Jump to content

ஆஸ்திரேலியாவின் உளுரு மலை ஏற்றத்திற்கு தடை - கடைசி நாளில் மலையேற குவிந்த கூட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
உளுரூபடத்தின் காப்புரிமை Lisa Maree Williams / getty images Image caption உளுருவில் மலையேற்றம் தடை செய்யப்படவுள்ளதால் அங்கு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும்.

நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர்.

கடந்த 2017ம் ஆண்டு, உளுரு பகுதிக்கு வருகை தந்தவர்களில் 16% சுற்றுலா பயணிகள் மட்டுமே மலையேற்றத்தில் ஈடுபட்டனர். ஆனால் தடை அறிவிக்கப்பட்ட பிறகு சமீபத்திய வாரங்களில் ஏராளமானோர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ளிகிழமை மலை பகுதியில் கடும் புயல் தாக்கியதால், பல மணி நேரம் காத்திருந்து, அலுவலர்கள் மலையேற பாதுகாப்பான சூழல் நிலவுகிறது என உறுதி செய்தவுடன் நூற்றுக்கணக்கானோர் தாமதமாக மலையேறத் துவங்கினர்.

Uluruபடத்தின் காப்புரிமை Supplied Image caption மலை ஏற தடை அறிவிப்பதற்கு முன்பு கடைசியாக மலை ஏற ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

மலையேற்றம் தடை செய்யப்பட காரணம்

உளுரு மலை தளத்தின் ஆன்மிக முக்கியத்துவம், பாதுகாப்பு மற்றும் சுற்றுசூழல் காரணங்களுக்காக 2017ம் ஆண்டு உளுரு-கட்டா ஜுடா தேசிய பூங்கா வாரியம் மலையேற்றத்தை தடை செய்ய ஏகமனதாக வாக்களித்தனர்.

அனான்கு இனத்தை சேர்ந்த ஒருவர் ''உளுரு மிகவும் புனிதமான இடம். அது எங்கள் தேவாலயம் போன்றது," என பிபிசியிடம் கூறினார்.

உலகெங்கிலும் உள்ளவர்கள் இங்கு வந்து மலை ஏறுகிறார்கள். அவர்களுக்கு மலையின் மேல் மரியாதை இல்லை என ரமேத் தாமஸ் கூறினார்.

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIAபடத்தின் காப்புரிமை Mark Kolbe / getty images

தளத்தின் புனிதத்தன்மை அறிந்து சில சுற்றுலா பயணிகள் மலை ஏற வேண்டாம் என கருதி மலையின் அடிவாரத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளனர்.

இது ஒரு மலை. இதை ஏறியே ஆக வேண்டும் என கடந்த வாரம் மலை ஏறிய ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @olgordon

இந்த மலை பலருக்கு நல்ல நினைவுகளை அளித்திருக்கும். ஆனால் மலையேற்றத்தை தடை செய்வது பூர்வகுடி மக்களின் பல வருட துயரத்தை நீக்கும்.

கடந்த வாரம் உளுருவின் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பின. பல சுற்றுலா பயணிகள் அனுமதி இன்றி பல இடங்களில் தங்குகின்றனர் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

இந்த மலையேற்ற தடை, தேசிய பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை ஒருபோதும் பாதிக்காது என சுற்றுலாத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Anangu man Uluruபடத்தின் காப்புரிமை AFP Image caption அனான்கு பூர்வகுடி மக்கள் நீண்ட காலமாக மலை ஏற்றத்திற்கு தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துவந்தனர்.

கடந்த 1950ஆம் ஆண்டு, மலையேற்றத்தின்போது விபத்து ஏற்பட்டு, வெப்பம் தொடர்பான பிரச்சனைகளால் டஜன் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 2018ல் ஜப்பானை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மிகவும் நீளமான பாறை ஒன்றை என்ற முயன்றபோது உயிரிழந்தார்.

உளுரு மலை 348 மீட்டர் உயரம் கொண்டது, மிகவும் சறுக்கிவிடுகின்ற தன்மை கொண்டது.

ஆரம்பத்தில், உலகம் வடிவமின்றி இருந்தபோது இந்த வெற்றிடத்திலிருந்து மூதாதையர்கள் தோன்றி நிலம் முழுவதும் பயணித்து, அனைத்து உயிரினங்களையும் வடிவங்களையும் உருவாக்கினார்கள் என அனான்கு மக்கள் நம்புகின்றனர்.https://www.bbc.com/tamil/global-50183478

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIA

 

Anangu man Uluru

நான்... ரசித்த மலைகள் மூன்று.
இந்த அவுஸ்திரேலிய மலை,  இமய மலை  &  கீரி மலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIA

 

Anangu man Uluru

நான்... ரசித்த மலைகள் மூன்று.
இந்த அவுஸ்திரேலிய மலை,  இமய மலை  &  கீரி மலை.

சிறியர் இவையெல்லாம் வரைபடத்தில் நிக்கும் மலைகள், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மலை உண்டு. அதுதான் சுதுமலை.......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ULURU-KATA TJUTA NATIONAL PARK, AUSTRALIA

நான்... ரசித்த மலைகள் மூன்று.
இந்த அவுஸ்திரேலிய மலை,  இமய மலை  &  கீரி மலை.

10 minutes ago, suvy said:

சிறியர் இவையெல்லாம் வரைபடத்தில் நிக்கும் மலைகள், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மலை உண்டு. அதுதான் சுதுமலை.......!   😁

நான் ரசிச்ச மலையெண்டால் அது கம்பர்மலை தான்.....😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, suvy said:

சிறியர் இவையெல்லாம் வரைபடத்தில் நிக்கும் மலைகள், வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மலை உண்டு. அதுதான் சுதுமலை.......!   😁

Bildergebnis für சுதுமலை பிரகடனம்

 

Bildergebnis für சுதுமலை பிரகடனம்

ஓம்.... சுவியர், தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரனின்,   
அந்த நினைவுகளை.... என்றுமே மறக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நான் ரசிச்ச மலையெண்டால் அது கம்பர்மலை தான்.....😀

 

முழுமையான சூரியனின் அழகை....முதன் முதலில் பண்ணைப் பாலத்தில் தான் கண்டேன்....!

இரண்டாவது தடவை.....உளுறு...மலையின் மீதிருந்து தான் கண்டேன்!

இனிமேல் தான்.....கம்பர் மலையிலிருந்து ...காண வேண்டும்!

 

இன்ஷா அல்லா.......!

94d611ec71a00fc31394183aa03b52f0.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நான் ரசிச்ச மலையெண்டால் அது கம்பர்மலை தான்.....😀

இது, என்னப்பா...... புது, மலையாக  இருக்கு?
அந்த... கம்பர் மலையின் படத்தை,  ஒருக்கா... காட்டுங்கோ... 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புங்கையூரன் said:

முழுமையான சூரியனின் அழகை....முதன் முதலில் பண்ணைப் பாலத்தில் தான் கண்டேன்....!இரண்டாவது தடவை.....உளுறு...மலையின் மீதிருந்து தான் கண்டேன்!இனிமேல் தான்.....கம்பர் மலையிலிருந்து ...காண வேண்டும்!

இன்ஷா அல்லா.......!

புங்கை... ஏன்? இந்த சொல்லை  பாவித்தீர்கள் 🤢
டக்கெண்டு போய்....  வாயை... கழுவி விட்டு, 
"ஓம்  நமசிவாய"  என்று, மூன்று தரம் சொல்லுங்கள்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாய் தவறி நமச்சிவாய சொன்னால் ... நமச்சிவாய சொன்னால் .. சூரியன் உதிக்குமா எண்டு...இடி வந்து சனம் விளக்கம் எல்லோ கேட்குது..! இன்சா அல்லா எண்டால் ... ஒருத்தரும் சத்தம் போடாயினம்!

Link to comment
Share on other sites

13 hours ago, பிழம்பு said:

ஆஸ்திரேலியாவில் ஏயர்ஸ் ராக் என பரவலாக அறியப்பட்ட உளுரு எனும் ஒரு குன்று சனிக்கிழமை முதல் வெளியாட்கள் செல்லவே தடை செய்யபட்ட இடமாக மாறிவிடும்.

 

நீண்ட காலமாக இந்த மலைக் குன்றின் மீது ஏற வேண்டாம் என அனான்கு பூர்வகுடி இன மக்கள் சுற்றுலா பயணிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த மலையை புனிதமாக கருதி பாதுகாத்தும் வந்தனர்.

இந்த மலைக்கு நான் எனது நண்பருடன் சில வருடங்களுக்கு முன்னர் சென்றிருந்தேன். அது ஒரு கோடைக்காலம், தகிக்கும் வெயில் என்பதால் சுற்றுலாப்பயணிகள் குறைவாக இருந்தது.

அந்த நேரத்தில் மலையில் ஏறுவதும் தடைசெய்யப்பட்டிருந்தது. குன்றின் அடிவாரத்தைச் சற்றிப்பார்த்தோம். அபோரிஜினர் மூதாதையர் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வரைந்த சித்திரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. அதைச்சுற்றிய வீதியில் காரில் வலம் வந்ததும் இனிய அனுபவம். 

அதிகாலைச் சூரிய உதயத்தில் மஞ்சள் சார்ந்த மண்ணிற நிறத்திலும், பொழுது சாயும்போது செந்நிறத்திலும் தோற்றமளித்ததைக் காணக்கிடைத்தது.

இங்கு குறிப்பிட்டது போல அபோரிஜினல் இனத்தவருக்கு இது ஒரு புனிதமான இடம். எனவே இக்குன்றில் ஏறுவதற்குத் தடைசெய்தமை வரவேற்கத்தக்க விடயம். 

Link to comment
Share on other sites

நான் அன்று எடுத்த படங்களில் இன்றும் எஞ்சிய ஒரு சில படங்கள் இவை. 😊large.FB_IMG_1572062276369.jpg.f468bf3881b0fc195e725870a433a4d4.jpglarge.FB_IMG_1572062255993.jpg.e2abf45d2d9004aff6356131c5b737e3.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, மல்லிகை வாசம் said:

நான் அன்று எடுத்த படங்களில் இன்றும் எஞ்சிய ஒரு சில படங்கள் இவை. 😊large.FB_IMG_1572062276369.jpg.f468bf3881b0fc195e725870a433a4d4.jpglarge.FB_IMG_1572062255993.jpg.e2abf45d2d9004aff6356131c5b737e3.jpg

ஒரு ஐந்து வீதம் கூட இல்லாத பூர்வீக குடிகளின் நம்பிக்கையை மதித்து.. உலகின் பெரிய கல்லையே விட்டுக் கொடுப்பது தான்... சேர்ந்து வாழ்வது என்பது! போலீன் ஹான்சனால் கூட முடிவை மாற்ற முடியவில்லை! இந்த நேரத்தில் அஸ்கிரிய மஹானாயக்கரும்....ஞானாசார தேரரும் நினைவில் வந்து போகின்றார்கள்!

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

இது, என்னப்பா...... புது, மலையாக  இருக்கு?
அந்த... கம்பர் மலையின் படத்தை,  ஒருக்கா... காட்டுங்கோ... 😍

சிறீ அவர்களே நீங்கள் கீரிமலையையின் படத்தைக் காட்டிப் பதிவுசெய்தால், சாமியார் கம்பர்மலையைப் பக்திப் பரவசத்தோடு காட்டிப் பதிவிடுவார்.🤣

Link to comment
Share on other sites

3 hours ago, புங்கையூரன் said:

ஒரு ஐந்து வீதம் கூட இல்லாத பூர்வீக குடிகளின் நம்பிக்கையை மதித்து.. உலகின் பெரிய கல்லையே விட்டுக் கொடுப்பது தான்... சேர்ந்து வாழ்வது என்பது! 

உண்மை தான், புங்கை அண்ணா. காலனித்துவ காலத்திலும் பின்னரும் பல இன்னல்களை அபோரிஜினல்கள் சந்தித்திருந்தாலும் இன்றைய அவுஸ்திரேலிய சமூகம் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்று தோன்றுகிறது.

மனித நாகரீக வளர்சியில் மிகவும் 'முன்னேறிய' சமூகமும், மிகவும் 'பின்தங்கிய' சமூகமும் ஒரே நாட்டில் அனுசரித்து வாழ்வதென்பது நடைமுறையில் மிகச் சவாலான காரியம். இருந்தாலும் இதை ஒரு மைற்கல்லாகக் கொள்ளலாம்.

மேலும், இங்கு பிறந்த இளைய சமுதாயமும், புதிதாகக் குடியேறுபவர்களும் இந்த 'Original Australian' பற்றி அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். இது அவர்களின் உணர்வுகளை மேலும் புரிந்து கொள்வதோடு, புதிதாகக் குடிபுகுந்த தேசத்துடனான இணைப்பை மேலும் வலுப்படுத்தவும் உதவும். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

வாய் தவறி நமச்சிவாய சொன்னால் ... நமச்சிவாய சொன்னால் .. சூரியன் உதிக்குமா எண்டு...இடி வந்து சனம் விளக்கம் எல்லோ கேட்குது..! இன்சா அல்லா எண்டால் ... ஒருத்தரும் சத்தம் போடாயினம்!

மெல்லமாய் கதையுங்கோ புங்கையர்!  சைவ/இந்து சமயத்துக்கு யாழ்களத்திலை தடை வந்தாலும் வரும்.🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.