Jump to content

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை: விடியவிடிய நடக்கும் மீட்பு பணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..😢

அடுத்த கிழமை நயன்தாரா தன்ர காதலரை மாற்றினால் இதுவும் கடந்து போகும் .. கடலில் எண்ணெய்-பிளாஸ்ரிக் வாளி, நீராவி-தெர்மோகோல், ஆற்று நீர் அசுத்தம் - சோப்பு நுரை ,டேங்கு காய்ச்சல் - ரெல்லி கொசு முதலான பல்வேறு நினைவலைகள் வந்து போகிறது..

28b.jpg

லெற்றஸ்ற் ரெக்னாலஜி...

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீ அதுக்குள்ள அவன் இறந்திட்டதா சொல்லிபுட்டாங்கள் இல்லைனா இன்னும் நாலு நாளைக்கு ரீவி சானல்களில் வைரல் நியூஸ்போட்டு காசு பாத்திருக்கலாம் 

சரிவிடு இன்னுமொரு குழந்தை விழாமலா போயிடும்.

சீ அதுக்குள்ள அவன் இறந்திட்டதா சொல்லிபுட்டாங்கள் இல்லைனா இன்னும் நாலு நாளைக்கு ரீவி சானல்களில் வைரல் நியூஸ்போட்டு காசு பாத்திருக்கலாம் 

சரிவிடு இன்னுமொரு குழந்தை விழாமலா போயிடும்.

Link to comment
Share on other sites

நாலுநாளாக தவித்தமனதுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்!!

Link to comment
Share on other sites

சிறுவன் சுஜித் நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

 

water

இந்தியாவில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளதாகவும் அவரை மீட்கும் பணிகள் கடுமையாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு வந்தன.

நான்கு நாட்களுக்குப் பின்னர் குழிக்குள் இருந்து நேற்றிரவு 10.30 மணியளவில் சிறுவன் உடல் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசுவதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சிறுவனின் சடலம் மீட்டெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

http://www.dailyceylon.com/191461/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜித் மரணம்: உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா?: சென்னை உயர்நீதி மன்றம்

சுஜித் Image captionசுஜித்

உயிரிழப்புகளுக்குப் பிறகுதான் சட்டம் அமல்படுத்தப்படுமா என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. ஆழ்துளைக் கிணறு தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

திருச்சி மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டிப்பட்டியில் ஆழ்துளைக் கிணறு ஒன்றில் 2 வயதுச் சிறுவன் சுஜித் விழுந்து, உயிரிழந்தான். அவனை உயிருடன் மீட்கும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் அவர்களை மீட்க 6 விதமான தொழில் நுட்பங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சில மணி நேரங்களிலேயே குழந்தைகளை உயிருடன் மீட்டுவிடலாம் எனவும் சுஜித்தை மீட்கும் விவகாரத்தில் இந்தத் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்தவில்லையெனவும் கூறியிருந்தார்.

சுஜித்

ஆழ்துளைக் கிணறுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 2010ஆம் ஆண்டே பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டியிருந்த பொன்ராஜ், அந்த உத்தரவின்படி ஆழ்துளை கிணறுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை தமிழக அரசு 2015ஆம் ஆண்டு கொண்டு வந்தது என்றும் ஆனால், அரசு அதிகாரிகள் இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆகவே, இது தொடர்பாக தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்; கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு தொட்டியாக பயன்படுத்த உத்தரவிட வேண்டும் என பொன்ராஜ் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஷேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

உயர் நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசிடம் பல கேள்விகளை எழுப்பினர். "ஒவ்வொரு முறையும் யாராவது உயிர் இழந்தால்தான் சட்டத்தை அமல்படுத்துவீர்களா, ஆழ்துளை கிணறுகள் அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதி குறித்த ஆவணங்கள் எங்காவது பராமரிக்கப்படுகின்றனவா? இதுவரை மாநிலம் முழுவதும் எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? தோண்டப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் எத்தனை? மாநில அரசு வகுத்த விதிமுறைகளை மீறியவர்கள் எத்தனைபேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?" என நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர்.

மேலும், சுபஸ்ரீ மரணம் அடைந்ததும் பேனர் தொடர்பான சட்டத்தையும் சுஜித் மரணம் அடைந்ததும் ஆழ்துளை கிணறு சட்டத்தையும் சிறிது காலம் அமல்படுத்தப்படுகிறது. பிறகு அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. அரசு கொண்டு வந்த விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் யாரும் எந்த ஆய்வும் செய்வதில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசின் பதிலை நவம்பர் 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தவிட்டு, வழக்கை நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

https://www.bbc.com/tamil/india-50221615

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தை இறந்துவிட்டது அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எப்போதோ தெரிந்திருக்கவேண்டும் இல்லாதுவிடின் அரசும் அதிகாரிகளும் மருத்துவத்துறையும் மூடர்கள் கூட்டம் எனத்தான் கூறவேண்டும் காரணம் குழந்தை உயிருடன் இருந்தால் அக்குழந்தையின் உடலிலிருந்து வெளிப்படும் வெப்பத்தை அளக்கும் கருவி காட்டிக்கொடுத்துவிடும் அக்கருவியை உடனடியாகத் தருவிக்கமுடியாத நிலையின் தமிழக அரசும் அதிகாரிகளும் இல்லை ஆகவே இவர்கள் குழந்தை இறந்தபின்பும் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து அழுகிப்போன ஒரு உடல் பிண்டத்தை மீட்டிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் சிறுவனே.

இந்த ஏழைகளின் வாழ்க்கை என்றும் கண்ணீரிதான் ஐயா, நெஞ்சு வெடிக்கின்றதய்யா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜித் தந்தை உருக்கம்: "ஆழ்துளையில் விழும் கடைசி குழந்தை என்னுடையதாக இருக்கட்டும்"

மு.ஹரிஹரன்பிபிசி தமிழுக்காக.
சுஜித் மற்றும் அவனின் தாய்

"ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இறக்கும் கிடைசி குழந்தை சுஜித்தாக இருக்கட்டும்," என்கிறார் சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ்.

வெள்ளிக்கிழமையன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கு வெட்டி வைத்திருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். பெரும் போராட்டத்திற்கு பிறகு சுஜித் இன்று காலை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.

சுஜித்தின் உயிரை பறித்த அந்த ஆழ்துளை கிணறு சுஜித்தின் தாத்தா காலத்தில் தோண்டப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு குடும்பத்துடன் 10 வருடமாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த அந்த குடும்பம் தண்ணீருக்காக 600 அடிக்கு ஆழ்துளை கிணற்றை தோண்டியுள்ளது. ஆனால் அதன் பின் தண்ணீர் வராததால் அதனை மண் போட்டு மூடிவிட்டனர் தனது பெற்றோர் என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சுஜித்தின் தந்தை.

"அதன்பிறகு அனைவரும் அந்த குழி குறித்து மறந்துவிட்டனர். அது அடைக்கப்பட்டுவிட்டது என்றே அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர். எனவே யாரும் அதை பெரிதாக எண்ணவில்லை" என்கிறார் சுஜித்தின் தந்தை.

சுஜித்தின் தந்தை பிரிட்டோ அரோக்கியதாஸ் மற்றும் தாய் கலா மேரிக்கு 2015ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதே ஆண்டு அவர்களின் மூத்த மகன் புனித் பிறந்தான்.

அதன்பிறகு 2017ஆம் ஆண்டு சுஜித் பிறந்துள்ளான்.

சுஜித் விழுந்த குழி

சுஜித்தின் அண்ணன் புனித் சுட்டியான குழந்தை. ஆனால் சுஜித் அவனைக்காட்டிலும் சுட்டி. தனது தாயிடம் மிகவும் பாசமாக இருக்கக்கூடியவன். அங்கும் இங்கும் ஓடி விளையாடிக் கொண்டிருப்பான்.

தனது முன்னோர்களை போல சுஜித்தின் தந்தை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தண்ணீர் இல்லாததால் அதனை விட்டுவிட்டு தற்போது கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சுஜித் அந்த குழிக்குள் விழுந்த அன்றைய பொழுது எப்போதும் போல் இயல்பானதாகவே விடிந்துள்ளது. அவர்கள் என்றைக்கும் போல் ஒன்றாக அமர்ந்து குடும்பமாக காலை உணவு உண்டுள்ளனர்.

அவர்கள் காலை உணவருந்திக் கொண்டிருக்கும்போதே புனித்தின் பள்ளி வாகனம் வர அவனை அதில் ஏற்றி விட்டு, தனது வீட்டிலிருந்து 20 கிமீட்டர் தொலைவில் உள்ள வையம்பட்டி என்ற இடத்துக்கு தனது பணிக்கு சென்றுள்ளார் பிரிட்டோ.

வீட்டில் சுஜித் எப்போதும் போல் விளையாடிக் கொண்டிருந்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் சுஜித்தின் உறவினர்களே எனவே அவன் அந்த இடத்தில் அங்கும் இங்கும் சென்று ஓடியாடி விளையாடுவதுண்டு.

அன்று சுஜித்தின் தாய் எப்போதும் போல தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். கலாமேரிக்கு அந்த குழி இருப்பது தெரியாது. அங்குதான் ஒரு காலத்தில் சுஜித்தின் தாத்தா விவசாயம் பார்த்து வந்துள்ளார்.

சுஜித்தின் தந்தை அந்த குழி தோண்டும்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அன்று சுஜித் எப்போதும் போல விளையாடிக் கொண்டிருக்கும் சம்யத்தில் திடீரென அந்த குழிக்குள் விழுந்தார். அவரின் தாய் கலாமேரி கண் முன்னால் அனைத்தும் நடந்து விட்டது. மாலை 5.30-5.40 மணிக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துவிட்டது.

அதன்பிறகு அவர்கள் சுஜித்தை காப்பாற்ற முயன்றுள்ளனர். முடியவில்லை. சுஜித்தின் தந்தைக்கு சுமார் 6 மணியளவில் தொலைபேசியில் அழைத்தனர்.

அப்போது அவர் அங்கு வரும்போது குழந்தை 20-22 அடி ஆழத்தில் இருந்துள்ளான்.

அப்போது அந்த குழந்தை அழும் சத்தம் கேட்டதாகவும், சுஜித்திடம் அவனின் தாய் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறுகின்றனர். பின் அவர்கள் போலீஸார் மற்றும் தீயனைப்பு துறைக்கு தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணிகள் குறித்து ஊர் மக்களில் சிலர் குற்றச்சாட்டுகளையும் வைக்கின்றனர். ஆனால் சுஜித்தின் தந்தை, அரசாங்கம் நல்ல முயற்சி எடுத்தது. அனைவரும் துரிதமாக செயல்பட்டனர் என்றார்.

மேலும், "இம்மாதிரியான சம்பவம் முதலும் கடைசியானதாக இருக்க வேண்டும். இம்மாதிரியான ஆழ்துளை கிணற்றில் விழுந்த கடைசி குழந்தை என்னுடையதாகவே இருக்கட்டும்" என்று அவர் கூறினார்.

அதே சமயம் "சமூக ஊடகங்களில் நான் அந்த குழியை தோண்டியதாகப் பேசுகின்றனர் ஆனால் அது உண்மையில்லை" என்று அவர் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/india-50221660

Link to comment
Share on other sites

நான் உருவாக்கிய கருவியை பயன்படுத்தக் கூடாத நிலை ஏற்பட வேண்டும்: மணிகண்டன் பேட்டி

sujith-reduce-he-will-be-rescued-alive-manikandan
 

2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் குழுவில் தான் தயாரித்த கருவியுடன் ஆரம்பத்தில் முயற்சி செய்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த மணிகண்டனிடம் இன்று (அக்.28) காலையில் பேசினேன். அவரிடம் எடுத்த இந்த பேட்டியை எழுதும் சமயத்தில், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 66 மணிநேரத்தைக் கடக்கவிருந்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணி அளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். அன்று தொடங்கிய மீட்புப் பணி 4-வது நாளாக இன்றுவரை முழுவீச்சில் நடந்துவருகிறது

 

மதுரை மணிகண்டன், திருச்சி டேனியல், கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர், தீயணைப்புத்துறை, மாநில பேரிடர் மீட்புத்துறை, தேசிய பேரிடர் மீட்புத்துறை என கிட்டத்தட்ட 8 குழுக்கள் முயற்சித்தும், கடந்த 4 நாட்களாக கேட்க விரும்பும் நல்ல செய்தி இன்னும் காதுகளுக்கு எட்டவில்லை.

15722489132949.jpg

அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரின் இடையறாத பணிகளையும், தீபாவளியன்றும், வீட்டுக்குச் செல்லாமல் மீட்புப்பணிகளை தொடர்வதையும் மாற்றுக்கட்சியினரும், மக்களும் பாராட்டி வருகின்றனர்.

அதேவேளையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 67 மணிநேரம் கடந்தும் மீட்க முடியாத அளவுக்கு தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கியிருக்கிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதனிடையே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்கும் ரோபோட் போன்ற கருவியை தாயாரித்த மணிகண்டனிடம் பேசினோம். குழந்தை சுஜித்தை மீட்கும் குழுவில் இருந்தவரான மணிகண்டன், மீட்பில் ஏன் பின்னடைவு, எத்தகைய தொழில்நுட்பம் தேவை என்பதை பேசினார்.

உங்களுக்கு குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி எப்போது தெரியவந்தது? அப்போது உங்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது?

எனக்கு குழந்தை விழுந்த அன்றே, கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கே திருச்சி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்தது. 8 மணிக்கெல்லாம் நிகழ்விடத்திற்கு சென்றுவிட்டேன். அரை மணிநேரத்தில் குழந்தையை மீட்கலாம் என்ற நம்பிக்கையில் சென்றேன்.

ஏற்கெனவே அங்கு டேனியல் என்பவர், குழந்தையின் ஒரு கையில் கயிற்றை கட்டி மற்றொரு கையில் மாட்டுவதற்கான முயற்சியில் இருந்தார். அவருடைய முயற்சியே வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் இருந்தோம்.

பலமுறை முயற்சி செய்து பார்த்தோம். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. ஆழ்துளை கிணற்றின் ஆழத்திற்கு செல்லச்செல்ல அதன் விட்டம் குறைந்துகொண்டே சென்றது, இதனால் குழந்தை அந்த இடத்தில் இறுக்கிக்கொண்டிருந்தது.

அடுத்ததாக, கோவை விநாயகம் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீதர் என்பவரின் தலைமையில் ஒரு கருவி மூலம் முயற்சி செய்தனர். ஆனால், குழந்தையின் இரு கைகளும் மடங்கியிருந்ததால், அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

அதன்பிறகு தான் நான் முயற்சி செய்தேன். கைபோன்ற ரோபோட் கருவி மூலம் குழந்தையைத் தூக்குவது போன்ற கருவி, கயிற்றால் குழந்தையின் கைகளைக் கட்டி மேலே தூக்குவது போன்ற மற்றொரு கருவி என நான் வடிவமைத்திருந்த இரு கருவிகளையும் கொண்டு சென்றிருந்தேன்.

ரோபோட் போன்ற என்னுடைய கருவி 6*5 என்ற அளவில் இருந்தது. அது குழந்தை இருக்கும் இடத்தில் நுழையாது என்பதால், என்னுடைய இரண்டு கருவிகளையும் 5*5 என்ற அளவுக்கு சுருக்கி மறுநாள் காலையில் கொண்டு வந்தேன்.

ஆனால், அதற்குள் குழந்தை 70 அடிக்குள் சென்றுவிட்டது. இருந்தாலும் கயிற்றின் மூலம் இழுத்துப் பார்த்தோம். ஆனால், குழந்தை இறுக்கமாக இருந்ததால் மேலே வரவில்லை.

குழந்தையை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் பலனளிக்காததற்கான காரணம் என்ன?

இந்த ஆழ்துளை கிணற்றின் விட்டம் 5*5 என்ற அளவில் குறுகி இருப்பதே எந்த முயற்சியும் பலனளிக்காததற்குக் காரணம். குழந்தையின் தலைக்கு மேல் ஒரு குண்டூசியைக் கூட செலுத்த முடியாத அளவுக்கு இடைவெளியே இல்லாமல் இருந்தது. நான் தயாரித்த கருவியை முடிந்த அளவுக்குக் குழந்தையின் கைகளில் இறுக்கித் தூக்க முயற்சித்தோம். ஆனால், பலனளிக்கவில்லை. கருவியை மேலும் இறுக்கித் தூக்கினால் அது குழந்தையின் உயிருக்கு விபரீதமாகும் என்பதால், அம்முயற்சியைக் கைவிட்டோம்.

ரோபோட் போன்ற கருவியை நீங்கள் தயாரித்தது எப்போது, அதன்மூலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்ட நம்பிக்கையான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?

2003-ல் என்னுடைய குழந்தையே ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. குழந்தை 5 அடிக்குள் தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்திருந்தது. அதனால், என் கைகளைக் கொடுத்தே குழந்தையை மீட்டுவிட்டேன். இருந்தாலும், என் குழந்தை விழுந்த போது நான் அடைந்த வேதனையை வேறெந்த பெற்றோரும் அடையக்கூடாது என்பதால் குழந்தையை தூக்குவதற்கான கருவியை கண்டுபிடிக்க முடிவு செய்தேன்.

ஆரம்பத்தில், குழந்தையை தூக்கும் வகையில் மட்டுமே கருவியை செய்தேன். அதன்பிறகு, அதில் கேமரா பொருத்தி நவீன முறையில் மாற்றினேன். ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தைக்குக் கீழே இந்த கருவியை செலுத்துவதற்கான தொழுல்நுட்பமும் இதில் இருக்கிறது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீரில் குழந்தை இருந்தாலும் மீட்கும் வகையில் நவீனமாக்கி உள்ளேன். தொடர்ந்து ஒவ்வொரு அனுபவங்களின் போதும் கருவியை சூழலுக்கு ஏற்ப நவீனமாக்கி வருகிறேன்.

சங்கரன்கோவிலில் ஏற்கெனவே 2014-ல் தர்ஷன் என்கிற குழந்தையை உயிருடன் மீட்டுள்ளோம். 20 அடியில் விழுந்த அந்த குழந்தைக்கு இடையே கருவியை செலுத்துவதற்கான இடைவெளி இருந்ததால் மீட்டோம். திருவண்ணாமலையில் இக்கருவி மூலம் மீட்ட குழந்தை, மருத்துவமனைக்கு செல்லும்போது உயிரிழந்தது. 2007-ல் இருந்து பல சம்பவங்களை இம்மாதிரி கருவிகளின் மூலம் மீட்க முயற்சித்திருக்கிறோம்.

நீங்கள் கண்டுபிடுத்த கருவியை அரசே பெற்று, அதனை தமிழகம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டீர்களா?

2006 வரை இந்த கருவியை அரசு வாங்கிக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், கருவிக்கு உரிய அங்கீகாரம் வாங்கினால் தான் பெற்றுக்கொள்வோம் என தமிழக தீயணைப்புத் துறை தெரிவித்தது. 2006-ல் சென்னை ஐஐடியில் இந்த கருவியை நிரூபித்துக்காட்டினேன். அங்கு இந்த கருவிக்கு சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது வழங்கினர்.

அதன்பிறகும், தமிழக தீயணைப்புத்துறையில் இக்கருவியை வாங்கிக்கொள்வதற்காக முயற்சி செய்தேன். அப்போது, இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கும்போது என்னை அழைப்பதாக தெரிவித்தனர். அதன்பிறகு, கரூரில் ஆழ்துளை கிணற்றில் 12 அடியில் விழுந்திருந்த குழந்தையை மீட்க அழைத்தனர்.

ஆனால், எனக்கு அழைப்பு வந்தபிறகு செல்வதில் தாமதமானதால், குழந்தை இறந்துதான் மீட்க முடிந்தது. அதன்பிறகு, குழந்தையை உயிருடன் மீட்டால்தான் கருவியை வாங்கிக்கொள்வோம் என தீயணைப்புத்துறை கூறிவிட்டது.

2014-ல் நான் ஏற்கெனவே சொன்னது போன்று குழந்தையை காப்பாற்றிய போது, வேலூர், மதுரை, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் தீயணைப்புத்துறை இக்கருவியை வாங்கியது. அந்த மாவட்டங்களில் தீயணைப்புத்துறையினர் அக்கருவியை எப்படி பயன்படுத்துவது, குழந்தையை எப்படி மீட்பது என தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

எல்லா மாவட்டங்களுக்கும் வாங்குவதற்காக இந்த ஆண்டுதான் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், எனக்கு அந்த தகவல் உறுதியாகத் தெரியவில்லை. மாவட்டம் முழுவதற்கும் வாங்குவதற்கான கருவிகளுக்கான விலையின் உத்தேசப் பட்டியலை கேட்டிருக்கின்றனர்.

இந்திய ராணுவம் பெங்களூருவில் இக்கருவியை வாங்கியிருக்கின்றனர். ஹைதராபாத்தில் தேசிய பேரிடர் மீட்புத்துறை வாங்கியுள்ளது. இந்தியா முழுவதும் வாங்குவதற்காகவுன் விலை உத்தேச பட்டியலை தேசிய பேரிடர் மீட்புத்துறை கேட்டுள்ளது.

மீட்புப் பணிகளில் உள்ள குறைபாடுகளே குழந்தை ஆழத்திற்கு சரிந்துகொண்டே செல்வதற்குக் காரணம் எனவும், குழந்தையை ஒரே இடத்தில் நிலை நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என சிலர் கூறுவதையும் எப்படி பார்க்கிறீர்கள்?

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது ஆரம்பத்தில் 5 அடியில் தான் இருந்தது. ஆனால், குழந்தை சரிந்துகொண்டே ஆழத்திற்கு சென்றது. மிகக்கிறுகிய இடைவெளியே இருப்பதால், மீட்புப் பணிகளின் போது, மீட்புக்கருவிகள் ஆழ்துளை கிணற்றில் லேசாக தடுமாறினாலே குழந்தை சரிந்துகொண்டே சென்றது.

அதுதான் குழந்தை ஆழத்திற்கு சென்றுகொண்டே இருப்பதற்கான காரணம். கயிறு கட்டாமல் இருந்தாலும் குழந்தை ஆழத்திற்கு சென்றிருக்கும். மீட்புப்பணியால் குழந்தை ஆழத்திற்கு செல்வதாக சொல்வதை ஏற்க முடியாது.

மீட்புப்பணியில் பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்திருந்தது தேசிய பேரிடர் மீட்புத்துறை தான். ஆனால், அவர்களின் முயற்சியிலும் எதிர்பார்த்த பலன் இல்லை. இவை ஏன், இந்தியாவில் நவீன தொழில்நுட்பம் இல்லை என நினைக்கிறீர்களா?

நிகழ்விடத்திலேயே அனைத்து மீட்புக்குழுக்களையும் சேர்த்து கிட்டத்தட்ட 10 கருவிகள் இருந்தன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய தொழில்நுட்பம் இல்லை. கடந்த மாதம், பஞ்சாபில் இதேபோன்று சம்பவம் நடந்தது, 5 நாட்கள் முயற்சித்துப் பார்த்து குழந்தை இறந்தவுடன் தான் என்னை அழைத்தனர். ஆனால், நாட்கள் கடந்துவிட்டதால் அங்கு செல்லவில்லை. இப்படி, எந்த மாநிலமாக இருந்தாலும் இங்கிருந்துதான் தொழில்நுட்பத்துடன் அங்கு செல்ல வேண்டியுள்ளது.

இருந்தாலும், இம்மாதிரியான சம்பவம் எங்கு நிகழ்ந்தாலும், நாங்கள் நிகழ்விடத்திற்கு செல்வது போல்தான் இன்னும் இருக்கிறது. அப்படியில்லாமல், அங்கேயே கருவிகள் இருக்க வேண்டும்.

சீனாவில் சில நிமிடங்களில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்டதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலாவுகின்றன? அதுகுறித்து...

அந்த வீடியோவை நன்றாக கவனித்தால், குழந்தையை மீட்பதற்கான இடைவெளி இருப்பது தெரியும். இந்த சம்பவத்திலும் இடைவெளி இருந்திருந்தால் குழந்தையை மீட்டிருக்கலாம். சீனாவில் இருந்து இந்த தொழில்நுட்பத்தை கொண்டு வந்தாலும் இந்த சம்பவத்தில் குழந்தை சுஜித்தை மீட்பது சிரமம்.

மீட்புப் பணிகளுக்கிடையில் இந்த இக்கட்டான உங்களின் தனிப்பட்ட உணர்வு என்ன மாதிரி இருந்தது? அங்கு எத்தகைய சூழல் நிலவியது?

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அந்த இரவிலிருந்து நேற்றுவரை ஒன்றுமே சாப்பிடவில்லை. வேதனையை அனுபவித்தோம். சுஜித்தின் தாயின் வேதனை தாங்க முடியவில்லை. என்னுடைய 14-15 ஆண்டு உழைப்பு சுஜித்தை மீட்பதில் பலனளிக்காததில் வருத்தம்.

குழந்தையை மீட்க வேண்டும் என அனைவரும் போராடுகின்றனர். குழந்தையை உயிருடன் மீட்டு விட்டால் சந்தோஷம். அமைச்சர்களும் குழந்தையின் தாய்க்குரிய கவலையுடன் தான் இருக்கின்றனர். அமைச்சர்கள் என்ற ரீதியில் அமர்ந்திருக்கவில்லை. அமைச்சர்களும் சாப்பிடவில்லை. யார் வந்து, என்ன யோசனை தந்தாலும், அது நன்றாக இருந்தால் முயற்சிக்க அமைச்சர்கள் அனுமதி கொடுக்கின்றனர்.

அனைவரது யோசனைகளையும் சோதிப்பதிலேயே காலதாமதம் ஆவதாகவும், இதற்கான சரியான தொழில்நுட்பம் அரசிடம் இல்லை என்ற விமர்சனத்தையும் எப்படி பார்க்கிறீர்கள்?

தேசிய மீட்புத்துறையிடம் நவீன தொழில்நுட்பங்கள் இல்லை. கயிறு மட்டும்தான் இருந்தது. அதன் மூலம் தான் குழந்தையை மீட்க முயற்சித்தனர். அரசிடம் எந்தக்கருவியும் இல்லை. ஆழ்துளை கிணற்றில் உள்ள மண்ணை உறிஞ்சுவதற்கான தொழில்நுட்பம் கூட அரசிடம் இல்லை.

அதனைக் கண்டுபிடித்தால் தான் அடுத்த சம்பவங்களில் குழந்தையைக் காப்பாற்ற முடியும். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான விபத்துகள் நடக்கக் கூடாது என நினைக்கிறோம். ஆனால், அதனை மீறி மாதத்திற்கு ஒரு விபத்து இம்மாதிரி நடந்துகொண்டிருக்கின்றன.

இம்மாதிரியான இரு சம்பவங்கள் அடுத்தடுத்த நாட்களில் நடந்ததையெல்லாம் நானே எதிர்கொண்டிருக்கிறேன். நான் தயாரித்த கருவியை ஆராய்ச்சி செய்வதற்கு நவீனமாக்குவதற்கு உதவி செய்ய வேண்டும். அதன்பிறகு அக்கருவியை அரசாங்கம் வாங்கிக்கொள்ள வேண்டும்.

எந்த மாதிரியான சூழ்நிலையாக இருந்தாலும், குழந்தையை மீட்கக்கூடிய வகையிலான தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு அரசு பொருளாதார உதவி செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் தாண்டி கண்டுபிடித்த கருவிகளை பயன்படுத்தாத சூழல் ஏற்பட வேண்டும். இந்த உலகத்திலேயே பயன்படாத கருவி மணிகண்டன் கருவிதான் என்ற நிலை ஏற்பட வேண்டும். இதைத்தான் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். மீட்கும் கருவி இருக்கட்டும், ஆனால், அதனை பயன்படுத்தக்கூடாது.

தொடர்புக்கு: Nandhini.v@hindutamil.co.in

https://www.hindutamil.in/news/tamilnadu/522324-sujith-reduce-he-will-be-rescued-alive-manikandan.html

Link to comment
Share on other sites

21 hours ago, nedukkalapoovan said:

கடைசியில் இப்படி தான் மீட்டிருக்கிறார்கள். இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால்.. பிள்ளை உயிர் பிழைத்திருப்பான்.

குழந்தையின் உடலை மீட்கவில்லை, கையை மட்டும் தான் எடுத்தார்கள் என கூறுகிறார்கள். 

28 ஆம் திகதி அதிகாலையில் பகிர்ந்து வந்த வீடீயோ ஒன்றில் அங்கு நின்றிருந்த worker ஒருவர் குழந்தை இறந்து 18 மணி நேரத்துக்கு மேலாகுது, மீடியா சொல்வதை நம்பாதீர்கள் என கூறுகிறார். அந்த வீடியோ முதல் முதலாக எந்நேரம் பகிரப்பட்டது என தெரியவில்லை.

Link to comment
Share on other sites

 

ரஷ்யாவில் இரண்டு வயது சிறுமி ஆழமான குழிக்குள் விழுந்தாள். மீட்புப் படையினர் 17 வயது மெலிந்த பெண்ணைத் தலைகீழாக அந்தக் குழிக்குள் அனுப்பிக் குழந்தையை வெளியே இழுத்தனர். நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் ஒளிபரப்பிய இந்த வீடியோவைப் பாருங்கள். 👇

 

Link to comment
Share on other sites

சுஜித்தை நானே காப்பாற்றி இருப்பேன்… படிச்சு படிச்சு சொன்னோம், யாரும் கேட்கல – குமுறும் சிறுவன் மாதேஷ்

pixlr_20191028142237609.jpg?fit=1116%2C6
0SHARES
 

சிறுவன் சுஜித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருந்து, இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தான். செய்தியாளர் ஒருவர் அந்த சிறுவனிடம், இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று, அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று,

அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று,

அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது, எனது வீடு சுர்ஜித் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும் விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.

அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான். மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்ஜித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது, உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது.

ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம்.

ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.
சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆதாரம்: புதிய தலைமுறை, சத்தியம் டிவி

https://www.newsu.in/?p=3343&fbclid=IwAR280P5I1pvkeBRB_F5d6k5HE5Tsfl3P0yTX_wvjBhPD_DLmLKJh1hQuajc

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை தூக்கும் ரோபோட் போன்ற கருவியை தாயாரித்த மணிகண்டனிடம்

மணிகண்டன் என்ற இந்த தனிநபரின் முயற்சி பெரும் பாராட்டுக்கு உரியது.

அவர் தனது ஆள்துளைக் கிணற்றில் வீழ்ந்த தனது குழந்தையைக் காப்பாற்றியதோடு நின்றுவிடாமல் பலவருட முயற்சியில் பயனுள்ள ஒரு கருவியை வடிவமைத்து, அதனை மேலும் மேலும் செம்மையாக்கி வருகிறார்.

தமிழக அரசும், வல்லரசுக் கனவில் நித்தம் மிதக்கும் இந்திய ஹிந்திவெறி அரசும் ஆள்துளைக் கிணறு தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வக்கிலாதவை. ஊழலில் ஊறிப்போயுள்ள இவர்களால் கையூட்டுகளை வாங்கவும் மனிதகுல அழிவுக்கு துணைபோகவும் மட்டுமே முடிகின்றது என்பது இந்திய வரலாறு.

மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு தென்னிந்திய தொழிலதிபர்களை அழித்தொழிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. எயர்செல், ஸ்பைஸ்ஜெட், கிங்க்பிஷர் போன்ற பல தென்னிந்திய வர்த்தகங்கள் மூடப்படுவதற்கு அல்லது வட ஹிந்தியர்கள் கைகளுக்கு மாறுவதற்கு தேவையான அனைத்தையும் மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு செய்து முடித்திருந்தது.

ராஜாவை கைது செய்த மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு தற்போது வடஹிந்தியர்களுக்கு அடிமைச் சேவகம் செய்த சிதம்பரத்தின் மீதும் கைவைத்துள்ளது.

மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு இதுவரை எத்தனை வட ஹிந்தியர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது?

மோடியின் ஹிந்திவெறிக் காடையர்களின் அரசு இதுவரை எத்தனை வட ஹிந்திய பெரும் வர்த்தகர்களை கைது செய்துள்ளது?

Link to comment
Share on other sites

26 minutes ago, nunavilan said:

ஜேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை

இக் குழந்தை வீழ்ந்த செய்தி காதில் வீழ்ந்து அருகில் ஒரு குழியை / துளையை இடுகிறார்கள் என்று கேள்விப்பட்ட கணத்திலிருந்து எனது மனதிலும் ஓடிய எண்ணம் இதுதான்.

துளையிடும் கருவி அல்லது வாரும் இயந்திரங்களின் அதிர்வுகள் குழந்தையை மேலும் ஆழத்துக்கு தள்ளும் என்ற எண்ணம் தொடர்ந்தும் 2, 3 தினங்களாக மனதை குடைந்து கொண்டே இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அமைச்சர்கள்  பலரும் அந்த இடத்தில் நின்றிருந்தாலும்...
ஒரு அவசரமான நிலையில்....  தகுந்த முடிவை எடுப்பதில் தடுமாறி உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழக அமைச்சர்கள்  பலரும் அந்த இடத்தில் நின்றிருந்தாலும்...
ஒரு அவசரமான நிலையில்....  தகுந்த முடிவை எடுப்பதில் தடுமாறி உள்ளார்கள்.

அதுகளுக்கு எங்கிருக்கு படிப்பறிவு இல்லை பட்டறிவாவது இருக்கணும் இல்லை திறமையா உழல் செய்யவாவது தெரிந்து இருக்கணும் அதுவும் கிடையாது அடிமைகளா இருப்பது அதுகளுக்கு சுகம் .

Link to comment
Share on other sites

மிகவும் துயரத்தை கொடுத்த ஒரு நிகழ்வு. 😥 அதனால் எந்த திரியையும் எட்டிப் பார்க்க முடியவில்லை!

எனக்குத் தோன்றுவது என்னவென்றால், கைகள் மேலே தெரிந்தபோதே சுருக்கு கயிற்றை இறக்கி கைகளில் ஒன்றை சுருக்கிட்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் 20 அடியில் இருந்து எண்பது அடிகளுக்கு செல்லாமல் தடுத்திருக்கலாம்.

இரண்டாவதாக, குழியின் மேல் vacuum seal செய்து 1.0psi suction கொடுத்தால் குழந்தைக்கு சில கணங்கள் கடினமாக இருந்தாலும், சுற்றுச் சுவர்கள் இறுக்கம் தணிந்து மேலே இழுக்க வசதி ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து விரிவான செய்முறை வரைந்துதான் விளக்க முடியும்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

19 hours ago, இசைக்கலைஞன் said:

இது குறித்து விரிவான செய்முறை வரைந்துதான் விளக்க முடியும்.

விளக்கினால் நாங்களும் தெரிஞ்சுக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/29/2019 at 8:13 PM, nunavilan said:

 

ரஷ்யாவில் இரண்டு வயது சிறுமி ஆழமான குழிக்குள் விழுந்தாள். மீட்புப் படையினர் 17 வயது மெலிந்த பெண்ணைத் தலைகீழாக அந்தக் குழிக்குள் அனுப்பிக் குழந்தையை வெளியே இழுத்தனர். நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் ஒளிபரப்பிய இந்த வீடியோவைப் பாருங்கள். 👇

 

இதை அயல் வீட்டு பையன் தொழிலாகவே செய்து இருக்கிறான் ...
இவர்களுக்கு கஸ்டகாலம் .. அதுதான் இந்த நாதாரிகள் எல்லாம் வந்து எல்லாம்  போய்விட்டது 
அவர்களிடம் விட்டிருந்தால் நிற்சயம் மீட்டிருப்பார்கள் 

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

இதை அயல் வீட்டு பையன் தொழிலாகவே செய்து இருக்கிறான் ...
இவர்களுக்கு கஸ்டகாலம் .. அதுதான் இந்த நாதாரிகள் எல்லாம் வந்து எல்லாம்  போய்விட்டது 
அவர்களிடம் விட்டிருந்தால் நிற்சயம் மீட்டிருப்பார்கள் 

கிட்டத்தட்ட அப்பிள்ளையின் பெற்றோருக்கு 40 லட்சம் ரூபா நன் கொடையாக கிடைத்துள்ளதாம்.

திமுக - 10 லட்சம்
ஐஅதிமுக - 10 லட்சம்
தமிழக அரசு - 10 லட்சம்
காங்கிரஸ் - 3 லட்சம்
தேமுதிக - 1 லட்சம்
விசிக -20,000 ஆயிரம்
இப்படி இன்னும் பல கட்சிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் நிதியுதவி எல்லாத்தையும் சேர்த்தால் 40 லட்சத்திற்கு வரும் .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.