Jump to content

தீபாவளி பிறந்த கதை


Recommended Posts

பூமியை கவர்ந்து சென்ற இரண்யாட்சகன் என்ற அரக்கன் அதனை கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். (கடல் எங்கு இருந்த‍து என்று அறிவு பூர்வமாக  கேட்க கூடாது, கேட்டால் கடும் கோபம் வரும் எனக்கு)

ஆலிலைஇல் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) அவதாமெடுத்து பூமிக்குள் சென்று1000 வருடங்கள் போர் புரிந்த்து அந்த அசுரனை கொன்றதோடு அந்த பூமியை தனது கொம்பில் தாங்கி வந்தார்.

இதன் போது பூமாதேவியோடு விஷ்ணுவுக்கு ஏற்பட்ட ஸ்பரித‍த்தில் அதாவது உடலுறவில்   நரகாசுரன் என்ற அசுரன் பிறந்தான். (இது எப்படி சாத்திம் என்றும் கேட்க கூடாது)

அவன் தேவர்களையும் பூலோக மக்களையும் கொடுமை செய்தான். அவனது அட்டூழியங்களை பொறுக்க முடியாத பிரமா பெருமாளிடம் முறையீடு செய்தார். நரகாசுரன் தனது தாயை தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் நேரக்கூடாது என்று வரத்தை பெற்றிருந்த்தான். அப்போது பூமாதேவி சத்தியபாமாவாக பிறந்து கிருஜுனரை திருமணம் செய்திருந்தார்.கிரூஜஷ்னர் அவரை அழைத்துக்கொண்டு போருக்கு சென்றார். ஒரு கட்டத்தில் தரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையானவர் போல் நடித்தார். பதறிப்போன சத்திய பாமா தன் கணவரை காப்பார்ர தன் மகன் மீது அம்பு தொடுத்தார். நரகாசுரன் மாண்டான். அவனின் உயிர் துறப்பை எல்லா உலகங்களிலும் தீபம் ஏற்றி கொண்டாடுவதை அவள் பார்த்தாள்.  பெருமாளிடம்  தன் மகன்  இறந்த நாளை தீபாவளி என்றும் மகனின் பெயரால்  தரக சதுர்த்தி எனவும் கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்த்தால் எண்ணெய்  தேய்த்து குளிப்பது வழக்க‍ம்.

தீபாவளி பிறந்த கதையாக இந்து மத‍த்தின் பரப்புரைகளில் இதுவும் ஒன்று. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி யாருடையது? - ஜெயமோகன்

index

அன்புள்ள ஜெ

நலமா? இந்திய மரபு, ஆன்மிக சிந்தனைகள், தத்துவங்கள் என உங்களின் பல தரவுகளை படித்து இருக்கிறேன், படித்தும் வருகிறேன். வெகு நாட்களாக மன ஆழத்தில் இருக்கும் கேள்வி இது, ‘தீபாவளி’ தமிழர் பண்டிகை இல்லையா? இது வட நாடு சென்று தென் நாடு மீண்ட ஒரு பண்டிகையா உண்மையில்? நமது தீப ஒளி பண்டிகையான ‘கார்த்திகை’ தீபத் திருவிழாவின் வட நாட்டு வடிவமா? நரகன் என்பவனே , தேவ அசுர மோதல்கள் என புனையப்படும் ஆரிய திராவிட இன குழுக்களின் மோதல்களில் திராவிட இனச் சார்பாக நின்ற மாவீரனின் படிமமா? நமது இன அழிப்பை (தொன்ம வரலாறு அல்லது புராணத்தின் படி) நாமே கொண்டாடும் ஒரு இழிவான பண்டிகையா? அனைத்துக்கும் மேலாக, ஒருவனது இறப்பை நாம் கொண்டாடலாமா? நாம் பண்பட்டவர்கள் இல்லையா? என்றும் எனக்குள்ளும் எனக்கு வெளியேயும் கேள்விகள் பல, விடை தேடி உங்களிடம் மீண்டும் நான்.

அன்புடன்
சக்திவேல், சென்னை

index

 

அன்புள்ள சக்திவேல்,

பல வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தின் அரசியலில் சிலவகையான துருவப்படுத்தல்கள் உருவாயின. முதலில் உருவானது பிராமணர்கள் பிராமணரல்லாத உயர்சாதியினர் என்ற துருவங்கள். அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து எல்லா அதிகாரங்களிலும் ஊடுருவியிருந்த பிராமணர்களுக்கு எதிராக அதிகார விருப்பு கொண்ட பிற உயர்சாதியினர் உருவாக்கிய அரசியல் உத்தி அது.

நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை ஆயிரம் வருடம் ஆண்டுவந்த பிராமணாரல்லா உயர்சாதியினர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அறிமுகமாக ஆரம்பித்த முதலாளித்துவத்தின் முன் அதை மெல்லமெல்ல இழக்க ஆரம்பித்தார்கள். இன்று பூரணமாக இழந்தும் விட்டார்கள். அதற்கு எதிராக அவர்கள் முன்னெடுத்த கடைசி அரசியல் போராட்டமே பிராமணரல்லா இயக்கம்.பின்னர் அவ்வியக்கம் அன்று பொருளியல் பலத்துடன் உருவாகி வர ஆரம்பித்திருந்த பிற்படுத்தப்படுத்தபட்டோருக்கான இயக்கமாக ஆகியது. பிராமணர் – பிற்படுத்தப்பட்டோர் என்ற துருவப்படுத்தல் உருவாகி இன்றும் நீடிக்கிறது.

இந்த துருவப் படுத்தலுக்கான கருத்துத் தளமாக உருவாக்கப் பட்டதே ஆரிய- திராவிட வாதம். ஓரிரு கிறித்தவப் பாதிரிகளால் உருவாக்கப்பட்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் பரப்பப்பட்ட அந்த வாதம் இன்றுவரை எந்த வகையான வரலாற்று ஆதாரமும் இல்லாத வெற்று ஊகம் மட்டுமே. அன்று விவேகானந்தர் முதல் டாக்டர் அம்பேத்கார் வரையிலான ஆய்வாளர்களால் அபத்தம் என முழுமையாகவே மறுக்கப்பட்ட ஒன்று அது. இன்று மார்க்ஸியநோக்குள்ள ஆய்வாளர்கள்கூட அதை ஏற்க தயங்குமளவுக்கு அது விரிவாகவே ஆய்வுத்தளத்தில் மறுக்கப்பட்டுவிட்டது.

அந்த ஆரிய-திராவிட வாதத்தை இன்னமும் எளிமையாக்கி பிராமணர்- திராவிடர் என்று பிரித்து அதனடிப்படையில் மொத்த தமிழ்ப்பண்பாட்டையே ஒன்றுடன் ஒன்று முரண்படும் இரு கூறுகளாக உருவகித்துக்கொண்டார்கள். இந்த உருவகம் எந்தவகையிலும் வரலாற்று அடிப்படைகொண்டதல்ல. முழுக்கமுழுக்க அரசியல் சார்ந்த ஒன்றே. ஆனால் சிறு வயது முதலே நாம் இதைக்கேட்டு வருவதனால் இதைப்பற்றி ஆராய்வதில்லை. இனிமேலாவது கொஞ்சம் தமிழுணர்வுடன், கொஞ்சம் வரலாற்று நோக்குடன் இவற்றையெல்லாம் நாம் பேச ஆரம்பிப்பது நல்லது.

எதிர்மறையாக மட்டுமே வரலாற்றையும் பண்பாட்டையும் அணுகுவது, எதிரிகளை கண்டுபிடித்துப்பெருக்கிக் கொண்டே செல்வது, நம்மை தூய மேன்மையான மக்கள் ஆகவே ஒடுக்கப்பட்டோம் என சுயபரிதாபம் கொள்வது, அதை வன்மமாக ஆக்கிக்கொள்வது போன்றவை ஒருவகை மனநோய். சிந்தனையின் ஒருகட்டத்தில் அது நம்மை பீடிக்கிறது. ஏனென்றால் கருத்துலகாக நம்மைச்சூழ்ந்திருக்கும் எண்ணங்களில் பெரும்பகுதி இப்படிப்பட்டவை

அவற்றை நம் பொதுப்புத்தியால், வரலாற்று அறிவால் வென்று மீண்டு வராதவரை நாம் இருப்பது அறியாமை இருளில். மிகையுணர்ச்சிகளின் சேற்றில்.நம் நுண்ணுணர்வு, தர்க்கத்திறன் அனைத்தும் அதில் வீணாகிவிடும். அப்படி அறிவுலகில் செயல்படுவது பெரும் நரகம்.

*

வரலாறு குறித்த ஒரு பொதுப்புரிதல் நமக்குத்தேவை. அது மானுடர் வாழ்வதற்காக நிகழ்த்திய பெரும் போராட்டத்தின் விளைவு. பல்வேறு மோதல்களும் தழுவல்களுமாக உருவாகி வந்த ஒன்று. கொடுத்தும் பெற்றும் உருவானவையே அனைத்துப் பண்பாட்டுருவங்களும். அது ஒரு சிக்கலான முரணியக்கம். அதை முழுக்கப்புரிந்துகொள்வதும் தீர்ப்புகளை அளிப்பதும் எவராலும் இயலாதது.நாம் அதை நாம் வாழும் களத்தில் இன்றையதேவை மற்றும் உணர்ச்சிகளைக்கொண்டே புரிந்துகொள்கிறோம்.

ஆகவே நாம் செய்யக்கூடுவது நாம் புரிந்துகொள்வதன் எல்லைகளைப் பற்றிக் கவனத்துடன் இருப்பதே. வரலாற்றைக்கொண்டு வெறுப்பையும் கசப்பையும் சமைத்துப்பரிமாறாமலிருப்பதே. காலப்பயணம் செய்து வரலாற்றை மாற்றியமைக்க எவராலும் இயலாது. கடந்துசென்ற வரலாற்றிலிருந்து ‘தூய’ சரடுகளை , இன மத மொழி பண்பாட்டுக்கூறுகளை இன்று பிரித்தெடுக்கவும் முடியாது. அவ்வாறு எண்ணுபவர்களைப் பேதைகள் என்றே சொல்வேன்

ஆனால் பேதைகள் பலசமயம் வெறுப்பைப் பரப்பி  நிகழ்காலத்தில் உள்ள வணிகப்போரின் கருவிகளாக ஆகி விடுவார்கள்.பேரழிவை உருவாக்குவார்கள். நாம் நமக்குச் சுற்றும் பார்க்கலாம். கீழைச்சமூகங்களில் ஒரு அறிவுஜீவிக்கும்பல் இனம், மொழி,மதம் என்னும் பெயரால் அழிவு அழிவு என்றே கோரிக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும் அழிவு வராமல் அவர்களால் அடங்கமுடியாது என்றே தோன்றுகிறது. இந்த ஒளித்திருநாளின் நாம் நம் உள்ளத்தில் ஒளியை ஏற்றிக்கொள்வோம்

*

பொதுவாக பண்டிகைகள் எவையுமே சட்டென்று உருவாவதில்லை. புதிதாக எவராலும் கொண்டு வரப்படுவதும் இல்லை. அவை ஏதோ ஒருவகையில் பழங்குடி வாழ்க்கையில் இருந்துகொண்டிருக்கும். ஆகவே அவற்றுக்கு ஆழ்மனம் சார்ந்த குறியீட்டு முக்கியத்துவம் இருக்கும். பின்னர் அவை புராணக்கதைகளை உருவாக்கிக் கொள்ளும். தத்துவ விளக்கம் பெறும். பலவகையில் அவை மாறி வளர்ந்து சென்றுகொண்டே இருக்கும். எளிமையாக அவற்றை வகுத்துக்கொள்ள முடியாது

தீபாவளியின் தோற்றுவாய் எதுவாக இருக்கும்? பழங்குடி வாழ்க்கையையே பார்க்கலாம். குமரியிலும் மேற்கு மலைகளிலும் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்றுநோய்க்காலங்களில் அந்த தீயசக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை கொளுத்தி வைப்பது. காலாரா மாதங்களில் அவ்வாறு எங்கள் வீட்டிலும் வைத்த நினைவு உள்ளது. கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது அது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென்னாட்டின் மிகப்பெரிய நோய்க்காலம்.

தொன்மையான காலகட்டத்தில் இந்த ஆசாரம் வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். பௌத்தச் சடங்குகளில் தீபவரிசை முக்கியமான ஒன்று. இன்றும் அது பௌத்தம் மருவிய வழிபாடுகளில் தாலப்பொலி என்றவடிவில் கேரளத்தில் நீடிக்கிறது.தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. [கொற்றவை நாவலில் விரிவான விளக்கம் உண்டு]. சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.சமணத்தில் அது வர்த்தமானர் மெய்மையை அடைந்த நாள். பௌத்தத்தில் அறிவொளித்திருநாள்.மாமன்னர் அசோகரால் அவ்வாறு கொண்டாடப்பட்டது.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது.   என் ஊகம் என்னவென்றால் பௌத்ததில் இவ்விழா பிரக்ஞாதாரா தேவியின் [அறிவொளித்தேவி.] பண்டிகையாக இருந்தது. அது சாக்தத்தில் நுழைந்தபோது நரகாசுரனை கொன்ற கொற்றவையின் பண்டிகையாக ஆகியது. தொல்தமிழ்தெய்வமான கொற்றவையின் இன்னொரு வடிவமே துர்க்காதேவி. கேரளத்து தேவிசிலைகளில் கொற்றவையின் துல்லியமான இலக்கணம் உள்ளது.

இருளரக்கனே நரகாசுரனாக ஆகியிருக்கலாம்.அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய நான்கு வெவ்வேறு தொன்மங்களும் அவன் தற்செயலாக உருவாகி எழுந்த ஒரு இயற்கையான அழிவுச்சக்தி என்றே உருவகிக்கின்றன.

உதாரணமாக வைணவத்தொன்மத்தின்படி திருமாலின் பன்றி அவதாரத்திற்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன். அவனை அழிவுசக்தி என உருவகிக்கும் வைணவம் தெய்வத்தின் மகன் என்றும் சொல்வதைக் கவனிக்கவேண்டும். பூமியிலிருந்து எழுந்தவன் என்பதும் குறியீட்டுரீதியாக முக்கியமானது. நோய் அல்லது பீடை குறித்த மிகத்தொன்மையான பழங்குடி உருவகத்தின் வைணவ இறையியல் விளக்கம் இது.பன்றியால் மண்ணிலிருந்து உருவாவது. ஆனால் வைணவம் அழிவையும் திருமாலின் லீலையாகக் கொள்வது. அந்தத்தத்துவமே இப்புராணமாக ஆகிவிட்டிருக்கிறது.

இத்தகைய விளக்கங்கள் கூட முன்னரே இருந்த தொன்மங்களுடன் இணைத்தே விரிவாக்கம் செய்யப்படும். ஏற்கனவே மகாபாரதத்தில் இருந்த ஒரு வரலாற்றுக்கதை நரகாசுரனுடையது. அவன் காமரூபத்தைச் சேர்ந்த பிரக்ஜ்யோதிஷம் என்னும் நாட்டை [இன்றைய அசாம்]ஆண்ட அசுரச்சக்ரவர்த்தி. அவனை கிருஷ்ணரும் சத்யபாமையும் கொன்றனர். அது இந்த தொன்மத்துடன் இணைந்தது. இவ்வாறுதான் தொன்மங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி வளர்கின்றன.

இந்தியா முழுக்கச்சென்ற சாக்தத்தில் தீபாவளி என்னென்ன மாற்றங்கள் அடைந்தது என்பது தனி ஆராய்ச்சிக்குரியது. பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகைதான். சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப்பார்க்கலாம். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றார் என்பது வைணவக்கதை. நரகாசுரன் தன் அன்னையாகிய தேவியால் கொல்லப்பட்டான் என்பது சாக்தத்தின் கதை.

பண்டிகைகள் மாறிக்கொண்டே இருப்பது வரலாறு. தேதிகள்கூட பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம்.மேற்குமலைப் பழங்குடிகள் கொண்டாடிய தீபத்திருநாள் இப்போது சபரிமலை அய்யப்பனின் மகரவிளக்கு விழாவாக உள்ளது என்று ஒரு கேரள ஆராய்ச்சி சொல்கிறது. அது மகரசங்க்ராந்தி என்றபேரில் வட இந்தியாவிலும் கொண்டாடப்படும் பண்டிகை. சோழர்கள் காலத்தில் தமிழகத்தில் சாக்தர்கள் மட்டும் தீபாவளி கொண்டாடினார்கள். சைவர்கள் கார்த்திகையை.

உண்மையில் சோழர் காலத்தின் தமிழகத்தில் மிகப்பெரிய பண்டிகை என்பது திருவோணம்தான். இன்றும் சோழநாட்டுக் கோயில்களில் அது கொண்டாடப்படுகிறது. இன்று அது கேரளத்தில் மட்டும் எஞ்சியுள்ளது. பின்னர் நாயக்கர்களின் காலகட்டத்தில் தீபாவளி அரச ஆதரவு பெற்றது. இன்றைய வடிவில் நாம் தீபாவளியைக் கொண்டாட மாமன்னர் திருமலைநாயக்கர்தான் காரணம்.

ஆக, தீபாவளி வடவர் பண்டிகை, நரகாசுரன் தமிழன், துர்க்கை ஒரு பிராமணமாமி என்பது போன்ற ‘ஆய்வுகளை’ அடிப்படைச் சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் தாண்டிவரலாம் என்று நினைக்கிறேன். அது நம்முடைய தொல்மூதாதையரின் ஒரு நம்பிக்கையில் இருந்து உருவாகி பல்வேறு மதங்கள் வழியாக வரலாறெங்கும் வளர்ந்து பரவி இன்றைய வடிவை அடைந்திருக்கிறது.

*

இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

ஜெ

====================

தீபாவளி மதங்களில்..

தீபாவளி

தீபாவளி – விடுதலையின் ஒளிநாள் 

தீபாவளி கடிதங்கள்

தீபாவளி:கடிதங்கள்


கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா

நமது கைகளில்….

===================================

மறுபிரசுரம் / முதற்பிரசுரம்   Nov 4, 2010 @ 8:41

 

https://www.jeyamohan.in/9118#.XbWqZS-nxR4

Link to comment
Share on other sites

22 hours ago, கிருபன் said:

இன்று, பண்டிகைகளால் ஒரு பொதுவான மனிதனுக்கு என்ன முக்கியத்துவம் உள்ளது? எல்லா பண்டிகைகளும் நம்மை நாமறியாத நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மையுடன் இணைக்கின்றன. நம் வாழ்க்கை என்பது நம்மில் தொடங்கி முடிவது அல்ல. அது ஓர் அறுபடாத பெரும் நீட்சி என்று உணர்ந்தால் இவை ஒவ்வொன்றும் முக்கியமானவைதான். நேற்று நம் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கையை நாம் நீடிக்கிறோம் என்ற பேருணர்வு இப்பண்டிகைகளின் சாரம்.

சடங்குகள், பண்டிகைகள் அனைத்துமே குறியீடுகள். அக்குறியீடுகளுக்கு நாம் என்ன பொருள் அளிக்கிறோம் என்பதுதான் நமக்கு முக்கியமானது. தீபாவளியை டிவி முன் குந்தி அமரும் பண்டிகையாக ஒருவர் காணலாம். அதன் வரலாற்று நீட்சியை உணரக்கூடிய ஒரு தினமாக, மதங்களும் மக்களும் கலந்து உருவாக்கிய ஒரு உணர்வெழுச்சியின் நாளாக கொண்டாடலாம். நம் அகவிரிவைப் பொறுத்தது அது.

அனைத்துக்கும் மேலாக எல்லா பண்டிகைகளும் குழந்தைகளுக்கானவை. அவர்கள் உற்சாகம் கொள்வதற்கான தருணங்கள். பெரியவர்கள் தங்கள் உலகை விட்டு கொஞ்சம் குழந்தைகளின் உலகுக்குள் இறங்கிவருவதற்கானவை. நாம் நம் பெற்றோரின் நினைவை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதற்கானவை. வாழ்க்கை என்பது இம்மாதிரி சில தருணங்கள் மட்டுமே. ஆகவே உற்சாகம் கொள்வதற்கான காரணங்கள் அனைத்துமே முக்கியமானவை.

பண்பாடு என்பது என்ன? சில சடங்குகள், சில ஆசாரங்கள், சில நம்பிக்கைகள், சில வழக்கங்கள் அல்லாமல்? அவற்றின் குறியீட்டு வடிவிலேயே பண்பாடு பாதுகாக்கப்படுகிறது, கைமாறப்படுகிறது. அவை இல்லையேல் பண்பாடு இல்லை. அவற்றை இழந்தால் நாம் சீன மலிவுச்சாமான்களையும் அமெரிக்க பரப்புக்கலைகளையும் நுகர்வதற்காக பிறக்கும் நூறுகோடி சதைத்திரள்கள் மட்டுமே. அப்படி அதில் துளிகளாக உங்கள் பிள்ளைகளை ஆக்குவதென்பதுதான் உங்கள் இலக்கு என்றால் அது உங்கள் விருப்பம்

அருமையான கட்டுரை. எனது எண்ணங்களைக் கிட்டத்தட்டப் பிரதிபலிக்கிறது. 

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கிருபன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரக்கன் அசுரன் கதைகளை எல்லாம் நம்பும் அளவுக்கு இன்று உலகம் இல்லை.

இன்று கோவில்களில் கூட தீபம் தான் ஏற்றி தீபாவளியை கொண்டாடுகிறார்கள். அசுரனை வதைத்த இட்டுக்கதைகள் எல்லாம் இன்று எடுபடாது.

கிழக்கில் தீபாவளி.. கார்த்திகை விளக்கீடு.. போல் மேற்கில் ஹலோவின்.

மனிதர்கள்  இருளுக்கு அஞ்சும் குணமுடைய சிறப்பு விலங்குகளாவர். அவர்கள் இராக்காலப் பிராணிகள் அல்லர். நீண்ட இருள் சூழும்.. மாரிகாலத்தில் அந்த இருள் மீதான பயத்தை அகற்றி மனிதர்களிடம் இருக்கும் இருள் பீதியை விலக்க உருவானதே தீபத் திருநாள்.. தீபாவளி... என்பதுவே வெளிப்படை உண்மையாகத் தெரிகிறது.

ஆனால்.. ஒன்று.. தமிழ் சிவ பக்த மன்னனான.. இராவணனை அரக்கன் அசுரன் என்றது போல்.. போரில் வென்றவர்கள்.. எமது தேசிய தலைவரை பயங்கரவாதி என்பது போல்.. நாம் எமக்கான வரலாற்றை சரியாகப் பதிவிட்டு வைக்காவிடில்.. சந்ததிக்கு கடத்தா விடில்.. மே 18 ஓர் நாள்.. புதிய கொண்டாட்ட நாளாக மாறி நிற்கும்.

எமது தேசிய தலைவரும் மடிந்த மக்களும்.. அரக்கர்கள்.. அசுரர்கள் ஆக்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை. 

ஏனெனில்.. போரில் வென்றாலும் எதிரியை மதிக்கும் பண்பு தமிழர்களிடம் இருந்தது போல்.. மற்றவர்களிடம் இல்லை. மற்றவர்கள்.. ஒரு வெற்றியை காட்டியே.. இன்னும் இன்னும் தமது வெற்றியைப் பற்றிய பிம்பத்தை அதிகரிப்பதை மட்டுமே செய்வர். காரணம்.. அவர்களின் பலவீனம்.. அந்த ஒரு வெற்றியால்... முற்றாக மூடிமறைக்கப்பட வேண்டும் என்பதில் அவர்கள் ஆர்வமாக இருப்பதால்.

இதுவே இராவணனுக்கும் நடந்திருக்கும்.. பிற அசுரர்.. அரக்கர் என்று வர்ணிக்கப்படுபவர்களுக்கும் நடந்திருக்கும். அன்று.. அதிகார சக்திகளை அரச பயங்கரவாதிகளை.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளை எதிர்த்துப் போராடியோர்.. அசுரர்.. அரக்கர்.. இன்று அதுவே பயங்கரவாதிகள். 

Link to comment
Share on other sites

மூடத்தனமான கதைகளை பரப்பும் இந்து மதவாதிகள் அந்த மூடத‍்தனங்களை கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அந்த கதைகளை அப்படியே  மக்களுக்கும் திணிப்பார்கள். காதில் பூ சுற்றவார்கள். யாராவது என்னப்பா  என்னை முட்டாளாக்குகிறாய் என்று கேள்வி கேட்டால் மட்டும் த‍த்துவம், குறியீடு, உருவகம் என்று கதை விடுவாரகள். காலாகாலமாக நடைபெறுவது தான். ஆனால் நல்ல காலம் ஐரோப்பாவில் வாழும் எமது குழந்தைகளில் பெரும்பாலோனோர் இவ்வாறான மூட மத கல்வியை பயிலுவதில்லை. இந்த தலைமுறையில் பிறந்த நான் கேள்வி கேட்கும் போது இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம்.  அதனால் தான்அடுத்த தலைமுறைக்கும் மூடர்களை உற்பத்தி செயவதில் முனைப்புடன் உள்ளார்கள்.  

Link to comment
Share on other sites

18 hours ago, tulpen said:

மூடத்தனமான கதைகளை பரப்பும் இந்து மதவாதிகள் அந்த மூடத‍்தனங்களை கேள்வி கேட்காமல் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வரை அந்த கதைகளை அப்படியே  மக்களுக்கும் திணிப்பார்கள். காதில் பூ சுற்றவார்கள். யாராவது என்னப்பா  என்னை முட்டாளாக்குகிறாய் என்று கேள்வி கேட்டால் மட்டும் த‍த்துவம், குறியீடு, உருவகம் என்று கதை விடுவாரகள். 

தத்துவம், குறியீடு, உருவகம் போன்றவை இந்து மதத்தில் சாதாரணமாக உள்ளவை தான். புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல. காலம் காலமாக அதைப் பின்பற்றுவோரின் நம்பிக்கையோடு பின்னிப் பிணைந்தவை. அந்த நம்பிக்கையை அரைவேக்காட்டுத் தனமான அறிவுடன் அதை நம்பாதோர் கேள்வி கேட்க அதற்கான விளக்கத்தை மத நம்பிக்கையாளர்கள் கொடுப்பது மதவாதம் ஆகாது. 

இங்கு கிருபன் இணைத்த கட்டுரையில் பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்காக் கொடுக்கப்பட்ட விளக்கமும் அப்படியே. 

Link to comment
Share on other sites

19 hours ago, tulpen said:

ஆனால் நல்ல காலம் ஐரோப்பாவில் வாழும் எமது குழந்தைகளில் பெரும்பாலோனோர் இவ்வாறான மூட மத கல்வியை பயிலுவதில்லை. இந்த தலைமுறையில் பிறந்த நான் கேள்வி கேட்கும் போது இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம். 

ஒரு மத நம்பிக்கையானது அதைப் பின்பற்றும் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தது. பண்டிகைகளோ, மதச் சடங்குகளோ, வழிபாடுகளோ அவர்களின் வாழ்வைச் செழுமைப்படுத்துவதாக அவர்கள் உணர்ந்தே அதைத் தொடர்கிறார்கள்.

ஒருவர் ஐரோப்பாவில், அமெரிக்காவில், அவுஸ்திரேலியாவில் பிறத்ததற்காகவோ / வசிப்பதற்காகவோ அந்த மதத்தைப் பின் தொடராதது அவரது இஷ்டம். அவரின் தனிப்பட்ட கொள்கை. ஆனால், அவர் மற்றவர்களின் நம்பிக்கையை முட்டாள்தனம் என்றும், மதவாதம் என்றும் போலியாகச் சித்தரித்து பொதுவெளியில் எழுதுவது சரியாகப்படவில்லை. 

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சிலருக்கு ஒரு மதம் மீதான நம்பிக்கை இல்லாதபடியால், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் வசிப்போரும் அவ்வாறே செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவ்வாறே, புலம்பெயர் நாடுகளில் மதநம்பிக்கையை உள்ளவர்களும் அதை மூடநம்பிக்கையுடன் தான் தொடர்கிறார்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. இது அவர்களின் வாழ்வியல் உரிமை. 

அவர்களின் வாழ்வை நீங்கள் வாழ்ந்து பார்க்க முடியாது. எனவே, அவர்களின் மதநம்பிக்கையைையும் மூடநம்பிக்கையாகச் சித்தரிக்க முடியாது. ஒரு நம்பிக்கையைப் பின்பற்றாமைக்கும், அதை மூடநம்பிக்கை என்று முத்திரை குத்த முனைவதற்கும் பாரிய வித்தியாசம் உண்டு. பின்பற்றாமை உங்கள் உரிமை. ஆனால் அதை தவறாக முத்திரை குத்துதல் உங்கள் உரிமை அல்ல.

இது வீணான அவதூறாகும். அறிவியலில் முன்னேறிய நாடுகளில் உள்ளவர்கள் பொதுவாக மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிப்பதை நாகரீகமற்ற ஒன்றாகக் கருதுவதுடன், மற்றவர்களின் நம்பிக்கையை மதிப்பார்கள். உங்கள் கருத்துக்கள் இதற்கு முரணானதாக உள்ளன.

Link to comment
Share on other sites

19 hours ago, tulpen said:

இவ்வாறு மூடத்தனங்களுக்கு வக்காலத்து வாங்க த‍த்துவம் என்று குழப்பமாக கதை விடும் இவர்கள் அடுத்த தலைமுறை பிள்ளைகளின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணற போவது நிச்சயம்.  அதனால் தான்அடுத்த தலைமுறைக்கும் மூடர்களை உற்பத்தி செயவதில் முனைப்புடன் உள்ளார்கள்.  

அடுத்த தலைமுறை என்பது பரந்த மக்கள் தொகையைக் குறிக்கும். பொதுமைப்படுத்திக் கூறமுடியாது. தமது குழந்தைகளுக்கு உரிய முறையில் தம் பண்பாடு, கலாச்சாரங்களைச் சொல்லிக்கொடுக்கும் பெற்றோர், பாட்டன், பாட்டிமார், ஆசிரியர்கள், ஆன்மீகத்தலைவர்கள் இதில் நிச்சயம் வெற்றி பெறுவர்.

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள் இந்தியா, இலங்கை உள்ளடங்கிய கீழைத்தேய நாடுகளுக்கு ஆன்மீகத் தேடலை நோக்கிய பயணத்தை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டார்கள். நமது தியானப் பயிற்சி மீதான ஆர்வம் ஒரு சிறு உதாரணம் தான். 

நமது பண்பாடு, கலாச்சார விழுமியங்களை மறந்த எமது மக்களில் சிலரும் இவ்வாறான தேடலை மேற்கொள்ளும் காலம் ஒருநாள் வருவது உறுதி. 😊

Link to comment
Share on other sites

பண்டிகைகள் தொடர்பாக இந்து மத‍ம் மக்கள் மீது திணித்த அபத்த‍மான எண்ணிலடங்கா மூடத்தனங்கள் குறித்தான ஜதார்த்தமான கேள்விகளுக்கு நேரடியாக தெளிவான பதிலை வழங்கள முடியாத‍தால் வழமை போல் சுற்றி வளைத்து மழுப்பலான குழப்பமான பதில்கள் தரப்பட்டுள்ளன.  தீபாவளி என்ற பண்டிகைக்கான அர்த்த‍ம் என்ன என்றால்  மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக விளக்குகள் ஏற்றுவதன் மூலம் புத்துணர்ச்சியை ஏற்பத்துவதற்காக அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமது வாழ்வியலில் இவ்வாறான பண்டிகளைகளை கொண்டாடி இருக்கலாம். ஆனால் இதை  தன்னுள்ளே அபகரிக்க நினைத்த இந்து மதம் நரகாசுரன் என்ற அறிவிலித்தனமாக கதையை மக்கள் மத்தியில் பரப்பியது.  கிரூஷனரின் வராக அவதாரம் நடந்த‍தாக அவர்களால் கூறப்பட்ட அவர்களின் கூற்றுபடி திரேதாயுகத்தில் (1296000 ஆண்டுகள்)பூமாதேவியுடனான கிருஷ்னரின் உறவில் பிறந்த நரகாசுனை கிருஷ்னர் துவாபர யுகத்தில் வதம் செய்த‍தாக கூறப்பட்டது  . திரேதா யுகத்தில் பிறந்த நரகாசுரன்  1296000 ஆண்டுகள் கடந்து துவாபர யுகதில் வாழ்ந்தானா இவை எல்லாம் பொய்கள் புரட்டுகள் தானே என்று கூறினால் அந்த பொய்களை ஒத்துகொள்ள திராணி இல்லாமல் த‍த்துவம், உருவகம் என்று பித்தலாட்டம் வேறு.  பொய் கதையை உருவாக்கும் போது கூட படு முட்டாள்தனமாக  உருவாக்கியுள்ளார்கள். அந்த‍ளவுக்கு மக்களை முட்டாள்களாக பல காலம் வைத்திருக்கலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு. இம்மூடக்கதைகள் எல்லாம் இன்றும் கோவில்களில் பிரசங்கங்ககளில் கூறப்படுகின்றன. (இம்முறை 2019  தீபாவளியில் கூட இங்கு கோவில்களில் இக்கதை இந்து பிரசங்கிகளால் கூறப்பட்டது. கோலிலில் கேள்வி கேட்க ஆளில்லாத‍தால் தததுவம் உருவகம் என்று  பீலா விடாமல் அது நடந்த வரலாறாகவே கூறப்பட்டடது)

அதைவிட  வரலாற்றை மட்டுமல்ல சொந்த நாட்டையே தொலைத்துவிட்ட ஒரு இனத்தில் இருந்து கொண்டு ஐரோப்பியர்கள் மனித வாழ்க்கைகான அர்த்த‍தை தொலைத்துவிட்டார்கள் என்று கொமடி வேறு.  ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு மேற்கில் இருந்து கிழக்கு வரை  ஒரு முறை சென்று பார்த்தால் தெரியும் எவ்வாறு தமது நாடுகளின் வரலாற்றை பேணி பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் என்றும் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றும்.  எல்லா நாடுகளிலும் கிறீஸ்தவம் பரவி இருந்தாலும் ஒவ்வொரு நாட்டிற்கும் தனி தனி வித்தியாசமான கலாச்சாரத்தை காண முடியும். அவை கிறிஸ்தவ மத‍த்துடன் தொடர்பு பட்டவை அல்ல. மக்களின் வரலாற்று வாழ்வியலை கூறும் கலாச்சாரமாக இருக்கும். மத‍ம் என்பது அவர்கள் வரலாற்றிலும் கலாச்சாரத்திலும்  ஒரு சிறு பகுதியாகவே இருக்கும். 

அதை விட ஐரோப்பிய கிராமங்களில் பழைய காலத்தது மூட கதைகள் நிலவி வந்திருந்தால் அதை இன்று பாடசாலைகளில் அப்போதைய மக்கள் அந்த காலத்து அறிவுக்கு ஏற்ப அப்படி நம்பினார்கள் அது ஒன்றும் உண்மை இல்லை என்று வெளிப்படையாக படிப்பிப்பார்கள். எது வரலாறு எது பழைய மக்கள் நம்பிய புராணங்கள் என்று தெளிவாக கற்பிப்பார்கள். முன்னோர்களின் மூட புராணங்களை நியாயப்படுத்த மாட்டார்கள். இந்து மதவாதிகள் போல மூட புராணங்களை உண்மையில் நடந்த வரலாறு  போல் தமது சந்த‍தியினரின் காதில் பூசுற்ற மாட்டார்கள். 

மூடத்தனங்களை  மூடத்தனம் என்று பொது வெளியில்  சொல்வது என்றும் என்றும் தவறாகாது. அது மற்றவர்களை அவமதிப்பதாகாது. அவை ஏன் மூடத‍்தனங்கள்  என்று காரணங்களோடு தெளிவாக தான் கூறுகிறோம். இனியும் கூறுவோம். எவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நாம் தலையிட வில்லை. 

Link to comment
Share on other sites

மத தத்துவங்களில் ஒன்று இது மிக முக்கியமானது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, tulpen said:

மத தத்துவங்களில் ஒன்று இது மிக முக்கியமானது. 

 

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

Link to comment
Share on other sites

10 minutes ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

ம்... கனி இருக்கக் காய் கவர்ந்தற்று

நல்ல நிறைய விஷயங்கள் இருக்கும் போது கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதால் யாழ் களமும் குப்பைத்தொட்டியாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

 

இந்த வீடியோவில் இருப்பவர்கள், கழிசடைகளா?

 

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

கண்ட கண்ட களிசறைகளை இங்கே கொண்டுவந்து உதாரணம்  காட்டும் அறிவுஜீவிகளை என்னவென்று சொல்வது? யூரியூப்பில் வருவதை எல்லாம் நம்பக்கூடாது என்று சொல்லும் கூட்டம் தான்  அங்கிருக்கும் களிசறைகளை இங்கே கொண்டுவந்து  பூச்சாண்டி காட்டுகின்றது. 

குமாரசாமி

 நீங்கள் கூறிய அந்த கழிசடைகள்  சொன்ன கருத்துகளுக்காகவும் தத்துவங்களுக்காகவும் இக்காணொளி இங்கு இணைக்கப்படவில்லை.  அந்த கழிசடைகள் ஆன்மீகம்  என்ற போர்வையில் எப்படி மக்களை ஏமாற்றும் அயோக்கியரகளாக உள்ளர்கள் என்பதை  வெளிக்கொண்டு வரவே அது இணைகப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

1 hour ago, மல்லிகை வாசம் said:

ம்... கனி இருக்கக் காய் கவர்ந்தற்று

நல்ல நிறைய விஷயங்கள் இருக்கும் போது கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதால் யாழ் களமும் குப்பைத்தொட்டியாகிறது.

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

அருமையான கருத்து.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/30/2019 at 6:06 AM, மல்லிகை வாசம் said:

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள்

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

Link to comment
Share on other sites

4 hours ago, Paanch said:

பலாப்பழத்தைச் சுவைக்க விரும்பும்போது பலாச் சுளையை மட்டும் பழம் தருவதில்லை. மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதான சுளையோடு தடல், தும்பு, பால், நரம்பு என அனைத்தையுமே தருகிறது. சுளையைத் தவிர மற்றவைகள் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்ற அறிவு மனிதர்களுக்கு இருந்தாலே போதுமானது. தடல், தும்பு, பால் இருப்பதைக் கண்டு பழத்தையே தூக்கி எறிவது முட்டாள்தனம் மட்டுமல்ல, மூடத்தனமுமாகும்.  

சிறப்பான உவமானம். 😊

 

****
 

Link to comment
Share on other sites

On 10/30/2019 at 7:06 AM, மல்லிகை வாசம் said:

மனித வாழ்க்கைக்கான அர்த்தத்தைத் தொலைத்துவிட்ட மேற்குலக மக்கள் 

 

11 minutes ago, Kadancha said:

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

அகதிகளாக மேற்குலகுக்கு வந்த பல லட்சக்கணக்கான எமது மக்களை வரவேற்று உண்ண உணவு இருப்பிடம், மருத்துவம் ஆகியவற்றை கொடுத்து வேலை வாய்பபுகளை கொடுத்து, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு கல்வியையும் கொடுத்து,  அவர்கள் இங்கு நலமாக வாழ வழி செய்த மேற்குலக மக்களின் வாழவின்  அர்த்தத்தை தான் அவர் இங்கு குறிப்பிடுகிறார்.  

 இந்து தர்மமும் இந்து தத்துவமும் கோலோச்சும்  நாடான  இந்தியாவுக்கு அகதிகளாக  சென்ற எமது மக்கள் இன்றும் அப்படியே உயர்கல்விகூட மறுக்கப்பட்ட அடிமைகள் போல் அங்கு வறுமையில்்வாடுகின்றார்கள்.  அது தான் இவர்கள் கூறும்  இந்து தத்துவங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

 அந்த கழிசடைகள் ஆன்மீகம்  என்ற போர்வையில் எப்படி மக்களை ஏமாற்றும் அயோக்கியரகளாக உள்ளர்கள் என்பதை  வெளிக்கொண்டு வரவே அது இணைகப்பட்டுள்ளது. 

மக்கள் போடும் தர்மப் பிச்சையில் கார் வாங்கி ஓடலாம் என்று சரிகாண்கின்றனர் - வீடியோவில் இருப்பவர்கள்.

இவர்களை கழிசடைகள் என்று சொல்கிறார், மிஸ்டர் துல்பன்.

இப்படி சொல்வது தப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

அகதிகளாக மேற்குலகுக்கு வந்த பல லட்சக்கணக்கான எமது மக்களை வரவேற்று

எல்லா நாடுகளும் வரவேற்றன என்று சொல்லமுடியாது. அந்தந்த நாடுகளின் சகிப்பு தன்மைக்கு ஏற்றவாறு, எம்மை சகித்து (அதில் உபசரிப்பும் அடக்கம்) கொண்டார்கள்  என்பதே உண்மை.      

பிரித்தானிய, குறிப்பாக எம்மை சகித்துக்கொண்டதின் காரணம் வரவேற்றல் இல்லை, எமது போராடும் மனித வலு குன்றி, சொறி சிங்களம் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்கவதற்கு ஓர் இடை வெளி ஏற்றப்படுத்தப்படும் என்ற நோக்கில்.

பிரித்தானியாவின்,  ஆட்சிக்கலை மற்றும் ராஜ, ராணுவ தந்திர செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது உள்ளதால், அந்த நாடுகள் 'எம்மை வரவேற்றது' என்பதாக காட்டிக்கொண்டதில் பிரித்தானியாவின் செல்வாக்கின் பங்கும் உள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

Link to comment
Share on other sites

59 minutes ago, Kadancha said:

எல்லா நாடுகளும் வரவேற்றன என்று சொல்லமுடியாது. அந்தந்த நாடுகளின் சகிப்பு தன்மைக்கு ஏற்றவாறு, எம்மை சகித்து (அதில் உபசரிப்பும் அடக்கம்) கொண்டார்கள்  என்பதே உண்மை.      

பிரித்தானிய, குறிப்பாக எம்மை சகித்துக்கொண்டதின் காரணம் வரவேற்றல் இல்லை, எமது போராடும் மனித வலு குன்றி, சொறி சிங்களம் எமது ஆயுதப்போராட்டத்தை நசுக்கவதற்கு ஓர் இடை வெளி ஏற்றப்படுத்தப்படும் என்ற நோக்கில்.

பிரித்தானியாவின்,  ஆட்சிக்கலை மற்றும் ராஜ, ராணுவ தந்திர செல்வாக்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளின் மீது உள்ளதால், அந்த நாடுகள் 'எம்மை வரவேற்றது' என்பதாக காட்டிக்கொண்டதில் பிரித்தானியாவின் செல்வாக்கின் பங்கும் உள்ளது என்பது பல ஆய்வாளர்களின் கணிப்பாகும்.

கடஞ்சா பிரித்தானியாவின. அரசியல் குறித்து நான் குறிப்பிடவில்லை. மேற்கு நாடுகளுக்கு வந்த எமக்கு கலவியை அவர்கள் மறுக்கவில்லை. இந்து தர்மம் என்று சிலர் பெருமைப்படும் இந்தியாவில்  எமது பிள்ளைகளுக்கு கல்வியும்  மறுக்கப்பட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

மேற்கு நாடுகளுக்கு வந்த எமக்கு கலவியை அவர்கள் மறுக்கவில்லை. இந்து தர்மம் என்று சிலர் பெருமைப்படும் இந்தியாவில்  எமது பிள்ளைகளுக்கு கல்வியும்  மறுக்கப்பட்டது. 

இதை மறுக்கவில்லை. ஆயினும், இந்த உரிமைகள் , மற்றும் சலுகைகள் என்பதை அவர்களால் தடுக்க முடியாமல் இருந்தது, அவர்களின் உள்ளாட்சி கட்டமைப்பில் independent  institutions என்று இருந்த படியால்.

மற்றும் படி, மேற்கு நாடுகள் எம்மை உழவார அனுமதித்ததின் அடிப்படை காரணம் அவர்களின் நலன்களின் அடிப்படையில்.  

Link to comment
Share on other sites

47 minutes ago, Kadancha said:

இதன் அடிப்படை மற்றும் உங்களின் புரிதல், மற்றும் விளக்கம் என்ன?

என்ன தான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேறியவர்கள் என்று மேலைநாட்டு மக்கள் சொல்லிக்கொண்டாலும், பல மேலைநாட்டு மக்களின் மனங்களில் வாழ்க்கையின் அர்த்தத்துக்கான தேடல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார வசதி, தனி மனித சுதந்திரம் இவற்றைச் சாதித்துக் கொண்ட அவர்கள் இவற்றுக்கும் மேலேயும் அடைய வேண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்து அதைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இவர்களை meditation, yoga, இந்தியா போன்ற நாடுகளுக்கான wellness tour போன்றவற்றில் நாட்டம் கொள்ள வைக்கிறது. 

இது மிகச் சுருக்கமான விளக்கம் தான். மனித உளவியல் ரீதியாகவும் நோக்கலாம். மேலை நாட்டு self-help புத்தகங்களை வாசித்த போது எவ்வளவு தூரம் அவர்கள் வாழ்வின் அர்த்தத்தைத் தொலைத்திருப்பர் என்று புரிந்தது (உதாரணமாக The 7 Habits of Highly Effective People என்ற புத்தகம்).

இப்படியானவர்களை நாம் வேலைத்தளம், meditation session போன்ற இடங்களில் சந்தித்திருப்போம். சிலர் வெளிப்படையாக இவற்றை எல்லாம் உரையாடுவார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கும் ஆட்கள் இல்லயே என்ற ஏக்கம் அவர்கள் பேச்சில் தென்படும்.

இன்னும் விரிவாகப் பலதை எழுதலாம். இப்போதைக்குச் சுருக்கமாக முடிக்கிறேன்.

11 minutes ago, Kadancha said:

மற்றும் படி, மேற்கு நாடுகள் எம்மை உழவார அனுமதித்ததின் அடிப்படை காரணம் அவர்களின் நலன்களின் அடிப்படையில்.  

நமது கடின உழைப்பு, சில குறிப்பிட்ட துறைகளில் எம்மவர்களின் வேலைத் திறன் போன்றவற்றைக் கூறலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, மல்லிகை வாசம் said:

என்ன தான் வாழ்க்கைத் தரத்தில் முன்னேறியவர்கள் என்று மேலைநாட்டு மக்கள் சொல்லிக்கொண்டாலும், பல மேலைநாட்டு மக்களின் மனங்களில் வாழ்க்கையின் அர்த்தத்துக்கான தேடல் இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. பொருளாதார வசதி, தனி மனித சுதந்திரம் இவற்றைச் சாதித்துக் கொண்ட அவர்கள் இவற்றுக்கும் மேலேயும் அடைய வேண்டிய ஏதோ ஒன்று உள்ளது என்று உணர்ந்து அதைத் தேடுகிறார்கள். இந்தத் தேடலே இவர்களை meditation, yoga, இந்தியா போன்ற நாடுகளுக்கான wellness tour போன்றவற்றில் நாட்டம் கொள்ள வைக்கிறது. 

 

உலகில் உள்ள எந்த இன, மத மக்களும், வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைக்கவில்லை.

மக்கள் எதை விரும்புகிறார்களோ, அவைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் அதை நடைமுறைப்படுத்தி பழகிக்கொள்கிறார்கள்.

மேலைத்தேய  மக்களோ, கீழைத்தேய மக்களோ வாழ்க்கையை உணர்ந்துதான் வாழ்கிறார்கள்.

Meditation, Yoga போன்றவற்றை இலங்கை, இந்தியாவில் உள்ள இந்து மக்களே அதை பின்பற்றுவதில்லை.

மேலைத்தேய மக்கள்,  Meditation, Yoga இன்மையால்,  வாழ்க்கையின் அர்த்தங்களை தொலைத்து விட்டார்கள் என்று சுருக்கிக்கொள்வது, நகைப்பிற்கு இடமானது.  

ஒருவரது அல்லது ஒரு மதத்தின், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகளை மேலைத்தேய மக்கள் பின்பற்றாமல் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், அவர்கள் வாழ்க்கையின் அர்த்தங்களைத் தொலைத்துவிட்டவர்கள் என்று சொல்வது, ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.