Jump to content

சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள்


Recommended Posts

சொத்துகளின் விபரங்களை வெளியிடாத 6 வேட்பாளர்கள்

Mahinda-Deshapriya-300x200.jpg

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் ஆறு வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவி்ன் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

”தேர்தல்கள் சட்டத்தின்படி, அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது சொத்துக்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

எனினும், இம்முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களில் 6 பேர் சொத்து விபரங்களை வெளியிடவில்லை.

சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களில் ஐவர், சுயேட்சைகள், ஒருவர் அரசியல் கட்சியின் வேட்பாளர்.

சொத்துக்களின் விபரங்களை வெளிப்படுத்தாத வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழக்குத் தொடரமுடியும் என்றும் அவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2019/10/25/news/40796

Link to comment
Share on other sites

"சொத்து விபரங்களை வெளியிடாத வேட்பாளர்களில் ஐவர், சுயேட்சைகள், ஒருவர் அரசியல் கட்சியின் வேட்பாளர்."

அரசியலுக்கு வந்தபின்னர் தான் சொத்து சேகரிக்கலாம்😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சேர்த்தவர்கள்  சேர்த்ததை வெளியிடுவார்கள், மற்றவர்கள் சேர்த்தபின்தான் வெளியிட முடியும். அல்லது வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு அழைப்புக்காக காத்திருக்கிறார்களோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.