Jump to content

இந்துமா சமுத்திரத்தின் கேந்திரமாக இலங்கை உருவெடுக்க சீனா துணை நிற்கும் - சீன தூதுவர் ஷெங் யுவான்


Recommended Posts

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும். டுபாய் - கொழும்பு கப்பல் போக்கு வரத்து அடுத்தகட்ட முக்கிய நகர்வாகவே அமைந்துள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு இன மற்றும் கட்சி அரசியலின் அடிப்படையிலனவையல்ல என சீன தூதுவர் ஷெங் யுவான் தெரிவித்தார்.  

26-China.JPG

இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இலங்கை - சீன திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பு இன்று தாமரை கோபுரத்தில் இடம்பெற்றது. 

இதன்போதே சீன தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/67803

Link to comment
Share on other sites

  • உருசியா சென்று சென்னையில் இருந்து விளாடிவஸ்தோக் வரை கப்பல் சேவை தொடங்க பணம் கொடுத்த மோடி
  • மாமல்லபுரத்திற்கு சீனாவை கூட்டி வந்த மோடி  
  • இப்பொழுது உருசியாவை தமிழகத்திற்கு அழைக்கும் மோடி
  • பலாலியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்த இந்தியா


ஆமாம், நீங்கள் சொல்வது உண்மை 🙂 
இலங்கையை கடன் பொறிக்குள் சிக்க வைத்து சீனா செயற்படுவதாக மேற்குலக நாடுகள் போலி பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

மறுப்புறம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் போர்தளமெனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

அம்பாந்தோட்டையில் கடற்படைத்தளம் அமைக்கும் எண்ணம் சீனாவுக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரிந்தது.

அதனால் தான் இந்தியா மத்தல விமான நிலையத்தை தனக்கு தரும்படி கேட்டது. அருகில் இருந்து சீனாவை கண்காணிக்க.

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்து இந்தியாவுடன் சேர்ந்து இயக்கப்போவதாக மார்ச் மாதம் கூறினார்கள். 40 வருட கால குத்தகைக்கு இந்தியாவுக்கு வழங்கப்போவதாகவும் வாசித்தேன். இப்பொழுது என்ன நிலையில் உள்ளது என தெரியவில்லை. 

1 hour ago, ampanai said:

ஜப்பான் மற்றும் ஜேர்மன் நாடுகளின் போர்க்கப்பல்களே  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

ஈஸ்ரர் தாக்குதலுக்கு இரு நாட்களுக்கு முன்னம் 19 ஏப்ரல் அன்று அமெரிக்க கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டதை சொல்ல மறந்திட்டார்.

Link to comment
Share on other sites

இந்தியாவும் சீனாவும் இன்று ஆசிய வல்லரசுகள்.
இவை, நாளைய உலக வல்லரசுகள். 

இருவரும் ஒருவராக பயணிப்பார்கள். பயணிப்பது போன்று காட்டுவார்கள்.
காரணம், வெளித்தனமாக சண்டை பிடிப்பது பேரழிவை தரும்.

ஆகவே, மௌனமான, மென்மையான சண்டைகள் நடக்கும்.
அதற்குள் சிறிய நாடுகள் சிக்கி  தவிக்கலாம்.
 
சில புதிய யன்னல்கள் திறக்கலாம்.
சில திறந்த கதவுகள் மூடப்படலாம். 

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

இந்துமா சமுத்திரத்தின் கப்பல் போக்குவரத்து மையமாக இலங்கை உருவெடுக்க சீனா அனைத்து வகையிலும் ஒத்துழைப்புகளை வழங்கும்.

ஹிந்தியன் ஏற்கனவே தங்களின் காட்டுமிராண்டிப் பண்பாடுகளை சிங்களவனுக்கு புகட்டி வருகிறான்!

Link to comment
Share on other sites

இந்திய பெருங்கடலுக்குள் சீன போர்க்கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் விமானம் தாங்கி கப்பல்கள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கமாண்டரான அட்மிரல் ஜான் அக்கிலினோ டெல்லி வந்துள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கடற்பகுதிக்குள் சீன போர்க்கப்பல் ஊடுருவினால் அது ஆச்சரியமான விஷயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

போர்க்கப்பல்களை மிக அதிக அளவில் சீனா குவித்து வருகிறது. அந்நாட்டு கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய போர்க்கப்பல்களான 54 ஃபிரிகேட், 52 d destroyer போன்ற கப்பல்களும் கடல் தாக்குதல் தடுப்பு ஏவுகணைகளும் போன்றவை மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக இருப்பதாகவும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் சீனா அணு ஆயுதம் தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்திய பெருங்கடலுக்குள் ஊடுருவச் செய்துள்ளதை இந்திய கடற்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இவை நிறுத்தப்படப் போவதில்லை. இவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகமாகவே வாய்ப்புள்ளது என்றும் அட்மிரல் அக்கிலோனோ தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/86688/இந்திய-பெருங்கடலுக்குள்சீன-போர்க்கப்பல்கள்-ஊடுருவவாய்ப்புள்ளதாக-அமெரிக்காஎச்சரிக்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.