Jump to content

முதல் பார்வை: பிகில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மகளிர் கால்பந்து அணியின் மூலம் தன் கனவை நிறைவேற்றப் போராடும் கோச்சின் கதையே 'பிகில்'.

சென்னையில் குப்பத்து மக்களின் நண்பனாக வலம் வருகிறார் மைக்கேல் (விஜய்). அவரின் நண்பர் கதிர் கால்பந்தாட்டப் பயிற்சியாளர். விஜய்யைத் தாக்க வரும் டேனியல் பாலாஜி தலைமையிலான ரவுடி கும்பல் கதிரைத் தாக்குகிறது. இதில் கதிர் படுகாயம் அடைகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரால் தொடர்ந்து கோச்சாக செயல்பட முடியாத சூழல். இந்நிலையில் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு ஒரு கோச் தேவைப்படுகிறார். அப்போது மைக்கேல் கோச் அவதாரம் எடுக்கிறார். இத்தனை நாள் ரவுடியாக இருந்தவரை ஒரு கோச்சாக எப்படி ஏற்றுக்கொள்வது என்று வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். கோச்சாக நடந்துகொள்ளும் அவர் தலைமையின் கீழ் செயல்பட மறுக்கின்றனர்.

யார் இந்த மைக்கேல், அவரின் பின்புலம் என்ன, அவரது கனவு ஏன் நிறைவேறாமல் போனது, ராயப்பன் என்ன ஆனார், வீராங்கனைகள் மைக்கேலை கோச்சாக ஏற்றுக்கொண்டார்களா, அந்த அணியால் வெற்றி வாகை சூட முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

அட்லீ- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் 'பிகில்'. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி விஜய் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரு விஜய் ரசிகரே எடுத்த படம் இது. ஆனால் வழக்கமாக விஜய் படத்தில் இருக்கும் அம்சங்கள் இப்படத்தில் கொஞ்சம் மிஸ் ஆகின்றன.

ராயப்பன், மைக்கேல் என்று இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், காவி வேட்டி, கலர் சட்டை என்று 60 வயதை நெருங்கும் கேங்ஸ்டர் ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் கொஞ்சம் பொருந்துகிறார். ஆனால், அதற்கான உடல் மொழி எதுவும் இல்லை. திக்கிப் பேசுதல், குரல் வெளிப்பாட்டில் மெதுவான போக்கைக் கடைப்பிடித்தல் ஆகியவை ஓரளவுக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கின்றன. எமோஷன் காட்சிகளில் நுட்பமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகன் மைக்கேலை நினைத்துப் பெருமைப்படும் போதும், கப் (கோப்பை) முக்கியம் என்று சொல்லும்போதும் ரவுடிகளைப் பந்தாடும்போதும் ராயப்பன் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.

விளையாட்டில் குறிக்கோளாக இருக்கும் பிகிலின் எனர்ஜி ஆச்சர்யப்படுத்துகிறது. மைக்கேல் கதாபாத்திரத்தில் விஜய்யின் புத்திசாலித்தனம் அசர வைக்கிறது. தான் யார் என்பதை புரியவைப்பது, நயன் மீதான காதலை வெளிப்படுத்துவது, ஏரியா மக்களின் பாசத்தைப் பெறுவது என மைக்கேல் இளமைப் பட்டாசு. ரெபா மோனிகா ஜானிடம் ஒரு கதையைச் சொல்லும்போது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆனால், வழக்கமான விஜய்யின் டான்ஸ், நகைச்சுவை உணர்வு இதில் தேடிப் பார்த்தாலும் தென்படவில்லை.

படத்தில் நயன்தாரா இருக்கிறார் என்று சொல்லிக்கொள்ளலாம். அவ்வளவுதான். வர்ஷா பொல்லம்மாவின் கணவனிடம் பெண்களின் கனவுகள் குறித்துப் பேசும் இடத்தில் மட்டுமே நயன் தனித்துத் தெரிகிறார். மற்றபடி டூயட் பாடிவிட்டு, கூட்டத்தில் ஒருத்தியாகவே வந்து நாயகி கடமையை நிறைவேற்றுகிறார்.

நாயகனை மையப்படுத்திய படம் என்பதால் படத்தில் வேறு யாருக்கும் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதையும் மீறி கதைக்களத்தின் முக்கியத் திருப்பம் என்பதால் கதிர் அழுத்தமாக வெளிப்படுகிறார். யோகி பாபு காமெடியில் சிக்ஸர் அடிக்கிறார். தன் ஒன்லைனர்களால் சிரிப்பு மத்தாப்பைக் கொளுத்துகிறார். ஜார்ஜ் போகிற போக்கில் தன் இருப்பைப் பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஷெராஃப் வழக்கமும் பழக்கமுமான வில்லனாக வந்து போகிறார்.

ஆனந்த்ராஜ், மனோபாலா, தேவதர்ஷினி, ரோகிணி, சௌந்தர்ராஜா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ரமா, எல்.எம்.விஜயன் ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு வீராங்கனைகளில் இந்துஜா மிகை நடிப்பில் உறுத்துகிறார். தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அமிர்தா ஐயரும், அனிதா கதாபாத்திரத்தில் நடித்த ரெபா மோனிகா ஜானும் இயல்பான நடிப்பில் மின்னுகிறார்கள். பாண்டியம்மாவாக வரும் இந்திரஜா ஷங்கர் அசால்ட்டாக அப்ளாஸ் அள்ளுகிறார்.

கால்பந்தாட்டக் களத்தின் அழகியலையும் டான்களின் வாழ்வியலையும் மிக நேர்த்தியாக தன் கேமராவுக்குள் கடத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஷ்ணு. வெறித்தனம், சிங்கப்பெண்ணே பாடல்களில் களத்துக்கு வலு சேர்க்கும் ரஹ்மான் கால்பந்தாட்டம் தொடர்பான பின்னணி இசையில் ரம்மியம் சேர்க்கிறார்.

படத்தின் பெரிய பிளஸ் விஜய்தான். படத்தின் அழுத்தத்துக்கு ரெபா மோனிகாவின் பின் கதை அழுத்தம் சேர்க்கிறது. வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதையும் அக்கறையுடன் பதிவு செய்கிறது.

படத்தின் நீளம் பெரிய பிரச்சினை. எடிட்டர் ரூபன் பல இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம். படத்தின் எந்தக் கதாபாத்திரக் கட்டமைப்பும் முழுமையாக இல்லை. படத்தின் பிரதான பலவீனம் இதுவே. இயக்குநர் அட்லி கேரக்டர் ஸ்கெட்ச்சில் கவனம் செலுத்தியிருக்கலாம். கேங்ஸ்டர் படமா, விளையாட்டை மையமாகக் கொண்ட படமா என்ற குழப்பம் இயக்குநருக்கு வந்திருக்கிறது. அது திரைக்கதையிலும் எதிரொலிக்கிறது.

மகளிர் கால்பந்து அணிக்கும் கோச் விஜய்க்கும் இடையே உள்ள முரண்களை சரிசெய்த விதம் ரொம்பவே சாதாரணமாக இருக்கிறது. மகளிர் கால்பந்து அணியைச் சேர்ந்த வீராங்கனைகளின் பின்புலமும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இருவரின் பின்னணி மட்டுமே ஓரளவு சொல்லப்படுகிறது. தமிழ்ப் படங்கள், பாலிவுட் படங்கள் என பல படங்களின் காட்சி சாயல்கள் இந்தப் படத்திலும் உள்ளன. படத்தின் எந்தக் காட்சியிலும் புதுமை இல்லாதது பெருங்குறை.

பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பதைப் போதிக்கும் வழக்கமான வன்முறையை மட்டும் தீர்வாகச் சொல்லவில்லை என்பது படத்தின் ஆறுதல். கல்வி, விளையாட்டை தீர்வுகளாகக் கொண்டு பெண்களைக் கவுரவப்படுத்தும் நோக்கில் அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உறுதுணை புரிய வேண்டும் என்ற கருத்தைச் சொன்ன விதத்தில் மட்டும் 'பிகில்' ஓங்கி ஒலிக்கிறது.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/522066-bigil-review-4.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.