Jump to content

உடல் நலம் மற்றும் உணவுப் பழக்கம் பற்றி மனிதக் கழிவு மூலம் அறிவதென்ன?


Recommended Posts

ஆஸ்திரேலியா முழுக்க கழிவுநீரை ஆய்வு செய்ததில், பணவசதி உள்ளவர்கள் மற்றும் ஏழைகள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்ற வித்தியாசத்தைக் காண முடிந்தது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓர் ஆய்வகத்தில், வழக்கத்திற்கு மாறான சில சோதனைப் பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன: ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினருக்கு மேற்பட்டோரின் மனிதக் கழிவுகள் அங்கு சேமித்து, பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.

நாடு முழுவதிலும் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், உறைய வைக்கப்பட்டு இந்தப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

வேறுபட்ட சமூக வர்க்கத்தினரின் உணவுப் பழக்கங்களைப் பற்றி அறிவதற்கு உதவும், புதையல்களாக அவை கருதப்படுகின்றன. அவற்றை எல்லாம் சேகரிப்பதன் முக்கிய காரணம்?

ஆய்வாளர் ஜேக் ஓ'ப்ரையனும், பி.எச்டி மாணவர் பில் ச்சோய் என்பவரும், ஆஸ்திரேலியாவில் 2016இல் நடந்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது இந்த மாதிரிகளைச் சேகரித்தனர். இது மாதிரியான முதலாவது ஆய்வாக இது அமைந்துள்ளது.

வெவ்வேறு உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் பழக்கங்களை அறிவதற்காக ஆஸ்திரேலியா முழுக்க, பல தரப்பு மக்களின் கழிவுநீரை ஆய்வு செய்வது இதன் அடிப்படையாக உள்ளது. உயர் சமூக பொருளாதார தட்டு மக்களிடம் நார்ச்சத்து மிகுந்த, சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உண்ணுதல் மற்றும், காஃபி அருந்தும் உணவுப் பழக்கம் அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறைந்த சமூகப் பொருளாதார மக்கள் பகுதியில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட ரசாயன மருந்துகள் உபயோகம் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். சுருக்கமாகக் கூறினால், பொருளாதார நிலை உயர்வாக இருந்தால், அவர்களுடைய உணவுப் பழக்கம் ஆரோக்கியமானதாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த அனைத்து தகவல்களுமே அந்த மக்களின் மனிதக் கழிவுகளை ஆய்வு செய்ததன் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

 

நுகர்வுநிலை சிறு விளக்கம்

ஒரு சமுதாய மக்களின் உணவு மற்றும் ரசாயன மருந்து பயன்பாடு குறித்த தகவல்களை, அவர்களிடம் உருவாகும் கழிவுநீரை ஆய்வு செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று, வார்த்தை அளவில் சொல்லப்பட்ட விஷயத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது.

வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களை ஏறத்தாழ துல்லியமாக இந்த நடைமுறை மூலம் கண்டறிந்து விடலாம் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது பொது சுகாதாரத் துறைக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மக்களின் கழிவுநீரை ஆய்வு செய்து, அவர்களைப் பற்றிய தகவல்களைக் கண்டறிவது, கழிவுநீர் மூலம் நோய் கண்டறிதல் எனப்படுகிறது. இந்த நடைமுறை சுமார் இருபது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ஐரோப்பா, வட அமெரிக்க நாடுகளிலும், சட்டவிரோத மருந்து பயன்பாடு அதிகம் உள்ள பகுதிகளிலும் இது நடைமுறையில் உள்ளது. நிகோடின் போன்ற அனுமதிக்கப்பட்ட ரசாயன மருந்து உபயோகம் பற்றியும் ஆய்வுகள் நடந்துள்ளன.

நோய் தாக்குதல் உருவாதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கும் சில ஆராய்ச்சியாளர் குழுக்கள் இந்த வழிமுறையைப் பின்பற்றுகின்றன. ஆனால் உணவுப் பழக்கத்தைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் என்பது இதுவரை கருத்தாக்க நிலையில்தான் உள்ளது.

உணவுப் பழக்கம் மற்றும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட மருந்து பயன்பாட்டைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் ஏற்கெனவே நடைபெறும் நிலையில், குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் இவற்றின் சராசரி பயன்பாட்டு அளவை மதிப்பிடுவதற்கு கழிவுநீர் பகுப்பாய்வு நடைமுறை உபயோகமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரசாயன மருந்து பயன்பாடு அல்லது அவர்கள் என்ன உணவு உண்கிறார்கள் என்பது பற்றி ஆய்வு செய்தபோது, சில நேரங்களில் மக்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இருப்பது தெரிய வந்தது என்கிறார் ச்சோய்.

கழிவுநீர் பகுப்பாய்வு இரண்டு முக்கிய வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் ஓ'ப்ரையன். சமுதாயங்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அடையாளம் காண உதவும் என்பது முதலாவது விஷயம். காலப் போக்கில் அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்களை கண்காணிக்க உதவுவது இரண்டாவது விஷயம்.

 

காபி பொருள் தொடர்பு

எதை ஆய்வு செய்வது என்று சரியாகக் கண்டறிவது தான் முதலாவது சவால். கழிவுநீர் என்பது சிறுநீர் மற்றும் மலம் என்பதாக மட்டும் கிடையாது. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பொருட்கள், உணவுக் குப்பைகள், தொழிற்சாலை அல்லது வணிக ரீதியிலான பொருட்களின் கழிவுகளும் இதில் எடுத்துக் கொள்ளப்படும்.

மனித கழிவுகளை உருவாக்கும் குறிப்பிட்ட உணவு அல்லது பெரும்பகுதி உணவு என்பது குறித்த தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய வேண்டும்.

நார்ச்சத்து உணவு பயன்பாட்டைக் கண்டறிய இந்த ஆய்வில் இரண்டு அம்சங்கள் பயன்படுத்தப் படுகின்றன. தாவரங்கள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகள் சாப்பிடுவது என எடுத்துக் கொள்ளப்படுகிறது.

நார்ச்சத்துள்ள மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களை உண்பது ஆரோக்கியமான உணவுப் பழக்கமாகக் கருதப்படுகிறது.

இவை அனைத்திலும், அதிக சமூக பொருளாதார முன்னேற்றம் உள்ள மக்களிடம், இவற்றின் பயன்பாடு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் நார்ச்சத்து மற்றும் சிட்ரஸ் ஆகியவை அதிகம் காணப்பட்டன.

காஃபி பயன்பாடும் பண வசதி மிகுந்தவர்கள் பகுதியில் அதிகம் பயன்படுத்தப்படுவது கண்டறியப் பட்டுள்ளது. குறிப்பாக, அதிக வாடகை தருபவர்கள் வாழும் பகுதிகளில் இது காணப்பட்டது. மற்ற ஆய்வுகளும் இதே மாதிரி முடிவுகளை தெரிவித்துள்ளன.

இளநிலை பட்டம் அல்லது அதற்கு அதிகமான கல்வித் தகுதி உள்ளவர்கள் வாழும் பகுதிகளில் எஸ்பிரஸ்ஸோ அல்லது காஃபி சார்ந்த மற்ற பானங்களின் பயன்பாடு அதிகமாகக் காணப்பட்டது.

தினமும் ஒன்று அல்லது இரண்டு காஃபி குடிக்கும் பழக்கம், பண வசதி அதிகம் உள்ளவர்களிடம் இருக்கிறது என்பதை இந்த ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன என்று இதில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆஸ்திரேலியாவில் பணக்காரர்கள் மத்தியில் காஃபி சாப்பிடும் கலாசாரம் அதிகமாக உள்ளது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சமூகப் பொருளாதார அடிப்படையில் மற்றொரு புறத்தைப் பார்த்தால், டிரமடோல் (வலி நிவாரணி ஓபியாய்ட்), அடெனோலோல் (ரத்த அழுத்தத்துக்கான மருந்து) மற்றும் பிரெகாபாலின் (நரம்பு செயல்பாட்டு மருந்து) போன்ற ரசாயன மருந்துகளின் பயன்பாடு ஏழைகள் வாழும் பகுதிகளில் அதிகம் கண்டறியப்பட்டது.

இருந்தபோதிலும் கடைசி இரண்டு மருந்துகளும் வயதானவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில், குறைந்த வருவாய் உள்ளவர்கள் வாழும் பகுதிகளில் காணப்பட்டது. மற்ற வகையான வலி நிவாரணிகள், மருந்துகள், மன அழுத்தம் நீக்கும் மருந்துகள் அதிகம் ஒதுக்கப்பட்ட நிலைக்கு ஆளான மக்கள் வாழும் பகுதிகளில் கண்டறியப்பட்டது.

நேரடியாக பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் வாழும் பகுதிகளை ஒப்பிடுவது அதிர்ச்சிகரமான தகவலை வெளியிடலாம் என்று ச்சோய் கூறுகிறார். ''வெறுமனே புள்ளிவிவரங்களை மட்டும் பார்த்தால் - ஒரு சமுதாயத்தை, இன்னொரு சமுதாயத்துடன் ஒப்பிட்டால் நார்ச்சத்து விஷயத்தில் பல மடங்கு வித்தியாசத்தை உணரலாம்,'' என்கிறார் அவர்.

அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் இந்த ஆய்வை மீண்டும் நடத்த ஆராய்ச்சியாளர்கள் விரும்புகின்றனர். ஏதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அதன் மூலம் கண்டறிய அவர்கள் முயற்சிக்கின்றனர். மற்ற ஆராய்ச்சி வழிமுறைகளில் கண்டறியப்படாத விஷயங்கள் அல்லது இன்னும் அதிகமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை அறியலாம் என்று கருதுகின்றனர்.

உதாரணமாக, வெவ்வேறு சமூக, பொருளாதார குழுவினர் மத்தியில் நோய் எதிர்ப்பு மருந்துகள் பயன்பாடு ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது அரசின் மானியத்துடன் கூடிய சுகாதார சேவை திட்டம் நன்றாக செயல்படுகிறது என்பதை இது காட்டுகிறது.

எதிர்கால கணக்கெடுப்பில் இதில் மாற்றம் தெரிய வந்தால், சில தரப்பினர் இந்த மருந்துகளை ஏன் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதையும், சில தரப்பினர் இவற்றைப் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்டறிய ஆய்வு நடத்த வேண்டியிருக்கும்.

 

'நாடி அறிதல்'

உடல்நலத்தின் சமூகக் கட்டமைப்பு என்ற உலகளாவிய தத்துவத்தை உறுதி செய்வதாக இந்த ஆய்வு முடிவு அமைந்துள்ளது. உடல்நலத்துடன் தொடர்புடைய புகைபிடித்தல் அளவுகள் மற்றும் உடல் பருமன் குறைதல் போன்றவை ஒருவரின் சமூக, பொருளாதார அந்தஸ்துடன் இணைந்து மேம்படுகின்றன என்பதை பிரதிபலிப்பதாக உள்ளது.

தங்களுடைய நாட்டில் எல்லோரும் சமத்துவமாக வாழ்கிறார்கள் என்று ஆஸ்திரேலியர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாக, கழிவுநீர் ஆய்வறிக்கை தெரிவித்திருப்பது, முக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது.

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைவிட அதிக சமத்துவமான சமூகமாக ஆஸ்திரேலிய மக்கள் கருதப்பட்டாலும், 2018 அறிக்கையின்படி வருவாய் ஏற்றத்தாழ்வுகளில் ஓ.இ.சி.டி. சராசரியைவிட ஆஸ்திரேலியா உயர் நிலையில் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

வருவாய் அதிகமுள்ள முதல் 20% மக்கள்தொகையில் உள்ள ஆஸ்திரேலியர் ஒருவர், அடிமட்டத்தில் உள்ள ஐந்தில் ஒரு பகுதி மக்களைவிட, நிறைய உபரி வருமானம் கொண்டவராக இருக்கிறார். பொதுவாகக் கூறினால், அதிக பணம் இருந்தால், அழுகும் தன்மை உள்ள பழங்கள், காய்கறிகளை வாங்கும் சக்தி அதிகம் என்றும், அதிக கல்வி அறிவு என்பது ஊட்டச்சத்தான உணவுகள் பற்றிய புரிதல் அதிகமாக இருக்கும் என்பதும் அர்த்தமாகிறது.

காபி கடைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

வர்க்கம் மற்றும் உணவுப் பழக்கத்தின் தொடர்பில் குறிப்பிட்ட ஒரு விதிவிலக்கை இந்த ஆய்வு கண்டறிந்தது: ஆங்கிலம் பேசாத மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் நார்ச்சத்து மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது.

வகுப்பு மற்றும் உணவுப் பழக்கத்தின் தொடர்பில் குறிப்பிட்ட ஒரு விதிவிலக்கை இந்த ஆய்வு கண்டறிந்தது: குறைந்த சமூக பொருளாதார நிலையில் இருந்தாலும் ஆங்கிலம் பேசாத மக்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும் சிட்ரிக் அமிலம் உள்ள உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் அதிகமாக இருந்தது. நிரந்தர வசிப்பிடம் இல்லாதவர்களிடமும் அதிக காய்கறி உணவுகள் பாரம்பரிய உணவுப் பழக்கமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாக இது உள்ளது.

கழிவுநீர் பகுப்பாய்வை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதாக குயின்ஸ்லாந்து ஆய்வு ஆர்வத்தை தூண்டக் கூடியதாக உள்ளது என்று விக்டோரியா மாகாணத்தில் டீக்கின் பல்கலைக்கழகத்தில் நோய் தொற்று கண்டறிதல் துறையின் தலைவர் பேராசிரியர் கேத்தரின் பென்னட் கூறியுள்ளார்.

''அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டுள்ள நிலையில், நோய் பரவுதல் தொடர்பான சுற்றுச்சூழல் ஆய்வாக இது உள்ளது என்று நாங்கள் கூறுகிறோம். தனிப்பட்டவரின் தகவல்களை நாங்கள் பயன்படுத்தவில்லை, சேகரிக்கப்பட்ட பலருடைய தகவல்களைத்தான் பயன்படுத்தி இருக்கிறோம் என்பதை அந்த வார்த்தை குறிப்பிடுகிறது,'' என்கிறார் கேத்தரின்.

ஆஸ்திரேலியாவில் சிகரெட்களில் சாதாரண பேக்கேஜிங் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, கழிவுநீரில் நிகோடின் அளவு குறைந்திருப்பதை இதுபோன்ற ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது என்று அவர் தெரிவித்தார். ''புகைபிடிப்பவர்கள் அதன் அளவை குறைத்துக் கொண்டார்களா அல்லது அந்த மக்கள் மத்தியில் புகைபிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைவா என்பது தான் நமக்குத் தெரியாத விஷயமாக இருக்கும். இந்த சூழலியல் ஆய்வுகளில் நாம் எப்போதும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பரவலாகப் பார்க்கும் போது, இதற்கான காரண காரியங்களை உங்களால் விவாதிக்க முடியாது.''

இருந்தபோதிலும், சமீபத்திய உணவுப் பழக்கம் மற்றும் ரசாயன மருந்து ஆய்வைப் போன்ற, நிகோடின் ஆய்வுகளும் மற்ற ஆராய்ச்சிகளுடன் ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தப் பட்டுள்ளன. கழிவுநீர் ஆய்வு பரவலாக துல்லியமாக உள்ளது என்று காட்டுவதாக அவை உள்ளன. மக்களின் உடல்நலம் மற்றும் உணவுப் பழக்கங்களை கண்காணிக்க நேரடி வழிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் இது போன்ற ஆய்வுகள் துல்லியமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.

https://www.bbc.com/tamil/science-50144056

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.