Jump to content

அரசியலுக்கு வருவாரா ரஜினி: குழப்பிய தேர்தல் முடிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலுக்கு வருவாரா ரஜினி: குழப்பிய தேர்தல் முடிவு!

31.jpg

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அதிக ஆர்வத்துடன் காத்திருந்தவர் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வரப் போகிறேன் என்று அறிவித்து ஒன்றே முக்கால் வருடங்கள் கடந்த பிறகும் ரஜினி தனது கட்சியை ஆரம்பிப்பதற்கு இன்னும் பல்வேறு ஆலோசனைகளையும் வியூகங்களையும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். எடப்பாடி ஆட்சி முடிந்த மறு நொடியே ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அவரது தரப்பில் பலரும் இதுவரை சொல்லிவிட்டார்கள்.

 

இந்தச் சூழலில் இடைத் தேர்தல் முடிவுகளில் திமுக, அதிமுகவின் செல்வாக்கு குறித்து அறிய ஆவலாகக் காத்திருந்தார் ரஜினி. இந்த இடைத் தேர்தலின் மூலம் திமுகவின் வாக்கு வங்கி, அதிமுகவின் வாக்கு வங்கி ஆகியவை குறித்த ஒரு சாம்பிள் கிடைக்கும் என்பது ரஜினியின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் மூலம் ரஜினிக்குக் குழப்பமும் அதிர்ச்சியுமே அதிகமாகியிருப்பதாகச் சொல்கிறார்கள் ரஜினியோடு தொடர்புடைய அரசியல் ஆலோசகர்கள் வட்டாரத்தில்.

ரஜினியின் வருகை யாருக்கு பாதிப்பு?

ரஜினி புதுக்கட்சி ஆரம்பித்தால் அது திமுகவை பாதிக்குமா, அதிமுகவை பாதிக்குமா என்றொரு விவாதம் ஏற்கனவே ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தால் அதிமுக பலவீனடைந்துவிட்டது, எடப்பாடி - பன்னீர் - தினகரன் போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கு தொடர்பான சச்சரவுகளால் அதிமுகவின் வாக்கு வங்கி சிதறிவிடும்; எனவே ரஜினியின் வருகையால் அதிகம் பாதிக்கப்படுவது அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் திமுகவே என்பதே பலரின் கணிப்பாக இருந்தது. இதற்கு ஏற்றாற்போல் திமுகவுக்கும் ரஜினிக்குமான உரசல்களே அவ்வப்போது நடந்து வந்தன.

இடைத் தேர்தல் சொல்லும் செய்தி

நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தோற்று அதிமுக வென்றுவிட்டது என்பது பொதுவான தேர்தல் முடிவுகள். ஆனால், இந்த தேர்தல் மூலம் ரஜினி இன்னொரு தெளிவான செய்தியைப் புரிந்துகொண்டிருக்கிறார். அதாவது புதுக்கட்சி ஆரம்பித்து, பெருவாரியான வாக்குகளைப் பெறுவதற்குரிய வெற்றிடம் வாக்காளர்களிடம் இருக்கிறதா, இல்லையா என்பதற்கான பதில்தான் ரஜினிக்குக் கிடைத்திருக்கும் செய்தி.

திமுக தோற்றிருந்தாலும், அதன் வாக்கு பலம் குறையவில்லை. அதேபோல அதிமுக ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் தனது பாரம்பரிய வாக்குகளை இழந்துவிட்டது என்று சொல்வதும் தவறு. அதிமுகவின் பலம் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரையும்விட அவர்கள் மக்கள் மனத்தில் பதிய வைத்த இரட்டை இலையால்தான் நிலைபெற்றிருக்கிறது என்பதையும் உணர்த்தியிருக்கின்றன இந்த இடைத் தேர்தல் முடிவுகள்.

மூன்று தேர்தல்களும், முன்னேற்றக் கழகங்களும்!

பொதுவாகவே அரசியல் உலகில் தொடர்ந்து மூன்று தேர்தல்களில் ஒரு கட்சியின் பங்கேற்பு, பலன் அடைவு ஆகியவற்றைப் பொறுத்து அக்கட்சியின் பலத்தை, பலவீனத்தை முடிவு செய்யலாம். அதன்படி 2011, 2016, 2019 ஆகிய தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும் பெற்று வந்துள்ள வாக்குகளின் விவரங்களைப் பார்க்கலாம். விக்கிரவாண்டி, நாங்குநேரி இரு தொகுதிகளையுமே ஆய்வுக் களங்களாக எடுத்துக்கொண்டால் 2011 முதல் இன்று வரையான சுமார் எட்டு வருட தமிழக அரசியல் வாக்கு வங்கி நிலவரம் பற்றிய ஒரு புரிதல் சித்திரம் புலப்படுகிறது.

விக்கிரவாண்டியில் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக 63,759 வாக்குகள் பெற்றது. பதிவான வாக்குகளில் இது 41.93 சதவிகிதமாகும். அப்போது வெற்றிவாய்ப்பை இழந்த திமுக, அதே தொகுதியில் 2016 சட்டமன்றத் தேர்தலில் 63,757 வாக்குகளைப் பெற்று வென்றது. இது பதிவான வாக்குகளில் 35.69%.

 

இதே விக்கிரவாண்டியில் 2019 மே மாதம் விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் திமுக (அணி) பெற்ற வாக்குகள் 86,432. இது மொத்த வாக்குகளில் 46.84 சதவிகிதம். இப்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் 68,842 வாக்குகள் பெற்றுள்ளார். கூட்டணிக் கணக்குகள், அவ்வப்போதைய அரசியல் சூழல் ஆகியவற்றுக்கிடையில் திமுக இந்தத் தொகுதியில் 60,000 முதல் 86,000 வாக்குகளைத் தனது சராசரி வாக்கு வங்கியாக நிலையாகப் பெற்றிருக்கிறது

இதே விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக 2011ஆம் ஆண்டு தன் கூட்டணியில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை நிறுத்தியது. அதில் 78,856 ஓட்டுகளைப் பெற்றது அதிமுக கூட்டணி. 2016 தேர்தலில் அதிமுக தனியாக நின்று 58,845 வாக்குகள் பெற்றது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அணியில் நின்ற பாமக 74,819 வாக்குகளைப் பெற்றது. இப்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 1,13,766 வாக்குகளைப் பெற்றுள்ளது.

 

விக்கிரவாண்டியில் இப்படியென்றால் நாங்குநேரியிலும் திமுக, அதிமுக அணிகள் வெற்றி தோல்விகளைக் கடந்து தங்களது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ரஜினியின் இடம் இது?

இப்படி கடந்த பத்து வருட தமிழகத் தேர்தல் களத்தில் திமுக, அதிமுக அக்கட்சிகள் சார்ந்த கூட்டணிக் கட்சிகள் வெற்றி தோல்வியைக் கடந்து தங்களது இயல்பான வாக்கு வங்கியை இழக்கவே இல்லை. ஜெவின் மரணத்துக்குப் பின்னால் அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துவிட்டது என்று சொல்லப்பட்டதை இந்த இடைத் தேர்தலில் தவறென்று தன் இயல்பு பலத்தைப் பெற்று நிரூபித்திருக்கிறது அதிமுக. இந்த நிலையில் இன்னும் ஒரு வருடத்தில் ரஜினி களத்துக்கு வருவதன் மூலம் இந்த வாக்கு வங்கி வரைபடத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட சாத்தியக் கூறுகள் இல்லை என்பதே அரசியல் பார்வையாளர்களின் அனுமானம். அப்படி இந்த வாக்கு வங்கியில் மாற்றம் பெரிய அளவில் வராது என்றால், ரஜினி போட்டியிடுவதன் மூலம் ஓர் அதிர்வையோ, மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது என்பதுதானே எதார்த்தம்.

இடைத் தேர்தல் முடிவுகளின் மூலம் ரஜினியைக் குடைந்துகொண்டிருக்கும் கேள்வி இதுதான். ரஜினி அரசியல் களத்துக்கு ஏற்கெனவே வந்துவிட்டார். அவர் தேர்தல் களத்துக்குத்தான் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் ரஜினியின் வருகை முன்னேற்றக் கழகங்களின் வாக்கு வங்கிக்கு இடையே பெரிய சேதாரமல்ல... சிறிதளவு சேதாரத்தைக்கூட ஏற்படுத்த முடியுமா என்பதுதான் இந்த இடைத் தேர்தல்கள் வெற்றி தோல்வியைத் தாண்டி அரசியல் உலகத்துக்கு அளித்திருக்கும் கேள்வி. இந்த இரு தொகுதிகளிலும் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகள் தங்களது நிரந்தரமான வாக்கு வங்கியில் பெரிய அளவு இழப்பைச் சந்திக்கவில்லை என்பதுதான் ரஜினி அறிந்துகொண்ட உண்மை. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தொடர்ந்து தங்களது வாக்கு வங்கிகளை நிலைநிறுத்திக் கொண்டுவரும் நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவரது ஓட்டு வங்கி என்பது எங்கிருந்து எடுக்கப்படும் என்பதுதான் அந்தக் கேள்வி.

 

https://minnambalam.com/k/2019/10/27/31

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அரசியலுக்கு வருவாரா ரஜினி

இந்த வெண்ணை அரசியலுக்கு வந்தால் என்ன வாராட்டில் என்ன எல்லாம் ஒண்டுதான் 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
    • ஆஹா.... "கொல்லைப்புறம்". 😂 சிரித்து வயிறு நோகுது.  
    • அங்கே என்ன நடந்தது? 1. "ரேடாரில் மாட்டாமல் தாழப் பறக்கும் நுட்பத்தை முதலில் பயன்படுத்தியது இஸ்ரேல்" என்று நான் எழுதினேன் (கவனியுங்கள்: அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்). 2. நீங்கள் வந்து "ஜப்பான் காரர் இதை பேர்ள் ஹாபரில் செய்து விட்டார்கள், சொம்பு, முட்டு, பொங்கல், அவியல்" என்று குதித்தீர்கள். ஆதாரம் கேட்டேன், மௌனமாகப் போய் விட்டீர்கள் (ஏனெனின், ஜப்பான் காரன் கூட தான் இதைச் செய்ததாக எங்கும் சொல்லி நான் அறியவில்லை). 3. பின்னர் நான் ரேடாரில் ஜப்பான் விமானங்கள் தெரிந்தமை, ஏன் அமெரிக்கா தவற விட்டது என்று வரலாற்று நூல்களில் இருந்த தகவல்களைச் சொன்னேன். 4. இன்னொரு உறவு, விமானங்கள் ரேடாரில் தெரிந்ததை உறுதிப் படுத்தும் ஒரு ஆதாரப் பதிவை இணைத்தார் (கவனியுங்கள்: நீங்கள் எதுவும் இணைக்கவில்லை😎!) அதே ஆதாரத்தை , தாழப் பறந்து வந்து ஜப்பானியர் தாக்கியதன் ஆதாரமாக எனக்கு நீங்கள் சிவப்பெழுத்தில் கோடிட்டுக் காட்டியிருந்தீர்கள் (மீண்டும் கவனியுங்கள்: "ஆங்கிலம் ஒரு மொழியேயொழிய, அது அறிவல்ல!" - எங்கேயோ கேட்ட குரல்😎!) எனவே, இது வரை ஜப்பானியர் தாழப் பறந்து வந்து ரேடாரில் இருந்து தப்பினர் என்பதற்கு ஒரு ஆதாரமும் நீங்கள் தரவில்லை (இல்லாத ஆதாரத்தை எப்படித் தருவதாம்😂?).   இனி உங்கள் பிரச்சினைக்கு வருவோம்: நீங்கள் உட்பட யாழில் ஓரிருவரின் பிரச்சினை "மேற்கு எதிர்ப்பு" என்ற ஒரு உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம், அதை மறுக்க யாருக்கும் உரிமையில்லை. ஆனால், அந்த உணர்ச்சி மட்டுமே உலகத்தை, சம்பவங்களைப் புரிந்து கொள்ளப் போதாது. அப்படி உணர்ச்சி மட்டும் வைத்து "நாசா சந்திரனுக்குப் போகவில்லை" என்று கூட வாதாடும் நிலை இருக்கிறது பாருங்கள்? அந்த முட்டாள் தனத்தைத் தான் நான் சவாலுக்குட் படுத்துகிறேன். இனியும், தவறாமல் செய்வேன் - நீங்கள் சொம்போடு குறுக்கே மறுக்கே ஓடினாலும், நான் நிறுத்தாமல் செய்வேன்! ஏன் இப்படி சவலுக்குட்படுத்துவது முக்கியம்? இந்த மேற்கு எதிர்ப்பு உணர்ச்சி மயப் பட்டு, பொய்த்தகவல்களை உங்கள் போன்றோர் பரப்புவதால் மேற்கிற்கு ஒரு கீறலும் விழாது. ஆனால், எங்கள் தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக புலத் தமிழ் சமுதாயத்தில், இதனால் ஒரு முட்டாள் பரம்பரை உருவாகி வரும் ஆபத்து இருக்கிறது. எனவே, உங்கள் போன்றோரை அடிக்கடி இப்படிச் சவாலுக்குட்படுத்துதல் அவசியம். உங்களுக்கு முடிந்தால், இந்த சவால்களை ஆதாரங்களை இணைத்து எதிர் கொள்ளலாம். இல்லையேல் சொம்போடு நின்று விடலாம், இரண்டும் எனக்கு சௌகரியமே!
    • Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.   இதில் யாருக்கு விளக்கமில்லை?? இன்னுமொன்று புரிகிறதா? கூட்டுநாடுகள் இல்லையென்றால் இஸ்ரேல் பாடு அதோகதிதான்!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.