Jump to content

தீபாவளி பிறந்த கதை


Recommended Posts

பூமியை கவர்ந்து சென்ற இரண்யாட்சகன் என்ற அரக்கன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். (கடல் எங்கு இருந்த‍து என்று அறிவு பூர்வமாக  கேட்க கூடாது, கேட்டால் கடும் கோபம் வரும் எனக்கு)

ஆலிலைஇல் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) அவதாமெடுத்து பூமிக்குள் சென்று1000 வருடங்கள் போர் புரிந்த்து அந்த அசுரனை கொன்றதோடு அந்த பூமியை தனது கொம்பில் தாங்கி வந்தார்.

இதன் போது பூமாதேவியோடு விஷ்ணுவுக்கு ஏற்பட்ட ஸ்பரித‍த்தில் அதாவது உடலுறவில்   நரகாசுரன் என்ற அசுரன் பிறந்தான். (இது எப்படி சாத்திம் என்றும் கேட்க கூடாது)

அவன் தேவர்களையும் பூலோக மக்களையும் கொடுமை செய்தான். அவனது அட்டூழியங்களை பொறுக்க முடியாத பிரமா பெருமாளிடம் முறையீடு செய்தார். நரகாசுரன் தனது தாயை தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரத்தை பெற்றிருந்த்தான். அப்போது பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து கிருஜுனரை திருமணம் செய்திருந்தார்.கிரூஜஷ்னர் அவரை அழைத்துக்கொண்டு போருக்கு சென்றார். ஒரு கட்டத்தில் தரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையானவர் போல் நடித்தார். பதறிப்போன சத்திய பாமா தன் கணவரை காப்பார்ர தன் மகன் மீது அம்பு தொடுத்தார். நரகாசுரன் மாண்டான். அவனின் உயிர் துறப்பை எல்லா உலகங்களிலும் தீபம் ஏற்றி கொண்டாடுவதை அவள் பார்த்தாள்.  பெருமாளிடம்  தன் மகன்  இறந்த நாளை தீபாவளி என்றும் மகனின் பெயரால்  தரக சதுர்த்தி எனவும் கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்த்தால் எண்ணெய்  தேய்த்து குளிப்பது வழக்க‍ம்.

தீபாவளி பிறந்த கதையாக இந்து மத‍த்தின் பரப்புரைகளில் இதுவும் ஒன்று. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி யாருடையது? - ஜெயமோகன்

index

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை

index

 

அன்புள்ள சக்திவேல்,

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியலில் சிலவகையான துருவப்படுத்தல்கள் உருவாயின. முதலில் உருவானது பிராமணர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினர் என்ற துருவங்கள். அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து எல்லா அதிகாரங்களிலும் ஊடுருவியிருந்த பிராமணர்களுக்கு எதிராக அதிகார விருப்பு கொண்ட பிற உயர்சாதியினர் உருவாக்கிய அரசியல் உத்தி அது.

நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஆயிரம் வருடம் ஆண்டுவந்த பிராமணாரல்லா உயர்சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாக ஆரம்பித்த முதலாளித்துவத்தின் முன் அதை மெல்லமெல்ல இழக்க ஆரம்பித்தார்கள். இன்று பூரணமாக இழந்தும் விட்டார்கள். அதற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த கடைசி அரசியல் போராட்டமே பிராமணரல்லா இயக்கம்.பின்னர் அவ்வியக்கம் அன்று பொருளியல் பலத்துடன் உருவாகி வர ஆரம்பித்திருந்த பிற்படுத்தப்படுத்தபட்டோருக்கான இயக்கமாக ஆகியது. பிராமணர் – பிற்படுத்தப்பட்டோர் என்ற துருவப்படுத்தல் உருவாகி இன்றும் நீடிக்கிறது.

இந்த துருவப் படுத்தலுக்கான கருத்துத் தளமாக உருவாக்கப் பட்டதே ஆரிய- திராவிட வாதம். ஓரிரு கிறித்தவப் பாதிரிகளால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட அந்த வாதம் இன்றுவரை எந்த வகையான வரலாற்று ஆதாரமும் இல்லாத வெற்று ஊகம் மட்டுமே. அன்று விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கார் வரையிலான ஆய்வாளர்களால் அபத்தம் என முழுமையாகவே மறுக்கப்பட்ட ஒன்று அது. இன்று மார்க்ஸியநோக்குள்ள ஆய்வாளர்கள்கூட அதை ஏற்க தயங்குமளவுக்கு அது விரிவாகவே ஆய்வுத்தளத்தில் மறுக்கப்பட்டுவிட்டது.

அந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்னமும் எளிமையாக்கி பிராமணர்- திராவிடர் என்று பிரித்து அதனடிப்படையில் மொத்த தமிழ்ப்பண்பாட்டையே ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு கூறுகளாக உருவகித்துக்கொண்டார்கள். இந்த உருவகம் எந்தவகையிலும் வரலாற்று அடிப்படைகொண்டதல்ல. முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த ஒன்றே. ஆனால் சிறு வயது முதலே நாம் இதைக்கேட்டு வருவதனால் இதைப்பற்றி ஆராய்வதில்லை. இனிமேலாவது கொஞ்சம் தமிழுணர்வுடன், கொஞ்சம் வரலாற்று நோக்குடன் இவற்றையெல்லாம் நாம் பேச ஆரம்பிப்பது நல்லது.

எதிர்மறையாக மட்டுமே வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுவது, எதிரிகளை கண்டுபிடித்துப்பெருக்கிக் கொண்டே செல்வது, நம்மை தூய மேன்மையான மக்கள் ஆகவே ஒடுக்கப்பட்டோம் என சுயபரிதாபம் கொள்வது, அதை வன்மமாக ஆக்கிக்கொள்வது போன்றவை ஒருவகை மனநோய். சிந்தனையின் ஒருகட்டத்தில் அது நம்மை பீடிக்கிறது. ஏனென்றால் கருத்துலகாக நம்மைச்சூழ்ந்திருக்கும் எண்ணங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை

அவற்றை நம் பொதுப்புத்தியால், வரலாற்று அறிவால் வென்று மீண்டு வராதவரை நாம் இருப்பது அறியாமை இருளில். மிகையுணர்ச்சிகளின் சேற்றில்.நம் நுண்ணுணர்வு, தர்க்கத்திறன் அனைத்தும் அதில் வீணாகிவிடும். அப்படி அறிவுலகில் செயல்படுவது பெரும் நரகம்.

*

வரலாறு குறித்த ஒரு பொதுப்புரிதல் நமக்குத்தேவை. அது மானுடர் வாழ்வதற்காக நிகழ்த்திய பெரும் போராட்டத்தின் விளைவு. பல்வேறு மோதல்களும் தழுவல்களுமாக உருவாகி வந்த ஒன்று. கொடுத்தும் பெற்றும் உருவானவையே அனைத்துப் பண்பாட்டுருவங்களும். அது ஒரு சிக்கலான முரணியக்கம். அதை முழுக்கப்புரிந்துகொள்வதும் தீர்ப்புகளை அளிப்பதும் எவராலும் இயலாதது.நாம் அதை நாம் வாழும் களத்தில் இன்றையதேவை மற்றும் உணர்ச்சிகளைக்கொண்டே புரிந்துகொள்கிறோம்.

ஆகவே நாம் செய்யக்கூடுவது நாம் புரிந்துகொள்வதன் எல்லைகளைப் பற்றிக் கவனத்துடன் இருப்பதே. வரலாற்றைக்கொண்டு வெறுப்பையும் கசப்பையும் சமைத்துப்பரிமாறாமலிருப்பதே. காலப்பயணம் செய்து வரலாற்றை மாற்றியமைக்க எவராலும் இயலாது. கடந்துசென்ற வரலாற்றிலிருந்து ‘தூய’ சரடுகளை , இன மத மொழி பண்பாட்டுக்கூறுகளை இன்று பிரித்தெடுக்கவும் முடியாது. அவ்வாறு எண்ணுபவர்களைப் பேதைகள் என்றே சொல்வேன்

ஆனால் பேதைகள் பலசமயம் வெறுப்பைப் பரப்பி  நிகழ்காலத்தில் உள்ள வணிகப்போரின் கருவிகளாக ஆகி விடுவார்கள்.பேரழிவை உருவாக்குவார்கள். நாம் நமக்குச் சுற்றும் பார்க்கலாம். கீழைச்சமூகங்களில் ஒரு அறிவுஜீவிக்கும்பல் இனம், மொழி,மதம் என்னும் பெயரால் அழிவு அழிவு என்றே கோரிக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அழிவு வராமல் அவர்களால் அடங்கமுடியாது என்றே தோன்றுகிறது. இந்த ஒளித்திருநாளின் நாம் நம் உள்ளத்தில் ஒளியை ஏற்றிக்கொள்வோம்

*

பொதுவாக பண்டிகைகள் எவையுமே சட்டென்று உருவாவதில்லை. புதிதாக எவராலும் கொண்டு வரப்படுவதும் இல்லை. அவை ஏதோ ஒருவகையில் பழங்குடி வாழ்க்கையில் இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவற்றுக்கு ஆழ்மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் இருக்கும். பின்னர் அவை புராணக்கதைகளை உருவாக்கிக் கொள்ளும். தத்துவ விளக்கம் பெறும். பலவகையில் அவை மாறி வளர்ந்து சென்றுகொண்டே இருக்கும். எளிமையாக அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது

தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? பழங்குடி வாழ்க்கையையே பார்க்கலாம். குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க்காலங்களில் அந்த தீயசக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம்.

தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். பௌத்தச் சடங்குகளில் தீபவரிசை முக்கியமான ஒன்று. இன்றும் அது பௌத்தம் மருவிய வழிபாடுகளில் தாலப்பொலி என்றவடிவில் கேரளத்தில் நீடிக்கிறது.தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. [கொற்றவை நாவலில் விரிவான விளக்கம் உண்டு]. சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.சமணத்தில் அது வர்த்தமானர் மெய்மையை அடைந்த நாள். பௌத்தத்தில் அறிவொளித்திருநாள்.மாமன்னர் அசோகரால் அவ்வாறு கொண்டாடப்பட்டது.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது.   என் ஊகம் என்னவென்றால் பௌத்ததில் இவ்விழா பிரக்ஞாதாரா தேவியின் [அறிவொளித்தேவி.] பண்டிகையாக இருந்தது. அது சாக்தத்தில் நுழைந்தபோது நரகாசுரனை கொன்ற கொற்றவையின் பண்டிகையாக ஆகியது. தொல்தமிழ்தெய்வமான கொற்றவையின் இன்னொரு வடிவமே துர்க்காதேவி. கேரளத்து தேவிசிலைகளில் கொற்றவையின் துல்லியமான இலக்கணம் உள்ளது.

இருளரக்கனே நரகாசுரனாக ஆகியிருக்கலாம்.அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய நான்கு வெவ்வேறு தொன்மங்களும் அவன் தற்செயலாக உருவாகி எழுந்த ஒரு இயற்கையான அழிவுச்சக்தி என்றே உருவகிக்கின்றன.

உதாரணமாக வைணவத்தொன்மத்தின்படி திருமாலின் பன்றி அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை அழிவுசக்தி என உருவகிக்கும் வைணவம் தெய்வத்தின் மகன் என்றும் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பூமியிலிருந்து எழுந்தவன் என்பதும் குறியீட்டுரீதியாக முக்கியமானது. நோய் அல்லது பீடை குறித்த மிகத்தொன்மையான பழங்குடி உருவகத்தின் வைணவ இறையியல் விளக்கம் இது.பன்றியால் மண்ணிலிருந்து உருவாவது. ஆனால் வைணவம் அழிவையும் திருமாலின் லீலையாகக் கொள்வது. அந்தத்தத்துவமே இப்புராணமாக ஆகிவிட்டிருக்கிறது.

இத்தகைய விளக்கங்கள் கூட முன்னரே இருந்த தொன்மங்களுடன் இணைத்தே விரிவாக்கம் செய்யப்படும். ஏற்கனவே மகாபாரதத்தில் இருந்த ஒரு வரலாற்றுக்கதை நரகாசுரனுடையது. அவன் காமரூபத்தைச் சேர்ந்த பிரக்ஜ்யோதிஷம் என்னும் நாட்டை [இன்றைய அசாம்]ஆண்ட அசுரச்சக்ரவர்த்தி. அவனை கிருஷ்ணரும் சத்யபாமையும் கொன்றனர். அது இந்த தொன்மத்துடன் இணைந்தது. இவ்வாறுதான் தொன்மங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்கின்றன.

இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.

பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.மேற்குமலைப் பழங்குடிகள் கொண்டாடிய தீபத்திருநாள் இப்போது சபரிமலை அய்யப்பனின் மகரவிளக்கு விழாவாக உள்ளது என்று ஒரு கேரள ஆராய்ச்சி சொல்கிறது. அது மகரசங்க்ராந்தி என்றபேரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகை. சோழர்கள் காலத்தில் தமிழகத்தில் சாக்தர்கள் மட்டும் தீபாவளி கொண்டாடினார்கள். சைவர்கள் கார்த்திகையை.

உண்மையில் சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மாமன்னர் திருமலைநாயக்கர்தான் காரணம்.

ஆக, தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.

*

இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

ஜெ

====================

தீபாவளி மதங்களில்..

தீபாவளி

தீபாவளி – விடுதலையின் ஒளிநாள் 

தீபாவளி கடிதங்கள்

தீபாவளி:கடிதங்கள்


கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

நமது கைகளில்….

===================================

மறுபிரசுரம் / முதற்பிரசுரம்   Nov 4, 2010 @ 8:41

 

https://www.jeyamohan.in/9118#.XbWqZS-nxR4

Link to comment
Share on other sites

22 hours ago, கிருபன் said:

இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

அருமையான கட்டுரை. எனது எண்ணங்களைக் கிட்டத்தட்டப் பிரதிபலிக்கிறது. 

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கிருபன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கன் அசுரன் கதைகளை எல்லாம் நம்பும் அளவுக்கு இன்று உலகம் இல்லை.

இன்று கோவில்களில் கூட தீபம் தான் ஏற்றி தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அசுரனை வதைத்த இட்டுக்கதைகள் எல்லாம் இன்று எடுபடாது.

கிழக்கில் தீபாவளி.. கார்த்திகை விளக்கீடு.. போல் மேற்கில் ஹலோவின்.

மனிதர்கள்  இருளுக்கு அஞ்சும் குணமுடைய சிறப்பு விலங்குகளாவர். அவர்கள் இராக்காலப் பிராணிகள் அல்லர். நீண்ட இருள் சூழும்.. மாரிகாலத்தில் அந்த இருள் மீதான பயத்தை அகற்றி மனிதர்களிடம் இருக்கும் இருள் பீதியை விலக்க உருவானதே தீபத் திருநாள்.. தீபாவளி... என்பதுவே வெளிப்படை உண்மையாகத் தெரிகிறது.

ஆனால்.. ஒன்று.. தமிழ் சிவ பக்த மன்னனான.. இராவணனை அரக்கன் அசுரன் என்றது போல்.. போரில் வென்றவர்கள்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்பது போல்.. நாம் எமக்கான வரலாற்றை சரியாகப் பதிவிட்டு வைக்காவிடில்.. சந்ததிக்கு கடத்தா விடில்.. மே 18 ஓர் நாள்.. புதிய கொண்டாட்ட நாளாக மாறி நிற்கும்.

எமது தேசிய தலைவரும் மடிந்த மக்களும்.. அரக்கர்கள்.. அசுரர்கள் ஆக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 

ஏனெனில்.. போரில் வென்றாலும் எதிரியை மதிக்கும் பண்பு தமிழர்களிடம் இருந்தது போல்.. மற்றவர்களிடம் இல்லை. மற்றவர்கள்.. ஒரு வெற்றியை காட்டியே.. இன்னும் இன்னும் தமது வெற்றியைப் பற்றிய பிம்பத்தை அதிகரிப்பதை மட்டுமே செய்வர். காரணம்.. அவர்களின் பலவீனம்.. அந்த ஒரு வெற்றியால்... முற்றாக மூடிமறைக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வமாக இருப்பதால்.

இதுவே இராவணனுக்கும் நடந்திருக்கும்.. பிற அசுரர்.. அரக்கர் என்று வர்ணிக்கப்படுபவர்களுக்கும் நடந்திருக்கும். அன்று.. அதிகார சக்திகளை அரச பயங்கரவாதிகளை.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியோர்.. அசுரர்.. அரக்கர்.. இன்று அதுவே பயங்கரவாதிகள். 

Link to comment
Share on other sites

மூடத்தனமான கதைகளை பரப்பும் இந்து மதவாதிகள் அந்த மூடத‍்தனங்களை கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அந்த கதைகளை அப்படியே  மக்களுக்கும் திணிப்பார்கள். காதில் பூ சுற்றவார்கள். யாராவது என்னப்பா  என்னை முட்டாளாக்குகிறாய் என்று கேள்வி கேட்டால் மட்டும் த‍த்துவம், குறியீடு, உருவகம் என்று கதை விடுவாரகள். காலாகாலமாக நடைபெறுவது தான். ஆனால் நல்ல காலம் ஐரோப்பாவில் வாழும் எமது குழந்தைகளில் பெரும்பாலோனோர் இவ்வாறான மூட மத கல்வியை பயிலுவதில்லை. இந்த தலைமுறையில் பிறந்த நான் கேள்வி கேட்கும் போது இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம்.  அதனால் தான்அடுத்த தலைமுறைக்கும் மூடர்களை உற்பத்தி செயவதில் முனைப்புடன் உள்ளார்கள்.  

Link to comment
Share on other sites

18 hours ago, tulpen said:

மூடத்தனமான கதைகளை பரப்பும் இந்து மதவாதிகள் அந்த மூடத‍்தனங்களை கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அந்த கதைகளை அப்படியே  மக்களுக்கும் திணிப்பார்கள். காதில் பூ சுற்றவார்கள். யாராவது என்னப்பா  என்னை முட்டாளாக்குகிறாய் என்று கேள்வி கேட்டால் மட்டும் த‍த்துவம், குறியீடு, உருவகம் என்று கதை விடுவாரகள். 

தத்துவம், குறியீடு, உருவகம் போன்றவை இந்து மதத்தில் சாதாரணமாக உள்ளவை தான். புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல. காலம் காலமாக அதைப் பின்பற்றுவோரின் நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவை. அந்த நம்பிக்கையை அரைவேக்காட்டுத் தனமான அறிவுடன் அதை நம்பாதோர் கேள்வி கேட்க அதற்கான விளக்கத்தை மத நம்பிக்கையாளர்கள் கொடுப்பது மதவாதம் ஆகாது. 

இங்கு கிருபன் இணைத்த கட்டுரையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்காக் கொடுக்கப்பட்ட விளக்கமும் அப்படியே. 

Link to comment
Share on other sites

19 hours ago, tulpen said:

ஆனால் நல்ல காலம் ஐரோப்பாவில் வாழும் எமது குழந்தைகளில் பெரும்பாலோனோர் இவ்வாறான மூட மத கல்வியை பயிலுவதில்லை. இந்த தலைமுறையில் பிறந்த நான் கேள்வி கேட்கும் போது இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம். 

ஒரு மத நம்பிக்கையானது அதைப் பின்பற்றும் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது. பண்டிகைகளோ, மதச் சடங்குகளோ, வழிபாடுகளோ அவர்களின் வாழ்வைச் செழுமைப்படுத்துவதாக அவர்கள் உணர்ந்தே அதைத் தொடர்கிறார்கள்.

ஒருவர் ஐரோப்பாவில், அமெரிக்காவில், அவுஸ்திரேலியாவில் பிறத்ததற்காகவோ / வசிப்பதற்காகவோ அந்த மதத்தைப் பின் தொடராதது அவரது இஷ்டம். அவரின் தனிப்பட்ட கொள்கை. ஆனால், அவர் மற்றவர்களின் நம்பிக்கையை முட்டாள்தனம் என்றும், மதவாதம் என்றும் போலியாகச் சித்தரித்து பொதுவெளியில் எழுதுவது சரியாகப்படவில்லை. 

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சிலருக்கு ஒரு மதம் மீதான நம்பிக்கை இல்லாதபடியால், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசிப்போரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறே, புலம்பெயர் நாடுகளில் மதநம்பிக்கையை உள்ளவர்களும் அதை மூடநம்பிக்கையுடன் தான் தொடர்கிறார்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. இது அவர்களின் வாழ்வியல் உரிமை. 

அவர்களின் வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்க்க முடியாது. எனவே, அவர்களின் மதநம்பிக்கையைையும் மூடநம்பிக்கையாகச் சித்தரிக்க முடியாது. ஒரு நம்பிக்கையைப் பின்பற்றாமைக்கும், அதை மூடநம்பிக்கை என்று முத்திரை குத்த முனைவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. பின்பற்றாமை உங்கள் உரிமை. ஆனால் அதை தவறாக முத்திரை குத்துதல் உங்கள் உரிமை அல்ல.

இது வீணான அவதூறாகும். அறிவியலில் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் பொதுவாக மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதை நாகரீகமற்ற ஒன்றாகக் கருதுவதுடன், மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பார்கள். உங்கள் கருத்துக்கள் இதற்கு முரணானதாக உள்ளன.

Link to comment
Share on other sites

19 hours ago, tulpen said:

இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம்.  அதனால் தான்அடுத்த தலைமுறைக்கும் மூடர்களை உற்பத்தி செயவதில் முனைப்புடன் உள்ளார்கள்.  

அடுத்த தலைமுறை என்பது பரந்த மக்கள் தொகையைக் குறிக்கும். பொதுமைப்படுத்திக் கூறமுடியாது. தமது குழந்தைகளுக்கு உரிய முறையில் தம் பண்பாடு, கலாச்சாரங்களைச் சொல்லிக்கொடுக்கும் பெற்றோர், பாட்டன், பாட்டிமார், ஆசிரியர்கள், ஆன்மீகத்தலைவர்கள் இதில் நிச்சயம் வெற்றி பெறுவர்.

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள் இந்தியா, இலங்கை உள்ளடங்கிய கீழைத்தேய நாடுகளுக்கு ஆன்மீகத் தேடலை நோக்கிய பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். நமது தியானப் பயிற்சி மீதான ஆர்வம் ஒரு சிறு உதாரணம் தான். 

நமது பண்பாடு, கலாச்சார விழுமியங்களை மறந்த எமது மக்களில் சிலரும் இவ்வாறான தேடலை மேற்கொள்ளும் காலம் ஒருநாள் வருவது உறுதி. 😊

Link to comment
Share on other sites

பண்டிகைகள் தொடர்பாக இந்து மத‍ம் மக்கள் மீது திணித்த அபத்த‍மான எண்ணிலடங்கா மூடத்தனங்கள் குறித்தான ஜதார்த்தமான கேள்விகளுக்கு நேரடியாக தெளிவான பதிலை வழங்கள முடியாத‍தால் வழமை போல் சுற்றி வளைத்து மழுப்பலான குழப்பமான பதில்கள் தரப்பட்டுள்ளன.  தீபாவளி என்ற பண்டிகைக்கான அர்த்த‍ம் என்ன என்றால்  மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக விளக்குகள் ஏற்றுவதன் மூலம் புத்துணர்ச்சியை ஏற்பத்துவதற்காக அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது வாழ்வியலில் இவ்வாறான பண்டிகளைகளை கொண்டாடி இருக்கலாம். ஆனால் இதை  தன்னுள்ளே அபகரிக்க நினைத்த இந்து மதம் நரகாசுரன் என்ற அறிவிலித்தனமாக கதையை மக்கள் மத்தியில் பரப்பியது.  கிரூஷனரின் வராக அவதாரம் நடந்த‍தாக அவர்களால் கூறப்பட்ட அவர்களின் கூற்றுபடி திரேதாயுகத்தில் (1296000 ஆண்டுகள்)பூமாதேவியுடனான கிருஷ்னரின் உறவில் பிறந்த நரகாசுனை கிருஷ்னர் துவாபர யுகத்தில் வதம் செய்த‍தாக கூறப்பட்டது  . திரேதா யுகத்தில் பிறந்த நரகாசுரன்  1296000 ஆண்டுகள் கடந்து துவாபர யுகதில் வாழ்ந்தானா இவை எல்லாம் பொய்கள் புரட்டுகள் தானே என்று கூறினால் அந்த பொய்களை ஒத்துகொள்ள திராணி இல்லாமல் த‍த்துவம், உருவகம் என்று பித்தலாட்டம் வேறு.  பொய் கதையை உருவாக்கும் போது கூட படு முட்டாள்தனமாக  உருவாக்கியுள்ளார்கள். அந்த‍ளவுக்கு மக்களை முட்டாள்களாக பல காலம் வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இம்மூடக்கதைகள் எல்லாம் இன்றும் கோவில்களில் பிரசங்கங்ககளில் கூறப்படுகின்றன. (இம்முறை 2019  தீபாவளியில் கூட இங்கு கோவில்களில் இக்கதை இந்து பிரசங்கிகளால் கூறப்பட்டது. கோலிலில் கேள்வி கேட்க ஆளில்லாத‍தால் தததுவம் உருவகம் என்று  பீலா விடாமல் அது நடந்த வரலாறாகவே கூறப்பட்டடது)

அதைவிட  வரலாற்றை மட்டுமல்ல சொந்த நாட்டையே தொலைத்துவிட்ட ஒரு இனத்தில் இருந்து கொண்டு ஐரோப்பியர்கள் மனித வாழ்க்கைகான அர்த்த‍தை தொலைத்துவிட்டார்கள் என்று கொமடி வேறு.  ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு மேற்கில் இருந்து கிழக்கு வரை  ஒரு முறை சென்று பார்த்தால் தெரியும் எவ்வாறு தமது நாடுகளின் வரலாற்றை பேணி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றும்.  எல்லா நாடுகளிலும் கிறீஸ்தவம் பரவி இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தனி வித்தியாசமான கலாச்சாரத்தை காண முடியும். அவை கிறிஸ்தவ மத‍த்துடன் தொடர்பு பட்டவை அல்ல. மக்களின் வரலாற்று வாழ்வியலை கூறும் கலாச்சாரமாக இருக்கும். மத‍ம் என்பது அவர்கள் வரலாற்றிலும் கலாச்சாரத்திலும்  ஒரு சிறு பகுதியாகவே இருக்கும். 

அதை விட ஐரோப்பிய கிராமங்களில் பழைய காலத்தது மூட கதைகள் நிலவி வந்திருந்தால் அதை இன்று பாடசாலைகளில் அப்போதைய மக்கள் அந்த காலத்து அறிவுக்கு ஏற்ப அப்படி நம்பினார்கள் அது ஒன்றும் உண்மை இல்லை என்று வெளிப்படையாக படிப்பிப்பார்கள். எது வரலாறு எது பழைய மக்கள் நம்பிய புராணங்கள் என்று தெளிவாக கற்பிப்பார்கள். முன்னோர்களின் மூட புராணங்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இந்து மதவாதிகள் போல மூட புராணங்களை உண்மையில் நடந்த வரலாறு  போல் தமது சந்த‍தியினரின் காதில் பூசுற்ற மாட்டார்கள். 

மூடத்தனங்களை  மூடத்தனம் என்று பொது வெளியில்  சொல்வது என்றும் என்றும் தவறாகாது. அது மற்றவர்களை அவமதிப்பதாகாது. அவை ஏன் மூடத‍்தனங்கள்  என்று காரணங்களோடு தெளிவாக தான் கூறுகிறோம். இனியும் கூறுவோம். எவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் தலையிட வில்லை. 

Link to comment
Share on other sites

மத தத்துவங்களில் ஒன்று இது மிக முக்கியமானது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, tulpen said:

மத தத்துவங்களில் ஒன்று இது மிக முக்கியமானது. 

 

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

ம்... கனி இருக்கக் காய் கவர்ந்தற்று

நல்ல நிறைய விஷயங்கள் இருக்கும் போது கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதால் யாழ் களமும் குப்பைத்தொட்டியாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

 

இந்த வீடியோவில் இருப்பவர்கள், கழிசடைகளா?

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

குமாரசாமி

 நீங்கள் கூறிய அந்த கழிசடைகள்  சொன்ன கருத்துகளுக்காகவும் தத்துவங்களுக்காகவும் இக்காணொளி இங்கு இணைக்கப்படவில்லை.  அந்த கழிசடைகள் ஆன்மீகம்  என்ற போர்வையில் எப்படி மக்களை ஏமாற்றும் அயோக்கியரகளாக உள்ளர்கள் என்பதை  வெளிக்கொண்டு வரவே அது இணைகப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

ம்... கனி இருக்கக் காய் கவர்ந்தற்று

நல்ல நிறைய விஷயங்கள் இருக்கும் போது கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதால் யாழ் களமும் குப்பைத்தொட்டியாகிறது.

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

அருமையான கருத்து.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2019 at 6:06 AM, மல்லிகை வாசம் said:

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள்

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

சிறப்பான உவமானம். 😊

 

****
 

Link to comment
Share on other sites

On 10/30/2019 at 7:06 AM, மல்லிகை வாசம் said:

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள் 

 

11 minutes ago, Kadancha said:

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

அகதிகளாக மேற்குலகுக்கு வந்த பல லட்சக்கணக்கான எமது மக்களை வரவேற்று உண்ண உணவு இருப்பிடம், மருத்துவம் ஆகியவற்றை கொடுத்து வேலை வாய்பபுகளை கொடுத்து, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு கல்வியையும் கொடுத்து,  அவர்கள் இங்கு நலமாக வாழ வழி செய்த மேற்குலக மக்களின் வாழவின்  அர்த்தத்தை தான் அவர் இங்கு குறிப்பிடுகிறார்.  

 இந்து தர்மமும் இந்து தத்துவமும் கோலோச்சும்  நாடான  இந்தியாவுக்கு அகதிகளாக  சென்ற எமது மக்கள் இன்றும் அப்படியே உயர்கல்விகூட மறுக்கப்பட்ட அடிமைகள் போல் அங்கு வறுமையில்்வாடுகின்றார்கள்.  அது தான் இவர்கள் கூறும்  இந்து தத்துவங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

 அந்த கழிசடைகள் ஆன்மீகம்  என்ற போர்வையில் எப்படி மக்களை ஏமாற்றும் அயோக்கியரகளாக உள்ளர்கள் என்பதை  வெளிக்கொண்டு வரவே அது இணைகப்பட்டுள்ளது. 

மக்கள் போடும் தர்மப் பிச்சையில் கார் வாங்கி ஓடலாம் என்று சரிகாண்கின்றனர் - வீடியோவில் இருப்பவர்கள்.

இவர்களை கழிசடைகள் என்று சொல்கிறார், மிஸ்டர் துல்பன்.

இப்படி சொல்வது தப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அகதிகளாக மேற்குலகுக்கு வந்த பல லட்சக்கணக்கான எமது மக்களை வரவேற்று

எல்லா நாடுகளும் வரவேற்றன என்று சொல்லமுடியாது. அந்தந்த நாடுகளின் சகிப்பு தன்மைக்கு ஏற்றவாறு, எம்மை சகித்து (அதில் உபசரிப்பும் அடக்கம்) கொண்டார்கள்  என்பதே உண்மை.      

பிரித்தானிய, குறிப்பாக எம்மை சகித்துக்கொண்டதின் காரணம் வரவேற்றல் இல்லை, எமது போராடும் மனித வலு குன்றி, சொறி சிங்களம் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்கவதற்கு ஓர் இடை வெளி ஏற்றப்படுத்தப்படும் என்ற நோக்கில்.

பிரித்தானியாவின்,  ஆட்சிக்கலை மற்றும் ராஜ, ராணுவ தந்திர செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது உள்ளதால், அந்த நாடுகள் 'எம்மை வரவேற்றது' என்பதாக காட்டிக்கொண்டதில் பிரித்தானியாவின் செல்வாக்கின் பங்கும் உள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

Link to comment
Share on other sites

59 minutes ago, Kadancha said:

எல்லா நாடுகளும் வரவேற்றன என்று சொல்லமுடியாது. அந்தந்த நாடுகளின் சகிப்பு தன்மைக்கு ஏற்றவாறு, எம்மை சகித்து (அதில் உபசரிப்பும் அடக்கம்) கொண்டார்கள்  என்பதே உண்மை.      

பிரித்தானிய, குறிப்பாக எம்மை சகித்துக்கொண்டதின் காரணம் வரவேற்றல் இல்லை, எமது போராடும் மனித வலு குன்றி, சொறி சிங்களம் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்கவதற்கு ஓர் இடை வெளி ஏற்றப்படுத்தப்படும் என்ற நோக்கில்.

பிரித்தானியாவின்,  ஆட்சிக்கலை மற்றும் ராஜ, ராணுவ தந்திர செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது உள்ளதால், அந்த நாடுகள் 'எம்மை வரவேற்றது' என்பதாக காட்டிக்கொண்டதில் பிரித்தானியாவின் செல்வாக்கின் பங்கும் உள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

கடஞ்சா பிரித்தானியாவின. அரசியல் குறித்து நான் குறிப்பிடவில்லை. மேற்கு நாடுகளுக்கு வந்த எமக்கு கலவியை அவர்கள் மறுக்கவில்லை. இந்து தர்மம் என்று சிலர் பெருமைப்படும் இந்தியாவில்  எமது பிள்ளைகளுக்கு கல்வியும்  மறுக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

மேற்கு நாடுகளுக்கு வந்த எமக்கு கலவியை அவர்கள் மறுக்கவில்லை. இந்து தர்மம் என்று சிலர் பெருமைப்படும் இந்தியாவில்  எமது பிள்ளைகளுக்கு கல்வியும்  மறுக்கப்பட்டது. 

இதை மறுக்கவில்லை. ஆயினும், இந்த உரிமைகள் , மற்றும் சலுகைகள் என்பதை அவர்களால் தடுக்க முடியாமல் இருந்தது, அவர்களின் உள்ளாட்சி கட்டமைப்பில் independent  institutions என்று இருந்த படியால்.

மற்றும் படி, மேற்கு நாடுகள் எம்மை உழவார அனுமதித்ததின் அடிப்படை காரணம் அவர்களின் நலன்களின் அடிப்படையில்.  

Link to comment
Share on other sites

47 minutes ago, Kadancha said:

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

என்ன தான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேறியவர்கள் என்று மேலைநாட்டு மக்கள் சொல்லிக்கொண்டாலும், பல மேலைநாட்டு மக்களின் மனங்களில் வாழ்க்கையின் அர்த்தத்துக்கான தேடல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார வசதி, தனி மனித சுதந்திரம் இவற்றைச் சாதித்துக் கொண்ட அவர்கள் இவற்றுக்கும் மேலேயும் அடைய வேண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்து அதைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இவர்களை meditation, yoga, இந்தியா போன்ற நாடுகளுக்கான wellness tour போன்றவற்றில் நாட்டம் கொள்ள வைக்கிறது. 

இது மிகச் சுருக்கமான விளக்கம் தான். மனித உளவியல் ரீதியாகவும் நோக்கலாம். மேலை நாட்டு self-help புத்தகங்களை வாசித்த போது எவ்வளவு தூரம் அவர்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தொலைத்திருப்பர் என்று புரிந்தது (உதாரணமாக The 7 Habits of Highly Effective People என்ற புத்தகம்).

இப்படியானவர்களை நாம் வேலைத்தளம், meditation session போன்ற இடங்களில் சந்தித்திருப்போம். சிலர் வெளிப்படையாக இவற்றை எல்லாம் உரையாடுவார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கும் ஆட்கள் இல்லயே என்ற ஏக்கம் அவர்கள் பேச்சில் தென்படும்.

இன்னும் விரிவாகப் பலதை எழுதலாம். இப்போதைக்குச் சுருக்கமாக முடிக்கிறேன்.

11 minutes ago, Kadancha said:

மற்றும் படி, மேற்கு நாடுகள் எம்மை உழவார அனுமதித்ததின் அடிப்படை காரணம் அவர்களின் நலன்களின் அடிப்படையில்.  

நமது கடின உழைப்பு, சில குறிப்பிட்ட துறைகளில் எம்மவர்களின் வேலைத் திறன் போன்றவற்றைக் கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, மல்லிகை வாசம் said:

என்ன தான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேறியவர்கள் என்று மேலைநாட்டு மக்கள் சொல்லிக்கொண்டாலும், பல மேலைநாட்டு மக்களின் மனங்களில் வாழ்க்கையின் அர்த்தத்துக்கான தேடல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார வசதி, தனி மனித சுதந்திரம் இவற்றைச் சாதித்துக் கொண்ட அவர்கள் இவற்றுக்கும் மேலேயும் அடைய வேண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்து அதைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இவர்களை meditation, yoga, இந்தியா போன்ற நாடுகளுக்கான wellness tour போன்றவற்றில் நாட்டம் கொள்ள வைக்கிறது. 

 

உலகில் உள்ள எந்த இன, மத மக்களும், வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைக்கவில்லை.

மக்கள் எதை விரும்புகிறார்களோ, அவைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்தி பழகிக்கொள்கிறார்கள்.

மேலைத்தேய  மக்களோ, கீழைத்தேய மக்களோ வாழ்க்கையை உணர்ந்துதான் வாழ்கிறார்கள்.

Meditation, Yoga போன்றவற்றை இலங்கை, இந்தியாவில் உள்ள இந்து மக்களே அதை பின்பற்றுவதில்லை.

மேலைத்தேய மக்கள்,  Meditation, Yoga இன்மையால்,  வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைத்து விட்டார்கள் என்று சுருக்கிக்கொள்வது, நகைப்பிற்கு இடமானது.  

ஒருவரது அல்லது ஒரு மதத்தின், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளை மேலைத்தேய மக்கள் பின்பற்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டவர்கள் என்று சொல்வது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.