூழ்நிலைகளை பயன்படுத்துதல் என்ற நோக்கத்தில், இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.  

ஜனாதிபதித் தேர்தலை நிராகரிப்பது என்பது தற்போதைய சூழலில், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களை ஓர் ஆபத்தான, சிக்கல் மிகுந்த இக்கட்டான கட்டத்துக்கு இட்டுச் செல்லும்.   

ஏனெனில், ஜனாதிபதிப் பதவி என்பது நாட்டின் பலம் பொருந்திய அதிகாரத்தை நிர்வகிக்கும் தனி மனித சக்தி. எனவே, அதற்கு ஆதரவு வழங்காத சூழல் என்பது, எதிர்காலத்தில் தமிழர்கள் பழிவாங்கப்படும், அவர்கள் தம் அபிவிருத்திகளையும் தொழில் வாய்ப்புகளையும் அபிலாசைகளையும் அடைந்து கொள்வதற்கு எதிரான சூழ்நிலைகளாக அமைந்துவிடலாம்.  

அதேபோல், வெல்லமுடியாத வேட்பாளரை ஆதரிப்பது என்பது, ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது’ போன்றது. அது தேர்தல்த் தெரிவின் முடிவுகளை மறுதலையாக மாற்றி விடலாம். ‘செல்லாக்காசு’ அரசியலில் தமிழர் தரப்பைக் கொண்டுசென்று நிறுத்தி விடலாம். 

இவற்றைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்களிடமே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைச் சுயாதீனமாக முடிவெடுக்கும் படி கூறினால், தமிழ்த் தேசிய அரசியலில் இருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்காலத்தில் ஒதுக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.  

ஏனெனில், தமிழ் மக்களை வழிப்படுத்த வேண்டிய அரசியல் தலைமைகள், தங்கள் சுயலாப அரசியல் காய்நகர்த்தல்கள் காரணமாக, இத்தகைய முடிவுகளையும் வழிப்படுத்தல்களையும் எடுக்க முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது அரசியல் சாணக்கியமல்ல.

எனவே, மக்களுக்குப் பொருத்தமான தலைமைத்துவத்தைத் தமிழ் அரசியல் தலைமைகளால் வழங்க முடியாது விடின், இப்போது அரசியலில் இருப்பவர்கள் ஒதுங்கி வழி விட்டு, இளம் தலைமுறை புதிய முகங்களுக்கு வழி விட வேண்டும்; இல்லையேல், இத்தேர்தலுடன் தமிழ்த் தேசிய உரிமை அரசியலின் அஸ்தமனம் ஆரம்பமாகிவிடும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓர்-அஸ்தமனத்தின்-உதயம்/91-240427

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.